Jump to content

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. 
எனக்குத் தெரிந்தவர்கள்,  IT சம்பந்தப் பட்ட துறைகளில்,
கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன்.

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

உது படிப்பில்லை... பயிற்சி.. கண்டியலே.... கொத்துரொட்டி போட பழகுற மாதிரி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

 

எல்லாம் படம் எடுத்து அதுநாளைக்கு பேப்பர்ல வதுட்டாலும் எண்ட பயம்தான்🤣.

பிரபல்யஸ்தர் என்றால் இப்படி சில தொல்லைகள் வழமைதானே.

நான் நீங்கள் வெண்முரசு படிக்கிறன் எண்டு சொல்லேக்கையே நினிச்சனான் இவர் வேலையை ஆரையோ வச்சு வாங்கிற ஆள் எண்டு 🤣. இல்லாட்டில் அதை படிக்க எங்க நேரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

அண்ணை,

உப்பிடி எல்லாரும் நழுவினால் எப்படி? 

யார் நாளுக்கு £600 பவுண் வேலைக்கு போய், உழைச்சு, நல்ல கார் வாங்கி, தமிழினத்தை முன்னேற்றுவது?

தனிய நாதத்தால மட்டும் முடியுமே?

விசுகு அண்ணை பட்டும் படாமல் நழுவிற்றார்.

அக்கினி? ஜோக் எண்டு சொல்லாமல் ஜோக் அடிச்சிட்டு போய்ட்டார்.

அக்காச்சி? ஆர் யூ சீரியஸ் ? எண்டு விளங்காதமாரி நடிக்கிறா?

மருதர் வந்து அக்காச்சிய கலாய்ச்சிட்டு போட்டார்.

கிருபன் ஜி சம்பந்தமில்லாமல் அமெரிக்கன் சீ இ ஓ வை பற்றி கதைக்கிறார்.

இப்ப நீங்களும் இப்படிச் சொன்னால் - இந்த இனத்தை யார் தான் காப்பாற்றுவது?

யூடியூப் பாக்க தெரியுமோ?

நிகே போடுற சுண்டைகாய் சம்பல் வீடியோ மாரித்தான். 

வெளிக்கிடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். 

நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். 

அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள்.

நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். 

நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். 

அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள்.

நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

🤣 மீரா வேலணை காம்பில நிண்ட ஆள் போல கிடக்கு🤣

மொட்டை வெய்யில் மட்டும் இல்லை - வெள்ளை அரைக்கை பனியன், காக்கி டவுசர், டெனிஸ் சப்பாத்து எல்லாம் உண்டு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

 

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

நான் அதிகம் பணம் செலவழிக்காமல் பாவித்ததைத்தான் மேலே தந்துள்ளேன். 

பல்லாயிரம் வீடியோக்கள் உள்ளன. இவற்றின் மூலம் Python 🐍 என்றால் என்ன என்ற அடிப்படையை அறியலாம்.  ஆனால் அதில் நல்ல பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து வேலை ஒன்று தேடுமளவிற்கு போகவேண்டுமானால் structured ஆன course செய்யவேண்டும். Coursera இலும் பல உள்ளன. 

பின்வருவனவும் நான் ஓரளவு பாவித்திருந்தேன்.

 

Python 2: https://learnpythonthehardway.org/book/

Python 3 க்கு $29.99 பணம்  கேட்கின்றார்கள்.

 

 

HOW TO CREATE A WEBSITE

https://websitesetup.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

நான் அதிகம் பணம் செலவழிக்காமல் பாவித்ததைத்தான் மேலே தந்துள்ளேன். 

பல்லாயிரம் வீடியோக்கள் உள்ளன. இவற்றின் மூலம் Python 🐍 என்றால் என்ன என்ற அடிப்படையை அறியலாம்.  ஆனால் அதில் நல்ல பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து வேலை ஒன்று தேடுமளவிற்கு போகவேண்டுமானால் structured ஆன course செய்யவேண்டும். Coursera இலும் பல உள்ளன. 

பின்வருவனவும் நான் ஓரளவு பாவித்திருந்தேன்.

 

Python 2: https://learnpythonthehardway.org/book/

Python 3 க்கு $29.99 பணம்  கேட்கின்றார்கள்.

HOW TO CREATE A WEBSITE

https://websitesetup.org

 

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

இதுகள் போலத்தான் கிடக்கு

கேட்கலாம் தான்

ஆனால்  ரதி  சொன்ன மாதிரி நமக்கு  புரியணுமே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

ஆல்வின்_டொஃப்லர்_ எதிர்கால அதிர்ச்சி_கோட்_இல்லிடரேட்_இகோர்_பியூகர்

 நாம் நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.
இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.
ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான் பாஸ் 
நின்றால் விழுந்துவிடுவோம்  தினமும் ஓட வேண்டும் இதுதான் இந்த 21 நூறாண்டின் பெரும் சோகம் என்கிறார் ஆல்வின் தாத்தா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நன்றி நாதம் இப்படி ஒரு திரியை தொடங்கியதற்கு.

Robotic Process Automation(RPA)

Digital Proccess Automation (DPA)

Business Process Management (BPM) போன்ற துறைகளும் நல்லா வளர்ந்து வருகின்றன.

இலவச /கட்டண  இணையவழி கல்வி சான்றிதழ்களும் அந்த துறைசார் நிறுவனங்களால் வழங்கபடுவதும் சிறப்பம்சம்.

இங்கிலாந்தில் Blue Prism

ஐரோப்பா மற்றைய நாடுகளில் UiPath

அமெரிக்கா மற்றும் சுவிசில் Automation Anywhere 

இதைவிட Softmotive இனை அண்மையில் வாங்கிய Microsoft இன் Power Automate போன்ற Tools முதன்மையானவை. அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருகின்றன.

Pegas 

IBM

Bizagi (UK Based Tool) போன்ற Tools BPM DPM போன்ற துறைகளுக்கு முன்னணியில் இருக்கின்றன.

மேலே சொன்ன Tools இனை Google இல் தேடினாலே அதே நிறுவங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இலவச / கட்டண ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை காணலாம்.

வேலை வாய்ப்புக்கு RPA Developer அல்லது Intelligent Automation Developer அல்லது RPA Architect இப்படி தேடி பாருங்கள் எண்ணற்ற வேலைகள் கொட்டி கிடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு Robot இது தான் அவர்களின் தாரக மந்திரம்.

வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் நாதம் நான் என் ஓய்வு நேரங்களில் உதவ தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 00:07, Nathamuni said:

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

நான் கணனியை கற்றுக்கொண்டதே இணையத்தில்தான் நாதா கணனி பற்றி 3 கால படிப்பு அது டைப்பிங் , எக்ஸ்செல் அப்படி இப்படியென தற்போது கூகிள் , யூ டியுப்பால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்து வருகிறேன் இப்பவரைக்கும் நீங்கள் சொன்னத்திற்கு செல்ல காலம் எடுக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 01:35, சுவைப்பிரியன் said:

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

 நன்றி வாய்ப்புக்கள் கிடைத்தால் சந்திப்போம் .

யாழ்ப்பாணம் வந்த போது உங்களை விசாரித்தேன் நீங்கள் அந்த் அந்நேரம் கொழும்பில் என ஜீவன் அண்ண  சொன்னது ஞாபகம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு பணம் தேவை?
இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் 
நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை 
நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும்.
இதுக்கு புலம்பெயர்ந்த 90 வீதமான தமிழர்கள் சாட்சி.

80 களில் இலங்கையில் லட்ச்சாதிபதி என்று கேள்வி பட்டு இருக்கிறோம் 
யாரும் லட்ஷ ரூபாவை பார்த்ததில்லை. இன்று புலம்பெயர்ந்த அனைவரது 
மாதாந்த வருமானம் 2 லட்ஷங்களுக்கும் மேல். ஆனாலும் வாழ்க்கை தராதரம் என்பது 
கீழாகவே இருக்கிறது. 

பணம் பார்க்கலாம் என்பதுக்காக படிக்கிறவன் படிக்க்காமலே இருக்கலாம்.
இலடசியங்கள் குறிகோளுக்களை அடைய வழி தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கே 
இதுமாதிரியான யுத்திகள் உதவும் என்பதைவிட முதலில் புரியும். 

உலக ஜனாதிபதிகள்  கோடீஸ்வரர்கள்  விஞ்ஞானிகள்  விளையாட்டு வீரர்கள் 
விபச்சாரிகள் பூசாரிகள்  பிச்சைக்காரர்கள்  கூலி தொழிலாளர்கள் எல்லோருக்குமே 
எந்த பாகுபாடும் இன்றி ஓவருவருக்கும் ஒவ்வரு நாளும் 24 மணித்தியாலங்கள் 
வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மணி நேரங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே 
உங்களின் அடுத்த வருட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. 

அடுத்த வருடம் 
ஆரோக்கியமாக வாழ விரும்புகிறீர்களா? 
அதிக பணம் சம்பாதித்து வாழ்க்கை தராதரத்தை உயர்த்த விரும்புகிறீர்களா? 
உலக ஊர்களை எல்லாம் சுற்றி பார்க்க விரும்புகிறீர்களா? 

இன்றைய உங்கள் 24 மணி நேரத்தில் அதற்க்காக எத்தனை மணியை 
முதலீடு செய்கிறீர்கள் என்பதில்தான் அது தங்கி இருக்கிறது. 

நாதமுனி கிருபன் போனற்வர்களால் உங்களுக்கு வழிகளைத்தான் சொல்ல முடியும் 
உங்களுக்காக அவர்களால் படிக்கவோ உடற்பயிற்சி செய்யவோ முடியாத ஒரு 
இக்கட்டான நிலை உலகில் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்:
1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy)
2. 5G, 6G
3. AI
4. Nano technology etc

இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள்  மிக மிக அவசியம்.

 90 இல்  இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை.

மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும்  பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.