Jump to content

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடுமையான அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடுமையான அறிக்கை ஒன்றினை சமரிப்பிக்க உள்ள ஐ நா மனித உரிமைகள் அமைப்பு, அந்த அறிக்கையின் பிரதி ஒன்றினை இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது.

இந்த அறிக்கை கிடைத்துள்ளது என உறுதிப்படுத்திய அரசு, அதற்குரிய பதிலை தயாரிக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில், ஐ நா வுக்கு அளித்த இலங்கை அரசின் உறுதிமொழிகளில் இருந்து புதிய அரசு விலகியது மட்டுமல்லாது, நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில், பல கரிசனத்துக்குரிய தலைகீழ் மாறுதல்களை அவதானிப்பதாக இந்த அறிக்கை சொல்கிறது.

மனித உரிமைகள் சபை, இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என இந்த அறிக்கை சொல்கிறது.

http://www.dailymirror.lk/breaking_news/UNHRC-Damning-report-on-Sri-Lanka-to-be-tabled/108-204169

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடுமையான அறிக்கை ஒன்றினை சமரிப்பிக்க உள்ள ஐ நா மனித உரிமைகள் அமைப்பு, அந்த அறிக்கையின் பிரதி ஒன்றினை இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது.

இந்த அறிக்கை கிடைத்துள்ளது என உறுதிப்படுத்திய அரசு, அதற்குரிய பதிலை தயாரிக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில், ஐ நா வுக்கு அளித்த இலங்கை அரசின் உறுதிமொழிகளில் இருந்து புதிய அரசு விலகியது மட்டுமல்லாது, நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில், பல கரிசனத்துக்குரிய தலைகீழ் மாறுதல்களை அவதானிப்பதாக இந்த அறிக்கை சொல்கிறது.

மனித உரிமைகள் சபை, இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என இந்த அறிக்கை சொல்கிறது.

http://www.dailymirror.lk/breaking_news/UNHRC-Damning-report-on-Sri-Lanka-to-be-tabled/108-204169

என்ன அழுத்தத்தை பிரயோகிக்கப் போகினம். சும்மா தடவிக் குடுப்பினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

என்ன அழுத்தத்தை பிரயோகிக்கப் போகினம். சும்மா தடவிக் குடுப்பினம்

இந்த முறையாவது.... நம்பிக்கையுடன் காத்திருப்போம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தொடர்பில் காட்டமான அறிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவு

 
Gota-Michel-696x387.jpg
 33 Views

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் காட்டமான அறிக்கை ஒன்றை முன்வைக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிசேல் பசெலட் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு வெளியிடவும், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்துள்ளார். அதன் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது அவரின் திட்டம்.

சிறீலங்கா அரசுக்கும் இந்த அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்கா அரசு அதற்கான பதிலை இன்றுவரை வழங்கவில்லை என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தாரங்கா பாலசூரியா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதம் 22 ஆம் நாள் முதல் மார்ச் மாதம் 19 ஆம் நாள் வரை இடம்பெறும் இந்த கூட்டத்தொடரில் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானம் தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கை ஒன்றையும் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் சிறீலங்கா அரசின் தோல்வி தொடர்பில் விமர்சனங்கள் இருக்கும் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசு முன்னைய தீர்மானத்தில் இருந்து வெளியேறியது குறித்து தனது கவலையை கடந்த செப்படம்பர் மாதம் வெளியிட்ட ஆணையாளர் இது தொடர்பில் ஆணைக்குழு அதிக அக்கறை காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

https://www.ilakku.org/?p=39937

 

 

இலங்கை தொடர்பான கடும் அறிக்கையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்கவுள்ளது

Digital News Team 2021-01-21T16:16:54

இலங்கை தொடர்பான கடுமையான அறிக்கையொன்றை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளது.
ஜெனீவா அமர்விற்கு முன்னரே அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள ஐநா வட்டாரங்கள் அந்த அறிக்கை தாக்கம் செலுத்துவதாகயிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அறிக்கையை முன்கூட்டியே வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

michele-bachelet-1-300x135.jpg
இலங்கை அரசாங்கத்திற்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அரசாங்கத்தின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை மக்களிற்கு பகிரங்கப்படுத்துவோம் என ஐநா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலக அறிக்கை கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் நேற்றுவரை அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையை இலங்கை சமர்ப்பிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 22ம் திகதி முதல் மார்ச் முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
இந்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் இலங்கை குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார், குறிப்பிட்ட அறிக்கையில் அவர் மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதமை தொடர்பில் கடும் கண்டனங்களை முன்வைக்கவுள்ளார்.

 

https://thinakkural.lk/article/106432

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சி இருக்கிற தமிழ் மக்களையும் புலம் பெயர உதவினாலே இனப்பிரச்சனை சுபமாய் முடிஞ்சிடும்.

Link to comment
Share on other sites

 

 

 

இலங்கையைக் கடுமையாகச் சாடும் அறிக்கையொன்றை, ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் மிஷெல் பக்கெலெ அடுத்த மாதமளவில் சமர்ப்பிக்கவுள்ளாரென கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுமுன்னர் அதற்கு இலங்கையின் பதிலைப் பெறுவதற்காக அறிக்கையின் பிரதியொன்று முற்கூட்டியே இலங்கை அரசுக்கௌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அப்பதில் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் உட்தரப்புச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வருடம் பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46வது அமர்வு நடைபெறவிருக்கிறது. ஆனால் அதற்கு முதலே இவ்வறிக்கையை வெளியிட ஆணையாளர் விரும்புவதாகவும் அதற்கு முன்னர், அறிக்கைக்குப் பதிலளிக்கும் உரிமையை இலங்கைக்கு அளித்து அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறார் எனவும் டெய்லி மிரர் தெரிவிக்கிறது.

இவ்வமர்வின்போது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் குறிப்பிட்டபடி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், தொடர்பான இலங்கையின் நடவடிக்கைகள் மீதான விபரமான அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்போது, இத் தீர்மானத்தில் இணக்கம் தெரிவித்தபடி, தற்போதைய, முந்திய அரசாங்கங்கள் மேற்கொள்ளத் தவறிய விடயங்கள் பற்றி அவர் காட்டமான விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


தீர்மானம் 30/1 மற்றும் ரணில் அரசினால் இணைந்து முன்மொழியப்பட்ட 30/1 உடன் தொடர்புடைய தீர்மானமான 40/1 ஆகியவற்றிலிருந்து தாம் விலகுவதாக தற்போதைய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், இவ்விரு தீர்மானங்களிலும் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, 2015 முதல், மார்ச் 2021 வரை ஐ.நா. கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால், இலங்கை அரசு இவற்றை உதாசீனம் செய்து வருகிறது என சர்வதேச சமூகமும், பல மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த வருடம் புதிய அர்சு பதவியேற்றதும் ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகுவதற்குக் காட்டிய அவசரம் தனக்கு மிகவும் குழப்பம் தருவதாகவும், இலங்கை தொடர்பாக சபை அதிக கவனத்தைச் செலுத்தவேண்டுமெனவும் ஆணையாளர் பக்கெலெ தெரிவித்திருந்தார்.

https://marumoli.com/இலன்கையைக்-கடுமையாகச்-சா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டமான அறிக்கை எல்லாம் இப்ப உதவாது. எதையும் செயலில் காட்ட வேணும் சும்மா அறிக்கை அறிக்கையா விட்டுக்கொண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையோடு உறங்கிவிடுவினை. அடுத்த கூட்டத்தொடருக்கு அடிச்சு விழுந்து இன்னோரு அறிக்கை. இப்படியே காலங்கடத்தி நிலங்கள் பறிபோயிற்று, உரிமைகள் இழந்தாச்சு, இப்போ தொல்பொருள் ஆராய்ச்சி என்று இறங்கி இருக்கிறதையும் முழுங்கின பிற்பாடு சாதிக்க ஏதும் இல்லை. சிங்களத்தை  பாராட்டி  மூடிப்போட்டு போவினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.