Jump to content

சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம் ||  Tamil News AMMK members big arrangement for Sasikala welcome

சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூர் சிவாஜி நகர் போரிங் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலா அனுமதிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/சசிகலாவிற்கு-மீண்டும்-மூ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு எல்லாம் மோடிக்குத்தான் வெளிச்சம்.. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.டி ஸ்கேனுக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சசிகலா - தொண்டர்களைப் பார்த்து உற்சாகம்!

வீல் சேரில் சசிகலா

வீல் சேரில் சசிகலா ( ANI )

மருத்துவமனைக்கு வெளியே அழைத்துவரப்பட்ட சசிகலா, வீல்சேரில் அமர்ந்தபடி ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சசிகலா, தனது தண்டனை காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக இருக்கிறார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். சசிகலா விடுதலையாகி தமிழகம் வரும்போது அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு வழங்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

சசிகலா
 
சசிகலா

சசிகலா சிறையில் இருக்கும்போது, சக்கரை நோய், தைராய்டு போன்ற உடல் பிரச்சனை இருந்துள்ளது. தனது உணவு விஷயத்தில் கடும் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்கிறார். சிறையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோட்ட வேலைகள் மற்றும் யோகாசனம் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், சிறையில் அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த ஒரு வரமாகக் காய்ச்சல் இருந்துள்ள நிலையில், நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிறை மருத்துவர்களின் சிகிச்சையைத் தொடர்ந்து சசிகலா, பெங்களூரு சிவாஜி சாலையில் உள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு வீல் சேரில் அவரைக் கொண்டுசெல்லும் காட்சிகள் வெளியானது.

வீல் சேரில் சசிகலா
 
வீல் சேரில் சசிகலா ANI
சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் மனுவை அளித்துள்ளார்.

சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனைக்கு அவரின் ஆதரவாளர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். விவேக், ஜெயானந்த், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்றனர். சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவிற்கு உரியச் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அவர் நலமுடன் இருக்கிறார்; பயப்படத்தேவையில்லை" என்று தெரிவித்தார்.

பவ்ரிங் அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததால், சசிகலாவை விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சி.டி ஸ்கேன் எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக மருத்துவமனைக்கு வெளியே அழைத்துவரப்பட்ட சசிகலா, வீல்சேரில் அமர்ந்தபடி ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தார்.

டி.டி.வி தினகரன்
 
டி.டி.வி தினகரன்

சசிகலா உடல்நிலை குறித்து ப்வரிங் மருத்துவமனை இயக்குநர் மனோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது அதோடு மருந்துகளும் தரப்பட்டன. அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஐ.சி.யூ-வில் கண்காணிப்புக்காக மட்டுமே வைத்திருக்கிறோம். அவரின் ஆக்சிஜன் அளவு 96 இருக்கிறது. அவருக்குக் காய்ச்சல் குறைத்துள்ளது. தற்போது சசிகலாவால் நடக்க முடிகிறது. காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தற்போது மூச்சுத் திணறல் எதுவும் இல்லை. அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்க இருக்கிறோம். சி.டி ஸ்கேன் முடிவுகளை வைத்து அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யவுள்ளோம். அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையில் இருப்பார்" என்று தெரிவித்தார்.

 

https://www.vikatan.com/news/politics/sasikala-shifted-to-another-hospital-for-ct-scan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, உடையார் said:

மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவிற்கு உரியச் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அவர் நலமுடன் இருக்கிறார்; பயப்படத்தேவையில்லை" என்று தெரிவித்தார்

சின்னம்மா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். காலை 2 இட்லி சாப்பிட்டார்!

சின்னம்மா தற்போது நடைபயிற்சியும் மேற்கொண்டார். 

அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷல் டாக்டர் வந்து கொண்டு இருக்கிறார்! இன்னும் 1 மணி நேரத்தில் வந்து விடுவார்!

சின்னம்மா நலமுடன் இருக்கிறார் மற்றும் இரு தினங்களில் வீடு திரும்புவார் என்று அமெரிக்க டாக்டர் கூறினார்! 

தியாகத் தலைவி சின்னம்மா சிங்கம் போன்றவர் கழகத்தை காத்து நிற்பார்... 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடப்பாடியார் டெல்லிக்கு எவ்வளவு விட்டுக்கொடுப்பு செய்கிறாரோ அவ்வளவுக்கு நாடகம் அரங்கேறும் சிலவேளை வீல்சேரில் போனவ ஆம்பிலன்சில்  பாடியா தான் வருவா விடுதலைக்கு முன்பே அவசரப்பட்டு  கர்ஜித்து விட்டா .தமிழக ஊடகங்கள் வெளியாரின் கைகளுக்கு  போய் ரொம்ப காலமாகி விட்டது அடுத்த midia manipuladora இவவை பற்றியதாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம் ||  Tamil News AMMK members big arrangement for Sasikala welcome

சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூர் சிவாஜி நகர் போரிங் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலா அனுமதிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/சசிகலாவிற்கு-மீண்டும்-மூ/

Update:

விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. அந்த ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.

மருத்துவமனை அறிக்கை
 
மருத்துவமனை அறிக்கை

நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சி.டி ஸ்கேனை அடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா: `நுரையீரலில் தொற்று; தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு!’ - மருத்துவமனை அறிக்கை |Hospital announcement of severe infection in Sasikala's lungs (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிழம்பு said:

Update:

விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. அந்த ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.

மருத்துவமனை அறிக்கை
 
மருத்துவமனை அறிக்கை

நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சி.டி ஸ்கேனை அடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா: `நுரையீரலில் தொற்று; தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு!’ - மருத்துவமனை அறிக்கை |Hospital announcement of severe infection in Sasikala's lungs (vikatan.com)

இந்த ground glass appearance என்பது முக்கியமான அறிகுறி. இரண்டு பக்க நுரையீரலிலும் அழற்சி வந்து விட்டது. கவனிப்பைப் பொறுத்து முடிவு இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``சசிகலாவிற்கு உரியச் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறோம்.

சொந்தக்காரர்களின்  கட்டுப்பாட்டில் இல்லை எதுவும் நடக்கலாம் 😃

5 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

ராஜீவ்  காந்தி கொலைவழக்கு 7 பேரின் முடிவும் தமிழக ஆளுநரிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் சென்றுள்ளது தேர்தல் வரும் நேரம் பிஜேபி இவர்களின் விடயத்தில் சாதகமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம் குறைந்த பட்சம் ஓர் இருவராவது வெளியில் வர சந்தர்ப்பம் உருவாகியுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா!

சொத்துக்குவிப்பு  வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வருகிற 27-ஆம் தேதி அவர் விடுதலையாவார் என்று கூறப்பட்ட நிலையில்  புதன் கிழமை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடற் பரிசோதனை செய்ய மருத்துவமனை அனுமதித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சி.டி ஸ்கேன் செய்ய முடிவெடுத்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அவரோடு சசிகலாவின் மருத்துவர்கள் இருவர் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில், அவரைக் காண பெங்களூரு மருத்துவமனையில் அவரது உறவினர்களும் தொண்டர்களும் திரண்டனர். ஸ்கேன் செய்ய அழைத்துச்  சென்றார்கள் அங்கு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடந்தது. அதில் அவருக்கு நிமோனியா தொற்று இருப்பது உறுதியானது. நிமோனியா பாதிப்பு  நுரையீரலை பாதித்திருப்பதால் அது கொரோனா தொற்றாகவும் உருவாகி உள்ளது.

ரத்த அழுத்தம், சர்க்கரை குறைபாட்டுடன் நிமோனியா தொற்றும் இருப்பதால் அவரை பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்கள். ஜனவரி 27- ஆம்தேதி விடுதலை ஆக இருந்த சசிகலாவின் உடல் நிலை தொடர்பாக வெளிவரும் செய்திகள் தமிழக அரசியலை சூடாக்கி வருகிறது.
 

 

https://inioru.com/சசிகலா-சிகிச்சை-நாடகமா/

Link to comment
Share on other sites

16 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு. 

 

சரிங்க மேல்த்தரமானவரே??

வாழ்வில் துரதிஷரம் என்ற  ஒன்று உள்ளது  என்பதை  நம்புவதால் இதுவும்  கீழ்த்தரமானது தான்

அப்படியானால்  நீங்க???

அதை  நான்  சொல்லமாட்டன்🤣

(கவனத்துக்கு : மீண்டும்  சிரிப்புக்குறி)

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

 

சரிங்க மேல்த்தரமானவரே??

வாழ்வில் துரதிஷரம் என்ற  ஒன்று உள்ளது  என்பதை  நம்புவதால் இதுவும்  கீழ்த்தரமானது தான்

அப்படியானால்  நீங்க???

அதை  நான்  சொல்லமாட்டன்🤣

(கவனத்துக்கு : மீண்டும்  சிரிப்புக்குறி)

விசுகு, நான் கூறியது கருத்தை மட்டும்தான். தனி மனிதர்களை அல்ல. மனிதரின் வாழ்வில் வரும் கவலையான விடயங்களை துரஷ்ரம் என்று கடந்து செல்வது மனித வழமை. இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று வித்தியாசம் இல்லை. அதை தான் குறிப்பிட்டேன்.  நீங்களே ஜோக்  சொல்லி நீங்களே  சிரிப்பது உங்கள் உரிமை என்றாலும் நான் உங்களையோ வேறு ஒரு தனி மனிதர்களேயோ தரம் பிரிக்கவில்லை என்பது தான் உண்மை. கருத்துக்களை  தவிர நான் யாரையும் தனிப்பட விமர்சிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

 

53 minutes ago, tulpen said:

ந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து. சடுதியான நோய்கள் மனிதரின் குணநலன்களுக்கு அப்பாற்பட்டவை. நல்லவர்கள் கெட்டவர்கள் எனபதற்கு அப்பால் வாழ்வில் துரதிஷரம் அனைவருக்கும் பொதுவானது. இதற்கு உதாரணங்கள் பல உண்டு. 

 

20 minutes ago, tulpen said:

விசுகு, நான் கூறியது கருத்தை மட்டும்தான். தனி மனிதர்களை அல்ல. மனிதரின் வாழ்வில் வரும் கவலையான விடயங்களை துரஷ்ரம் என்று கடந்து செல்வது மனித வழமை. இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று வித்தியாசம் இல்லை. அதை தான் குறிப்பிட்டேன்.  நீங்களே ஜோக்  சொல்லி நீங்களே  சிரிப்பது உங்கள் உரிமை என்றாலும் நான் உங்களையோ வேறு ஒரு தனி மனிதர்களேயோ தரம் பிரிக்கவில்லை என்பது தான் உண்மை. கருத்துக்களை  தவிர நான் யாரையும் தனிப்பட விமர்சிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து.

(இதில் நான்  ஒன்றும்  சொல்வதற்கில்லை🤣)

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

 

 

எந்தப்  பெரியவர்கள் சொன்னாலும்  இந்த கூற்று அறிவு பூர்வமானதல்ல. இந்த கூற்று தனக்கு பிடிக்காதவரின் அழிவை ரசிப்பதற்காக எவரோ எப்பவோ உருவாக்கிய கீழ்தரமான கருத்து.

(இதில் நான்  ஒன்றும்  சொல்வதற்கில்லை🤣)

நீங்கள்தான் பெரியவர்கள் கூறினார்கள் என்று கூறினீர்கள். நான் அல்ல.  அந்த பெரியவர்கள் கூறினாலும் கருத்து தவறு என்பதை தான் நான் கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள்தான் பெரியவர்கள் கூறினார்கள் என்று கூறினீர்கள். நான் அல்ல.  அந்த பெரியவர்கள் கூறினாலும் கருத்து தவறு என்பதை தான் நான் கூறினேன். 

நீங்கள் மனிதர்கள்  என்கிறீர்கள்

நான் பெரியவர்கள்  அல்லது  முன்னோர்கள்  என்கிறேன்

இதில் எந்த வித்தியாசமும்  எனக்குத்தெரியவில்லை

நேரத்தை  மண்ணாக்குவதை  தவிர...

Link to comment
Share on other sites

18 hours ago, விசுகு said:

முன்பெல்லாம் அடுத்த யென்மமாம்

இப்ப  உடனுக்குடனாம்😂

பெரியவர்கள் சொல்கிறார்கள்

உங்கள் பின்னூட்டம் பாவத்தைக் கோடிட்டுக் காட்டினாலும் அது காதலர்களையும் விட்டுவைக்கவில்லை.

திருவள்ளுவரும் சொல்கிறார்:- 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

பொருள்
``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சிறையில் இருந்து தோட்ட வேலை செய்தாலும் நடைபயிற்சி செய்திருக்கிறார். அது போதாது என்று யோகாசனம், உடற்பயிற்சி,  கடும் உணவு கட்டுப்பாடு என்று இருந்தவரையே கொரோனா விடவில்லை. வாரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை நடத்துவிட்டு நடைபயிற்ச்சி செய்கிறேன் என்கின்ற நம்மவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசிகலா மருத்துவமனையில் இருப்பார்

கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசிகலா மருத்துவமனையில் இருப்பார்
பெங்களூரு: 
 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
 
இதற்கிடையே சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு வரும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 79 சதவீதமாக இருந்தது. உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்தனர். காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
 
அதைத்தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட அ.ம.மு.க.வினர் சிலர் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர், சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் ஆலோசனை செய்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர்.
 
அதன் பிறகு மதியம் 2 மணியளவில் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா, ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை சக்கர நாற்காலியில் வைத்து ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்து ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.
 
அப்போது கட்சியினரை பார்த்த அவர் தனது வலது கையை அசைத்து, தான் நலமுடன் இருப்பதை உணர்த்தினார். அதன் பிறகு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
 
சசிகலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதையொட்டி விக்டோரியா ஆஸ்பத்திரி முன்பு அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
 
டி.டி.வி.தினகரன் மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
 
இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயதாகும் சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவை இருப்பது தெரியவந்தது. அவருக்கு நீண்டகால நுரையீரல் பாதிப்பும் (எஸ்.ஏ.ஆர்.ஐ.) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
 
அவருக்கு பவுரிங் மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்சுலின், ஹெபரின், ஸ்டெராய்டு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிந்துரை அடிப்படையில் சசிகலா இன்று (அதாவது நேற்று) மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
 
அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
 
பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று அறிய ஆன்டிஜென் விரைவு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது.
 
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்டோரிய ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. வழக்கமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தது 10 நாட்கள் சிகிச்சை அளிப்போம். கொரோனாவோடு கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்

பெங்களூரு:

மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

 
இந்நிலையில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சினைகளுடன் நீண்ட கால நுரையீரல் பாதிப்பும் உள்ளது.

அவருக்கு இன்சுலின், ஹெபரின் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளும் வழங்கப்பட்டு இருந்தன. பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிந்துரையின் பேரில் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நேற்று அழைத்து வரப்பட்டு இருந்தார்.

அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் தொற்று இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடுமையான நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. நுரையீரலிலும் தீவிர தொற்று உள்ளது.

இதனால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/22090954/2277956/Tamil-News-Sasikala-affected-pneumonia-fever-hospital.vpf

 

 

Link to comment
Share on other sites

சிறையில் இருந்த சசிகலாவை எப்படிக் கொரோனா சென்று கட்டியணைத்தது....?? சிறையையும் உடைத்து உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று இதுவரை உலக நாடுகளிலிருந்தும் எந்த டாக்டர்களும் தெரிவிக்கவில்லையே...!!!🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Paanch said:

சிறையில் இருந்த சசிகலாவை எப்படிக் கொரோனா சென்று கட்டியணைத்தது....?? சிறையையும் உடைத்து உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று இதுவரை உலக நாடுகளிலிருந்தும் எந்த டாக்டர்களும் தெரிவிக்கவில்லையே...!!!🤔 

சிறையையும் உடைத்து சசிகலாவுக்கு மட்டும் உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவுக்கு தீவிர நிமோனியா திட்டமிட்ட சதி சீமான் ஆவேசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று || Tamil News, Ilavarasi  also affected by Covid19

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இளவரசிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளவரசிக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சசிகலாவை-தொடர்ந்து-இளவரச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகம் வரக்கூடாது என்டு கூட ஒருவருக்கு "கேற்-பாஸ்" போடபட்டுள்ளது போல் தெரிகிறது .. 😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.