இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்
-
Tell a friend
-
Similar Content
-
By புரட்சிகர தமிழ்தேசியன்
நினைவுத் தூபி இடிப்பும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலும்.! - நா.யோகேந்திரநாதன்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர் உட்படப் பல தரப்பினருடனும் முக்கிய பேச்சுகளை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் இலங்கையை விட்டுப் புறப்பட்டுச் சென்ற அதேநாள் இரவில் யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்திய அமைச்சரின் விஜயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வெவ்வேறு விடயங்களாகத் தோன்றியபோதிலும் ஆழமாகப் பார்க்கும்போது இந்திய அமைச்சர் வெளியிட்டிருந்த கருத்துகளைச் சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் வழங்கப்பட்ட பதிலாகவே நினைவுத் தூபி இடிப்பைப் பார்க்க முடிகிறது. ஏற்கனவே இந்த நினைவாலயத்தை அகற்றும்படியும் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்நினைவாலயம் அமைப்பதை இடைநிறுத்தும்படியும் உயர் கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உத்தரவிட்டிருந்தபோதும் அது கட்டிமுடிக்கப்பட்டு கடந்த ஆண்டு அஞ்சலி நிகழ்வும் நடத்தப்படும்வரை அக்கட்டளையை நிறைவேற்றாது தற்சமயம் திடீரென அதை அழிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டமைக்கான காரணம் எதுவென்ற கேள்வி எழுகிறது. எனவே இச் சம்பவம் இந்திய அமைச்சர் வெளியிட்ட கருத்துகளுக்கு வழங்கிய பதில் என்றே கருதப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கை இனப்பிரச்சினை உட்படப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்திய பின்பு அவரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இணைந்து மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துகள் மிகவும் முக்கியமானவையாகும். அவர் தனதுரையில் "இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது ஐக்கிய இலங்கையில் தமிழர்களுக்கு நீதி, சமத்துவம், அமைதி, கண்ணியம் என்பவற்றை உறுதி செய்வது; இனப்பிரச்சினைத் தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்பன இலங்கையின் நீண்ட கால நலனுக்கு நல்லது" எனத் தெரிவித்திருந்தார். அங்கு உரையாற்றிய தினேஷ் குணவர்த்தன அவை பற்றிய கருத்துக்கள் எவற்றையும் வெளியிடாது கொரோனாவுக்கு இந்திய உதவி, முதலீடுகள், வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, கடற்றொழில் என்பன பற்றி ஆக்கபூர்வமான பேச்சுகள் இடம்பெற்றமை பற்றிய விடயங்களை மட்டுமே தெரிவித்திருந்தார்.
அவர் மட்டுமன்றி ஜனாதிபதியோ, பிரதமரோ, அமைச்சரவை பேச்சாளரோ ஜெய்சங்கர் அவர்கள் வலியுறுத்திய அந்த விடயம் தொடர்பாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதாகவோ அல்லது நிராகரிப்பதாகவோ எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் அவர் இலங்கையை விட்டு வெளியேற விமானமேறிய அன்று இரவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிம் என்பன உறுதி செய்யப்படவேண்டும் என்பதும் எவ்வகையான முறையில் நிறைவேற்றப்படும் என்பது யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தூபி இடித்தழிக்கப்பட்டதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துகளுக்குச் சவால் விடும் வகையில் பதிலிறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இந்த நினைவாலயத் தகர்ப்பின் மூலம் அரசாங்கம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துகளை ஏற்கப் போவதில்லை என்ற செய்தியை அவருக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் தெரிவித்து அவர்களையும் திருப்திப்படுத்தியுள்ளது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத் தரும் நடவடிக்கையில் இந்தியாவைத் தாம் நம்புவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். 2010ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப் பிரச்சினைத் தீர்வுக்கு 13 பிளஸ் மூலம் தீர்வு வழங்கப் போவதாக முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலருக்கு வாக்குறுதி வழங்கிய நாள் தொட்டு இன்றுவரை சம்பந்தன் இந்தியா தீர்வைப் பெற்றுத் தரும் என்பதைச் சலிப்பின்றிக் கூறி வருகிறார். அதாவது கடந்த 11 வருட காலமாகக் கானலை நீர் எனக் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்.
இப்போது ஜெய்சங்கரின் கருத்துக்கு முள்ளிவாய்க்கால் நினைவாலயத் தகர்ப்பின் மூலம் இலங்கை அரசு பதிலளித்த நிலையிலும்கூட பழைய பல்லவியை மீண்டும் சம்பந்தன் இசைத்திருக்கிறார். இவ்வாறு சம்பந்தனும் அவரைச் சார்ந்தவர்களும் யதார்த்த நிலைமைகளைப் பற்றிப் பொருட்படுத்தாது தமிழ் மக்களுக்கு கற்பனைக் கனவுகளைக் காட்டி ஏமாற்று அரசியல் செய்ய ஆட்சியாளர்களோ முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்ப்பின் மூலம் வேறு பல இனவாத பலாபலன்களையும் இலக்கு வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கருத்து வெளியிடுகையில், தற்சமயம் யாழ்.பல்கலைகழகத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒற்றுமையாகக் கற்று வருகின்றனர் எனவும் அவர்களுக்குப் போர் காலத்தில் 10 அல்லது 11 வயதாக இருந்தது எனவும் தூபிகள் அமைப்பது போன்ற விடயங்கள் அவர்களுக்கு போர் காலத்தை நினைவூட்டி நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடும் எனவும் எனவே மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படாமல் தவிர்க்கவே உபவேந்தர் இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பல்கலைக்கழகம் சுயாதீனமான நிறுவனமெனவும் மாணவர்களின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு உபவேந்தர் மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் பல்கலைகழக நிர்வாகம் மாணவர்களின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்ட அவர் அப்படி வேறுயாராவது கட்டளையிட்டிருந்தால் யாரால் கட்டளையிடப்பட்டதென ஆராயப்படவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
போர் முடிந்த பின்பு ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தொடர்பாக இதுவரை மாணவர்களிடையே எவ்வித குழப்பங்களும் ஏற்பட்டதில்லை என்பது மட்டுமல்ல இவற்றில் சிங்கள மாணவர்களும் பங்கு கொண்டுள்ளனர். பொலிஸார், படையினரால் சில நெருக்கடிகள் ஏற்பட்டனவேயொழிய மாணவர்களிடையே எவ்வித குழப்பமும் ஏற்பட்டதில்லை. அப்படியான நிலையில் மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் நினைவுத் தூபியால் நல்லிணக்கம் குலைந்து விடுமென விசித்திரமான கற்பனையை முன் வைக்கிறார்.
அதேவேளையில் இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அது நிர்வாகத்தின் தீர்மானமேயென்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல பல்கலைக்கழகம் ஒரு சுயாதீனமான நிறுவனமெனவும் மேற்படி சம்பவம் தொடர்பாக நிர்வாகமே முடிவெடுத்ததெனவும் கூறியதுடன் இக்கட்டிடம் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிடமோ, அல்லது உயர் கல்வியமைச்சிடமோ அனுமதி பெறப்படவில்லையெனவும் அனுமதி கோரியிருந்தால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், இராணுவத் தளபதி, அமைச்சரவைப் பேச்சாளர் என அனைவருமே இந்த இடிப்புக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையெனத் தெரிவித்துப் பழியைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலையிலேயே போட்டுள்ளனர்.
ஆனால் பல்கலைகழக உபவேந்தர் சற்குணராஜா அவர்கள் இந்த நினைவுத் தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்ததெனவும் அதை அகற்றுமாறு அழுத்தங்கள் தன்மீது பிரயோகிக்கப்பட்டதெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்படப் பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே அதை இடிப்பதற்கான தீர்மானத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டி வந்ததெனவும் தெரிவித்திருந்தார்.
எனவே பல்வேறு தரப்பினரும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே உபவேந்தர் இப்படியான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதையும் ஆனால் தற்சமயம் அழுத்தம் கொடுத்த அதே தரப்பினர் உபவேந்தர்; இந்நடவடிக்கையைத் தன்னிச்சையாக மேற்கொண்டார் என்பதாகப் பழியை அவர் மீது சுமத்துகின்றனர்.
2015ம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் களனி, பேராதனை, சப்ரகமுவ, ரஜரட்டை, தென்கிழக்கு, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பல்வேறு விதமான மாணவர்களுக்கும் உபவேந்தர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகத் தொடர்ந்து குழப்பங்கள் நிலவின. இதன் காரணமாக ஆர்ப்பாட்டங்கள், கண்ணீர்ப்புகைப் பிரயோகங்கள், மாணவர்களின் கைது போன்ற அமைதியின்மை நிலவின. இவ்வாறு அங்கெல்லாம் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டபோதும் யாழ்.பல்கலைக்கழகத்தில் அவை சுமுகமாக இடம்பெற் றன.
எனவே மேலிடங்களின் அழுத்தங்கள் காரணமாகவே உபவேந்தர் இந்நடவடிக்கையை மேற்கொண்டபோதும் பழியை அவர் மீது சுமத்துவதன் மூலம் அவர் மீது மாணவர்களுக்கு கசப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதென்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதன் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளையும் குழப்பும் உள்நோக்கம் இல்லையென்று சொல்லிவிடமுடியாது.
அதேவேளையில் இறந்தவர்களுக்கான நடுகல் வழிபாடு என்பது தமிழ் மக்களிடையே சங்க காலம் தொட்டு நிலவி வரும் பாரம்பரிய கலாசார விழுமியங்களில் ஒன்றாகும். எனவே இந்த நினைவுத் தூபி இடிப்பு தமிழர்களின் அடிப்படைப் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் என்றே கருத வேண்டியுள்ளது. எவ்வாறு கொரோனாவில் இறந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரிய பண்பாட்டு உரிமை பறிக்கப்படுகிறதோ அவ்வாறே தமிழர்கள் உரிமையும் இச்சம்பவம் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
எனவே இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென வெளியிட்ட கருத்துக்கு பல்கலைக்கழக சமூகம் மரணித்த தங்கள் உறவுகளை நினைவுகூர அனுமதிக்கப் போவதில்லையெனவும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சமுகமாகக் கல்வியைத் தொடர முடியாத நிலையை ஏற்படுத்தியும் பாரம்பரிய பண்பாட்டு விழுமியத்தை மறுதலித்தும் இலங்கை அரசு பதில் வழங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவாலாகவே கருதப்படவேண்டியுள்ளது.
எனினும் ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது போன்று இவ்விடயம் சாதாரணமாக முடிந்துவிடவில்லை. அடுத்த நாள் அதிகாலையிலேயே பொது மக்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என ஏராளமானோர் பல்கலைக்கழக வாயிலில் ஒன்று தி;ரண்டு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அதுமட்டுமன்றி மாணவர்கள் இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்படும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்வதென முடிவுசெய்து அன்று நண்பகலே அதை ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி அடுத்தநாள் வட, கிழக்கு எங்கும் பரந்தளவில் இவ் அட்டூழியத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு பரந்தளவில் ஹர்த்தால் நடவடிக்கையை மேற்கொள்ளும்படியும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அறைகூவல் விடுத்தனர்.
அதையடுத்து தமிழ் அரசியல் தலைமைகள் மட்டுமன்றி முஸ்லிம் தலைமைகளும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டதுடன் ஹர்த்தாலில் கலந்து கொள்ளும்படி சகல முஸ்லிம், தமிழ் மக்களுக்கும் அழைப்புவிடுத்தனர்.
இது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலையில் இரவோடிரவாக மீண்டும் தூபியை அமைப்பதற்கான அனுமதியை உபவேந்தருக்கு அறிவித்தது. அவ்வகையில் அடுத்தநாள் அதிகாலையில் மீண்டும் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு உபவேந்தர் தலைமையில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளையில் மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதுடன் தாங்கள் போராட்டத்தை நிரந்தரமாகக் கைவிடவில்லை எனவும் நினைவுத் தூபி அமைக்கும் நடவடிக்கையைப் பொறுத்து அவ்விடயம் இழுத்துப்பறித்து நிறைவேற்றாமல் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் மீண்டும் களத்தில் இறங்கப்போவதாகத் தெரிவித்தனர்.
போராட்ட நிலைமைகள் கூர்மையடையும்போது சமாளிக்கும் வகையிலான சில நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுப்பதும் பின்பு அதை ஆறப்போட்டு நீர்த்துப் போகவைத்து இறுதியில் கைவிடுவதும் புதிய விடயமல்ல.
ஆனால் இது பரந்துபட்ட தமிழ் மக்களின் இதய உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்ற காரணத்தால் அத்தகைய நடவடிக்கைகளில் ஆட்சி;யாளர்கள் வெற்றிபெறமுடியாது.
ஏனெனில். மீண்டும் நினைவுத்தூபி அமைக்கப்படுவதென்ற வாக்குறுதி ஒரு ஏமாற்றாக அமையு மென்றால் மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் களத்தில் இறங்குவார்கள் என்பதே யதார்த்தமாகும்.
அருவி இணையத்திற்காக - நா.யோகேந்திரநாதன்
http://aruvi.com/article/tam/2021/01/13/21520/
-------கிந்தியன் -------
-
By புரட்சிகர தமிழ்தேசியன்
மிலேனியம் சவால் உடன்பாட்டின் முறிவு இலங்கை அரசாங்கத்திற்கு ஆபத்தானதா.?
இலங்கை அரசியல் பரப்பில் அமெரிக்காவின் நகர்வுகளில் ஒரு பின்னடைவாககப் பார்க்கப்படும் எம்சிசி உடன்படிக்கை பற்றிய தேடல் தவிர்க்க முடியாதது. ஏறக்குறை அமெரிக்க இலங்கை உறவு முறிந்துள்ளதாகவும் ஜெனீவாவில் அமெரிக்கா புதிய தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகவும் தமிழ் ஊடகப்பரப்பிலும் அரசியல் வாதிகள் மத்தியிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசுகளது அரசியலில் எப்போதும் ஆழமாக பதிவுசெய்யப்படும் விடயம் நலன்சார் நடத்தையாகும். அத்தகைய நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தேசமாக அமெரிக்காவின் அணுகுமுறைகள் காணப்படுவது வழமையானதாகும்.
ஆனால் அமெரிக்கா தனது நலனுக்கு விரோதமாக எதனையும் செயல்படுத்துவதில்லை. அத்தகைய நலன்களை அடைவதற்கான அரசியல் செயல்பாடுகளில் எல்லாவகையான பக்கங்களும் காணப்படும்.இதனால் எம்சிசி உடன்படிக்கை முறிவானது ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதன் உண்மைத் தன்மையையும் தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.
எம்சிசி உடன்படிக்கையிலிருந்து இலங்கை வெளியேறியதாக அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கத் தூதரகம் தானாகவே முன்வந்து இந்த உடன்படிக்கையிலிருந்து கைவிடுவதாக தெரிவித்துள்ளது. அதற்கு புறவயமான சூழல் காரணமாக அமையலாம் என கருத இடமுண்டு. அதாவது ஆரம்பம் முதலே பௌத்த பிக்குமாரும் தீவிர போக்குடைய அரசியல் வாதிகளும் அதிகமான எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்பிருந்தே இந்த உடன்படிக்கை ஆபத்தானது என கருத்து தெரிவித்திருந்தது. அது மட்டுமன்றி தென் இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்பிருந்தே தீவிர தேசியவாத உணர்வை ஏற்படுத்தும் உத்தியில் எம்சிசி உடன்படிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளது.
மிக அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக புலமையாளர்களைக் கொண்டு எம்சிசி உடன்படிக்கையின் விளைவுகள் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டதாகவும் அதில் இந்த உடன்படிக்கை ஆபத்தானது என்பதை அந்த புலமையாளர் குழு உறுதிப்படுத்தியதாகவும் அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை முக்கியமான விடயமாகும்.இவை அமெரிக்காவின் பின்வாங்கலுக்கு காரணமாக அமைய வாய்ப்புள்ளது. அப்படியாயின் அமெரிக்கா ஏன் உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கியது என்பது பிரதானமாக கேள்வியாகும்.
ஒன்று அமெரிக்கா இலங்கை போன்று பலநாடுகளில் மிலேனியம் சவால் உடன்படிக்கையில் கைச்சாத்திடாது விலகியிருகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலும் கால எல்லையை அடிப்படையாகக் கொண்டு உடன்படிக்கைகள் மீளாய்வு செய்து அதன்பிரகாரம் உடன்படிக்கைகளை ரத்து செய்யும் மரபை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை மிக நீண்ட காலமாக இழுத்தடிப்பதனாலும் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனாலும் உடன்பாட்டிலிருந்து வெளயேற வாய்ப்பிருந்துள்ளது.
இரண்டு எண்பது சதவீத விவசாய நிலம் பறிபோகும் என்ற நிலையில் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அரசாங்கம் இத்தகைய உடன்படிக்கைக்கு வராது என்ற அடிப்படையில் ரத்து செய்திருக்க வாய்ப்புண்டு. அது மட்டுமன்றி அத்தகை விடயங்களில் உடன்படிக்கையில் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டு எதிர்காலத்தில் புதிய வகை உடன்படிக்கை ஒன்றினை மேற்கொள்ள அமெரிக்க திட்டமிட்டதன் பிரகாரமும் தற்போது ரத்து செய்ய வாய்பிருந்துள்ளது எனலாம். அதற்கான உரையாடலை ஜனாதிபதி அமெரிக்க வெளியுறவுச் செயலாளரை சந்தித்த போது வெளிப்படுத்தியிருந்தார் என்பதுவும் தற்போது பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் உரையாடல்கள் நிகழ்வதனையும் குறிப்பிட முடியும்.
மூன்றாவது திருகோணமலை நகரத்தை கொழும்பு நகரத்திற்கு அடுத்த நகரமாக மாற்றுவதற்கான திட்டமிடல் எம்சிசி உடன்பாட்டில் காணப்படுவதுடன் மூன்று மணித்தியாலத்தில் கொழும்பு -திருகோணமலை போக்குவரத்தை மாற்றியமைக்கும் அதி வேக நெடுஞ்சாலைத்திட்டம் ஒன்றையும் மிலேனிய உடன்படிக்கை கொண்டிருந்தது. இதன் உண்மை நோக்கம் இந்தோ-பசுபிக் உபாயத்திற்குள் திருகோணமலைத் துறைமுகத்தை உள்ளடக்குவதுடன் அதனை அண்டிய கடல் பிரதேசத்தி-ன் வளங்களையும் கட்டுப்பாட்டையும் இந்திய-அமெரிக்க கூட்டின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளடக்குவதாக அமைந்திருந்தது. குறிப்பாக 2020 இல் இந்தியா தனித்தும் இந்தியா அமெரிக்க ஜப்பான் கூட்டாகவும் இக்கடல் பிரதேசத்தில் கடல்படைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
அது மட்டுமன்றி 2019 இல் கிழக்கு கடல் பிரதேசம்(திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரை) முழுவதும் எண்ணெய்வளம் தொடர்பில் அமெரிக்க ஆய்வு மேற்கொண்டுள்ளது. அக்காலப் பகுதியில் திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கா கடற்படைத் தளம் ஒன்றை நிறுவப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவம்சா தெரிவித்திருந்தார்.அத்தகைய இலக்கினை விஸ்தரிக்கும் நோக்கமாகவே எம்சிசி உடன்படிக்கை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் பிரகாரம் திருகோணமலை சர்வதேச வலைக்குள் போய்விடும் என்ற இலங்கை அரசாங்கத்தின் எச்சரிக்கை அமெரிக்காவை உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்ள காரணமாக அமைந்திருக்கலாம்.
நான்காவது இலங்கையில் அமெரிக்காவின் பிடியைவிட சீனாவின் பிடி பலமடைந்திருப்பதன் விளைவாகவும் உடன்பாட்டை அமெரிக்கா கைவிடக் காரணமாக அமைய வாய்ப்புள்ளது.அதாவது இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள உறவானது பலமாகவும் தந்திரோபாய ரீதியானதாகவும் காணப்படுவதனால் அமெரிக்க உத்திகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. சீனா ஹம்பாந்தோட்டையில் நிறுவியுள்ள தொழில்சாலைகள் 99 வருட குத்தகை மற்றும் ஏனைய பிரதேசங்களில் நிறுவிவரும் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கைக்கு அதிக வாய்ப்பானதாகவும் இலாபகரமானதாகவும் அமைந்துவருகின்றன என அரசாங்கம் கருதுகிறது. சீனாவின் நடவடிக்கைகள் எவையும் இலங்கையின் இறைமையைப் பாதிக்காது என அரசாங்கம் கருதுகிறது. ஆனால் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கையும் இலங்கையின் இறைமைக்கு எதிரானது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கும் தீவிரவாத அரசியல் தலைமைகளுக்கும் பௌத்தமகா சங்கத்தினருக்கும் உண்டு. இதனால் அமெரிக்காவின் நீண்ட கால நோக்கம் எதுவும் சாத்தியமாக வாய்ப்பில்லை என்ற எண்ணத்துடன் அமெரிக்கா விலகியிருக்க வாய்பட்புண்டு.
ஐந்து அமெரிக்கா அண்மையில் ஏற்படுத்திக் கொண்ட கொள்கை மாற்றத்தின் பிரகாரம் சிறிய நாடுகளுடன் முரண்படாது விட்டுக் கொடுப்புகளை செய்வதன் வாயிலாக உறவைப் பலமானதாக்குதல் என்ற அடிப்படையிலும் மிலேனியம் சவாலை கைவிடத் தீர்மானித்திருக்கலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையுடனான உறவை பலபட்படுத்தவும் ஒத்துழைக்கவும் அமெரிக்கா தயாராவதாகவே தெரிகிறது.
எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது இலங்கை அரசாங்கத்துடன் அனுசரித்துப் போகும் எண்ணத்தை அமெரிக்கா கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதில் ஏதாவது அபாயம் ஏற்பட்டு விடக்மூடாது என்பதற்காகவே கொழும்பு நிதி நகரதட்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்குவதை அண்மையில் உறுதிப்படுதியிருந்தது. அத்தகைய உறுதிப்படுத்தலானது இந்தியாவை அணைத்துக் கொண்டு அமெரிக்காவை கையாளுவதாகவே தெரிகிறது. அதனையும் அமெரிக்காவால் மேற்கொள்ள வைத்துள்ள உத்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு வகையில் குறிப்பிடுவதானால் இந்தியாவும் ஜப்பானும் உள்ளே அமெரிக்கா வெளியே என்பது போலான தோற்றப்பாட்டை தந்துள்ளது. அதனையும் அமெரிக்காவுக்குள்ளால் எடுக்க வைத்துள்ளது. எனவே இலங்கை இந்தோ-பசுபிக் அணியிலிருந்தும் விலகவில்லை சீனாவின் புதிய பட்டுப்பாதையிலிருந்தும் விலகவில்லை. இரண்டையும் இணைத்துக் கொண்டு பயணிக்கிறது. இதனை ஜெனீவாவிலும் தமிழர் தரப்பு எதிர்காலத்தில் கண்டுகொள்ளலாம்.
அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்
http://aruvi.com/article/tam/2021/01/01/21057/
-
-
Topics
-
35
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By Ahasthiyan · Posted
எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றீர்கள், வாழ்த்துக்கள். -
By புங்கையூரன் · Posted
வாழ்த்துவதற்கு அவர்கள் வார்த்தைகளைத் தேடுவார்கள்....! எல்லோரும் இவ்வாறே....நினைவு கூர்தல்களை நிகழ்த்தினால்.....வானம் தானே எமது இனத்தின் எல்லையாகும்! நன்றி...உங்கள் குடும்பத்தினருக்கு...! -
காற்றில் அளவுக்கதிகமான சல்பர் சேர்வதுடன் சுற்று சூழல் பாதிப்பு தென்னாசியாவில் அதிகம் இடி மின்னல் வரும்காலத்தில் கூடும் மக்களுக்கு தேவையான எச்சரிக்கைகள் விளக்கங்கள் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒன்று .
-
உங்கள் வேஷம் வெளித்து விட்டது நன்றி வணக்கம் . புலம்புவது நானல்ல !........
-
இப்ப யாராவது கதைக்க கூப்பிட்டதா உங்களை. நீங்களே தேவையற்ற வீம்பை தொடக்கிவிட்டு இப்படி புலம்பல் வேற.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.