Jump to content

15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார்.

joe-biden.jpg

இச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான செயன்முறையைத் தொடங்கும் திட்டங்களுக்காகவும் பைடன் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://thinakkural.lk/article/106223

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஜோ பைடன் 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் முடிவுகளில் மாற்றம்: ஜோ பைடன் அதிரடியால் அதிர்ந்தது அமெரிக்கா

டிரம்ப் முடிவுகளில் மாற்றம்: ஜோ பைடன் அதிரடியால் அதிர்ந்தது அமெரிக்கா

வாஷிங்டன், 

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார்.

ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றில் பல உத்தரவுகள் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகளை மாற்றி அமைத்தது ஆகும்.

ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவு, 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அமெரிக்காவின் மத்திய அரசு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும்...

மற்ற உத்தரவுகளில் முக்கியமானவை:-

* 2016-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை முந்தைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை சேர்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும்.

* கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த முடிவு நிறுத்தம்.

* ஈரான், சிரியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் பிறப்பித்த பயண தடைகள் ரத்து.

* மெக்கிகோ எல்லைச்சுவர் கட்டுமானம் உடனடி நிறுத்தம்

இந்த நிர்வாக உத்தரவுகளின் சிறப்பம்சம், இவற்றை செயல்படுத்த நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறத்தேவையில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்கலாம். அப்படி நாடாளுமன்றம் நிராகரித்தால் தனது மறுப்பு ஓட்டுரிமை (வீட்டோ) அதிகாரத்தை பயன்படுத்தி, ஜோ பைடன் அதை நிராகரிக்கலாம்.

ஜோ பைடன் முதன்முதலாக அமெரிக்க ஜனாதிபதியாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

இன்றைய நிர்வாக நடவடிக்கைகளுக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். நான் அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதின் மூலம் எனது செயல்பாடுகளை தொடங்கப்போகிறேன். நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. இவை நிர்வாக நடவடிக்கைகள் மட்டுமே. இவை முக்கியமானவை. ஆனால் நாம் செய்யப்போகும் பல விஷயங்களுக்கு சட்டம் தேவைப்படும்.

இனி வரும் நாட்களில் நிறைய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்து போடுவேன்.

நாம் இன்று கொரோனாவின் கூட்டு நெருக்கடி, அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம், இனப்பாகுபாடு விவகாரம் ஆகிய பிரச்சினைகளில் செயல்பட போகிறேன் என்று அவர் கூறினார்.

முதன் முறையாக நிருபர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஜோ பைடன் 15 நிர்வாக உத்தரவுகளிலும், 2 குறிப்பாணைகளிலும் கையெழுத்து போட்டதாக தெரிவித்தார்.

ஒரே நாளில் ஜோ பைடன் பிறப்பித்த 15 நிர்வாக உத்தரவுகள், அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.

 

https://www.dailythanthi.com/News/World/2021/01/22033814/Change-in-Trumps-decision-America-shocked-by-Joe-Bidens.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.