Jump to content

தூபியை ஏன் இடித்தார்கள்? மீண்டும் ஏன் கட்டுகிறார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தூபியை ஏன் இடித்தார்கள்? மீண்டும் ஏன் கட்டுகிறார்கள்?

எம்.எஸ்.எம். ஐயூப்

இலங்கை அரசாங்கம், சிறுபான்மை மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் நிலையில், இந்த நாட்டில் நிலையான சமாதானம் எப்போதும் உருவாகாது என்ற நிலைப்பாட்டுக்கு ஒருவர் வந்தாலும், அது நியாயமற்ற முடிவு எனக் கூற முடியாது. 

பதவிக்கு வந்தவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக, எதையும் செய்ய முடியாது என்று கூறினார். அதற்கு அடுத்து, அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் முறையொன்று வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில், மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் என, மாகாண சபைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கூறித் திரிந்தார். 

பின்னர், கொவிட்- 19 நோயால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என, முழு உலகமுமே கூறும் போது, இந்நாட்டு முஸ்லிம்களைச் சீண்டுவதற்காக, ஜனாஸாக்களைத் தகனம் செய்வதற்கு மட்டுமே அனுமதிப்போம் என, அரசாங்கம் விடாப்பிடியாக இருக்கிறது. 

அதையடுத்து, போரில் இறந்தோரை நினைவு கூர்வதற்காக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த நினைவுத் தூபியை, கடந்த எட்டாம் திகதி இடித்துத் தள்ளினர். 

இந்தத் தூபியை, யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜாவே அகற்றினார் என்றும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான சமாதானத்துக்கு அத்தூபி இடையூறாக இருந்ததாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியிருந்தார். 

இது உண்மையா? எவரினதும் தூண்டுதலின்றியே, உப வேந்தர் தூபியை இடித்துத் தள்ள உத்தரவிட்டார் என்பதைப் போலவும் தாம் அதற்குப் பொறுப்பல்ல என்பதைப் போலவும், அவரது கூற்று அமைந்துள்ளது. 

தூபியை இடித்தமை நியாயமானது, சரியானது எனப் பேராசிரியர் அமரதுங்க கருதுவதாக இருந்தால், நாம் அதற்குப் பொறுப்பல்ல என்பதைப் போல் ஏன் கருத்து வெளியிட வேண்டும்? ஏன், அச்செயலை உபவேந்தரின் தலையில் போட வேண்டும்? இது மாணவர்களையும் உபவேந்தரையும் மோதவிடும் செயலாகும். 

அதேவேளை, தமது தேவைக்காக இந்த நினைவுச் சின்னத்தை இடிக்க உத்தரவிடவில்லை என்றும், தமக்கு மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவின் பேரிலேயே நாம் செயற்பட்டதாகவும் உபவேந்தர், ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கூறியிருந்தார்.

ஆனால், அந்த உத்தரவை விடுத்தவர் யார் என்பதை வெளியிடத் தாம் தயாராக இல்லை என்றும் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்திருந்தார். அந்த உத்தரவை, பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் அறிந்திருக்கவில்லைப் போலும்.

இப்போது, அந்த நினைவுத் தூபி, அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என, உபவேந்தரே மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்டுவதற்காக, அவரே கடந்த 11 ஆம் திகதி அடிக்கல்லை நாட்டினார். அதற்காகத் தமக்கு, மேலிடத்திலிருந்து அனுமதி கிடைத்திருப்பதாகவும் அதைத் தாம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகவும் அவர், மேற்படி ஆங்கிலப் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். 

தூபி புதிதாகக் கட்டப்பட்டாலும், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியாகவே இருக்கும். அவ்வாறாயின், அது பேராசிரியர் சம்பத் அமரதுங்கவின் கருத்துப்படி, வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான சமாதானத்துக்கு இடையூறாக அமையாதா? 

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_a82d9680fd.jpg

நடைமுறையைப் பார்த்தால், தூபி நிலைத்து இருந்தமையா,  உடைக்கப்பட்டமையா சமாதானத்துக்குக் குந்தகமாகியது என்பது விளங்கும். நினைவுத் துபி இடிக்கப்படாமல் இருந்தால், அது அதன் பாட்டில் இருந்திருக்கும். மக்களும் அவர்களது பாட்டில் இருந்திருப்பார்கள். ஆனால், அதை இடித்ததன் மூலம், இன முறுகலையும் இன வெறுப்பையும் தாம் புதிதாகத் தூண்டிவிட்டதை, அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் இருக்கும் போது, வடக்கில் நினைவுச் சின்னங்கள், நினைவேந்தல்களை எதிர்க்கின்றன. எதிர்க்கட்சியில் இருக்கும் போது, அவற்றையும் அரசியல் இலாபத்துக்காகப் பாவித்தனர். 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்‌ஷ, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். அதன் பின்னர், தமிழ்ப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், தமது சகோதரர் மஹிந்த ராஜபக்‌ஷ, 2015 ஆம் ஆண்டு தோல்வி அடையாதிருந்தால், தமது அரசாங்கமும் திலீபன் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கியிருக்கும் என்றும் தாம் படிப்படியாகவே அவற்றுக்கு இடமளித்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

நினைவுக் கூட்டங்களும் நினைவுத் தூபிகளும் ஒன்றல்ல; நினைவுக் கூட்டங்களின் போது, அரசியல்வாதிகள் இளைஞர்களை வன்செயலுக்கும் பிரிவினைவாதத்துக்கும் தள்ளும் வகையில் உரையாற்றலாம்; உரையாற்றுகிறார்கள். ஆனால், நினைவுத் தூபிகள் போன்ற சின்னங்கள் அவ்வாறான ஆபத்தை ஒரு போதும் ஏற்படுத்துவதில்லை. மக்களுக்காகத் தாம் சரி என ஏற்றுக் கொண்ட வழியில், பல அளப்பரிய தியாகங்களைச் செய்து,  உயிர் நீத்தவர்களை, அதே மக்கள் நினைவு கூரவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவுமே அவை அமைக்கப்படுகின்றன. 

போருக்கு முன்னர், வடக்கு, கிழக்கு மக்களும் ஏனைய பகுதி மக்களும் ஓர் ஆயுத போராட்டத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மானசீகமாகப் பிளவுபட்டு இருந்தார்களா என்பது கேள்விக்குறியே. 

ஆனால், 30 ஆண்டு காலமாகப் போரில் கொல்லப்படும் ஒவ்வோர் இராணுவ வீரனும் ஒவ்வொரு புலிப் போராளியும் வடக்கிலும் தெற்கிலும் வெவ்வேறு மனத் தாக்கங்களையே ஏற்படுத்தினர். 30 ஆண்டுகள் இவ்வாறு சென்றடைந்ததன் பின்னர், வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மானசீகமாக அதள பாதாளமொன்றே உருவாகிவிட்டது என்பதே உண்மை. 

இந்த நிலையில், ஒரு சாரார் போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்காக அழுதனர்; ஒப்பாரி வைத்தனர்; நினைவுச் சின்னங்களை உருவாக்கினர்; நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். 

அதேவேளை, மற்றொரு சாரார், புலிப் போராளிகளுக்காக அழுதனர்; ஒப்பாரி வைத்தனர்; நினைவுச் சின்னங்களை உருவாக்கினர்; நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். 

போரில் இறந்த எல்லோருக்காகவும் கூட்டாக அழவோ, குறைந்த பட்சம் ‘மற்றையவரின்’ அழுகையைப் புரிந்து கொள்ளவோ, மனப்பக்குவம் எங்கும் காண்பதற்கு இல்லை. 

இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். நினைவுத் தூபிகள் போன்றவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நினைவுச் சின்னங்களை அமைத்து, போரில் இறந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதன் மூலம், அடுத்த தலைமுறையினரும் அதே போராட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள் என்று வாதிட முடியாது. அதற்கு மக்கள் விடுதலை முன்னணி சிறந்த உதாரணமாகும். 

அம்முன்னணி ஒரு முறையல்ல, இரு முறை அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கி, கிளர்ச்சி நடத்திய அமைப்பு. ஆனால், அவ்வமைப்பு தமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது, போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல முறை தாம் இனி ஒருபோதும் ஆயுதப் போரில் ஈடுபடுவதில்லை எனக் கூறியுள்ளனர். அவர்களது இரண்டாவது கிளர்ச்சி முடிவடைந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து, கடந்த 30 ஆண்டுகளாக, அதை நடைமுறையிலும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். 

தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த போதிலும், எப்போது தமது கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் இருந்தும், அவர்கள் வன்முறை அரசியலுக்காக இளைஞர்களைத் தூண்டுவதில்லை. 

ஆனால், அவர்களும் ஏப்ரல் மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் ஆயுதக் கிளர்ச்சிகளில் உயிர் நீத்த தமது சகாக்களைத் தான் நினைவு கூருகிறார்கள். அந்தக் கிளர்ச்சிகளில் தமது சகாக்கள் செய்த தியாகங்களையும் வீர தீரச் செயல்களையும் தான் புகழ்கிறார்கள். 

ஆயினும், வடக்கில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை அரசாங்கமோ, தென்பகுதி மக்களோ இதே கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம், இன்னமும் அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற தென் பகுதி அரசியல்வாதிகளின் எண்ணம் அதற்கு ஒரு காரணமாகும். 

மற்றொரு பிரிவினைவாதப் போராட்டத்துக்குத் தாம் இளைய தலைமுறையினரை இட்டுச் செல்வதில்லை என்ற உத்தரவாதத்தைத் தமிழ்த் தலைவர்கள் வழங்கத் தவறியமை மற்றொரு காரணமாகும். 

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியைப் போல், போராட்ட இலட்சியத்தை மாற்றாமல், போராட்ட வழிமுறையை மட்டுமே நாம் மாற்றினோம் என்றோ, நாம் இரண்டையும் மாற்றினோம் என்றோ கூற முடியாத இக்கட்டான நிலையில், தமிழ் அரசியலும் அமைந்துள்ளது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தூபியை-ஏன்-இடித்தார்கள்-மீண்டும்-ஏன்-கட்டுகிறார்கள்/91-264168

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.