Jump to content

பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும்- மயூரன் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும்- மயூரன் எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என அப்பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களிலுள்ள காணிகள், உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் குறித்த காணிகளை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும், தற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுகின்றது. எனவே நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையிலுள்ள காணி உரிமையாளர்கள் தமது காணிகளை உடனடியாக துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தவறும் பட்சத்தில் பராமரிப்பற்ற காணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் உடைமையாக்கபடும் என மயூரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/பராமரிப்பற்ற-காணிகள்-நல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணிய ஏலத்துக்கு விடுகிற திகதிய ஒருக்கா சொல்லுங்கப்பூ.. 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து போனவர்களின் குறியே நல்லூருக்குள் காணி வீடு வாங்குவது இப்ப என்ன செய்ய போகிறார்கள் ?

உடைமையாக்கி விட்டு இங்குவந்து மறந்து போயிருக்கும்கள். அந்த இடத்தில்  ஒரு பரப்பு காணி ஒரு கோடி போனது  என்றும் கேள்விப்பட்டன் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இங்கிருந்து போனவர்களின் குறியே நல்லூருக்குள் காணி வீடு வாங்குவது இப்ப என்ன செய்ய போகிறார்கள் ?

உடைமையாக்கி விட்டு இங்குவந்து மறந்து போயிருக்கும்கள். அந்த இடத்தில்  ஒரு பரப்பு காணி ஒரு கோடி போனது  என்றும் கேள்விப்பட்டன் . 

உண்மை பெருமாள். 

அயலவர் ஒருவர், போர் உக்கிரமாக நடந்த நேரம்... நான்கு பரப்பு காணியை... ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

காணிய ஏலத்துக்கு விடுகிற திகதிய ஒருக்கா சொல்லுங்கப்பூ.. 😉

7 minutes ago, பெருமாள் said:

இங்கிருந்து போனவர்களின் குறியே நல்லூருக்குள் காணி வீடு வாங்குவது இப்ப என்ன செய்ய போகிறார்கள் ?

உடைமையாக்கி விட்டு இங்குவந்து மறந்து போயிருக்கும்கள். அந்த இடத்தில்  ஒரு பரப்பு காணி ஒரு கோடி போனது  என்றும் கேள்விப்பட்டன் . 

 

கள்ளக்காணி புடிக்கிற சனங்கள் என்ன நித்திரையே கொள்ளுனம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அதிகாரம் பிரதேச சபைக்கு இருக்கிறதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இந்த அதிகாரம் பிரதேச சபைக்கு இருக்கிறதா?

 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

😡

ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ்.

சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு?

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா?

பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே.

இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. 

இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமிழர்களோடுதான்.

நல்லூருக்குள்தான் வருகிறது மந்திரிமனை, உருக்குலைந்து, சுவர் எல்லாம் கிறுக்கி, நாய்களும் பஸ், லொறி டிரைவர்மார் தூங்கும் இடமாக இருக்கிறது. அதை பார்க்க வக்கில்லாத பிரதேசசபை தனியார் காணி கண்ணுக்க குத்துது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  ஒன்றரைப்பரப்பு  கிடக்கு

அடக்கி  வாசிப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ்.

சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு?

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா?

பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே.

இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. 

இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமிழர்களோடுதான்.

நல்லூருக்குள்தான் வருகிறது மந்திரிமனை, உருக்குலைந்து, சுவர் எல்லாம் கிறுக்கி, நாய்களும் பஸ், லொறி டிரைவர்மார் தூங்கும் இடமாக இருக்கிறது. அதை பார்க்க வக்கில்லாத பிரதேசசபை தனியார் காணி கண்ணுக்க குத்துது.

காணிய ஏலத்தில எடுக்கிற ஐடியாவுக்கு ஆப்பு வைக்கிறீங்களப்பூ.. 😡

2 hours ago, குமாரசாமி said:

 

கள்ளக்காணி புடிக்கிற சனங்கள் என்ன நித்திரையே கொள்ளுனம்?

ஏன் பழச ஞாபகப் படுத்திறீங்க... 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

காணிய ஏலத்தில எடுக்கிற ஐடியாவுக்கு ஆப்பு வைக்கிறீங்களப்பூ.. 😡

🤣 உந்த சோலியே வேண்டாம் 🤣

ஏலத்தில எடுத்து போட்டு நீங்கள் பிளேன் ஏற, பற்றையா கிடக்கு எண்டு அடுத்த ஏலத்தை ஆரம்பிச்சுடுவாங்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

🤣 உந்த சோலியே வேண்டாம் 🤣

ஏலத்தில எடுத்து போட்டு நீங்கள் பிளேன் ஏற, பற்றையா கிடக்கு எண்டு அடுத்த ஏலத்தை ஆரம்பிச்சுடுவாங்கள் 🤣

திருக்கோணமலையிலுள்ள எங்கள் வீட்டிற்கு இடைக்கிட தண்டம் அடிக்கிறவங்க. பிறகு கதச்சு சரிப்படுத்துறது. கொஞ்சம் பெரிய காணி. பராமரிப்பு கொஞ்சம் கடினம். ஆனாலும் பராமரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறது. ஆனாலும் .... முடியல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

திருக்கோணமலையிலுள்ள எங்கள் வீட்டிற்கு இடைக்கிட தண்டம் அடிக்கிறவங்க. பிறகு கதச்சு சரிப்படுத்துறது. கொஞ்சம் பெரிய காணி. பராமரிப்பு கொஞ்சம் கடினம். ஆனாலும் பராமரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறது. ஆனாலும் .... முடியல🤣

கொஞ்ச செலவழிச்சு வாசலில் “இயற்கை வேளாண் மூலிகை பண்ணை” என்று ஒரு போர்ட்ட போடுங்கோ😀

Link to comment
Share on other sites

தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. 

1 hour ago, goshan_che said:

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

அபராதம்தானே, கொழும்பிலும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அரசுடமை ஆகிறதென்றால் அடித்துப் பிடித்து ஓடிவருவார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறீர்கள், அவர்கள் குணநலம் பற்றி எதுவும் தெரியாதுபோல் உள்ளது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

கொஞ்ச செலவழிச்சு வாசலில் “இயற்கை வேளாண் மூலிகை பண்ணை” என்று ஒரு போர்ட்ட போடுங்கோ😀

Brennnessel pflanzen und pflegen - Mein schöner Garten

குப்பைமேனியின் மருத்துவபயன்கள்.

ஆஹா.... இது, நல்ல ஐடியாவாக இருக்கே... 👍 :grin:
காஞ்சோண்டி, குப்பை மேனி... எல்லாம் மருத்துவ தாவரங்கள் தானே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. 

கதை உண்மை என்றே சொல்கிறார்கள் ஆனால் குத்தகை இலவசம் என்றாலும் தோட்டம் போட  ஆட்கள் தேட வேண்டி உள்ளது என்று நண்பர் கவலைப்படுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. 

அபராதம்தானே, கொழும்பிலும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அரசுடமை ஆகிறதென்றால் அடித்துப் பிடித்து ஓடிவருவார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறீர்கள், அவர்கள் குணநலம் பற்றி எதுவும் தெரியாதுபோல் உள்ளது.   

அப்படி இல்லை ஐயா,

காணி உரிமை என்பது தனியே உடமை உரிமை மட்டும் அல்ல. ஒருவரின் அடையாளத்துடன் பின்னி பிணைந்தது. அதில் கைவைக்கப்படாது.சிங்களவர்கள் அதில் கைவைக்க வெளிகிட்டுத்தான் இவ்வளவும்.

நல்லூரில் காணிகளை முஸ்லீமுக்கு வித்தால் - இரெண்டு மடங்கு விலைக்கு போகும்? எப்படி வசதி? வித்துப்போட்டு கொழும்பில் ஒரு பிளட் வேண்டி விட்டால், மாத வாடகையும் வரும். சும்மா பத்தைக்கு ஏன் காசை வீணாக்குவான்? நீங்கள் சொல்லும் மேட்டுகுடிகள் இப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் காணியை வைத்திருப்பவர்கள் - சொந்த ஊரில் ஒரு பிடிப்பு வேணும். அதுக்குத்தான் பலர் இந்த காணிகளை வைத்திருக்கிறார்கள்.

வேணும் எண்டால் - காணியின் மொத்த பெறுமதியில் தண்டம் 5% என்று அறிவித்தால் கதறி கொண்டு வருவினம்.

தவிர தெல்லிபழை மாரி இல்லை. நல்லூரில் ஆங்காங்கே இருக்கும் காணிகள் சூழ மதிலோடுதான் இருக்கு. அல்லது வேலியாவது. பாம்பு குடி கொள்ளும் அளவில் இல்லை.

1 hour ago, பெருமாள் said:

கதை உண்மை என்றே சொல்கிறார்கள் ஆனால் குத்தகை இலவசம் என்றாலும் தோட்டம் போட  ஆட்கள் தேட வேண்டி உள்ளது என்று நண்பர் கவலைப்படுகிறார் .

இலவசமா பலன் எடுங்கள் என்று காணியை குதகைக்கு கொடுத்தாலும், குத்தகைக்கு கொடுத்த காணியை மீட்க, காணி வித்தால் வாற காசு கொடுக்க வேணும்🤣.

இதுதான் நிலமை. இதுக்கு பயந்துதான் பலர் காணிகளையும் வீடுகளையும் பூட்டி வைக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் வெளிநாட்டு உரிமயைாளர்களுக்கு விடியுது.இன்னும்  இன்னும் அரசியல் பறையுங்கோ.விழங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ்.

சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு?

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா?

பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே.

இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. 

இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமிழர்களோடுதான்.

நல்லூருக்குள்தான் வருகிறது மந்திரிமனை, உருக்குலைந்து, சுவர் எல்லாம் கிறுக்கி, நாய்களும் பஸ், லொறி டிரைவர்மார் தூங்கும் இடமாக இருக்கிறது. அதை பார்க்க வக்கில்லாத பிரதேசசபை தனியார் காணி கண்ணுக்க குத்துது.

அபராதாரம் யாருக்கு விதிப்பது?....காணி உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு 5 வருசம் அல்லது 10 வருடத்திற்கு ஒருக்கால் ஊருக்கு போனால் 
காணியை பாராமரிக்காததால் தான் டெங்கு, மலேரியா போன்றவை வேகமாய் பரவுகின்றன.
அதை விட பாம்புகள் ...காணிகளை போய் பராமரிக்க முடியாதவர்கள் உறவுகளின் கையில் ஒப்படைக்க வேண்டும் ...இனி மேல் செய்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

அபராதாரம் யாருக்கு விதிப்பது?....காணி உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு 5 வருசம் அல்லது 10 வருடத்திற்கு ஒருக்கால் ஊருக்கு போனால் 
காணியை பாராமரிக்காததால் தான் டெங்கு, மலேரியா போன்றவை வேகமாய் பரவுகின்றன.
அதை விட பாம்புகள் ...காணிகளை போய் பராமரிக்க முடியாதவர்கள் உறவுகளின் கையில் ஒப்படைக்க வேண்டும் ...இனி மேல் செய்வார்கள் 

இப்படி செய்தால் இது இலங்கை அரசுக்கு சாதகாமான செயல் என்று சொல்ல மாட்டார்களா  தவிசாளர துரோகி என்று சொல்லமாட்டார்களா ??

 

நீங்க வேற நான் ஊரில் (எங்க ஊர் உங்களுக்கு தெரியும்) அவர்கள் அனைவரும் வெளிநாடு அவர்களது உறவினர்கள் மூலம் அழைப்பை ஏற்படுத்தி வீடு , விற்பது என்றாலோ அல்லது வாடகைக்கு கொடுப்பது என்றாலோ கொடுங்கள் என்று கேட்டேன். கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள் இப்பவரைக்கும் பாழடைந்துதான் கிடக்கிறது , ( வீடில்லாத நிலங்கள் கூட) குறைந்த விலையை சொல்லுங்கள் என்றால் கூட கோடிக்கணக்கில் தான் சொல்கிறார்கள் அப்பதான் வாங்க மாட்டார்களாம் என்றால் பாருங்கோவன் இதுவரைக்கும் 10 வருடங்களுக்கு ஒரு முறைதான் வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்கள் அனைவரும் வெளிநாடு அவர்களது உறவினர்கள் மூலம் அழைப்பை ஏற்படுத்தி வீடு , விற்பது என்றாலோ அல்லது வாடகைக்கு கொடுப்பது என்றாலோ கொடுங்கள் என்று கேட்டேன். கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள் இப்பவரைக்கும் பாழடைந்துதான் கிடக்கிறது , ( வீடில்லாத நிலங்கள் கூட) குறைந்த விலையை சொல்லுங்கள் என்றால் கூட கோடிக்கணக்கில் தான் சொல்கிறார்கள் அப்பதான் வாங்க மாட்டார்களாம் என்றால் பாருங்கோவன் இதுவரைக்கும் 10 வருடங்களுக்கு ஒரு முறைதான் வருவார்கள்.

இது பற்றி நானும்  தெரிந்துள்ளேன். தாங்களும் வீடு காணியை அனுபவிக்கமாட்டார்கள் மற்றவர்களுக்கு விற்கவும் மாட்டார்கள்  வெளிநாட்டில் இருந்து கொண்டு யாழ்பாணத்தில் வீடு காணி வைத்திருப்பதில் தான் மிகவும் ஆசை. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.