Jump to content

இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்

இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும்.

மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும்.  இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் நாம் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இலங்கையில்-தமிழ்-சமூகம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே TMVP ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது : பிள்ளையான்

 
pillayan-4%2B%25281%2529.jpg


இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும்.

மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும். இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் நாம் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.battinews.com/2021/01/tmvp.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டே.. ☹️

நமது மூதாதையர் எண்ணக்கரு...? அது என்னவென்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நமது மூதாதையர் எண்ணக்கரு

தமது சொந்த இனத்திற்குத் துரோகம் செய்து எதிரியுடன் கூடிக் குலாவுவதாக இருக்குமோ அண்ணை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

நமது மூதாதையர் எண்ணக்கரு...? அது என்னவென்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்...

புரியலே.. 😀

1 minute ago, ரஞ்சித் said:

தமது சொந்த இனத்திற்குத் துரோகம் செய்து எதிரியுடன் கூடிக் குலாவுவதாக இருக்குமோ அண்ணை? 

புரிஞ்சதுங் தானே.. 😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

புரியலே.. 😀

Quote

நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.


என்னத்தை....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தலைவர்கள் கூட்டங்களில் முன்வரிசையில் சோபாவிலா உட்காருவார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டே.. ☹️

pillayan-4%2B%25281%2529.jpg

அந்த... உடல் மொழி (body language)
அவர், எப்படிப் பட்ட மனநிலையில்.. இருக்கின்றார் என்பதனை,
தெள்ளத்  தெளிவாக... காட்டுகின்றது.

அதிலும்... அவரின், சப்பாத்து வைத்திருக்கும் விதத்தையும், கையையும்...
கவட்டை...  விரித்து,  இருக்கும் கோணத்தையும்  பார்க்க.... அருவருப்பாக  உள்ளது.

இதே... ஆள், போன கிழமை வரை... 
"கை  விலங்குடன்"  மறியலில்,  இருந்தவர் என்பதனை...
நாம்... மறக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

pillayan-4%2B%25281%2529.jpg

அந்த... உடல் மொழி (body language)
அவர், எப்படிப் பட்ட மனநிலையில்.. இருக்கின்றார் என்பதனை,
தெள்ளத்  தெளிவாக... காட்டுகின்றது.

அதிலும்... அவரின், சப்பாத்து வைத்திருக்கும் விதத்தையும், கையையும்...
கவட்டை...  விரித்து,  இருக்கும் கோணத்தையும்  பார்க்க.... அருவருப்பாக  உள்ளது.

இதே... ஆள், போன கிழமை வரை... 
"கை  விலங்குடன்"  மறியலில்,  இருந்தவர் என்பதனை...
நாம்... மறக்கவில்லை. 

 

தகுதி இல்லாதவர்களை பதவியில் அமர்த்தி, இன்னும் எங்களை கடுப்பேத்துகிறான். சிங்களவன்  இருக்கிறவர்களையும் முட்டாள்களாக்கி  தன் பின்னால் அணி சேர்க்கும் திட்டம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும்

ஆளுந்தரப்போடு கூடியிருந்து யாரோடு போராடப்போகிறார்? தமிழ்ச் சமூகம் வாழும்வரை அவர்களை விற்று தனது  கறிவேப்பிலை அரசியல் தொடருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

spacer.png

கவி அருணாசலம்... நன்றி, ஐயா .
ஒருவர்... வேதனையில், குமுறியதை...
குறிப்பிட்ட  மணித்தியாலங்களுக்குள், 
வரை படமாக... வரைந்த....
உங்கள்... திறமைக்கு... தலை வணங்குகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. நாமும் அதுவரை.. சாகும் வரை.. காட்டிக்கொடுத்து கொலை செய்து.... வெள்ளை ஜிப்பா சட்டையோடு.. சிங்கள எஜமான விசுவாசிகளாக வலம் வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210123-123334.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

அந்த... உடல் மொழி (body language)
அவர், எப்படிப் பட்ட மனநிலையில்.. இருக்கின்றார் என்பதனை,
தெள்ளத்  தெளிவாக... காட்டுகின்றது.

அதிலும்... அவரின், சப்பாத்து வைத்திருக்கும் விதத்தையும், கையையும்...
கவட்டை...  விரித்து,  இருக்கும் கோணத்தையும்  பார்க்க.... அருவருப்பாக  உள்ளது.

இதே... ஆள், போன கிழமை வரை... 
"கை  விலங்குடன்"  மறியலில்,  இருந்தவர் என்பதனை...
நாம்... மறக்கவில்லை. 

pillayan-4%2B%25281%2529.jpg

இதை நாங்கள் "இராஜ கம்பீரம்" என்று சொல்வோம்..எண்டு நான் சொன்னால்.....?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

pillayan-4%2B%25281%2529.jpg

 

 

ஏன் சாதாரண மக்களைப்போல்

சாதாரண  கதிரையில் ஐயா  இருக்கமாட்டாரோ???

Link to comment
Share on other sites

8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210123-123334.jpg 

குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு. நல்ல மப்பிலை சொல்லுறார், கண்களும் சொல்லுது.Bildergebnis für %e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் தலைவர்கள் கூட்டங்களில் முன்வரிசையில் சோபாவிலா உட்காருவார்கள்? 

பிரதம அதிதிகள் முன்வரிசையில் தான்  இருப்பார்கள் 

 

18 hours ago, satan said:

தகுதி இல்லாதவர்களை பதவியில் அமர்த்தி, இன்னும் எங்களை கடுப்பேத்துகிறான். சிங்களவன்  இருக்கிறவர்களையும் முட்டாள்களாக்கி  தன் பின்னால் அணி சேர்க்கும் திட்டம் இது.

 இவருக்கு மக்கள் தான் வாக்களித்தார்கள் அப்ப அந்த மக்கள் யார் சிங்களவர்களா  இல்லையே அம்மக்களின் வாக்கால்தான் அவருக்கு அரசு பதவி அளித்துள்ளது என்பதை கூட உங்களால் விளங்கிள்கொள்ளாமல் இருக்கிறதே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிரதம அதிதிகள் முன்வரிசையில் தான்  இருப்பார்கள் 

 கூட்டங்களில் முக்கியமானவர்கள் முன்வரிசையில் சோபாவில் இருப்பது தான் எனக்கு புதுமையாக இருந்தது

 6365056-3x2-940x627.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு பியோனைக்கூட வேலைக்கமர்த்த அதிகாரமில்லை என்று முதலமைச்சராக இருந்தபோது புலம்பியுள்ளார் இந்த சந்திரகாந்தன். இதிலிருந்தே இவரை தெரிந்தெடுத்த மக்கள் மனநிலை புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஈழத்தில் தமிழர்கள் என்கிற இனம் இருக்கும்வரையில், அவர்களின் உரிமைகளையும், தாயகத்தினையும் சிங்களவனுக்குப் பங்குபோட்டு விற்கும் தமது அரசியல் இருப்பிற்கான போராட்டம் தொடரும் என்று அவர்கூறுகிறார்.

எவரும் இதனைத் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் என்று தவறாக விளங்கிக்கொண்டால் அது அவரது பொறுப்பல்ல. 

எம்மை அழித்து, ஆக்கிரமிப்பவனின் கூலியாக, ஏவற்படை நாயாக இருக்கும் ஒருவரால் தமிழரின் உரிமைபற்றியும், அதற்கான போராட்டம்பற்றியும் பேசுவது அபத்தம் என்பதைப் புரியாத ஒருவரையா கிழக்கு மக்கள் தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.