Jump to content

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுதல் செய்து ஆற்றில் பானை விட்டமை உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாணி வேலையக் காட்டிடாடா பரந்தாமா 🤣.

அப்ப அங்காலயும் தொத்தி இருக்குமோ🤣.

பவித்திரா மாலுப்பாண் சாப்பிட்டார். நலமாக உள்ளார்.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

அப்ப அங்காலயும் தொத்தி இருக்குமோ🤣.

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்திட்டுப் போன கூட்டத்திடம்.. கொரானா துள்ளி விளையாடுது. 

நந்தசேன சார் எனியும் பொறுமை ஆகாது. புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்துக் கொண்டு போனது போல் கொரானாவையும் இழுத்துக் கொண்டு வரவும்.

பவித்திரா மாமிக்கே வந்திட்டுன்னா... மகிந்த மாமா எம்மாத்திரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

திரு வன்னியாராச்சி தொந்தி உள்ளவரா? தகவலுக்கு நன்றி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாணியை இணையத்தில் விற்கும் தம்மிக்க; இவ்வளவு விலையா? - Jvpnews

இதென்ன.... கோதரியாய் கிடக்குது.
அந்த... சுகாதார  அமைச்சர் தானே,
முதல் வரிசையில் நின்று..
தம்மிக்க பண்டார என்னும், பரியாரி தயாரித்த.. மருந்து...
கொரோனாவுக்கு... நல்லாய், வேலை செய்யும் என்று சொன்னவர்.

இப்ப... என்ன, செய்யிறது?
அந்த மருந்தை... வரிசையில் நின்று வாங்கி  குடிச்சவன் எல்லாம்...
வாந்தி, எடுத்தே..... செத்துப் போடுவாங்களே...   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

 

தம்மிக்க பண்டார என்னும், பரியாரி தயாரித்த.. மருந்து...
கொரோனாவுக்கு... நல்லாய், வேலை செய்யும் என்று சொன்னவர்.

 

அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

 

28 minutes ago, nedukkalapoovan said:

என்னடாப்பா புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்திட்டுப் போன கூட்டத்திடம்.. கொரானா துள்ளி விளையாடுது. 

நந்தசேன சார் எனியும் பொறுமை ஆகாது. புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்துக் கொண்டு போனது போல் கொரானாவையும் இழுத்துக் கொண்டு வரவும்.

பவித்திரா மாமிக்கே வந்திட்டுன்னா... மகிந்த மாமா எம்மாத்திரம். 

 

27 minutes ago, goshan_che said:

திரு வன்னியாராச்சி தொந்தி உள்ளவரா? தகவலுக்கு நன்றி😂

இஞ்சை... பாருங்கோ.....
நாங்கள், ஒரு நாட்டின் பிரதமரை பற்றி கதைக்கிறம். :grin:

கொரோனா... காற்றிலும் பரவும்.
வந்தி, தொந்தி, எல்லாம்.... அதுக்கு,  ஜூஜீப்பி.... 😜   

முக்கியமாக... இந்த நேரம், சின்ன வீடு  போன்றவற்றை...
ஒதுக்கி வைப்பதே...  ஸ்ரீலங்காவுக்கு   நல்லது.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

இப்பவும் திறம்பட இயங்குது எண்டுதான் சொல்லுவினம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

 

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

 

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

 

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

 

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 

 அங்கை ஊரிலை இப்ப நாலைஞ்சு நாளைக்கு முதலும் 60,70 பேரோடை குட்டி குட்டி பங்ஸனுகள் நடந்து கொண்டுதான் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

பாஸ் நீங்க எங்கு இதுசம்பந்தமாய் கருத்தாடல் என்னுடன்  நீங்கள் மறந்து போகுதா எனக்கு  கொஞ்சநாள் 24 மணிநேரமும் ஆக்க்டிவா இங்கு இருப்பீங்க  இங்கு.

கொஞ்ச நாளைக்கு ஆளே காணாமல் போனது போல் காணாமல் போய்  விடுவீங்க உங்கட கதைEdge of Tomorrowவில் நடக்கும் கதை போல் டைம் ரீசெட் குழப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

பாஸ் நீங்க எங்கு இதுசம்பந்தமாய் கருத்தாடல் என்னுடன்  நீங்கள் மறந்து போகுதா எனக்கு  கொஞ்சநாள் 24 மணிநேரமும் ஆக்க்டிவா இங்கு இருப்பீங்க  இங்கு.

கொஞ்ச நாளைக்கு ஆளே காணாமல் போனது போல் காணாமல் போய்  விடுவீங்க உங்கட கதைEdge of Tomorrowவில் நடக்கும் கதை போல் டைம் ரீசெட் குழப்பம் .

🤣 கருத்தாடல் செஞ்சோம் பாஸ்.

நீங்கள் இலங்கையில் சனம் சாகுது அதை மறைக்கிறார்கள் என சொன்னீர்கள் நான் இல்லை, மருத்துவமனையில் வேலை செய்யும் ஆட்களிடனும் கதைத்தேன் அப்படி இல்லை என சொன்னேன்.

பிறகு பிரண்டிக்ஸ் தொழிசாலையில் பரவி, புங்குடுதீவை மூடியபோது இதே கேள்வியை கேட்டீர்கள். இதே பதிலை சொன்னேன்.

அதன் பின்னும் ஒரு தரம்.

 

யாழுக்கு நான் வாறதும், வராததும் கிடைக்கும் பேட்டாவை பொறுத்து🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் இலங்கையில் சனம் சாகுது அதை மறைக்கிறார்கள் என சொன்னீர்கள் நான் இல்லை, மருத்துவமனையில் வேலை செய்யும் ஆட்களிடனும் கதைத்தேன் அப்படி இல்லை என சொன்னேன்.

பிறகு பிரண்டிக்ஸ் தொழிசாலையில் பரவி, புங்குடுதீவை மூடியபோது இதே கேள்வியை கேட்டீர்கள். இதே பதிலை சொன்னேன்.

அதன் பின்னும் ஒரு தரம்.

அப்படியா உங்களுடன் சீரியஸா கருத்தாடல் செய்வதில்லை என்று முடிவெடுத்தபின்னர் ஆக்கும்  நான் சொல்வது இவ மந்திரித்த தண்ணி  குண்டானை ஆற்றில் ஊற்றும் காலப்பகுதி .

இப்பகூட கட்டுநாயக்காவை  திறந்து உருமாறிய கொர்னோவை வலிய இறக்குமதி செய்கினம் இங்கு பிரிட்டனே போர்ட் அனைத்தையும் தென் அமெரிக்காவுக்கு மூடி தடை போடுகினம் அவையள் வலிந்து திறக்கினம்.பக்கத்து கிந்தியா  நாட்டுக்காரரே பயணிகள் பிளைட் அனைத்தும் தடை பண்ணி இருக்கினம் .ஊழல் மலிந்த நாட்டில் உருமாறிய கொரனோ ஒரு பயணி மூலம் போய் இறங்கினாலே கதை கந்தல்.  

எல்லாவற்றையும் விட இராணுவத்தை வைத்து கொரனோவை  முறியடிக்கலாம் என்ற கோட்பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

 

141472125_10215379225193608_799912604732

 

வெத மாத்தையாவுக்கு தன்னிலையே ஐமிச்சம்.😄

அதென்னவோ கையில் பீர் போத்தல் மாதிரில்லொ இருக்கு..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எல்லாவற்றையும் விட இராணுவத்தை வைத்து கொரனோவை  முறியடிக்கலாம் என்ற கோட்பாடு. 

பல நாடுகளைக் கூட்டி தமிழின போராட்டத்தை அழித்து விட்டு, தனது இராணுவமே சாதித்தது என்று விளம்பரம் செய்யும்போதே தெரியவேண்டாம்.......? அதில கொரோனாவையும் ஒப்பிட்டு. போகப் போகத் தெரியும் இவர்களின் வீர சாகசங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பல நாடுகளைக் கூட்டி தமிழின போராட்டத்தை அழித்து விட்டு, தனது இராணுவமே சாதித்தது என்று விளம்பரம் செய்யும்போதே தெரியவேண்டாம்.......? அதில கொரோனாவையும் ஒப்பிட்டு. போகப் போகத் தெரியும் இவர்களின் வீர சாகசங்கள்.

ஏலவே சொறீலங்கா சிங்கள இராணுவத் தளபதி.. முள்ளிவாய்க்கால் வெற்றி நாயகன்.. தமிழ் கொடி அமைப்பிடம் போய்.. தம்பிமார் உந்த வெளிநாட்டில் இருந்து ஏதோ இறக்கி வைச்சிருக்கிறீங்களாம்.. துரித கொரோனா பரிசோதனை கிட் அதிலை எங்களுக்கும் இறக்கித் தாங்கோடாப்பா..அதோடு கொரோனா உடைகளை சுத்தம் செய்ய எங்கட இராணுவத்துக்கு வாசிங் மிசின் வேணும்.. வாங்கித் தரலாம் தானே என்று.. கெஞ்சாத குறையாம். இப்படித்தான் உலகத்திடமும் கெஞ்சி இருப்பாங்கள். உலக சுத்துமாத்துக் கொள்கை வகுப்பாளர்களும்.. புலிகள் தங்களின் இராணுவக் கொள்கைகளுக்கே ஆப்படிக்கிறாங்க.. கிரீன் பரேட்.. அந்த கொமொன்டா.. பயிற்சிகளையே பிரிச்சு மேயுறாங்கள்.. அச்சொட்டா.. எல்லாம் பாதுகாப்பு வலயங்களையும் தகர்த்து முடிக்க வேண்டிய பிரமுகர்களை முடிக்கிறாங்கள். உது இப்படியே போனால்.. தமக்கும் சிக்கல் என்று தான்.. அவையும் இவைட கெஞ்சலுக்கு உதவினது. இதில.. வெட்டி வீரப்பிரதாபங்களுக்கு குறைச்சலில்ல.

இல்லை என்றால்.. புலிகள் மீதான தடையை ஏன் புலிகளே இல்லாத இக்காலத்திலும் நீடிக்கனும்..????! காரணம்.. புலிகள் சாதிக்க முடியாது என்பதையும் சாதித்துக் காட்டியவர்கள். அது பல கொள்கை வகுப்பாளர்கள் என்ற அதிமேதாவித்தனத்தைக் கொண்டலைந்தவர்களின் மொக்குத் தனத்தை போட்டுடைத்ததும் ஒரு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுத் தமிழரை முதலிட தட்டு வைத்து அழைத்தார்கள் என்னாயிற்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

 

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

 

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 

பிரித்தானியா.. எல்லைகளை மூடவில்லை. விமான நிலையங்களை மூடவில்லை. மக்கள் நடமாட்டத்தை இராணுவத்தை கொண்டு முடக்கவில்லை. மக்களை இராணுவ முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போகவில்லை. தனிமைப்படுத்தல் சிறை மையங்களை அமைத்து இராணுவ ஆயுத முனையில் மக்களை அடைத்து வைக்கவில்லை. 

இப்பவும் பிரித்தானியாவில் லொக் டவுன் என்றாங்கள்.. சனம்.. பார்டியும் கூத்துமாத்தான் இருக்குது.  எல்லாரும் எல்லா தேவைகளுக்கும் வெளில போய் தான் வருகினம்.  உள்ளூர் பயணங்களை செய்கிறார்கள். ஆனால் சொறீலங்காவில் ஒரு ஊருக்குள் இன்னொரு ஊருக்கு போகக் கூட தடை. தடியடி. 

இப்படி என்னென்ன.. காட்டிமிராண்டித் தனங்களை செய்ய முடியுமோ.. அவ்வளவை செய்தும்... அதுக்கு மேலால.. புலிகளையே அழிச்ச எங்களுக்கு கொரோனாவை வெற்றி கொள்வது.. யுயுபி என்ற அறிக்கைகளை விட்டும்.. சாதித்தது என்ன..?!

இவர்களை விட பலவீனமான.. கம்போடியா.. வியட்நாம்.. தீவுகளான.. தாய்வான்.. நியூசிலாந்து..மொரீசியஸ்.. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்.. ஏன் அதிகம் போவான்... மாலைதீவு கூட கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கினம். இவர்களின் எஜமானன் சீனா.. இன்னும் பழைய கணக்கோடு வெற்றி நடை ?? போடுகிறது. ஆனால்.. இவைட நிலை...?! எஜமானனும் கைவிட்ட நிலை. 

பீரங்கின்னா.. துப்பாக்கின்னா.. சீனனோ.. ரஷ்சியனோ.. ஹிந்தியனோ.. அமெரிக்கனோ.. ஈரானியனோ.. என்ற கணக்கில்லாமல்.. தமிழன் தலையில் கொண்டு வந்து கொட்டலாம்.. இது அப்படி அமையுமோ...???!

ஆக மொத்தத்தில்...புலிகளின் ஆயுத மெளனிப்பு.. போல் அல்ல.. கொரோனா தடுப்பு. இராணுவத்தை காட்டி கொரோனாவை வெருட்ட முடியாது.. அதனை அணுக வேண்டிய முறை உச்ச சுகாதாரம் பேணுதலே அன்றி.. இராணுவத்தை முன்னிறுத்துவதல்ல. அதனால்.. தான்.. சொறீலங்கா.. கொரோனா தடுப்பில்.. தோல்வி அடைந்தது. எனி.. நினைத்தாலும் தடுக்க முடியாது.. கொரோனா பரவலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

இராணுவத்தை முன்னிறுத்துவதல்ல

அவர்களுக்கு தெரிந்த கலை, அதைத்தானே செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

முக்கியமாக... இந்த நேரம், சின்ன வீடு  போன்றவற்றை...
ஒதுக்கி வைப்பதே...  ஸ்ரீலங்காவுக்கு   நல்லது.  🤣

என்ன தம்பி தமிழ் சிறி....! நேற்றோடு வெள்ளி போச்சுதே...!! இன்று சனி பிறந்தும் தெளியவில்லையா?  சிறீலங்காவே ஒரு சின்ன வீடு, அதுவும் ஒருவருக்கு அல்ல. அது எப்படி மற்றச் சின்ன வீடுகளை ஒதுக்கும்....?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lanka accuses US, UK of LTTE links | Sri Lanka Brief

ஓ... கோ... மகிந்தா  வலு கவனமா இருக்கோணும்... 😜 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

Lanka accuses US, UK of LTTE links | Sri Lanka Brief

ஓ... கோ... மகிந்தா  வலு கவனமா இருக்கோணும்... 😜 😎

சொன்னாலும், சொன்னேன்.... மகிந்தவுக்கும் கொரோனா என்று  ஒரு வதந்தியே கிளம்பி இருக்கிறது. :grin:

பிரதமர் அலுவலகம்.... அதெல்லாம் இல்லை. அய்யா... அந்தமாதிரி இருக்கிறார் எண்டு சொல்ல வேண்டியதாய் போட்டுது....😄😉

http://www.dailymirror.lk/breaking_news/PM-safe-rumors-of-his-critical-health-false/108-204382

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.