Jump to content

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக் கொரோனாத் தொற்று- தம்மிக்க பண்டார.!

Screenshot-2021-01-24-23-13-36-587-org-m

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனினும், தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தம்மிக்க பண்டார சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது புகைப்பிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புப் பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2021/01/24/21909/

டிஸ்கி

வாய்ல வாஸ்து சரியில்ல .. எங்கயோ வாங்கி கட்ட போறார்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் அதிகளவான கொரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தியதன் காரணத்தினால் நேற்று மாலை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.இதேவேளை அவரது கணவருக்கும் மகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(15)
 

http://samakalam.com/சுகாதார-அமைச்சர்-பவித்ர-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத்தள்ள போகுது  மந்திரித்த நீரால் தன்னை கொள்ளபார்த்தவ என்று ரெம்ப கடுப்பாய் இவ  மீது கொரனோ  இருக்காம் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அங்கொடவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் அதிகளவான கொவிட் அறிகுறிகளை வெளிப்படுத்தியதன் காரணத்தினால் நேற்று மாலை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அவரது கணவர் காஞ்சனா ஜெயரத்ன மற்றும் அவரது மகள் மீது நேற்றைய தினம் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனைகளில் கோவிட் 19 க்கு எதிர்மறையாக முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐ.டி.எச்.சின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் சுகாதார அமைச்சர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயம் தான்! இனியாவது கொரனாவுக்கு தீர்வு கசாயங்களில் இல்லை, விஞ்ஞானத்திடம் இருக்கிறது என்று மக்கள் அறிய இது போன்ற கேஸ்கள் உதவும்!

சுகாதார அமைச்சருக்கு கொரனா வந்தவுடன் சிறி லங்காவில் கொரனா கட்டுப் பாடு உயர்வாக இல்லையென்று அகமகிழும் பிரிட்டிஷ் வாசிகள் போரிசுக்கு கொரனா வந்ததை செலக்ரிவாக மறந்து விட்டார்கள்!😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இது நல்ல விடயம் தான்! இனியாவது கொரனாவுக்கு தீர்வு கசாயங்களில் இல்லை, விஞ்ஞானத்திடம் இருக்கிறது என்று மக்கள் அறிய இது போன்ற கேஸ்கள் உதவும்!

சுகாதார அமைச்சருக்கு கொரனா வந்தவுடன் சிறி லங்காவில் கொரனா கட்டுப் பாடு உயர்வாக இல்லையென்று அகமகிழும் பிரிட்டிஷ் வாசிகள் போரிசுக்கு கொரனா வந்ததை செலக்ரிவாக மறந்து விட்டார்கள்!😊 

போரிஸ் தான் கொரோனாவைக் கட்டுப்படுத்தீட்டன் என்று துள்ளிக் குதிக்கவும் இல்லை தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாதவூரான் said:

போரிஸ் தான் கொரோனாவைக் கட்டுப்படுத்தீட்டன் என்று துள்ளிக் குதிக்கவும் இல்லை தானே

அப்படிப் பார்த்தால் கோத்தாவும் குதிக்கவில்லை!

ட்ரம்பையும், பொல்சனாரோவையும் தவிர கொரனாவைக் கட்டுப் படுத்தி விட்டோமென்று குதித்த நாட்டுத் தலைவர்கள் பலர் இல்லை! தனிப்பட்ட அரசியல் வாதிகள் குதிப்பதை யார் கணக்கிலெடுப்பது?

ஆனால், சிறிலங்காவில் இன்றும் கூட கொரனா கட்டுப் பாடு யூ கேயை விட சிறப்பாக நடக்குது! அப்படி இல்லை, ஏமாற்றுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

அப்படிப் பார்த்தால் கோத்தாவும் குதிக்கவில்லை!

ட்ரம்பையும், பொல்சனாரோவையும் தவிர கொரனாவைக் கட்டுப் படுத்தி விட்டோமென்று குதித்த நாட்டுத் தலைவர்கள் பலர் இல்லை! தனிப்பட்ட அரசியல் வாதிகள் குதிப்பதை யார் கணக்கிலெடுப்பது?

ஆனால், சிறிலங்காவில் இன்றும் கூட கொரனா கட்டுப் பாடு யூ கேயை விட சிறப்பாக நடக்குது! அப்படி இல்லை, ஏமாற்றுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே?
 

முக்கியமான விசயம் இரண்டுநாட்டு சனத்தொகையும் வித்தியாசம், வாழ்க்கைமுறை வித்தியாசம்,காலநிலை வித்தியாசம் ஆகவே  சமமான ஒப்பீடு சாத்தியம் இல்லை. அப்பிடி பார்த்தால் சனத்தொகை அடிப்படையில் இறப்பு வீதத்தை ஒப்பிடும் போது இந்தியாவும்  சிறப்பாக கட்டுப்படுத்துது போல தான் இருக்கு. (கீத்றோ விமானநிலைய பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது கட்டுனாயக்கா விமானநிலைய பயணிகள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு). மற்றது வயதானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு. இப்பிடிநிறைய காரணிகள் இருக்கும் போது இலங்கை திறைமையாக கையாண்டிருக்குது என்று எப்பிடி சொல்வீர்கள். உங்களுக்கு தானே எப்பிடி ஆய்வுகளில் ஒப்பீடு செய்வார்கள் என்று நன்றாக தெரியுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாதவூரான் said:

முக்கியமான விசயம் இரண்டுநாட்டு சனத்தொகையும் வித்தியாசம், வாழ்க்கைமுறை வித்தியாசம்,காலநிலை வித்தியாசம் ஆகவே  சமமான ஒப்பீடு சாத்தியம் இல்லை. அப்பிடி பார்த்தால் சனத்தொகை அடிப்படையில் இறப்பு வீதத்தை ஒப்பிடும் போது இந்தியாவும்  சிறப்பாக கட்டுப்படுத்துது போல தான் இருக்கு. (கீத்றோ விமானநிலைய பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது கட்டுனாயக்கா விமானநிலைய பயணிகள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு). மற்றது வயதானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு. இப்பிடிநிறைய காரணிகள் இருக்கும் போது இலங்கை திறைமையாக கையாண்டிருக்குது என்று எப்பிடி சொல்வீர்கள். உங்களுக்கு தானே எப்பிடி ஆய்வுகளில் ஒப்பீடு செய்வார்கள் என்று நன்றாக தெரியுமே

சரி, ஒப்பிடலாம்:

1. சனத்தொகை சிறிலங்காவில் யூ.கேயை விட மூன்றிலொரு பங்கு என்று கொண்டால் கூட:  யுகே மாதிரி வீதம் இருந்தால் 33,000 பேர் செத்திருக்க வேண்டும். இறந்ததோ 300 பேர்!

2. 65 வயதிற்கு மேற்பட்டோரின் தொகை , இலங்கையில் யூகேயோடு ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 6 மடங்கு குறைவு. எனவே, 5,500 பேர் வரை செத்திருக்க வேண்டும்! இறந்ததோ 300 பேர்!

இவை இரண்டையும் வைத்துப் பார்த்தால், எதிர்பார்ப்பதை விட பத்து மடங்கிற்கும் குறைவான மரணவீதம்!

இந்த ஹீத்ரோ, கட்டுநாயக்கா ஒப்பீடு: யூகேயில் வெளியில் இருந்து வந்தோரால் கொரனா கொழுந்து விட்டு எரியவில்லை! சமூகப் பரவல் (community spread) மூலம் தான் கேசுகள் அதிகரித்து, கேசுகள் அதிகரித்த போது பலவீனமானோரில் மரணங்களும் அதிகரித்தன! பிரிட்டிஷ் பிஜைகள் விடுமுறைக்கு வெளியே பயணித்து திரும்பி வந்த போது தனிமைப் படுத்தலைக் கூட சட்ட பூர்வமாகச் செய்ய இயலாமையால் சமூகப் பரவல் கூடியது! 

இந்த இடத்தில் தான் இலங்கையின் தடுப்பு முறைகள் பயன் கொடுத்தன. இன்னும் வேலை செய்கின்றன! 

கணிதத்தையும் விஞ்ஞானமுறையையும் மற்றவர்களிடம் இருக்கும் சதித்திட்டக் கதைகளை இல்லாதொழிக்கத் தான் பயன்படுத்த வேண்டும் வாதவூரான்! ஒரு அரசியல் நிலைப்பாட்டை வீம்பாகத் தூக்கி நிறுத்துவதற்கல்ல!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2021 at 13:17, பெருமாள் said:

இப்பகூட கட்டுநாயக்காவை  திறந்து உருமாறிய கொர்னோவை வலிய இறக்குமதி செய்கினம்

அப்படிச் செய்தாற்த்தானே ஜெனிவா கூட்டத்தொடரில் அனுதாப அலைகளை பெற்று தண்டனையிலிருந்து தப்பி கால அவகாசமும், பணமும் பெறலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

அப்படிச் செய்தாற்த்தானே ஜெனிவா கூட்டத்தொடரில் அனுதாப அலைகளை பெற்று தண்டனையிலிருந்து தப்பி கால அவகாசமும், பணமும் பெறலாம். 

ஆகா... சிங்களவன், 
எதையும்.. செய்யக் கூடிய,  குறுக்கு வல்லமை பொருந்தியவன். 
உங்கள், கருத்தை....  சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. 
நன்றி... சாத்தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

அப்படிச் செய்தாற்த்தானே ஜெனிவா கூட்டத்தொடரில் அனுதாப அலைகளை பெற்று தண்டனையிலிருந்து தப்பி கால அவகாசமும், பணமும் பெறலாம். 

அன்று  தொடக்கம் இன்று வரைக்கும் அனுதாபத்தை வைத்து வயித்தை கழுவும் நாடு சிங்களச்சிறிலங்கா- இந்த வகையிலை ஒரு வளமும் இல்லாத ஆபிரிக்க நாடுகள் ஒரு படி மேல்........:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் சனத்தொகையின் அடிப்படையில் யுகே மாதிரி கொரோனாவால் இலங்கையில் இறக்க வேண்டுமானால் 33,000 பேர் இறந்திருக்க வேண்டும். யுகே  சாம்ராஜ்யத்தை விட மிகவும் ஏழை மக்களும் மருத்துவ வசதிகளும் குறைந்த நாடு  இலங்கை என்றபடியால்  கொரோனா  இறப்பு 100 000 ஆவது இருந்திருக்க வேண்டும். ஆனால் இறந்ததோ 300 பேர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் சனத்தொகையின் அடிப்படையில் யுகே மாதிரி கொரோனாவால் இலங்கையில் இறக்க வேண்டுமானால் 33,000 பேர் இறந்திருக்க வேண்டும். யுகே  சாம்ராஜ்யத்தை விட மிகவும் ஏழை மக்களும் மருத்துவ வசதிகளும் குறைந்த நாடு  இலங்கை என்றபடியால்  கொரோனா  இறப்பு 100 000 ஆவது இருந்திருக்க வேண்டும். ஆனால் இறந்ததோ 300 பேர்.

புலிகளை அழிச்சவைக்கு கொரோனா பெரிய வேலையே....?
சும்மா இறுக்கி மூசி விட்டாலே கொரோனா பறந்து போயிடும்...😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.