Jump to content

தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சாமச கூட்டம் இன்று (22) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமாசத்தினர் மேலும் தெரிவித்ததாவது, எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்பது எமது தொடர்ச்சியான கோரிக்கையாகும்.

இலங்கை கடற்பரப்பில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற தமிழக மீனவர்களின் உயிரிழப்பு கவலையை ஏற்படுத்துகின்றதுடன் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதேவேளை எமது கடற்பரப்பிற்குள் நுளைய வேண்டாம் என மீண்டும் மீண்டும் கோருகின்றோம்.

அத்துடன், கருப்புக் கொடிகளைப் படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளதை ஏற்க முடியாது எனவும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இக்கதவடைப்பு போராட்டத்துக்கு வர்த்தக சங்கம், ஏனைய சங்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தினர் உள்ளிட்டோர் தமக்கு ஆதரவு தரவேண்டும் என கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் மண்டைதீவில்.. புங்குடுதீவில்.. நாயாறில்.. வடமராட்சி கிழக்கில்.. சிலாவத்துறையில்..  நயினாதீவில்.. எமது மீன் வளங்கள் திட்டமிட்டு சிங்கள அத்துமீறிய மீன்பிடி.. கடலட்டை பிடி.. புத்தர் பிடிக்கு..  எதிராக.. இப்படி ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. காரணம்.. சிங்கள அரசு அனுமதிக்காது.

தமிழக மீனவர்களோடு.. இத்தனை ஆண்டுகளாக.. பெரும் பிரச்சனைகள் இன்றி.. மீன்பிடித்தீர்கள் தானே. எமது மீனவர்கள் தமிழக எல்லை வரை கள்ளக்கடத்தல்.. ஆட்கடத்தல் செய்யவில்லையா..??! அப்போதெல்லாம்.. உங்களை தமிழக மீனவர்கள் தண்டிக்கவில்லையே..??! 

ஏன் அண்மையில் கூட பெரும் பண முதலை முஸ்லிம் வர்த்தகரை மோசடியின் பின் தமிழகத்திற்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல வல்வை மீனவர்கள் சிலர் தானே உதவினர்.

எல்லை தாண்டிய மீன்பிடி.. மற்றும் சமூகவிரோதச் செயற்பாடுகளில்.. எமது மீனவர்களும் சிலர் ஈடுபட்டே வருகின்றனர். 

இந்த எல்லை தாண்டிய மீன்பிடிப் பிரச்சனையை பேசி நாமே நமக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சிங்களவனையும்.. சிங்களக் கூலிகளையும் இழுத்துவிட்டு அவர்கள் குளிர்காயவும்.. அவர்களுக்கு.. அவர்களின் கடந்த கால படுகொலைகளை மறந்து.. புகழ் மாலை அணிவதும்.. எம் மீனவ சமூகத்துக்கு நன்றன்று.

நாளை எம் கடல் வளம் சிங்களத்தால் முற்றாக்ச் சூறையாடப்படும் போது.. தமிழகமும் கேட்க  முடியாத நாதியற்ற நிலையை உருவாக்கும் நோக்கமே இந்த சதிகளுக்குப் பின்னால் உள்ளவர்களின் நோக்கம். அதற்கு இடம்கொடுக்காமல்.. எமது மீனவ சமூகம்.. தமிழக அரசு.. மற்றும் மீனவ சமூகங்களோடு.. நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் உரிய தலைவர்கள் மூலம் நேரடித் தொடர்பு கொண்டு பேசிப் பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்வதே சிறப்பாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம்.

வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம்.

வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். 

இதை வாசிக்கும் போது ஊரில் இருப்பவர்களோடு உங்களுக்கு தொடர்பே இல்லை என்று தெரியுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம்.

வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். 

நம்ம, டாக்கி அங்கிள் கடல்தொழில் அமைச்சர்.... அவர் தனக்கு சொல்லப்பட்டதை செய்கிறார். 

Link to comment
Share on other sites

6 hours ago, nedukkalapoovan said:

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம்.

வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். 

ஒரிரு மணித்தியாலத்தில் சுற்றி வரக்கூடிய சிறிய நிலப்பரப்பை கொண்டதாகவும், பிரபல ஆலய திருவிழாக்களில் வருடாவருடம்  ஒருவரை ஒருவர் சந்திக்கக கூடிய அளவுக்கு நெருக்கமாக வாழும் மக்களை கொண்டதாகவும் உள்ள இதே யாழ்பாணத்தில் தான் ஒரே அரசியல் கோட்பாடுகளை  கொண்ட  இயக்கங்களால் பேசி புரிந்துணர்வுடன் தீர்க்கப்பட வேண்டிய சிறிய விடயங்களை கூட அப்படி செய்யாமல்,  சகிப்புதன்மையற்று  துப்பாக்கிகளால் தீர்ததனர். அதனால் இழக்கப்பட்ட உயிர்களே ஆயிரக்கணக்கில் இருக்கும் போது இந்த விடயம் உங்களுக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியம் தான்.  
ஆனால் இரு பகுதியினரும் பேசி தீர்ககவேண்டிய விடயம் என்ற உங்கள் கருத்து நியாயமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இரு பகுதியினரும் பேசி தீர்ககவேண்டிய விடயம் என்ற உங்கள் கருத்து நியாயமானது. 

 

திட்டமிட்டு கொள்ளையடிக்க வருகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்..??! இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம்.

வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது.

மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும். 

மீனவர் பிரச்சினையே தெரியாமல்  இருக்கிறீர்கள் நெடுக்கு  கர்த்தால் கதவடைப்பு நடக்கும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு 

ஊரில நடக்கிறத ரெலிபோண் பண்ணி கேட்டாவது நீங்கள் கட்டையை உருட்டலாம் , சீ தட்டலாம் ( கீ போர்ட்டை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில், கொக்கிளாய், கொடுத்துடுவாய், நாயாறு , முல்லைத்தீவு, மட்டக்கிளப்பு பகுதிகளில் சிங்கள மீனவர் அத்துமீறலை தடுத்த பின்னர், வெளிநாடு மீனவர் அத்துமீறல் குறித்து பேசலாம்.

இரு பக்கமும் உள்ள தமிழர்கள், ஒன்றிணைவது சிங்களத்துக்கு கடுப்பாகிறது. 

யாழ் பல்கலைக்கழக தூபி உடைக்கப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின் வகிபாகம் அவர்களை மேலும் கடுப்பேத்தி உள்ளது.

ஆகவே, இந்த நான்கு மீனவர்கள் கொலை விவகாரத்தில், தமிழகம், கொதித்திருக்கும் நிலையில், இந்த ஹர்த்தால் தூண்டுதலை பின்னால் இருந்து செய்பவர், டக்லஸ் வழியே... கோத்தா.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

முதலில், கொக்கிளாய், கொடுத்துடுவாய், நாயாறு , முல்லைத்தீவு, மட்டக்கிளப்பு பகுதிகளில் சிங்கள மீனவர் அத்துமீறலை தடுத்த பின்னர், வெளிநாடு மீனவர் அத்துமீறல் குறித்து பேசலாம்.

இரு பக்கமும் உள்ள தமிழர்கள், ஒன்றிணைவது சிங்களத்துக்கு கடுப்பாகிறது. 

யாழ் பல்கலைக்கழக தூபி உடைக்கப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின் வகிபாகம் அவர்களை மேலும் கடுப்பேத்தி உள்ளது.

ஆகவே, இந்த நான்கு மீனவர்கள் கொலை விவகாரத்தில், தமிழகம், கொதித்திருக்கும் நிலையில், இந்த ஹர்த்தால் தூண்டுதலை பின்னால் இருந்து செய்பவர், டக்லஸ் வழியே... கோத்தா.

 

இவ்வாறு டக்கிளஸ் / கோத்தா ஆகியோரின் தூண்டலினால்தான் மீனவர்கள் போராடுகின்றனர் என்பதே போராடும் மீனவர்ளையும் அவர்களின் போராட்டத்தையும் மலினப்படுத்தும் செயல் தான் நாதம். 

நாயாறு, கொக்கிளாய், முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெறும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தமிழ் மீனவர்கள் பல போராட்டங்களை செய்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் அத்துமீறி வாடி வீடுகள் அமைத்து கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்களை போராடி வெளியேற்றியும் உள்ளனர். 

சிங்கள மீனவர்கள் வந்து அத்துமீறி போராடுவதை எதிர்ப்பது போல் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களையும் எதிர்க்க வேண்டும். இது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. ஒரு பிரச்சனை தீர்ந்த பின் தான் இன்னொரு பிரச்சனையை எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

எல்லாவற்றையும் விட தாயக மக்கள் எதற்காக எப்ப எப்படி போராட வேண்டும் என்று நியாயம் கதைக்கவும் அவர்களின் போராட்டங்களை கொச்சைபடுத்தவும் புலத்தை விட்டு பெயர்ந்த எங்களுக்கு உரிமையும் தகமையும் இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீனவர் பிரச்சினையே தெரியாமல்  இருக்கிறீர்கள் நெடுக்கு  கர்த்தால் கதவடைப்பு நடக்கும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு 

ஊரில நடக்கிறத ரெலிபோண் பண்ணி கேட்டாவது நீங்கள் கட்டையை உருட்டலாம் , சீ தட்டலாம் ( கீ போர்ட்டை)

யாழ் பண்ணைக் கடலில் இருந்து புங்குடுதீவு... நயினாதீவு.. எழுவைதீவு.. வடமராட்சி எல்லாம் கடந்த 2020 இன் ஆரம்பத்தில் தான் போய் வந்தம்.

சிங்களக் கடற்படையே மீன்பிடிக்குது கடலுக்குள் இறங்கி. காரைநகர்.. ஊர்காவற்றுறை கடற்கரைகளில்.. முதலில் கடற்படைக்கு சப்பிளை அனுப்பனும்.. நயினாதீவில்.. கடற்படைக்கு காட்டி மிச்சம் தான்.. வெளியேறும்.

பாசையூர்.. நாவாந்துறை.. மீனவ சமூகத்துக்குள் ஈபிடிபியின் ஆழ ஊடுருவல் இருக்கிறது. சில மீனவ தொழிற்சங்களை அவர்களே ஊடுவி கண்காணிக்கிறார்கள். கப்பம் பெறப்படுகிறது.

உங்களுக்கு விசயம் தெரியாட்டி.. உலகத்துக்கே தெரியாதுன்னு நினைக்கக் கூடாது.

பண்ணை.. மண்டைதீவு காவலரண் திறக்கப்பட்டு.. எல்லா மீன் வியாபாரிகளும்.. வான்களும் சோதிக்கப்படுகின்றன. கேட்டால் கஞ்சா வருகிறதாம்... சோதிக்கினமாம். அங்கு எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டு தான் உள்நுழைகிறது... கப்பத்துக்கு அளவு அங்கு தீர்மானமாகிறது.

இதை எல்லாம் ஏன் தட்டிக்கேட்டு ஒரு கதவடைப்பும் செய்யவில்லை...????! ஏன்னா செய்ய முடியாத சூழலை.. சிங்கள எஜமானக் கூலிகளும்.. ஆக்கிரமிப்பும் உருவாக்கி உள்ள நிலையில்..

தமிழக மீனவர்களோடு பகை முடிவதன் நோக்கம் என்ன..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இவ்வாறு டக்கிளஸ் / கோத்தா ஆகியோரின் தூண்டலினால்தான் மீனவர்கள் போராடுகின்றனர் என்பதே போராடும் மீனவர்ளையும் அவர்களின் போராட்டத்தையும் மலினப்படுத்தும் செயல் தான் நாதம். 

நாயாறு, கொக்கிளாய், முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெறும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தமிழ் மீனவர்கள் பல போராட்டங்களை செய்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் அத்துமீறி வாடி வீடுகள் அமைத்து கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்களை போராடி வெளியேற்றியும் உள்ளனர். 

சிங்கள மீனவர்கள் வந்து அத்துமீறி போராடுவதை எதிர்ப்பது போல் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களையும் எதிர்க்க வேண்டும். இது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. ஒரு பிரச்சனை தீர்ந்த பின் தான் இன்னொரு பிரச்சனையை எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

எல்லாவற்றையும் விட தாயக மக்கள் எதற்காக எப்ப எப்படி போராட வேண்டும் என்று நியாயம் கதைக்கவும் அவர்களின் போராட்டங்களை கொச்சைபடுத்தவும் புலத்தை விட்டு பெயர்ந்த எங்களுக்கு உரிமையும் தகமையும் இருக்கின்றதா?

குழந்தைத்தனமான பேச்சு.

உளநாட்டு சிங்களவருக்கு எதிராகவே போராட்டம் நடத்த முடியும். சில வெளிநாட்டு, மீனவர்கள் ஆக்கிரமித்தால், உள்நாட்டில் ஹர்த்தால் என்பது கேலித்தனமானது.  நினைவு தூபி விடயத்தில், ஹர்த்தால் நடந்தது, சரியானது தானே.

வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக, வெளிநாட்டு அரசுகளுடன் பேசவே, அரசுகளை மக்கள் தேர்தெடுக்கிறார்கள். பேச்சு வார்த்தை  தோற்றால், யுத்தம் செய்யும் நாடுகளும் உண்டு.

கடல்தொழில் அமைச்சரான டக்ளஸ், இந்த ராஜதந்திரத்தினை, யாழிலுள்ள இந்திய, உப தூதருடன் தொடங்கி இருக்க வேண்டும்.

அதனை செய்யாமல், மக்களை தூண்டி விடுவதற்கு கரணம் என்ன?

சிங்கள அமைச்சர் கடல் தொழில் அமைச்சராக இருந்தாலாவது, ஒரு நியாயம் இருக்கும்.

அதனை விடுத்து, இந்தியாவை சீண்டும் வகையில், கைது  செய்யப்பட்டிருக்க வேண்டிய மீனவர்களை கொலை செய்வதும், தீவு பகுதிகளில், மின்சாரம் வழங்க, சீன கொம்பனிகளை ஒப்பந்தம் இடுவதும், தேவையில்லாத வல்லரசு போட்டிகளை வரவழைத்து, எமது மக்களை பலிக்கடாவாக்கும் திட்டத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது.

இன்று புதிய தலைமுறையில் தயாநிதி மாறன் இந்திய பாராளுமன்றத்தில் பேசியதை ஒளி பரப்பினார்கள். இந்தியா தலையிட்டு தமிழர்களை காக்க வேண்டுமாம்.

இதனை தான் வல்லரசு போட்டிக்கு அடித்தளம் என்கிறேன். தமிழரைக் காப்போம் என்ற போர்வையில், சீனாவுக்கு எதிரான, தமது நலன்களை முன்னெடுக்க போகின்றனர். மேலும் ஒரு பேரவலத்துக்கு எமது மக்கள் தயாரா?

சிங்களவன், மூளையாக, சீனாவை, வடக்கே நகத்துகிறான். இதன் தாக்கம் விரைவில் உணரப்படும். முல்லைத்தீவில், பௌத்த ஆய்வு, பெரும் திட்டத்தின் ஒரு பகுதி.

இவை புரிந்தால், டக்லஸ் ஏன் கடல்தொழில் அமைச்சராக உள்ளார் என்பதும் புரியும்.  

****

எமது மீனவ மக்களுக்கு என்ன பிரச்னை என்றால், அவர்களது துறைக்கு தேவையான, முதலீடுகள் இல்லை. ரோலர் படகுகள் வாங்க பணம் இல்லை. இதனால், ஆழ்கடல் மீன்பிடித்தல் இல்லை. கரையோரத்தில், சிறிய படகுகளுடன், மீன் பிடிக்கையில், அந்நியர்கள், சிங்களவர்கள், நெருங்கி, கரையோரமாக வருவதனால் மோதல் உருவாகின்றது.

மீன் வளம் இருந்தும், அரசியல் காரணங்களால், புலம் பெயர் முதலீடுகள் செய்ய முடியாமல் இருப்பதே முக்கிய பலவீனம். புலம் பெயர் முதலீடுகள் போகும் பொது, அதனுடன், சிறந்த வெளிநாட்டு தொழில் நுட்பங்களும்  போகும். ஆனால் இன்றய நிலையில் சாத்தியம் இல்லை. 

 

Link to comment
Share on other sites

18 minutes ago, Nathamuni said:

குழந்தைத்தனமான பேச்சு.

உளநாட்டு சிங்களவருக்கு எதிராகவே போராட்டம் நடத்த முடியும். சில வெளிநாட்டு, மீனவர்கள் ஆக்கிரமித்தால், உள்நாட்டில் ஹர்த்தால் என்பது கேலித்தனமானது.

வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக, வெளிநாட்டு அரசுகளுடன் பேசவே, அரசுகளை மக்கள் தேர்தெடுக்கிறார்கள்.

கடல்தொழில் அமைச்சரான டக்ளஸ், இந்த ராஜதந்திரத்தினை, யாழிலுள்ள இந்திய, உப தூதருடன் தொடங்கி இருக்க வேண்டும்.

அதனை செய்யாமல், மக்களை தூண்டி விடுவதற்கு கரணம் என்ன?

சிங்கள அமைச்சர் கடல் தொழில் அமைச்சராக இருந்தாலாவது, ஒரு நியாயம் இருக்கும்.

அதனை விடுத்து, இந்தியாவை சீண்டும் வகையில், கைது  செய்யப்பட்டிருக்க வேண்டிய மீனவர்களை கொலை செய்வதும், தீவு பகுதிகளில், மின்சாரம் வழங்க, சீன கொம்பனிகளை ஒப்பந்தம் இடுவதும், தேவையில்லாத வல்லரசு போட்டிகளை வரவழைத்து, எமது மக்களை பலிக்கடாவாக்கும் திட்டத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது.

சிங்களவன், மூளையாக, சீனாவை, வடக்கே நகத்துகிறான். இதன் தாக்கம் விரைவில் உணரப்படும். முல்லைத்தீவில், பௌத்த ஆய்வு, பெரும் திட்டத்தின் ஒரு பகுதி.

இவை புரிந்தால், டக்லஸ் ஏன் கடல்தொழில் அமைச்சராக உள்ளார் என்பதும் புரியும்.  

இந்த போராட்டத்தின் நோக்கம் என்னவென்று இன்னும் தெளிவாக அவர்கள் சொல்லவில்லை, ஆயினும் தம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன என்பது தொடர்பான பொது பிரக்ஞையை வடக்கு சமூகத்தின் மத்தியில் இன்னும் அதிகமாக பரப்புவதற்கும் பொது அபிப்பிராயம் ஒன்றை அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு எதிராக திரட்டுவதற்கும் இவ்வகையான போராட்டம் கண்டிப்பாக உதவும்.

அத்துடன் கொழும்பு, கண்டிக்கு பிறகு இந்திய தூதரகத்தின் கிளையும் யாழில் தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போராட்டம் ஒன்றை யாழ் மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பின் இந்திய அரசின் கேவலமான வெளியுறவு கொள்கை சந்தி சிரிக்கும்.

சீனா வடக்கில் வேரூன்றின் அது இந்தியாவுக்கு எதிரானதாக அமையுமாயின் மிகுந்த சந்தோசம். அது இந்தியாவின் இறையாமையும் சுதந்திரத்தினையும் கேள்விக்குட்படுத்தும் எனில் மிக மிக சந்தோசம்!

புலம்பெயர் தமிழர்களில் பலர், நீங்கள் எல்லாம் உணர விரும்பாத ஒன்று, தாயக மக்கள் விரும்பியோ விரும்பாமலோ சேர்ந்து வாழ வேண்டி இருப்பது சிங்கள மக்களுடனும் சிங்கள அரசுடனும் தான். தமிழக மக்கள் எனப்படும் இந்தியர்களுடன் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

சீனா வடக்கில் வேரூன்றின் அது இந்தியாவுக்கு எதிரானதாக அமையுமாயின் மிகுந்த சந்தோசம். அது இந்தியாவின் இறையாமையும் சுதந்திரத்தினையும் கேள்விக்குட்படுத்தும் எனில் மிக மிக சந்தோசம்!

இதில் என்ன சந்தோசம் நிழலி?

நான் ஒருபோதுமே இந்தியாவை நம்ப போவதில்லை. வலி அப்படி.

இப்போது, சிங்களவன், சீனனை வடக்கே நகர்த்துவது, தமிழன் அழிந்தால் பரவாயில்லை. வல்லரசுகளின் ஆடுகளம், மீண்டும், தென்பகுதியில் இல்லாமல், வடக்கே போகட்டும் என்பது தான்.

மீன் பிடிப்பு அத்துமீறல் இன்று நேற்று வந்த பிரச்னை இல்லை. காலகாலமாக உள்ளது. விக்கினேஸ்வரன் கூட, இது குறித்து, முதல்வராக இருக்கும் போது பேசி இருக்கிறார். இப்போது, ஊதிப்பெருப்பிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

இதில் என்ன சந்தோசம் நிழலி?

நான் ஒருபோதுமே இந்தியாவை நம்ப போவதில்லை. வலி அப்படி.

இப்போது, சிங்களவன், சீனனை வடக்கே நகர்த்துவது, தமிழன் அழிந்தால் பரவாயில்லை. வல்லரசுகளின் ஆடுகளம், மீண்டும், தென்பகுதியில் இல்லாமல், வடக்கே போகட்டும் என்பது தான்.

மீன் பிடிப்பு அத்துமீறல் இன்று நேற்று வந்த பிரச்னை இல்லை. காலகாலமாக உள்ளது. விக்கினேஸ்வரன் கூட, இது குறித்து, முதல்வராக இருக்கும் போது பேசி இருக்கிறார். இப்போது, ஊதிப்பெருப்பிக்கப்படுகின்றது.

இது வெறுமனே அத்துமீறல் பிரச்சினை மட்டுமல்ல. உலகெங்கும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கொண்டு முழு கடல் வளத்தையே நாசம் செய்யும் செயலைத்தான் இந்த தமிழக மீனவர்களும் அவர்களின் முதலாளிகளும் செய்கின்றனர். 

இந்த முறைகளை பயன்படுத்தியதால் தான் தமிழக கடல்வளம் நாசமாகியது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சமஸ் அவர்கள் ஒரு தொடர் எழுதி இருந்தார் (அது புத்தகமாகவும் வந்தது என நினைக்கிறேன்)

இப்படியான கடல் வள கொள்ளையில் முன்னிற்பது திமுக முதலாளி டி.ஆர்.பாலு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இது வெறுமனே அத்துமீறல் பிரச்சினை மட்டுமல்ல. உலகெங்கும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கொண்டு முழு கடல் வளத்தையே நாசம் செய்யும் செயலைத்தான் இந்த தமிழக மீனவர்களும் அவர்களின் முதலாளிகளும் செய்கின்றனர். 

இந்த முறைகளை பயன்படுத்தியதால் தான் தமிழக கடல்வளம் நாசமாகியது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சமஸ் அவர்கள் ஒரு தொடர் எழுதி இருந்தார் (அது புத்தகமாகவும் வந்தது என நினைக்கிறேன்)

இப்படியான கடல் வள கொள்ளையில் முன்னிற்பது திமுக முதலாளி டி.ஆர்.பாலு

அதனை நான் சரி என்று சொல்லவில்லையே.

ஜெகதரட்ஷகன், இலங்கையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளார். கனிமொழி, தொண்டைமான் மூலமாக பல முதலீடுகளை செய்துள்ளார். அதன் காரணமாகவே, அவர் இறந்ததும், சிங்களம், அவர் மகனை கவனமாக, தலைமைத்துவத்துக்கு கொண்டு வந்தது.

ஆகவே, மக்கள் போராட்டும் தூண்டி விடப்பட்ட ஒன்று. தீர்வுகாண வழி, ராஜதந்திரம் ஒன்றே.

*****
ஒரே தீவுக்குள், சிங்களவனுடன் தான் வாழ  வேண்டும் என்கிறீர்கள்.

கணவன், மனைவி ஒருவரை, ஒருவர் புரிந்து வாழ்ந்தால் குடும்ப வாழ்க்கை. இல்லையேல் தம் வழியே போகவேண்டியது தான். இன்று ஒரு குடியொப்பம் வைத்தாலும், பிரிந்து போகலாம் என்று, தமிழ் பேசும் மக்கள் அனைவருமே சொல்வார்கள்.

ஆகவே, சிங்களவர்களுடன் ஒரே தீவில் வாழ்கிறோம் என்று, அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று இல்லையே.  

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

 

*****
ஒரே தீவுக்குள், சிங்களவனுடன் தான் வாழ  வேண்டும் என்கிறீர்கள்.

கணவன், மனைவி ஒருவரை, ஒருவர் புரிந்து வாழ்ந்தால் குடும்ப வாழ்க்கை. இல்லையேல் தம் வழியே போகவேண்டியது தான். இன்று ஒரு குடியொப்பம் வைத்தாலும், பிரிந்து போகலாம் என்று, தமிழ் பேசும் மக்கள் அனைவருமே சொல்வார்கள்.

ஆகவே, சிங்களவர்களுடன் ஒரே தீவில் வாழ்கிறோம் என்று, அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று இல்லையே.  

சிங்களவர்களுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் நான் கூறவில்லை நாதம். தாயக மக்களன் விருப்பமும் அதுவாக இருக்கவில்லை. அதனால்தான் புலிகள் மெளனிக்கும் வரைக்கும் அவர்கள் அவர்களை தாங்கி பிடித்தார்கள்.

ஆனால் இறுதியில் வாய்த்தது வேறு.

இப்ப கூடியவரைக்கும் சமரசமாக போய் பொருளாதார ரீதியிலாவது வளர்ந்து தம்மை பலப்படுத்த நினைக்கின்றார்கள். 

இது அவர்களின் தெரிவு. 

இது அடிமையாதல் அல்ல. தப்பிப் பிழைத்தல். அத்திவாரத்தையாவது காப்பாற்றி விட வேண்டும் எனும் அவா. 

இந்த அடிப்படையில் தான் மீனவர்களின் போராட்டத்தை அணுகுகின்றேன். தூண்டி விடப்பட்டதாக அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

இந்த போராட்டத்தின் நோக்கம் என்னவென்று இன்னும் தெளிவாக அவர்கள் சொல்லவில்லை, ஆயினும் தம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன என்பது தொடர்பான பொது பிரக்ஞையை வடக்கு சமூகத்தின் மத்தியில் இன்னும் அதிகமாக பரப்புவதற்கும் பொது அபிப்பிராயம் ஒன்றை அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு எதிராக திரட்டுவதற்கும் இவ்வகையான போராட்டம் கண்டிப்பாக உதவும்.

அத்துடன் கொழும்பு, கண்டிக்கு பிறகு இந்திய தூதரகத்தின் கிளையும் யாழில் தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போராட்டம் ஒன்றை யாழ் மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பின் இந்திய அரசின் கேவலமான வெளியுறவு கொள்கை சந்தி சிரிக்கும்.

சீனா வடக்கில் வேரூன்றின் அது இந்தியாவுக்கு எதிரானதாக அமையுமாயின் மிகுந்த சந்தோசம். அது இந்தியாவின் இறையாமையும் சுதந்திரத்தினையும் கேள்விக்குட்படுத்தும் எனில் மிக மிக சந்தோசம்!

புலம்பெயர் தமிழர்களில் பலர், நீங்கள் எல்லாம் உணர விரும்பாத ஒன்று, தாயக மக்கள் விரும்பியோ விரும்பாமலோ சேர்ந்து வாழ வேண்டி இருப்பது சிங்கள மக்களுடனும் சிங்கள அரசுடனும் தான். தமிழக மக்கள் எனப்படும் இந்தியர்களுடன் அல்ல.

நிதர்சனத்தை தெரிவிக்கும் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

சிங்களவர்களுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் நான் கூறவில்லை நாதம். தாயக மக்களன் விருப்பமும் அதுவாக இருக்கவில்லை. அதனால்தான் புலிகள் மெளனிக்கும் வரைக்கும் அவர்கள் அவர்களை தாங்கி பிடித்தார்கள்.

ஆனால் இறுதியில் வாய்த்தது வேறு.

இப்ப கூடியவரைக்கும் சமரசமாக போய் பொருளாதார ரீதியிலாவது வளர்ந்து தம்மை பலப்படுத்த நினைக்கின்றார்கள். 

இது அவர்களின் தெரிவு. 

இது அடிமையாதல் அல்ல. தப்பிப் பிழைத்தல். அத்திவாரத்தையாவது காப்பாற்றி விட வேண்டும் எனும் அவா. 

இந்த அடிப்படையில் தான் மீனவர்களின் போராட்டத்தை அணுகுகின்றேன். தூண்டி விடப்பட்டதாக அல்ல.

 

மேலோட்டமாக பார்த்தால், புரியாத, நுட்பமான, சதித்திட்டத்தினுள், தள்ளப்படுகிறோம் என்று தோன்றுகிறது.

இன்னோருவகையில் பார்க்கும் போது, சசிகலா, தீர்ப்பு வருகிறது என்று தெரிந்தும், அவசரப்பட்டு, கருணை காட்டப்பட முடியாத நிலைக்கு போய், சிறைக்கு சென்றார்.

அதுபோலவே, ஐநாவில், பிரச்னை வருகிறது என்று தெரிந்தும், சீனாவை நம்பி, கோத்தா இந்த வேலைகளை செய்கிறார் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

ஒரிரு மணித்தியாலத்தில் சுற்றி வரக்கூடிய சிறிய நிலப்பரப்பை கொண்டதாகவும், பிரபல ஆலய திருவிழாக்களில் வருடாவருடம்  ஒருவரை ஒருவர் சந்திக்கக கூடிய அளவுக்கு நெருக்கமாக வாழும் மக்களை கொண்டதாகவும் உள்ள இதே யாழ்பாணத்தில் தான் ஒரே அரசியல் கோட்பாடுகளை  கொண்ட  இயக்கங்களால் பேசி புரிந்துணர்வுடன் தீர்க்கப்பட வேண்டிய சிறிய விடயங்களை கூட அப்படி செய்யாமல்,  சகிப்புதன்மையற்று  துப்பாக்கிகளால் தீர்ததனர். அதனால் இழக்கப்பட்ட உயிர்களே ஆயிரக்கணக்கில் இருக்கும் போது இந்த விடயம் உங்களுக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியம் தான்.  
ஆனால் இரு பகுதியினரும் பேசி தீர்ககவேண்டிய விடயம் என்ற உங்கள் கருத்து நியாயமானது. 

துல்பேன்,

உங்களுக்கிருக்கும் அரசியல், சரித்திர அறிவுபற்றி நான் கண்டு வியந்திருக்கிறேன். பலவிடயங்களை மிகவும் ஆளமாக, கண்ணியம் குறையா வண்ணம் எழுதுகிறீர்கள். அதனாலேயே உங்கள் மீது மதிப்பும் வைத்திருக்கிறேன். புலிகளுக்கெதிரான உங்களின் கண்ணியமான  விமர்சனங்கள் முன்வைக்கப்படும் பாங்கிற்காகவே உங்களுக்குப் பதில் எழுதத் தூண்டுகிறது. 

உங்களின் கருத்துக்களிலிருந்து பார்க்கும்போது அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு வன்முறையினைப் பாவிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை உணர்கிறேன். அதேவேளை, ஆயுத பலம் கொண்டு எம்மீது திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்பினை ஆயுத ரீதியில் எதிர்கொள்வதைத்தவிர எமக்கு வேறு வழியும் இருக்கவில்லை என்பதை உங்கள் மனதில் ஏதோவொருமூலையில் நீங்களும் ஏற்றுக்கொண்டுதான் இருப்பீர்கள்.

சரி, மீனவர் பிரச்சினைக்கு வருவோம். இது தாயக தமிழக மீனவர்களுக்கிடையில் இருக்கின்ற பேசித் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை. ஆனால், இப்பிரச்சினை தீர்க்கப்படக் கூடாதென்பதற்காகவே இலங்கை அரசு செயற்படுகிறதென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. இந்தியாவில்  நிலுவையில் இருக்கின்ற வழக்கில் இன்றுவரை தேடப்படும் பிரதான குற்றவாளியான டக்கிளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சராக சிங்களம் நியமித்திருக்கும் காரணம் என்னவென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. அடுத்ததாக 2009 வரை நேரடியாகவே எமது மக்களையும், கடலுக்குச் சென்ற மீனவர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்த பேரினவாதம் இன்று எமது மீனவர்களின் நலனில் திடீரென்று அக்கறை கொண்டு தமிழக மீனவர்களைக் கொல்கிறது எனும் அபத்தத்தையும் நீங்கள் இலகுவில் புரிந்துகொண்டிருப்பீர்கள். 

எம்மை லட்சக்கணக்கில் கொன்றுகுவித்து எமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு எதிரி எமது மீனவர்களுக்காக தமிழக மீனவர்களைக் கொல்கிறான் என்பதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இதுபற்றி எனக்கு தெளிவான பார்வையொன்று இருக்கிறது.

தமிழகத்தையும், தாயகத்தையும் நிரந்தரப் பகையளிகளாக மாற்றிவிட்டால், எம்மீதான தனது ஆக்கிரமிப்பிற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பு இனிமேல் வராதென்பதே அவனது உண்மையான நோக்கம். 

ஆகவேதான் தம்மில் 4 மீனவர்களைப் பலிகொடுத்து தமிழக மீனவர் சமுதாயம் துயருற்று இருக்கும் தறுவாயில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நடவடிக்கையாக தாயக மீனவர்கள் என்கிற பேரில் தமிழக மீனவர்களுக்கெதிரான போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. இது முன்னெடுத்துச் செல்லப்பட்டால் தமிழக மீனவர்களினதும், பொதுவான தமிழக உறவுகளினதும் மனநிலை எப்படியாக இருக்கும் என்பது உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தாயக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. அதுவும் அத்துமீறி வரும் தமிழக இழுவைப்படகுகள் கடல்வளத்தினை நாசம் செய்கின்றன என்பதும் உண்மை. இது தீர்த்துவைக்கப்படவேண்டியது என்பதும் உண்மை. 

ஆனால், சிங்களம் செய்வதுபோல இந்தியாவுடன் இதுதொடர்பாக பேச லாயக்கற்ற ஒருவனை அமைச்சனாக நிறுத்தியும், தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று அவர்களது படகுகளை மூழ்கடிப்பதாலும்  தீர்த்துவிட முடியாதென்பதும், பாதிக்கப்பட்ட தாயக மீனவர்களும், தமிழக மீனவர்களும் சேர்ந்தே கருத்தொருமைப்பாட்டிற்கு வருவதே சாலப் பொறுத்தம் என்பதும் எனது எண்ணம்.

இறுதியாக, நான் உங்களிடம் கேட்கவந்த கேள்வி, எதற்காக ஐய்யா புலிகளையும் மற்றைய ஆயுதக் குழுக்களையும் இந்தப் பிரச்சினையில் மேற்கோள் காட்டினீர்கள்? உங்களுக்கு அந்தத் தேவை ஏன் ஏற்பட்டது? தவிர்த்திருக்கலாமோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

இப்ப கூடியவரைக்கும் சமரசமாக போய் பொருளாதார ரீதியிலாவது வளர்ந்து தம்மை பலப்படுத்த நினைக்கின்றார்கள். 

இது அவர்களின் தெரிவு. 

இது அடிமையாதல் அல்ல. தப்பிப் பிழைத்தல். அத்திவாரத்தையாவது காப்பாற்றி விட வேண்டும் எனும் அவா. 

இந்த அடிப்படையில் தான் மீனவர்களின் போராட்டத்தை அணுகுகின்றேன். தூண்டி விடப்பட்டதாக அல்ல.

சமரசமாகப்(?) போய் பொருளாதார ரீதியில் எம்மைப் பலப்படுத்துவது சாத்தியமா? இது சாத்தியப்பட்டால் இலங்கையில் தமிழர் பிரச்சினையின் முக்கிய காரணம் ஒன்று எப்போது இல்லாமற்போய், போராட்டமும் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களின் பொருளாதார பலமே அவர்களின் பலமான விவசாயம்தான் என்பது தெரிந்து அதனைப் பலவீனப்படுத்தி அழிக்கவே அவர்கள் பயிரிட்ட பொருட்களை வேண்டுமென்றே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தது இனவாத அரசு, இது நடந்தது 70 மற்றும் 80 களில். யுத்தத்தினைக் காரணம் காட்டியே எமது தாயகம் வேண்டுமென்று அபிவிருத்தியில் புற்க்கணிக்கப்பட்டிருக்கிறது. 80 இலிருந்து தமிழர் தாயகத்தில் அபிவிருத்தியென்பதோ, புதிய தொழிற்சாலைகள் என்பதோ ஆரம்பிக்கப்படவில்லை, இருந்தவையும் இழுத்து மூடப்பட்டன. ஆகவே சரித்திரத்தில் இருந்து தமிழனின் பொருளாதாரத்தினை நசித்துவிட வேலைசெய்யும் ஒரு அரசு இனிமேல் அபிவிருத்திசெய்யும், பொருளாதாரத்தினை வளர்க்கும் என்பது நம்பும்படியாக இல்லை. 

அடுத்தது சமரசம் என்பது இரு சம தரப்புக்களுக்கிடையேயான இணக்கம், புரிந்துணர்வு. ஆனால், அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்திற்கும் ஆக்கிரமிப்பாளனுக்கும் இடையே நடப்பது அமரசம் அல்ல, மாறாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நலிந்த சமூகத்தின் சரணாகதி அரசியல். இதில் நாம் கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கென்று எதுவுமேயில்லை. எம்மைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள என்று தெரிந்தும் ஆக்கிரமிப்பாளான் அதைத்தான் எமக்குத் தருகிறான் என்றால், எம்மால் ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியுமில்லை. 

சமரசமும் சரணாகதியும் ஒன்றல்ல, தயவுசெய்து இவையிரண்டையும் போட்டுக் குழப்பவேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமையாதலும் தப்பிப் பிழைத்தலும்

அடிமையாவது 2009 இல் நடந்துவிட்டது. இதை எவர் இல்லையென்று சொன்னாலும், அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். 2009 இன் பின்னர் எமது தாயகம் அங்குலம் அங்குலமாக சிங்கள ஆக்கிரமிப்பாளனின் கீழ் அடிமைப்பட்டிருக்கிறதென்பதை இங்கு சிலர் இன்னமும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. நடந்தது புலிகளுக்கும் அரசுக்குமான யுத்தம். ஆகவே புலிகளின் அழிப்போடு பிரச்சினை தீர்ந்துவிட்டது, தமிழருக்கு இதனால் பிரச்சினையில்லை என்று இவர்கள் நம்ப விரும்புகிறார்கள். ஆகவேதான், புலிகள் அகற்றப்பட்ட சூழ்நிலையில், சமரசமாக அரசுடன் தமக்குத் தேவையானவற்றை பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். 

புலிகளுக்கே கொடுக்காத ஒரு துரும்பை, தமிழருக்கா கொடுக்கப்போகிறேன் என்று மகிந்த வெளிப்படையாக கர்ஜித்த பின்னரும்கூட இவர்களின் தூக்கம் கலையப்போவதில்லை. ஆகவே தமது அடிமைத்தனத்திற்கு வெவ்வேறு மூலாம் பூசிக்கொண்டு நியாயப்டுத்த வருகிறார்கள். இதில் ஒன்றுதான் அடிமையாதல் இல்லையென்பதும், தப்பிப் பிழைத்தலும்.

சரி, தப்பிப் பிழைத்தல் சாத்தியமா என்று பார்க்கலாம். எப்படி, எங்கு, எவ்வாறு தப்பிப் பிழைப்பது? பின்னால் தொடர்ந்துவரும் ஆக்கிரமிப்பிலிருந்து எங்கே ஓடி ஒழியப்போகிறோம்? வடக்கிலும் கிழக்கிலும் எமது தாயகம் தொல்பொருள் சான்றுகள் என்கிற பெயரிலும், கடல்வளம் சிங்கள மீனவர்களின் மூலமாகவும் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, தண்ணிரூற்று, மணலாறு என்று எமது தாயகம் தங்குதடையற்ற ஆக்கிரமிப்பிற்கு முகம் கொடுத்து நிற்கிறது. இன்னும் சில வருடங்களில் எமது தாயகத்தில் நான் சிறுபான்மையினராக்கப்பட்டு விடுவோம். எமது நிலங்கள் சிங்களவரின் வசமாகியபின்னர் இன்று நாம் பேசும் பொருளாதாரமும், தப்பிப் பிழைத்தலும் முற்றாக மறைந்துவிடும். அதன்பிறகு தமிழரின் பொருளாதாரம் தாயகத்தில் சிங்கள முதலாளிகள் செய்யும் பொருளாதாரத்தில் கூலிகளாகச் சேர்வதுடன் நின்றுபோகும். இன்று உரிமையாலும், நிலத்தாலும், அதிகாரத்தாலும் அடிமைப்படுத்தப்படும் நாங்கள் சில காலத்தில் பொருளாதாரத்திலும் அவனுக்கு எமது தாயகத்திலேயே அடிமையாவோம். இதுதான் இங்கே பலர் கூறும் தப்பிப் பிழைத்தல் என்று நான் நினைக்கிறேன்.

ஆம் உயிர் தப்பியிருப்போம், வேறு எவையுமே அற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமையாகியபின்னர் அஸ்த்திவாரத்தினைத் தக்கவைத்தல் சாத்தியமா? எப்படி? புரிந்தவர்கள் இங்கே விளக்கலாமே? அடிமைக்கு ஏது அஸ்த்திவாரத்தினைத் தக்கவைக்கும் அதிகாரம்? எந்தப் பலத்தினைக் கொண்டு இதனைச் செய்வதாக உத்தேசம்?

சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பே தமிழரின் தாயகம் மற்றும் அதன்மீதான சுயநிர்ணய உரிமை  எனப்படும் அவர்களின் போராட்டத்தின் மைய்யத்தினை உடைத்தெறிந்து அப்போராட்டத்திற்கான சாத்தியப்பாடுகளையும், தேவையினையும் இல்லாமல் ஒழிப்பதுதான் என்றானபின்னர் அதனை எப்படி தடுத்து நிறுத்தப்போகிறீர்கள்? அதுவும் அவனுடன் சேர்ந்து சரணாகதி அரசியலை முன்னெடுத்துக்கொண்டு? இது முடியாத விடயம் என்பது உங்களுக்கே தெரிந்தும் தொடர்ந்தும் நியாயப்ப்டுத்துகிறீர்கள்! 

ஆக்கிரமிப்பாளனுடம் மோதிக்கொண்டு சுமார் 30 வருடங்கள் எமது பலத்திற்கு உட்பட்ட வகையில் எமது தாயகத்தின் அஸ்த்திவாரத்தினை எம்மால் தக்கவைக்க முடிந்தது. ஆனால் எமது இனத்தில் வளர்ந்த புற்றுநோயொன்று அப்பலத்தினைப் பலவீனமாக மாற்றி, எதிரியுடன் குலாவி எம்மை அழிக்கத் துணைநின்றது. இன்று எந்த அரணும் இன்றி அம்மண அடிமைகளாக சிங்கள ஆக்கிரமிப்பாளனின் முன்னால் கூனிக்குறுகி நிற்கும் எமக்கு அஸ்த்திவாரத்தினைத் தக்கவைக்க மனதளவிலும், உடலளவிலும், சமூகமாகவும் பலம் இருக்கிறதா? இருந்தால், அதை யார் எங்கிருந்து கொண்டுவரப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள்? எம்மைப் பலவீனமாக்க ஆக்கிரமிப்பாளன் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாமரம் வீசிக்கொண்டு எதைத் தக்கவைக்கப்போகிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் இன்று நேற்றல்ல......பல காலங்களாகவே நடந்து வரும் ஒரு பிரச்சனை.என் சிறுவயது காலங்களிலையே கேள்விப்பட்டுள்ளேன். மீன் பிடி எல்லை பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனை.அண்மையில் இங்கிலாந்திற்கும்  ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் மீன் பிடி பற்றி ஒரு பெரிய போராட்டமே நடந்தேறியது. அதை அரசியல் மூலமே முடிவுக்கு கொண்டு வந்தார்கள். சீன மீன்பிடிகளும் எல்லை மீறியதாகவே இருக்கின்றது. இதற்கும்  போராட்டங்கள் வழக்குகள்  நடந்துகொண்டுதான் இருக்கின்றது.எனவே அரசியலால் மட்டுமே தீர்வுகாண முடியும். 

வணக்கம் நிழலி! 
யாழ் இணையத்தில் மற்றவர்களின் கருத்துக்களை சரி பிழை பார்த்து நீக்குபவர் நீங்கள். அப்படியிருக்கும் போது நீங்கள் பதியும் கருத்துக்கள் சரியாக இருக்கும் என நினைக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இந்திய மீனவர்களின் அத்துமீறல் இன்று நேற்றல்ல......பல காலங்களாகவே நடந்து வரும் ஒரு பிரச்சனை.என் சிறுவயது காலங்களிலையே கேள்விப்பட்டுள்ளேன். மீன் பிடி எல்லை பிரச்சனை ஒரு உலகளாவிய பிரச்சனை.அண்மையில் இங்கிலாந்திற்கும்  ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் மீன் பிடி பற்றி ஒரு பெரிய போராட்டமே நடந்தேறியது. அதை அரசியல் மூலமே முடிவுக்கு கொண்டு வந்தார்கள். சீன மீன்பிடிகளும் எல்லை மீறியதாகவே இருக்கின்றது. இதற்கும்  போராட்டங்கள் வழக்குகள்  நடந்துகொண்டுதான் இருக்கின்றது.எனவே அரசியலால் மட்டுமே தீர்வுகாண முடியும். 

வணக்கம் நிழலி! 
யாழ் இணையத்தில் மற்றவர்களின் கருத்துக்களை சரி பிழை பார்த்து நீக்குபவர் நீங்கள். அப்படியிருக்கும் போது நீங்கள் பதியும் கருத்துக்கள் சரியாக இருக்கும் என நினைக்கின்றீர்களா?

கோத்தாவின் தலைவலி இரண்டு: ஒன்று லோக்கல் லெவலில், தமிழ் பேசும் மக்களாக இணைகிறார்கள். ஆனால், இப்போது, இஸ்லாமியரோ, தமிழர்களோ, தமக்குள் மோதி, சிங்களவருடன், இணையும் நிலையில் இல்லை.

இரண்டாவது தலைவலி, தமிழகம், இலங்கை தமிழர் பகுதியில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக கவனிப்பது. இதனை உடைக்க வெறுப்பினை வளர்ப்பது, அதுக்கான ஒரே வழி, கடல் தொழில் அமைச்சினை டக்கரிடம் கொடுத்ததும், பிரச்சனைகளை உருவாக்குவதும். இதன் காரணமாகவே, சிங்கள மீனவர் இந்தப்பக்கம் வருவதை, சிங்கள அரசு தடுத்துள்ளது.

சிலவாரங்களுக்கு  முன்னர், வல்வெட்டி மீனவரை தமிழக மீனவர் தாக்கியதாகவும், முல்லைத்தீவுக்கு அண்மையாக தமிழக படகுகள் காணப்பட்டன என்றும் செய்திகள் வந்தன.

இவை, உண்மையாக நடந்தாலும், வேண்டுமென்றே, தமிழக மீனவர் போல தென்னிலங்கை மீனவரால், நடாத்தப்பட்டது  என்ற கதையும் வருகிறது.  எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தமிழக படகுகளை பறித்து வைத்திருக்கும் அரசுக்கு, நாலு பேரை, இரண்டு படகில் போட்டு, அனுப்புவது பெரிய விடயமல்ல.

சீனன், ஒழுங்கான, போக்குவரத்துக்கு வசதியே இல்லாத, மூன்று தீவுகளுக்கு, தீடீரென மின்சார ஆலைகளை அமைக்க, தேவை என்ன வந்தது? 

அதுதான் சொன்னேன், மிகப்பெரிய சதிக்குள் தள்ள முயல்வு நடக்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.