Jump to content

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

பட மூலாதாரம், EPA

புகைப்படத்தில் இருப்பவை:

1. அமெரிக்கக் கொடி 

2. சீசர் சாவேஸ் சிலை

3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி

4. குடும்பப் புகைப்படங்கள்

5. நிர்வாக உத்தரவுகள்

6. ரிசல்யூட் மேஜை

7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம்

8. ஹேரி ட்ரூமென் சிலை

வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும். புதிய அதிபராக பதவியேற்கும் நபர், ஓவல் அலுவலகத்தில் தனக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்வார். 

அந்த வகையில், புதிதாக அதிபர் பதவி ஏற்று இருக்கும் ஜோ பைடன், தனது அலுவலகத்தை எப்படி மாற்றிருக்கிறார் என்று பார்க்கலாம். 

அதிபர் ஜோ பைடன் அலுவலகம் முழுக்க அமெரிக்க வரலாற்றின் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களின் படங்களாலும் கற்சிலைகளாலும் நிரம்பியிருக்கிறது. 

"தனது அலுவலகம் அமெரிக்காவை பிரதிபலிக்க வேண்டும் என்பது அதிபர் பைடனுக்கு முக்கியமானதாக இருந்தது. அவர் எந்த மாதிரியான அதிபராக இருக்கப்போகிறார் என்பதும் அதில் இருந்து தெரிய வேண்டும் என்று எண்ணினார்." என ஓவல் அலுவலக செயல்பாடுகளின் துணை இயக்குநர் ஆஷ்லே வில்லியம்ஸ் வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார். 

அதிபர் டிரம்ப் சுவற்றில் மாட்டியிருந்த அமெரிக்காவின் ஏழாவது அதிபரும் ஜனரஞ்சகவாதியுமான ஆண்ட்ரூ ஜாக்சன் புகைப்படத்தை அகற்றிவிட்டு தற்போது அங்கு பென்ஜமின் பிராங்க்ளினின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.

டிரம்ப்

பட மூலாதாரம், THE WHITEHOUSE

புகழ்பெற்ற எழுத்தாளர், விஞ்ஞானி மற்றும் தத்துவவாதியான பெஞ்சமின் பிராங்க்ளின் புகைப்படம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை பைடன் அறிவியல் ரீதியாக அணுகும் ஆர்வம் உள்ளவர் என்பதை குறிக்கவே அங்கு மாட்டப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. 

அதோடு அதிபர் பைடனின் அலுவலகத்தில் புரட்சியாளர் மார்டின் லூத்தர் கிங் ஜூனியர் மற்றும் ராபர்ட் எஃப் கென்னடி ஆகிய இருவரின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவருமே சிவில் உரிமைகள் இயக்கத்தை முன்னெடுத்தவர்கள். இருவரையும் அதிபர் பைடன் அடிக்கடி குறிப்பிடுவார். 

சிவில் உரிமைகள் இயக்கத்தின் மற்றுமொரு முக்கிய நபரான ரோசா பார்க்கின் சிலையும் உள்ளது. 

மேலும் பெருமந்தம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவை வழிநடத்திய பிராங்க்ளின் டி ரூஸ்வெட்டின் பெரிய புகைப்படம் ஒன்றும் அதிபர் பைடனின் அலுவலகத்தில் மாட்டப்பட்டுள்ளது.

அதேபோல கொண்டாடப்படும் இரு முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் புகைப்படங்களும் அங்கு இடம்பெற்றுள்ளது.

பைடன் அலுவலகத்தில் இருக்கும் ரோசா பார்க் மற்றும் அப்ரஹாம் லிங்கன் சிலைகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, பைடன் அலுவலகத்தில் இருக்கும் ரோசா பார்க் மற்றும் அப்ரஹாம் லிங்கன் சிலைகள்

1960கள் மற்றும் 70களில் விவசாயப் பணியாளர்களின் உரிமைக்காக போராடிய மெக்சிக - அமெரிக்க தொழிலாளர் தலைவரான சீஸர் சாவேஸின் சிலையும் பைடன் அலுவகத்தில் இருக்கிறது. 

அதன் அருகே பைடன் குடும்ப புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குடும்ப புகைப்படங்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கான கொடிகள் அகற்றப்பட்டு அங்கே அமெரிக்கக் கொடியும், அதிபர் இலச்சினை தாங்கிய கொடியும் வைக்கப்பட்டுள்ளன. 

சர்ச்சைக்குரிய பிரிட்டனின் போர்க்கால தலைவர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கற்சிலையும் அகற்றப்பட்டுள்ளது. 

பராக் ஒபாமா அவரது சிலையை ஓவல் அலுவலகத்தில் இருந்து அகற்றினார் என்பதும் அந்த சிலையை மீண்டும் டிரம்ப் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒபாமா அந்த சிலையை அகற்றிய போது, அது குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளரும் தற்போதைய பிரிட்டன் பிரதமருமான போரிஸ் ஜான்சன், "பிரிட்டிஷ் பேரரசின் மீது முன்னோர்கள் காலத்தில் இருந்தே ஒபாமாவுக்கு மனக்கசப்பு இருக்கிறது" என்று விமர்சித்தார். 

இந்நிலையில்,"ஓவல் அலுவலகம் என்பது அதிபரின் தனிப்பட்ட அலுவலகம். அதை எவ்வாறு அழகுபடுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம்" என அதிபர் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்

https://www.bbc.com/tamil/global-55771954

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸின் அலுவலகம்... எப்படி இருக்கும் இன்று பார்க்க ஆவலாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கமலா ஹாரிஸின் அலுவலகம்... எப்படி இருக்கும் இன்று பார்க்க ஆவலாக உள்ளது. :)

யாழ்பாண தமிழ் கலாச்சாரப்படி அமைக்கபட்டிருக்கும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்பாண தமிழ் கலாச்சாரப்படி அமைக்கபட்டிருக்கும் 😂

உ சிவமயம்... - Panippulam Sri Muthumariamman Thirukkovil | Facebook

அப்ப சுவரில.... மெய்கண்டான் கலண்டர்  கொழுவி இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.