Jump to content

பண்பாட்டு ஆக்கிரமிப்பின் இன்னோர் அத்தியாயம்: குருந்தூர் மலையமர்ந்த கௌதமர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்பாட்டு ஆக்கிரமிப்பின் இன்னோர் அத்தியாயம்: குருந்தூர் மலையமர்ந்த கௌதமர்

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஈழத்தமிழரின் இருப்புக்கான போராட்டம், இன்று உள்ளூர் களங்களிலேயே அரங்கேறுகிறது. எமது உரிமைகளுக்கானதும் இருப்புக்கானதுமான போராட்டத்தின் மையப்புள்ளி எமது வாழ்விடங்களே ஆகும். 

எமது வாழ்விடங்களைச் சிறுகச் சிறுக இழந்துவிட்டு, தீர்வை மேற்குலகத் தலைநகரங்களிலோ, புதுடெல்லியிலோ தேடுவதில் பலனில்லை. எமக்கான ஆபத்துகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. ஆனால், இதைக் கையாளுவதற்கான வேலைத்திட்டமோ, தூரநோக்கோ எம்மிடம் இருக்கிறா என்ற கேள்வி, தவிர்க்க இயலாமல் மேலெழுகிறது. 

கடந்த சில நாள்களுக்கு முன்னர், குமுளமுனையில் உள்ள குருந்தூர் மலையில், புதிதாக புத்தர் வந்தமர்ந்தார். இன்னும் சரியாகச் சொல்வதானால் அமர்விக்கப்பட்டார். 

இப்போது அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. நாளை என்ன நடக்கும் என்பதை ஊகிப்பதில் சிரமங்கள் இரா. ‘அவன் பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்த போது, கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது’ என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

சில ஆண்டுகளுக்கு முன்னர், நீராவியடிப் பிள்ளையார் கோவில், பின்னர், கிழக்கில் ஜனாதிபதி செயலணி என நடந்தேறிய பல அத்தியாயங்களின் புதிய அத்தியாயமே, குமுளமுனையில் அரங்கேறி இருக்கிறது. இது முடிவல்ல என்பதை நாம் அறிவோம். 

இந்த நெருக்கடிகளை, நாம் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு ஒரு தொடக்கமாக, மூன்று விடயங்களை முன்வைக்க நினைக்கிறேன். 

முதலாவது, பண்பாடு தொடர்பானது; அதிலும் குறிப்பாக, பண்பாட்டு உளவியல் தொடர்பானது. ஓர் இனக்குழுவிடமோ, சமூகத்திடமோ போரிட்டு அல்லது, துன்பம் விளைவித்து, ஏற்படுத்தும் தாக்கத்தை விட, பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்தும் தாக்கம் வலியது மட்டுமன்றி, நீண்டகாலத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது. 

தத்துவஞானி கார்ல் மார்க்ஸ், “உணர்வு, சமூகத்தை உருவாக்கும் காரணியல்ல; சமூகம்தான் அதற்கான உணர்வை உருவாக்குகிறது” என்றார். எனவே, பண்பாடும் அதுசார் உளவியலும் அடிப்படையில் உணர்வு சார்ந்து இயங்குபவை. பண்பாடு என்பது, முக்கியமான போராட்டக் களமாக உள்ளது. ஈழத் தமிழ்ச் சூழலில், இது மூன்று விதமான சவால்களை இன்று எதிர்நோக்குகின்றது. 

முதலாவது, ஒற்றைப் பண்பாட்டை நோக்கிய நகர்வுக்கு முகங்கொடுத்தல் ஆகும். ‘அனைவரையும் இலங்கையராகக் கொள்ளுதல்’ இதன் தாரக மந்திரமாக இருக்கிறது. இனக்குழுமம் சார் அடையாளங்களை மறுத்து, ஒற்றைப் பரிமாணப் பண்பாட்டை நிறுவும் முயற்சி நடந்தேறுகிறது. இது பெருந்தேசியவாத அகங்காரம் உடைய, அனைத்துத் தேசியவாதங்களும் செய்வதுதான். 

ஹிட்லரின் ஜேர்மனி முதல், மோடியின் இந்தியா வரை இதற்கான பல உதாரணங்களை, வரலாறு நெடுகிலும் காணலாம். இந்த நிகழ்ச்சி நிரலின்படியே, புத்தர் எல்லா இடங்களிலும் வந்து அமர்கின்றார். மதம்-தொல்லியல்-இராணுவம் என்பது மிகவும் ஆபத்தான ஒரு கூட்டணி.

இரண்டாவது, பௌத்த பேரினவாதத்துக்கு மாற்றாக, இந்துத்துவ சக்திகளை அரவணைப்பதானது, ‘அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்த கதை’ போன்றதாகும். இரண்டு மத அடிப்படைவாதங்களும், தமக்குள்யே முரண்பாடின்றித் தேச அரசுகளால் ஊட்டம் பெற்று வளர்கின்றன. இவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன.  

மூன்றாவது, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் என்று தொடங்கி, காலப்போக்கில் பொய்யான பெருமைகளிலும் பழைமைகளிலும் திளைத்திருப்பதன் ஊடு, சமூகத்துக்கு உள்ளேயே ஏற்றத்தாழ்வுகளையும் வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியம். 

மறுபுறம், மொழியின் தொன்மை; இனத்தின் பெருமை என்று பொய்யான வரலாறுகளைக் கட்டமைத்தல் ஆகும். இவை, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்குப் பதிலாக, அதை வலுவிழக்கச் செய்துவிடும். 

இந்த மூன்று சவால்களையும், ஈழத்தமிழர் எதிர்கொள்வதற்கு, எமது சமூகம்எத்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவது பிரதானமானது.ஒருபுறம் சாதிப் பாகுபாடுகள், பெண் அடிமைத்தனம், மரபு என்ற பெயரில் குடும்பங்களில் நிலவும் ஜனநாயகமின்மை, மூடநம்பிக்கைகள் என்பவை, எமது சமூகத்தில் நீக்கமற நிறைந்துள்ளன. 

மறுபுறம், மதம் எமது வாழ்வியலின் தவிர்க்கவியலாத பகுதியாக உள்ளது. இவை, இரண்டையும் சரிவரக் கையாளுவதன் ஊடே, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக, வலுவான போராட்டத்தை முன்னெடுக்க இயலும். 

இன்று, இலங்கை அரசாங்கம், மதத்தின் பெயராலும் தொல்லியலின் பெயராலுமே ஆக்கிரமிப்புகளை முன்னெடுக்கிறது. இவ்வாக்கிரமிப்பு நில ஆக்கிரமிப்பாக, பண்பாட்டு ஆக்கிரமிப்பாக, அடையாள அழிப்பாக, உரிமை மறுப்பாகப் பல வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது.

இதை இன்று, இந்தியா எங்கும் இந்துத்துவா சக்திகள் முன்னெடுக்கும் செயல்களோடு ஒப்புநோக்க முடியும். இவற்றை, எவ்வாறு மதத்தின் பேரால், தேசியவாத்தை முன்னிறுத்திச் செய்ய முடிகிறது என்பதை நோக்குவது பிரதானமானது. 

மதங்கள் யாவும் தனிமனித உய்வைப் பற்றிப் பேசினாலும், சமூக நிகழ்வுகள் மதங்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மதமும், அதனதன் சமூகச் சூழலினதும் காலத்தினதும் குழந்தையாகும். 

மக்கள், மதங்களை நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றுகின்றனர். நிம்மதியற்ற சமூகச் சூழலில், மதங்கள் மனிதருக்குத் தற்காலிக ஆறுதல் அளிப்பன என்பதை மறுப்பதற்கில்லை. 

மதங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டன அல்ல. ஒவ்வொரு மதமும் கூறும் அரச விசுவாசம், பொறுமை, தலைவிதி பற்றிய நம்பிக்கைள் போன்றவை, அரசாங்கங்களுக்குப் பாதுகாப்பானவை. 

இலங்கையில், கடந்த இரண்டு தசாப்த காலமாக வளர்ச்சியடைந்துள்ள மதச்சகிப்பின்மையும் சிறுபான்மையினருக்கு எதிரான பெருந்தேசியவாத அகங்காரமும் அரசின் ஆசியுடனேயே நடந்தன. இப்போது அரசே நேரடியாக அதைச் செய்கிறது. 

ஆக்கிரமிப்பின் கருவியாகத் தொல்லியலும் அதைப் புனிதப்படுத்தி உணர்வுபூர்வமானதாக மாற்றும் கருவியாக மதமும் செயற்படுகின்றன. இவை இரண்டும் இணைந்து, பண்பாட்டு ஆக்கிரமிப்பைச் செய்கின்றன. 

இதற்கெதிராகப் போராடுவதற்கு, எம்மிடம் இரண்டு கருவிகள் உள்ளன. முதலாவது, நாம் ஒருங்கிணைந்து போராடுவது. இந்த அச்சுறுத்தல் இலங்கையின் சிறுபான்மையினர் அனைவருக்கும் உரியது. அனைவரையும் ஒரு பொதுத்தளத்தில் ஒன்றுதிரட்டுவதும் பொதுத்தளத்தில் இணைப்பதும் அவசியமானது. 

இரண்டாவது, உளவியல் ரீதியாக நாம் எம்மைத் தயார்படுத்த வேண்டும். இது தனிமனித நிலையிலும் கூட்டாகவும் நிகழ வேண்டும். திறந்த கலந்துரையாடலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய சாத்தியங்களை நோக்கி நகர வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளில், சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டங்களுக்கு குழிபறிக்கப்பட்டு உள்ளன. நீட்டப்பட்ட நேசக்கரங்களை நாம், பற்றிப்பிடிக்காமல் விட்டிருக்கிறோம். சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது. 

கல்முனையில் தமிழ்ப் பிரதேச சபை ஏற்படுத்தப்படுவது தொடர்பான சிக்கலில், தமிழர்கள் சார்பாகப் போரிடப் போவதாக ஞானசார தேரர் வருகை தந்தார். அவரைப் பார்க்கக் கூடிய கூட்டமும் அதில் அவருக்குக் கிடைத்த கரவொலியும் சொல்லிய செய்தி என்ன?

அதேபோல, அங்கு பேசிய அத்துரலியே ரத்தின தேரர், “விகாரையில் இந்துக் கடவுள்கள் இருக்கின்றன. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சினை இல்லை; ஆனால், நாம் முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது” என்றார். இது பல தமிழர்களால் சிலாகிக்கப்பட்டது. இவை, எம்மைப் பிரித்து வைத்திருப்பதற்கான செயல்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா. இவை அனைத்தும் நமது பண்பாட்டு உளவியலின் தவறுகள். இதை நாம் சரிசெய்தாக வேண்டும். 

இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியை எதிர்கொள்ள முற்போக்கு நேசசக்திகளோடு கைகோர்க்க வேண்டும்; இந்த நெருக்கடி மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். இந்த நெருக்கடி பாராளுமன்றத்திலோ, மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, வெளிநாடுகளிலோ, சர்வதேச மன்றுகளிலோ தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. 

இவ்வாறான செயல்களை நாம் வரலாறெங்கும் காண்கிறோம். இரண்டாம் உலகப் போரின், முதல் மூன்று ஆண்டுகளின் பின்னர், “முழு உலகையும் நானே ஆள்வேன்; எனது பண்பாடும் அடையாளமுமே உலகப் பொதுவானது” என்றுதான் ஹிட்லர் நினைத்தார். 

ஹிட்லர், தான் கைப்பற்றிய தேசமெங்கும் பண்பாட்டு வன்முறையை நிகழ்த்தினார். அது என்றென்றைக்குமானது என்று அவர் நம்பினார். 

ஸ்டாலின்கிராட்டை உருத்தெரியாமல் அழித்தார். ஆனால், அதுவே அவர் புதைகுழியானது. 

இன்று ஸ்டாலின்கிராட் நிமிர்ந்து நிற்கிறது. ரஷ்ய மக்களின் போராடும் குணத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி நிற்கிறது. 

ஹிட்லர் ஆக்கிரமித்த நிலப்பரப்பெதிலும் அவர் வெற்றிகொண்டமைக்கான சுவடுகளே இல்லை. அவர் தோற்கடிக்கப்பட்டமைக்கான சுவடுகள் எங்கும் நிறைந்துள்ளன. 

வரலாறு சொல்லும் செய்தியும் அதுவே! 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பண்பாட்டு-ஆக்கிரமிப்பின்-இன்னோர்-அத்தியாயம்-குருந்தூர்-மலையமர்ந்த-கௌதமர்/91-264229

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.