Jump to content

நலமுறு வாழ்வு


Recommended Posts

காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்!

அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்!

நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் தீமையும் நாடியுணர்ந்து தேடியுணர்ந்து மயர்வறு உயர்வறு துயரறு அயர்வறும் நலமுறு வாழ்வை நன்மையிலேயே வாழ்ந்திருத்தல் நன்றே!

-தமிழ் நிலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2021 at 21:35, தமிழ்நிலா said:

காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்!

அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்!

நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் தீமையும் நாடியுணர்ந்து தேடியுணர்ந்து மயர்வறு உயர்வறு துயரறு அயர்வறும் நலமுறு வாழ்வை நன்மையிலேயே வாழ்ந்திருத்தல் நன்றே!

-தமிழ் நிலா.

கவிதை பகிர்விற்கு நன்றி.👍

Link to comment
Share on other sites

15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை பகிர்விற்கு நன்றி.👍

மிக்க நன்றிகள் அண்ணா🙏

Link to comment
Share on other sites

தமிழ்நிலா,

உங்கள் மரபுக்கவிதைகள் மனதைக் கவர்கின்றன. இந்தக் காலத்தில் இப்படியான செந்தமிழ் வார்த்தைகளும், ஆழமான அர்த்தமும் ஒருங்கே சேர அமைந்த கவிதைகளைக் காண்பது அரிது. 

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பாக இருக்கின்றது உங்களது கவிதையும் வசன நடைகளும் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்......!   👍

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

தமிழ்நிலா,

உங்கள் மரபுக்கவிதைகள் மனதைக் கவர்கின்றன. இந்தக் காலத்தில் இப்படியான செந்தமிழ் வார்த்தைகளும், ஆழமான அர்த்தமும் ஒருங்கே சேர அமைந்த கவிதைகளைக் காண்பது அரிது. 

வாழ்த்துக்கள்!

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

மிகவும் சிறப்பாக இருக்கின்றது உங்களது கவிதையும் வசன நடைகளும் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்......!   👍

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் சகோதரன்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நிலா பாராட்டுக்கள்.
தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 1/26/2021 at 04:20, ஈழப்பிரியன் said:

தமிழ்நிலா பாராட்டுக்கள்.
தொடர்ந்தும் எழுதுங்கள்.

மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.