Jump to content

பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு

pinterest.jpg

 

லாபகரமான சுயத்தொழிலைத் தொடங்கி வெற்றிரகமாக நடத்துவது என்பது அனைவருடைய விருப்பமாக இருக்கும். அதேநேரத்தில் குறைந்த முதலீட்டில், நல்ல லாபம் ஈட்டும் தொழிலைத் தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம்.

இத்தகைய சிந்தனையில் இருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். கிராமப்புற மக்களுக்கு, மிகச் சுலபமானதாகக் கருதப்படும் இந்த தொழில் தொடங்க, குறைந்த முதலீடு போதும். முதல் மாதத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும், ஆறு மாதங்கள் கடந்துவிட்டால், மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

அது என்ன தொழில்? அதுதான், பசுஞ்சாண விறகு தயாரிப்புத் தொழில்.
நாட்டில் தற்போது பசுஞ்சாண விறகுக்கு மிகப் பெரிய தேவை உள்ளது. இந்த தேவை எதிர்காலத்தில் நாளுக்கு நாளுக்கு அதிகரிக்கும். அதற்காக நீங்கள் இப்போதே தயாரானால், அதிக லாபம் ஈட்டமுடியும்.

mitticool.jpg

Credit: Mitticool

மருத்துவப் பயன்கள் (Medical benefits)

பசுஞ்சாணம், எருமைச்சாணம் ஆகியவை இயற்கை உரமாகப் பயன்படுவதுடன், இயற்கை எரிவாயு தயாரிக்கவும் உதவுகிறது. அதிலும் பசுஞ்சாணம் பல்வேறு நன்மைகளைத் தருவதுடன், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் திகழ்கிறது. அதனால் இதனை பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தும்போது பயன்படுத்துகிறார்கள்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நல்குவதுடன், இவற்றைக்கொண்டு சிலைகள், முகப்பூச்சு மற்றும் மருந்துகளைத் தயாரித்தும் விற்பனை செய்கின்றனர்.

தயாரிப்பது எப்படி? (How to made)

இந்த சாணத்தைத் தயாரிக்க வேண்டுமானால், அதற்கென பிரத்யேக இயந்திரத்தை வாங்க வேண்டும். பின்னர் அதில், பசு மாட்டுச்சாணம், உலர்ந்த வைக்கோல், புல் ஆகியவற்றைப் போட்டு பசுஞ்சாண விறகு தயாரிக்கலாம். இயற்கை விறகு மையத்தில், பசுஞ்சாண விறகிற்கு, குவிண்டாலுக்கு 600 ரூபாய் வரை விலை கிடைக்கும்.

இயந்திரத்தின் விலை (Cost of  Machine)

பசுஞ்சாணம் தயாரிக்கும் இயந்திரம் 700 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது. உங்கள் முதலீட்டிற்கு ஏற்றபடி, சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ உள்ள இயந்திரத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இதன் உதவியுடன் 20 வினாடிகளில் ஒரு கிலோ பசுஞ்சாணத்தைத் தயாரிக்க முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தின்மூலம், நிலம் மற்றும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்படும்.

இயந்திரத்தை எப்படி வாங்குவது?

பசுஞ்சாணம் விறகு தயாரிக்கும் இயந்திரங்களை கீழ்க்காணும் இந்த இரண்டு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

https://m.indiamart.com/impcat/cow-dung-log-making-machine.html
https://m.indiamart.com/proddetail/cow-dung-log-making-machine-21388364391.html

times-of-india.jpg

Credit: Times of India

இருப்பினும், பசுஞ்சாண விறகு தயாரிக்க பல்வேறு உரிமங்களைப் பெற வேண்டியது அவசியம்.

வர்த்தக உரிமம் (Trade License)

இந்த தொழில் தொடங்க முதலில் அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் மூலமே வர்த்தக உரிமத்தைப் பெற முடியும்.

MSME Registration

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் அமைப்பில், உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போது, இயந்திரம் வாங்க வங்கிக்கடன் எளிதில் கிடைக்கும். அதனால், MSME registration மிகவும் கட்டாயம்.

தடையில்லா சான்றிதழ்(NOC)

பசுஞ்சாணத் தயாரிப்பை இயந்திரம் மூலம் செய்ய வேண்டுமானால், அதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

விற்பனை செய்தல் ( Sell Cow Dung Wood)

இந்த பசுஞ்சாணத்தை மத வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம்.

மேலும் வீடுகளுக்கும் விற்பனை செய்யலாம். செங்கல் சூளைகளுக்கும் வியாபாரம் செய்யலாம். இதைத்தவிட ஆன்லைனிலும் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.

 

https://tamil.krishijagran.com/animal-husbandry/you-can-get-profit-by-making-cow-dung-wood-fantastic-job/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த இயந்திரத்தை பாவனைக்கு பாதுகாப்பற்றது என தடை செய்யவேண்டும். இதை தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலைக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டதா என்பதையும் பரிசீலிக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக இந்த இலவச விளம்பரத்தை யாழில் இருந்து அகற்றுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணத்தில் இருந்து வரட்டி செய்வதை கொஞ்சம் மாற்றி மெல்லிய தகடாகச் செய்ய முனைகிறார்கள். 

இதை எரிப்பதால் (biomass burning) வெளிவரும் புகையும் துணிக்கைகளும் மனிதர்களுக்கு சுவாச தொந்தரவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

இயற்கையில் இருக்கும் எல்லாமே நல்லது தான் என்கிற மூடத்தனமான நம்பிக்கையின் விளைவு தான் இது போன்ற வியாபாரங்கள் தளைக்கக் காரணம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.