-
Tell a friend
-
Topics
-
0
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By பெருமாள் · பதியப்பட்டது
இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல." என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அதேபோல், அடக்குமுறை, அச்சுறுத்தலுக்குப் பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. சில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிடப் பார்க்கின்றனர். மேலும், மாகாண சபை முறைமைக்கு நாங்கள் எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தியே ஆகுவோம் எனச் சிலர் தெரிவிக்கின்றனர். அப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்குத் தெரிவித்து வைக்க விரும்புகின்றோம்" - என்றார் https://tamilwin.com/article/mahanayaka-theros-to-fight-against-the-government-1618601315 -
By தமிழ் சிறி · Posted
ஜனாதிபதியின் மிரட்டல் – மேலதிக பாதுகாப்பு கோரும் விஜயதாச!! அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார். இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபரிடம் கடிதத்தை கையளித்துள்ளார். நேற்று காலை விஜயதாச ராஜபக்ஷவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி, கடும் தொனியில் பேசியதாக தெரிவித்திருந்தார். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் என விஜயதாச ராஜபக்ஷ கூறினார். அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2021/1210174 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்: வவுனியாவில் சம்பவம் வவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) மற்றும் அசோகன் வசந்தி (வயது – 52) ஆகிய இருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், வவுனியா, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக காணப்படுகின்ற மரத்திற்கு பின்னால் மறைந்திருந்த சந்தேகநபர், அவ்விடத்திற்கு வருகை தந்த அவரது மனைவியின் சகோதரனுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தன் உடமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முதுகில் குத்தியுள்ளார். அதனை தடுக்க முற்பட்ட மாமியார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது தாக்குதலில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய சந்தேகநபரான கிளிநொச்சி- திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனை, மக்கள் தடுத்து வைத்திருந்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் . குடும்ப தகராறு காரணமாகவே குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2021/1210226 -
By பெருமாள் · பதியப்பட்டது
Kumbh Mela ( AP Photo/Karma Sonam ) கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல லட்சம்பேர் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 1-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா வரும் 30-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் அங்கே திரள்கின்றனர். Kumbh Mela AP Photo/Karma Sonam கும்பமேளாவுக்கு வருகிறவர்கள் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வர வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அதேபோல தனிமனித இடைவெளியையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், லட்சக்கணக்கில் திரளும் மக்களால் அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. கும்பமேளா நடைபெறும் பகுதியில் நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 500 மாதிரிகளுக்கு 20 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர். ஆனால், கும்பமேளாவை பாதியிலேயே நிறுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை முன்வைத்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. கடந்த ஆண்டு தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்று பேசியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? இதை ஏன் கண்டிக்கவில்லை அல்லது தடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி இதுதொடர்பாக சமூகச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான புகழேந்தியிடம் பேசினோம், ``இதுபோன்ற கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், அது கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று அறிவியல் சொல்கிறது. ஆனால், தனிப்பட்ட லாபங்களுக்காக இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அரசியல் சொல்கிறது என்ற கோணத்தில்தான் இதைப் பார்க்க வேண்டும். நிலைமை இப்படி மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கும்பமேளாவில் இத்தனை லட்சம் பேர் கூடுவது முற்றிலும் தவறானது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாம் கும்பமேளாவை மட்டும் தவறு என்று சொல்லக் கூடாது. தவறு என்றால் எல்லாமே தவறுதான். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இயற்கை பேரழிவுகளின்போது தேர்தலையே தள்ளி வைக்க வழிவகை உள்ளது. ஆனால், இவர்கள் அதைச் செய்தார்களா? தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா விதிகளை மீறி அவ்வளவு கூட்டம் கூடினார்களே அவர்கள் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லவே இல்லை. இன்று ஏராளமான வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சட்டம் என்றால் எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வி பிரதமர் மோடியிடமிருந்து கேட்கப்பட வேண்டும். Hindu devotees gather to take holy dips in the Ganges River during Kumbh Mela AP Photo/Karma Sonam அயோத்தியில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பூஜையின்போது பிரதமர் நரேந்திர மோடிதான் அவரை கைத்தாங்கலாகக் கூட்டிச் சென்றார். ஆனால், மோடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை, கொரோனா பரிசோதனையும் செய்துகொள்ளவில்லை. விதிகளைப் பிறப்பிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களும் விதிகளைப் பின்பற்றினால்தான் மக்களும் பின்பற்றுவார்கள். கொரோனா நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால், எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவை வெல்ல முடியும்" என்றார். https://www.vikatan.com/news/india/govt-should-have-been-restricted-kumbh-mela-2021-gatherings-amidst-pandemic?fbclid=IwAR2ZRWRYk64OUcuzh416WdbHyEKjDBHtHLk9WO8v-2FNnNY-wWSIx9PLL6s?utm_source=Newsleter&utm_medium=email&utm_campaign=17th_apr_2021_Cont6
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.