Jump to content

கிழக்கில் புதிய வடிவம் பெறும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் புதிய வடிவம் பெறும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை

 
IMG_8668-1-696x392.jpg
 97 Views

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கிழக்கு மாகாணத்தில் புதிய வடிவம் பெற்றிருக்கின்றது. கால்நடை வளர்ப்போரே இந்த ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். கால்நடைகளின் வாழ்வாதாரமாகிய மேய்ச்சல் தரையை சிங்களவர்கள் ஆக்கிரமித்திருப்பதே இதற்குக் காரணம்.

இந்த நிலங்கள் பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாகப் பயன்பட்டு வந்தன. கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் பயிர் செய்யும் நிலமாக மாற்றியிருக்கின்றார்கள். இது கால்நடைகளை மேய்ச்சலுக்கு வழியில்லாத அவல நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவை மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகளில் இருக்கின்றன. இந்தக் கால்நடைகளில் இருந்து நாளாந்தம் ஆறாயிரம் லீற்றர் பால் உற்பத்தியாகின்றது. இதுவே அந்தக் கால்நடை வளர்ப்புக் குடும்பங்களின் பாரம்பரிய வாழ்வாதாரம். இந்தப் பால் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதனால், 2  ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இது வாழ்வதற்கு வழியின்றி கால்நடைப் பண்ணையாளர்களை அந்த மாவட்டத்தில் இருந்து துரத்தியடிப்பதற்கான திட்டமிட்ட இன ஒடுக்குமுறையாகும் என கால்நடை பண்ணையாளர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

பல மாதங்களாகத் தொடர்கின்ற இப்பிரச்சினை முதலில் அரசியல்வாதிகளின் தீவிர கவனத்தைப் பெற்றிருந்த போதிலும், இப்போது கவனிப்பாரற்ற விடயமாக மாறியிருக்கின்றது என கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை அடைந்துள்ளார்கள். மேய்ச்சல் தரையின்றி கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பதனால், மேய்ச்சலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கால்நடை வளர்ப்பாளர்கள் தடுமாறுகின்றார்கள்.

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் கிழக்கு மாகாண மக்களின் பிரதான தொழில்களாகும். மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தினால் கால்நடை பண்ணைத் தொழில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது.

பழக்கதோசத்தில் மேய்ச்சல் தரைகளாகிய ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பயிர்ச் செய்கை நிலங்களுக்குச் செல்லும் கால்நடைகள் தினமும் கொல்லப்பட்டு தடம் தெரியாமல் புதைக்கப்படுகின்றன. கன்றுகள் கடத்தப்படுகின்றன. இதுகுறித்து காவல் துறையில் முறையிட்டாலும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. பயிர்ச்செய்கை நிலங்களுக்கு கால்நடைகளைச் செல்லவிடக் கூடாது என அவர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். ஆனால் கால்நடைகள் கொல்லப்படுவதையும், கடத்தப்படுவதையும் கவனிப்பார் எவருமில்லை என்று பண்ணையாளர்கள் கவலைப்படுகின்றார்கள்.

மேய்ச்சல் தரையில்லாத நிலையில், போதிய மேய்ச்சலின்றி பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலுற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கின்றது. பாலுற்பத்தியிலும், அதனைச் சார்ந்த தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள பெண்களைக் குடும்பத் தலைமையாகக் கொண்டுள்ள பல குடும்பங்கள் இதனால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

தொலைவிடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ள கால்நடை பண்ணையாளர்கள்  இதற்காக கூடிய நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. மாற்று வழியாகப் பலர் தமது கால்நடைகளை விற்க வேண்டிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். இது அவர்களது இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட கால்நடைகளைத் தேடிச் சென்ற தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் சிலர் சிங்களவர்களினால் கடத்தப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டதோடு அவர்களை  காவல்துறையினரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாக்கியுள்ளார்கள்.   இந்த சம்பவம் மேய்ச்சல் தரைப் பிரச்சினையை மோசமாக்கியுள்ளது.

இந்தமேய்ச்சல் தரைப் பிரச்சினையில் கிழக்கு மாகாண ஆளுநரே பின்னணியில் உள்ளார் என்பது கால்நடைப் பண்ணையாளர்களின் சந்தேகம். தங்களது மேய்ச்சல் தரைகளில் சிங்களவர்கள் பயிர் செய்வதற்கு அனுமதியளித்து, தமிழர்களாகிய தங்களது பண்ணைத்தொழிலை இல்லாமல் செய்வதற்குத் திட்டமிட்ட வகையில் அவர் செயற்படுவதாகவே அவர்கள் நம்புகின்றார்கள்.

 

https://www.ilakku.org/?p=40208

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, உடையார் said:

இந்த நிலையில் கடத்தப்பட்ட கால்நடைகளைத் தேடிச் சென்ற தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் சிலர் சிங்களவர்களினால் கடத்தப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டதோடு அவர்களை  காவல்துறையினரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாக்கியுள்ளார்கள்.   இந்த சம்பவம் மேய்ச்சல் தரைப் பிரச்சினையை மோசமாக்கியுள்ளது.

இந்தமேய்ச்சல் தரைப் பிரச்சினையில் கிழக்கு மாகாண ஆளுநரே பின்னணியில் உள்ளார் என்பது கால்நடைப் பண்ணையாளர்களின் சந்தேகம். தங்களது மேய்ச்சல் தரைகளில் சிங்களவர்கள் பயிர் செய்வதற்கு அனுமதியளித்து, தமிழர்களாகிய தங்களது பண்ணைத்தொழிலை இல்லாமல் செய்வதற்குத் திட்டமிட்ட வகையில் அவர் செயற்படுவதாகவே அவர்கள் நம்புகின்றார்கள்.

தங்களுக்கு தேவையான/சொன்னதை செய்யக்கூடிய ஆளோடை ஜெயிலுக்கை போய் கதைச்சு வெளியிலை எடுத்து விட்டது என்ன சும்மாவே...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தமிழ் சிங்கள சமூகங்களிடையே இருக்கின்ற அந்நியொன்னிய நட்பினைப் பாதிக்கக் கூடிய இக்கட்டுரையினை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இக்கட்டுரையினை எழுதியிருப்பவரின் நோக்கம் அப்பாவிச் சிங்கள விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டுவதேயன்றி வேறில்லை.

ஆண்டாண்டு காலமாக இப்பகுதியில் விவசாயம் செய்யும் சிங்கள விவசாயிகளின் பயிர்களுக்கு நடுவே தமிழ்ப் பண்ணையாளர்கள்தான் மிகவும் ஆக்ரோஷமான முறையில் தமது கால்நடைகளை அனுப்பி ஆக்கிரமிப்பினை மேற்கொண்டுவருகிறார்கள். அன்றாட வாழ்விற்கே அல்லற்படும் அப்பாவிச் சிங்களவர்களின் வயிற்றில் அடிக்கும் பணம் கொழுத்த தமிழ்ப் பண்ணையாளர்களின் இந்த காட்டுமிராண்டிச் செயற்பாட்டின்  பின்னணியில் இருப்பது நிச்சயமாக தமிழ்த் தேசிக்காய்க் கட்சியொன்றுதான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

உயிர்கள் மேல் இரக்கம் கொண்ட இந்த அப்பாவிச் சிங்களவர்கள் தமிழ்ப் பண்ணையாளர்களால் கொல்லப்பட்ட சில மாடுகளுக்கு கண்ணீருடன் மலர்வணக்கம் செலுத்துவதும் இப்போது பரவலாக நடந்துவருகிறது.

எமது பிரதேசத்தினை அபிவிருத்திசெய்து, கொழும்பிற்கு நிகராக உயர்த்திட எமது ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்துவரும் நல்லெண்ண முயற்சிகளை தடுக்கும் ஒரே நோக்குடன் தமிழ்ப் பண்ணையாளர்களாலும், தேசிக்காய்களாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பினை நான் மீண்டும் ஒருமுறை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

கிழக்கில் ஆக்கிரமிப்போ, திட்டமிட்ட குடியேற்றமோ அல்லது சிங்களவர்களின் வன்முறையோ கிடையவும் கிடையாது. அங்கு நடப்பதெல்லாம் அப்பாவிச் சிங்களவர்களின் வாழிடங்கள் மீதான தமிழர்களின் ஆக்கிரமிப்பு மட்டும் தான். ஆனால், இவற்றையும் தாண்டி எம் மக்களுக்கு எமது ஜனாதிபதியினால் தரப்படுவது    வாழ்வினை மேம்படுத்தும் அபிவிருத்தி, அபிவிருத்தி, அபிவிருத்தி மட்டும் தான் !!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.