Jump to content

முல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி யார் தெரியுமா


colomban

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Vikarai-Building-in-North-696x392.jpg

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது என்றும் கூறியுள்ளார், தற்போது, வெலி ஓயா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 4 மில்லியன் ரூபா செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

இந்த தகவல்களை சிங்கள ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றன.

நமக்கு நல்லதொரு தமிழன் வாய்த்தான் என, சிங்கள சமூக ஊடகங்கள் அந்த நபரை புகழ்ந்து வருகின்றன.

முல்லைத்தீவை சேர்ந்த கிருபாகரன் (38) என்ற நபரே இவ்வாறு பௌத்தத்தை வளர்ப்பதில் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

யுத்தத்தில் காலொன்றை இழந்த அவர் இப்பொழுது ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார். இப்பொழுது பௌத்த மதத்தை தழுவியுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் பௌத்த விகாரைகளிற்காக பல இலட்சம் ரூபாவை அவர் செலவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த நபர் தனது கதையை சிங்கள ஊடகங்களிற்கு பகிர்ந்த போது-

என் அம்மா, அப்பா இருவரும் உயிருடன் இருக்கிறார்கள். அப்பா நகை தொழிலை நடத்தினார். எனவே எங்களிடம் நல்ல பணம் இருந்தது.

எனக்கு ஒரு மூத்த சகோதரர், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். நான் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை.

ஒரு சகோதரி போரின்போது இறந்தார். நான் முல்லைத்தீவிலுள் வித்தியானந்தா மகா வித்தயாலயத்தில் படித்தேன்.

யுத்தத்தின் இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தலும் ஒருவர் தம்முடன் இணைய வேண்டுமென புலிகள் அறிவித்தனர்.

அல்லது வீட்டிற்கு வந்து ஒருவரை கடத்திச் செல்வார்கள். புலிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, நான் புலிகளில் சேர்ந்தேன்.

நான் 10 ஆம் ஆண்டு வரை மட்டுமே படித்தேன். 2006 இல் நான் புலிகளில் சேர்ந்தேன். அப்போது எனக்கு 23 வயது. நான் கெரில்லா போரில் மூன்று மாத பயிற்சி பெற்றேன். எனது தகட்டு இலக்கம் 563. அமைப்பு எனக்கு ‘கார்முகிலன்’ என்ற பெயரை வைத்தது.

புலிகளின் முக்கிய தளபதியான கேணல் தீபனின் கீழ் செயற்பட்டேன், அங்கு எனக்கு கப்டன் தரம் வழங்கப்பட்டது.

முகமாலை முன்னரங்கத்தில் நடந்த மோதலில் எனது காலை இழந்தேன். நான்கு மாத சிகிச்சையின் பின்னர் வழங்கல் பகுதயில் பணியாற்றினேன்.

2009 ஏப்ரல் 5 அன்று வெள்ளமுள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்தேன். எங்களுடன் வந்த போராளிகள் பொதுமக்களிற்குள் ஒளிந்து நின்று துப்பாக்கி பிரயோகம் செய்தது.

நாங்கள் முன்வரிசை போராளிகளாக இருந்த போதும், இராணுவம் எம்மை துன்புறுத்தவில்லை. எங்களை நன்றாக நடத்தினார்கள். பின்னர் புனர்வாழ்விற்கு அனுப்பினார்கள்.

அங்கே சிங்களத்தை நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன். நாங்கள் புலிகளில் இணைந்த பின்னர், சிங்கள நாடு ஒரு கொலைகார நாடு என்று தலைவர்கள் கற்பித்தனர். இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் உணர்ந்தேன்.

நம்முடையதை விட சிங்கள தேசம் சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்கிறேன்.

பின்னர் நான் நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதலங்கார கிட்டி தேரருடன் தொடர்பு கொண்டேன். அவரிடமிருந்து தம்மத்தைப் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது.

தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் எனது அறிவை மேலும் மேம்படுத்தினேன்.

ஒரு நாள் நான் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசயாவில் வழிபடச் சென்றேன். அந்த நேரத்தில் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் நான் பௌத்தத்தை படித்து, பௌத்தத்திற்கு மாற வேண்டும் என்பதாகும்.

இந்த காலகட்டத்தல் மேதலங்கார தேரர் காலமானார். அவரது உடலை விகாரைக்கு கொண்டு வர முடியாது, ஆலய சூழலில் தகனம் செய்ய முடியாது என தமிழ் தீவிரவாதிகள் குழு கலவரத்தில் ஈடுபட்டது.

மேதலங்கர தேரரின் நினைவாக, விகாரையில் ரூ.6 1/2 இலட்சம் செலவில் புத்தர் சிலை கட்டினேன். நீர் வசதிகள் செய்தேன்.

வெலிஓயா ஸ்ரீ தேவகிரி ராஜமஹா விகாரையில் ஒரு தாதுகோபம் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்திற்கு சுமார் ரூ .4 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், ருவன்வெலி மகா சாயாவின் இருப்பிடத்திற்கு சுமார் 3 1/2 லட்சம் ரூபாய் செலவிட்டேன். நான் நீண்ட காலமாக ஒவ்வொரு போயாவிற்கும் அனுராதபுரத்திற்கு வருகிறேன்.

அந்த சுதந்திரத்தை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஒட்டுமொத்த தேசத்தின் கண்ணியமும் மரியாதையும் உண்டு.

புலிகள் அமைப்பில் முன்னணி வரிசை போராளிகளாக இருந்தபோதிலும், அவர்களால் எங்களுக்கு வாழ்க்கைப் பரிசு கிடைத்தது என புளகாங்கிதம் கொண்டுள்ளார்.

அவரது நிதியில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடங்களில் வழிபாட்டு சின்னங்கள் அகற்றப்பட்டு பௌத்த மயமாக்கல் நடப்பதை பற்றி, அவரும் பேசவில்லை. அவரிடம் பேட்டியடுத்த ஊடகமும் பேசவில்லை.

https://lankapuri.com/2021/01/20/முல்லைத்தீவில்-40-இலட்சம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன  

இப்படிக்கு கிருபாகரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன  

இப்படிக்கு கிருபாகரன்.

நீங்கள் விளையாட்டு செய்தி என்றாலும் சில சம்பவங்கள் உண்மையாக நடந்தேறி வருகின்றன . டொட்  ஆனால் நாம் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று நம்ம புத்தியை தீட்டிக்கொண்டே  சீச்சி திட்டிக்கொண்டே இருப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் விளையாட்டு செய்தி என்றாலும் சில சம்பவங்கள் உண்மையாக நடந்தேறி வருகின்றன . டொட்  ஆனால் நாம் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று நம்ம புத்தியை தீட்டிக்கொண்டே  சீச்சி திட்டிக்கொண்டே இருப்போம்

இப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ...? எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய்  காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதிரியள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ...? எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய்  காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதிரியள்...

இப்பவும் ஒன்றும் கெட்டு போகலை எல்லாத்தையும் உதறிப்போட்டு வாரது முடியுமா என்ன ?? நான் புலம் பெயர்ந்தவர்களை இழுக்க வில்லை புலம் பெயர்ந்தவர்கள இங்க்குள்ளவர்களை இன்னும் விளங்கிக்கொள்ள வில்லை 
காசு மரங்கள் தன் நிழலுக்கு கீழ் மட்டும் கொட்டுகிறது காய்ந்த மரங்கள் சருகாகவே கொட்டிக்கொண்டு  இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் ஒன்றும் கெட்டு போகலை எல்லாத்தையும் உதறிப்போட்டு வாரது முடியுமா என்ன ??

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

வந்த பிறகே அதைப்பற்றி கதைக்கலாம்........

அதுதான் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் காசு மரம் என்று காணி வீடுகள் வாங்கலாம், சுயதொழில் ஆரம்பித்து உழைக்கலாம் காசு இருந்தால்  ஆனால் பாதுகாப்பு இருக்குமா என கேட்பீங்கள்.  வந்தாலும் உங்களுக்கு இப்போது இலங்கை, ஈழம் ஒத்துவராாது  எதிலும் பிழைதான் கண்டு பிடிப்பீர்கள். 

சிங்கள அரசு எப்போதே அறிவித்து விட்டது  நாட்டுக்கு வரலாமென சிலர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் சில குடும்பம் நிரந்தரமாக இருக்கிறார்கள் சிலர் வெெளியேறுகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வந்த பிறகே அதைப்பற்றி கதைக்கலாம்........

அதுதான் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் காசு மரம் என்று காணி வீடுகள் வாங்கலாம், சுயதொழில் ஆரம்பித்து உழைக்கலாம் காசு இருந்தால்  ஆனால் பாதுகாப்பு இருக்குமா என கேட்பீங்கள்.  வந்தாலும் உங்களுக்கு இப்போது இலங்கை, ஈழம் ஒத்துவராாது  எதிலும் பிழைதான் கண்டு பிடிப்பீர்கள். 

சிங்கள அரசு எப்போதே அறிவித்து விட்டது  நாட்டுக்கு வரலாமென சிலர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் சில குடும்பம் நிரந்தரமாக இருக்கிறார்கள் சிலர் வெெளியேறுகிறார்கள் 

 

17 hours ago, குமாரசாமி said:

சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

 

 

On ‎26‎-‎01‎-‎2021 at 21:10, குமாரசாமி said:

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

இங்கே பாங்குகளில் நிறைய காசு போட்டு வைத்து இருப்பீர்கள் . அதைக் கொண்டு போய் வட்டிக்கு கொடுத்து விட்டு உட்கார்ந்து  சாப்பிடுறது அல்லது காசை கொண்டு ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்யிறது ...உங்களுக்கா உழைக்கிறது  கஸ்டம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

 

இங்கே பாங்குகளில் நிறைய காசு போட்டு வைத்து இருப்பீர்கள் . அதைக் கொண்டு போய் வட்டிக்கு கொடுத்து விட்டு உட்கார்ந்து  சாப்பிடுறது அல்லது காசை கொண்டு ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்யிறது ...உங்களுக்கா உழைக்கிறது  கஸ்டம் 
 

மிகத்தப்பான

உண்மைநிலை  புரியாத

தாயக மக்களுக்கு பிழையான திசையை பரிந்துரைக்கும்  கருத்து??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 02:40, குமாரசாமி said:

சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

இலங்கை அரசாங்கத்தினால் அள்ளிக்கொடுக்க முடியாது ஐரோப்பிய நாடுகள் போல் ஆனால் சமுர்த்தி திட்டம் கோழிகள் , ஆடுகள் , மாடுகள் கொடுக்க இருக்கிறார்கள் , காணி தேவையானவர்கள் அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள் ஆனால் அரசு கொடுக்கும் இடத்தில் போய் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் தமிழருக்கு அனைத்து வசதிகளும் தேவைப்படும் ஆனால் சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

எதற்கும் முந்தி கிராம சேவகரிடம் விசாரித்துப்பாருங்கள் காணி நிலம் கொடுப்பத பற்றி இங்கே கால் இல்லாத முன்னாள் போராளிகள் சைக்கிள் கடை வைத்து பிழைப்பு நடத்துகிரார்கள்  சுய தொழில் செய்ய முடியாதவர்கள் ஐரோப்பாவிலே இருப்பது நல்லது என நான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

இந்த கருத்தில் எனக்கு நீண்ட நாளைய சந்தேகம் உண்டு தனி நீங்கள்  ஊரில் இருப்பதால் கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீங்க என்று நினைக்கிறன் . இப்படி எங்கும் தழைக்கும்  சிங்களவனால் மலையகத்தில் தோட்டம்களில் நின்று பிடிக்க முடியவில்லையே ? என்ன காரணம் ? சொறிலங்காவின் பொருளாதார முக்கியம் வாய்ந்த பணப்பயிர் நமது உறவுகள்தானே முட்டுக்கொடுக்கிறார்கள் பெரும்பான்மை பெரும்பான்மை என்று சொல்பவர்களால்  முடியாது உள்ளதே? இன்றும் அந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை செய்ய முடியாமல் இந்த சிங்கள அரசு ஏமத்துகிறதே ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இந்த கருத்தில் எனக்கு நீண்ட நாளைய சந்தேகம் உண்டு தனி நீங்கள்  ஊரில் இருப்பதால் கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீங்க என்று நினைக்கிறன் . இப்படி எங்கும் தழைக்கும்  சிங்களவனால் மலையகத்தில் தோட்டம்களில் நின்று பிடிக்க முடியவில்லையே ? என்ன காரணம் ? சொறிலங்காவின் பொருளாதார முக்கியம் வாய்ந்த பணப்பயிர் நமது உறவுகள்தானே முட்டுக்கொடுக்கிறார்கள் பெரும்பான்மை பெரும்பான்மை என்று சொல்பவர்களால்  முடியாது உள்ளதே? இன்றும் அந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை செய்ய முடியாமல் இந்த சிங்கள அரசு ஏமத்துகிறதே ? 

நேற்றய நாளில் இருந்து 1000  ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது ஐயா மிகவும் மகிழ்ச்சி கூட 

வெறி சிம்பிள் இதைக்கூட யோசிக்க நம்மளால் முடியல அடிமைத்தமிழர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் அடிமைகள் கேள்வி கேட்காது சிங்களவர்கள் கேள்வி கேட்பார்கள் பிரச்சினை எழும் அதனால் சிங்களவர்களை வைத்துக்கொள்வதில்லை  ஆனால் கம்பெனிகளை சிங்களவர்கள் நடாத்துகிறார்கள் தமிழர்களை வைத்து , ஆனால் சிங்களவர்கள் மரக்கறி தோட்டங்களை நடாத்துகிறார்கள் அங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை அரசாங்கத்தினால் அள்ளிக்கொடுக்க முடியாது ஐரோப்பிய நாடுகள் போல் ஆனால் சமுர்த்தி திட்டம் கோழிகள் , ஆடுகள் , மாடுகள் கொடுக்க இருக்கிறார்கள் , காணி தேவையானவர்கள் அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள் ஆனால் அரசு கொடுக்கும் இடத்தில் போய் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் தமிழருக்கு அனைத்து வசதிகளும் தேவைப்படும் ஆனால் சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

எதற்கும் முந்தி கிராம சேவகரிடம் விசாரித்துப்பாருங்கள் காணி நிலம் கொடுப்பத பற்றி இங்கே கால் இல்லாத முன்னாள் போராளிகள் சைக்கிள் கடை வைத்து பிழைப்பு நடத்துகிரார்கள்  சுய தொழில் செய்ய முடியாதவர்கள் ஐரோப்பாவிலே இருப்பது நல்லது என நான் நினைக்கிறன் 

உங்கள் அண்மைக்கால கருத்துக்களையும்   மேற்கூறிய கருத்தையும் வைத்து  ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆங்காங்கே இருக்கும் அபிவிருத்தி பிரச்சனைகளை தவிர.....
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

உங்கள் அண்மைக்கால கருத்துக்களையும்   மேற்கூறிய கருத்தையும் வைத்து  ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆங்காங்கே இருக்கும் அபிவிருத்தி பிரச்சனைகளை தவிர.....
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.🙏🏽

சில இடங்களில் அபிவிருத்திகளையும் , தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தினால் அரசியல் பிரச்சினை வர வாய்ப்பில்லை  அரசியல் பிரச்சினை அரசியல் வாதிகளாலே மக்களின் கைகளில்  கொடுக்கப்பட்டு எரிய விடப்படுகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎01‎-‎2021 at 15:38, விசுகு said:

மிகத்தப்பான

உண்மைநிலை  புரியாத

தாயக மக்களுக்கு பிழையான திசையை பரிந்துரைக்கும்  கருத்து??

நீங்கள் சொன்னது சரியண்ணா ...என்னை மாதிரி , குசா அண்ணன் மாதிரி அன்றாடம் வேலைக்குப் போனால் தான் சம்பளம் என்று இருப்பவர்களால் வங்கிகளில் பணத்தை போட்டு வைத்திருக்க முடியாது தான்.மறுபுறம் கடுமையான உழைப்பாளியான அண்ணன் சின்ன வீட்டோடு சேர்ந்த ஒரு தோடடத்தை வாங்கினால் நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.
சிலர் வயது போன காலத்தில் வெளிநாட்டில் வசதிகள் கூட என்று சொல்கிறார்கள்...எப்படியும் பிறந்த மண்ணை நேசிப்பவர்கள் கடைசி காலத்தில் ஊரோடு இருப்பது தான் சிறப்பு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சில இடங்களில் அபிவிருத்திகளையும் , தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தினால் அரசியல் பிரச்சினை வர வாய்ப்பில்லை  அரசியல் பிரச்சினை அரசியல் வாதிகளாலே மக்களின் கைகளில்  கொடுக்கப்பட்டு எரிய விடப்படுகிறது .

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனை என்றால் என்ன  பிரச்சனைகள் இருக்கின்றது? உங்களின் பல கருத்துக்களில் இலங்கையில் அரசியல் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.