Jump to content

முல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி யார் தெரியுமா


colomban

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Vikarai-Building-in-North-696x392.jpg

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது என்றும் கூறியுள்ளார், தற்போது, வெலி ஓயா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 4 மில்லியன் ரூபா செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

இந்த தகவல்களை சிங்கள ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றன.

நமக்கு நல்லதொரு தமிழன் வாய்த்தான் என, சிங்கள சமூக ஊடகங்கள் அந்த நபரை புகழ்ந்து வருகின்றன.

முல்லைத்தீவை சேர்ந்த கிருபாகரன் (38) என்ற நபரே இவ்வாறு பௌத்தத்தை வளர்ப்பதில் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

யுத்தத்தில் காலொன்றை இழந்த அவர் இப்பொழுது ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார். இப்பொழுது பௌத்த மதத்தை தழுவியுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் பௌத்த விகாரைகளிற்காக பல இலட்சம் ரூபாவை அவர் செலவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த நபர் தனது கதையை சிங்கள ஊடகங்களிற்கு பகிர்ந்த போது-

என் அம்மா, அப்பா இருவரும் உயிருடன் இருக்கிறார்கள். அப்பா நகை தொழிலை நடத்தினார். எனவே எங்களிடம் நல்ல பணம் இருந்தது.

எனக்கு ஒரு மூத்த சகோதரர், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். நான் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை.

ஒரு சகோதரி போரின்போது இறந்தார். நான் முல்லைத்தீவிலுள் வித்தியானந்தா மகா வித்தயாலயத்தில் படித்தேன்.

யுத்தத்தின் இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தலும் ஒருவர் தம்முடன் இணைய வேண்டுமென புலிகள் அறிவித்தனர்.

அல்லது வீட்டிற்கு வந்து ஒருவரை கடத்திச் செல்வார்கள். புலிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, நான் புலிகளில் சேர்ந்தேன்.

நான் 10 ஆம் ஆண்டு வரை மட்டுமே படித்தேன். 2006 இல் நான் புலிகளில் சேர்ந்தேன். அப்போது எனக்கு 23 வயது. நான் கெரில்லா போரில் மூன்று மாத பயிற்சி பெற்றேன். எனது தகட்டு இலக்கம் 563. அமைப்பு எனக்கு ‘கார்முகிலன்’ என்ற பெயரை வைத்தது.

புலிகளின் முக்கிய தளபதியான கேணல் தீபனின் கீழ் செயற்பட்டேன், அங்கு எனக்கு கப்டன் தரம் வழங்கப்பட்டது.

முகமாலை முன்னரங்கத்தில் நடந்த மோதலில் எனது காலை இழந்தேன். நான்கு மாத சிகிச்சையின் பின்னர் வழங்கல் பகுதயில் பணியாற்றினேன்.

2009 ஏப்ரல் 5 அன்று வெள்ளமுள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்தேன். எங்களுடன் வந்த போராளிகள் பொதுமக்களிற்குள் ஒளிந்து நின்று துப்பாக்கி பிரயோகம் செய்தது.

நாங்கள் முன்வரிசை போராளிகளாக இருந்த போதும், இராணுவம் எம்மை துன்புறுத்தவில்லை. எங்களை நன்றாக நடத்தினார்கள். பின்னர் புனர்வாழ்விற்கு அனுப்பினார்கள்.

அங்கே சிங்களத்தை நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன். நாங்கள் புலிகளில் இணைந்த பின்னர், சிங்கள நாடு ஒரு கொலைகார நாடு என்று தலைவர்கள் கற்பித்தனர். இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் உணர்ந்தேன்.

நம்முடையதை விட சிங்கள தேசம் சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்கிறேன்.

பின்னர் நான் நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதலங்கார கிட்டி தேரருடன் தொடர்பு கொண்டேன். அவரிடமிருந்து தம்மத்தைப் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது.

தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் எனது அறிவை மேலும் மேம்படுத்தினேன்.

ஒரு நாள் நான் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசயாவில் வழிபடச் சென்றேன். அந்த நேரத்தில் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் நான் பௌத்தத்தை படித்து, பௌத்தத்திற்கு மாற வேண்டும் என்பதாகும்.

இந்த காலகட்டத்தல் மேதலங்கார தேரர் காலமானார். அவரது உடலை விகாரைக்கு கொண்டு வர முடியாது, ஆலய சூழலில் தகனம் செய்ய முடியாது என தமிழ் தீவிரவாதிகள் குழு கலவரத்தில் ஈடுபட்டது.

மேதலங்கர தேரரின் நினைவாக, விகாரையில் ரூ.6 1/2 இலட்சம் செலவில் புத்தர் சிலை கட்டினேன். நீர் வசதிகள் செய்தேன்.

வெலிஓயா ஸ்ரீ தேவகிரி ராஜமஹா விகாரையில் ஒரு தாதுகோபம் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்திற்கு சுமார் ரூ .4 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், ருவன்வெலி மகா சாயாவின் இருப்பிடத்திற்கு சுமார் 3 1/2 லட்சம் ரூபாய் செலவிட்டேன். நான் நீண்ட காலமாக ஒவ்வொரு போயாவிற்கும் அனுராதபுரத்திற்கு வருகிறேன்.

அந்த சுதந்திரத்தை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஒட்டுமொத்த தேசத்தின் கண்ணியமும் மரியாதையும் உண்டு.

புலிகள் அமைப்பில் முன்னணி வரிசை போராளிகளாக இருந்தபோதிலும், அவர்களால் எங்களுக்கு வாழ்க்கைப் பரிசு கிடைத்தது என புளகாங்கிதம் கொண்டுள்ளார்.

அவரது நிதியில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடங்களில் வழிபாட்டு சின்னங்கள் அகற்றப்பட்டு பௌத்த மயமாக்கல் நடப்பதை பற்றி, அவரும் பேசவில்லை. அவரிடம் பேட்டியடுத்த ஊடகமும் பேசவில்லை.

https://lankapuri.com/2021/01/20/முல்லைத்தீவில்-40-இலட்சம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன  

இப்படிக்கு கிருபாகரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன  

இப்படிக்கு கிருபாகரன்.

நீங்கள் விளையாட்டு செய்தி என்றாலும் சில சம்பவங்கள் உண்மையாக நடந்தேறி வருகின்றன . டொட்  ஆனால் நாம் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று நம்ம புத்தியை தீட்டிக்கொண்டே  சீச்சி திட்டிக்கொண்டே இருப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் விளையாட்டு செய்தி என்றாலும் சில சம்பவங்கள் உண்மையாக நடந்தேறி வருகின்றன . டொட்  ஆனால் நாம் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று நம்ம புத்தியை தீட்டிக்கொண்டே  சீச்சி திட்டிக்கொண்டே இருப்போம்

இப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ...? எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய்  காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதிரியள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ...? எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய்  காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதிரியள்...

இப்பவும் ஒன்றும் கெட்டு போகலை எல்லாத்தையும் உதறிப்போட்டு வாரது முடியுமா என்ன ?? நான் புலம் பெயர்ந்தவர்களை இழுக்க வில்லை புலம் பெயர்ந்தவர்கள இங்க்குள்ளவர்களை இன்னும் விளங்கிக்கொள்ள வில்லை 
காசு மரங்கள் தன் நிழலுக்கு கீழ் மட்டும் கொட்டுகிறது காய்ந்த மரங்கள் சருகாகவே கொட்டிக்கொண்டு  இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் ஒன்றும் கெட்டு போகலை எல்லாத்தையும் உதறிப்போட்டு வாரது முடியுமா என்ன ??

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

வந்த பிறகே அதைப்பற்றி கதைக்கலாம்........

அதுதான் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் காசு மரம் என்று காணி வீடுகள் வாங்கலாம், சுயதொழில் ஆரம்பித்து உழைக்கலாம் காசு இருந்தால்  ஆனால் பாதுகாப்பு இருக்குமா என கேட்பீங்கள்.  வந்தாலும் உங்களுக்கு இப்போது இலங்கை, ஈழம் ஒத்துவராாது  எதிலும் பிழைதான் கண்டு பிடிப்பீர்கள். 

சிங்கள அரசு எப்போதே அறிவித்து விட்டது  நாட்டுக்கு வரலாமென சிலர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் சில குடும்பம் நிரந்தரமாக இருக்கிறார்கள் சிலர் வெெளியேறுகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வந்த பிறகே அதைப்பற்றி கதைக்கலாம்........

அதுதான் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் காசு மரம் என்று காணி வீடுகள் வாங்கலாம், சுயதொழில் ஆரம்பித்து உழைக்கலாம் காசு இருந்தால்  ஆனால் பாதுகாப்பு இருக்குமா என கேட்பீங்கள்.  வந்தாலும் உங்களுக்கு இப்போது இலங்கை, ஈழம் ஒத்துவராாது  எதிலும் பிழைதான் கண்டு பிடிப்பீர்கள். 

சிங்கள அரசு எப்போதே அறிவித்து விட்டது  நாட்டுக்கு வரலாமென சிலர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் சில குடும்பம் நிரந்தரமாக இருக்கிறார்கள் சிலர் வெெளியேறுகிறார்கள் 

 

17 hours ago, குமாரசாமி said:

சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

 

 

On ‎26‎-‎01‎-‎2021 at 21:10, குமாரசாமி said:

வந்து????

ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?

இங்கே பாங்குகளில் நிறைய காசு போட்டு வைத்து இருப்பீர்கள் . அதைக் கொண்டு போய் வட்டிக்கு கொடுத்து விட்டு உட்கார்ந்து  சாப்பிடுறது அல்லது காசை கொண்டு ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்யிறது ...உங்களுக்கா உழைக்கிறது  கஸ்டம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

 

இங்கே பாங்குகளில் நிறைய காசு போட்டு வைத்து இருப்பீர்கள் . அதைக் கொண்டு போய் வட்டிக்கு கொடுத்து விட்டு உட்கார்ந்து  சாப்பிடுறது அல்லது காசை கொண்டு ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்யிறது ...உங்களுக்கா உழைக்கிறது  கஸ்டம் 
 

மிகத்தப்பான

உண்மைநிலை  புரியாத

தாயக மக்களுக்கு பிழையான திசையை பரிந்துரைக்கும்  கருத்து??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 02:40, குமாரசாமி said:

சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? 

இலங்கை அரசாங்கத்தினால் அள்ளிக்கொடுக்க முடியாது ஐரோப்பிய நாடுகள் போல் ஆனால் சமுர்த்தி திட்டம் கோழிகள் , ஆடுகள் , மாடுகள் கொடுக்க இருக்கிறார்கள் , காணி தேவையானவர்கள் அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள் ஆனால் அரசு கொடுக்கும் இடத்தில் போய் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் தமிழருக்கு அனைத்து வசதிகளும் தேவைப்படும் ஆனால் சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

எதற்கும் முந்தி கிராம சேவகரிடம் விசாரித்துப்பாருங்கள் காணி நிலம் கொடுப்பத பற்றி இங்கே கால் இல்லாத முன்னாள் போராளிகள் சைக்கிள் கடை வைத்து பிழைப்பு நடத்துகிரார்கள்  சுய தொழில் செய்ய முடியாதவர்கள் ஐரோப்பாவிலே இருப்பது நல்லது என நான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

இந்த கருத்தில் எனக்கு நீண்ட நாளைய சந்தேகம் உண்டு தனி நீங்கள்  ஊரில் இருப்பதால் கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீங்க என்று நினைக்கிறன் . இப்படி எங்கும் தழைக்கும்  சிங்களவனால் மலையகத்தில் தோட்டம்களில் நின்று பிடிக்க முடியவில்லையே ? என்ன காரணம் ? சொறிலங்காவின் பொருளாதார முக்கியம் வாய்ந்த பணப்பயிர் நமது உறவுகள்தானே முட்டுக்கொடுக்கிறார்கள் பெரும்பான்மை பெரும்பான்மை என்று சொல்பவர்களால்  முடியாது உள்ளதே? இன்றும் அந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை செய்ய முடியாமல் இந்த சிங்கள அரசு ஏமத்துகிறதே ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இந்த கருத்தில் எனக்கு நீண்ட நாளைய சந்தேகம் உண்டு தனி நீங்கள்  ஊரில் இருப்பதால் கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீங்க என்று நினைக்கிறன் . இப்படி எங்கும் தழைக்கும்  சிங்களவனால் மலையகத்தில் தோட்டம்களில் நின்று பிடிக்க முடியவில்லையே ? என்ன காரணம் ? சொறிலங்காவின் பொருளாதார முக்கியம் வாய்ந்த பணப்பயிர் நமது உறவுகள்தானே முட்டுக்கொடுக்கிறார்கள் பெரும்பான்மை பெரும்பான்மை என்று சொல்பவர்களால்  முடியாது உள்ளதே? இன்றும் அந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை செய்ய முடியாமல் இந்த சிங்கள அரசு ஏமத்துகிறதே ? 

நேற்றய நாளில் இருந்து 1000  ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது ஐயா மிகவும் மகிழ்ச்சி கூட 

வெறி சிம்பிள் இதைக்கூட யோசிக்க நம்மளால் முடியல அடிமைத்தமிழர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் அடிமைகள் கேள்வி கேட்காது சிங்களவர்கள் கேள்வி கேட்பார்கள் பிரச்சினை எழும் அதனால் சிங்களவர்களை வைத்துக்கொள்வதில்லை  ஆனால் கம்பெனிகளை சிங்களவர்கள் நடாத்துகிறார்கள் தமிழர்களை வைத்து , ஆனால் சிங்களவர்கள் மரக்கறி தோட்டங்களை நடாத்துகிறார்கள் அங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை அரசாங்கத்தினால் அள்ளிக்கொடுக்க முடியாது ஐரோப்பிய நாடுகள் போல் ஆனால் சமுர்த்தி திட்டம் கோழிகள் , ஆடுகள் , மாடுகள் கொடுக்க இருக்கிறார்கள் , காணி தேவையானவர்கள் அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள் ஆனால் அரசு கொடுக்கும் இடத்தில் போய் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் தமிழருக்கு அனைத்து வசதிகளும் தேவைப்படும் ஆனால் சிங்களவர்கள் எந்த காட்டில் குடியமர்த்தினாலும் அங்கு ஏதாவது பயிரை , விலங்கை வளர்த்து பிழைத்துக்கொள்வார்கள் 

எதற்கும் முந்தி கிராம சேவகரிடம் விசாரித்துப்பாருங்கள் காணி நிலம் கொடுப்பத பற்றி இங்கே கால் இல்லாத முன்னாள் போராளிகள் சைக்கிள் கடை வைத்து பிழைப்பு நடத்துகிரார்கள்  சுய தொழில் செய்ய முடியாதவர்கள் ஐரோப்பாவிலே இருப்பது நல்லது என நான் நினைக்கிறன் 

உங்கள் அண்மைக்கால கருத்துக்களையும்   மேற்கூறிய கருத்தையும் வைத்து  ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆங்காங்கே இருக்கும் அபிவிருத்தி பிரச்சனைகளை தவிர.....
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

உங்கள் அண்மைக்கால கருத்துக்களையும்   மேற்கூறிய கருத்தையும் வைத்து  ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆங்காங்கே இருக்கும் அபிவிருத்தி பிரச்சனைகளை தவிர.....
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.🙏🏽

சில இடங்களில் அபிவிருத்திகளையும் , தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தினால் அரசியல் பிரச்சினை வர வாய்ப்பில்லை  அரசியல் பிரச்சினை அரசியல் வாதிகளாலே மக்களின் கைகளில்  கொடுக்கப்பட்டு எரிய விடப்படுகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎01‎-‎2021 at 15:38, விசுகு said:

மிகத்தப்பான

உண்மைநிலை  புரியாத

தாயக மக்களுக்கு பிழையான திசையை பரிந்துரைக்கும்  கருத்து??

நீங்கள் சொன்னது சரியண்ணா ...என்னை மாதிரி , குசா அண்ணன் மாதிரி அன்றாடம் வேலைக்குப் போனால் தான் சம்பளம் என்று இருப்பவர்களால் வங்கிகளில் பணத்தை போட்டு வைத்திருக்க முடியாது தான்.மறுபுறம் கடுமையான உழைப்பாளியான அண்ணன் சின்ன வீட்டோடு சேர்ந்த ஒரு தோடடத்தை வாங்கினால் நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.
சிலர் வயது போன காலத்தில் வெளிநாட்டில் வசதிகள் கூட என்று சொல்கிறார்கள்...எப்படியும் பிறந்த மண்ணை நேசிப்பவர்கள் கடைசி காலத்தில் ஊரோடு இருப்பது தான் சிறப்பு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சில இடங்களில் அபிவிருத்திகளையும் , தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தினால் அரசியல் பிரச்சினை வர வாய்ப்பில்லை  அரசியல் பிரச்சினை அரசியல் வாதிகளாலே மக்களின் கைகளில்  கொடுக்கப்பட்டு எரிய விடப்படுகிறது .

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனை என்றால் என்ன  பிரச்சனைகள் இருக்கின்றது? உங்களின் பல கருத்துக்களில் இலங்கையில் அரசியல் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.