Jump to content

தென்னிந்தியாவை மிகவும் நெருங்கியது சீனா: கட்டுப்படுத்துவதற்கு அதிகரமில்லாத நிலையில் தமிழர்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)
யாழ்.நயினாதீவு, நெடுந்தீவு, மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதன் ஊடாக தென்னிந்தியாவை சீனா மிகவும் நெருங்கி வந்துள்ளது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/143847/suresh_01.jpg

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வினை கட்டுப்படுத்துவதற்கு தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் உடனடியான கரிசனையைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கமானது கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா நிறுவனத்திற்கு தீவுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. 

இந்த திட்டத்திற்காக இந்திய நிறுவனங்கள் சிலவும் கேள்விமனுக்களை சமர்ப்பித்திருந்தபோதும் அவை நிராகரிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விதமான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

முழு இலங்கையையும்  இந்தியா தனது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ள பகுதியாகவே பார்க்கின்றது. அதிலும் குறிப்பாக, வடகிழக்கு பிரதேசங்களை தனது தென்பகுதிக்கு மிக நெருங்கியவையாக இருப்பதால் அதில் அதிக கவனத்தினையும் கொண்டிருக்கின்றது. மேலும் வடமாகாணத்தின் மன்னார், வடமராட்சி மற்றும் தீவிகப்பகுதிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கேந்திர ஸ்தானங்களாகவே உள்ளன. 

இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்காதே நிலைமைகளே இதுவரை காலமும் இருந்து வந்தது. கடந்த கால இலங்கை அரசாங்கங்களும் அவ்விதமான தீர்மானங்களையே எடுத்து வந்திருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் திடீரென தீவகப்பகுதிகளில் சீனா கால்பதிப்பதற்கு இடமளித்திருக்கின்றது. இந்த செயற்பாடானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. 

குறிப்பாக தீவகத்தில் சீனாவுக்கு இடமளிப்பதன் ஊடாக இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்வதற்கு அல்லது கிழக்கு முனைய விடயம் உள்ளிட்டவற்றில் அழுத்தங்களை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக கையிலெடுக்க இலங்கை அரசாங்கம் விளைகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது. 

அதேநேரம், வடக்கு மாகாணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான வல்லாதிக்கப்போட்டியை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. 

இதனை விடவும், சாவகச்சேரிப்பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றின் பெயரால் சீன பிரஜைகள் வந்து தங்கியுள்ளார்கள். அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் என்ன தேவைக்காக அங்கிருக்கின்றார்கள். எவ்விதமாக செயற்படுகின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதும் இருப்பதாக இல்லை. 

இலங்கை அரசாங்கத்தின் இவ்விதமான எதேச்சதிகாரச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இயலாதவர்களாகவே தமிழர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தற்போது மாகாண சபைகள் இயங்காத நிலையில் இருக்கின்றன. அவ்வாறு அவை செயற்பட்டாலும் இவ்விதமான விடயங்களை கட்டுப்படுத்தவல்ல காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்காது மத்திய அரசாங்கம் இருந்து வருகின்றது. 

டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையான கரிசனை கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழர்களுக்காக முழுமையான அதிகாரப்பகிர்விலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் தங்கியுள்ளது என்பதை சீனாவின் வடக்கை நோக்கிய நகர்வு குறித்து நிற்கின்றது என்றார். 

தென்னிந்தியாவை மிகவும் நெருங்கியது சீனா: கட்டுப்படுத்துவதற்கு அதிகரமில்லாத நிலையில் தமிழர்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனைக்கு இந்தியாவெல்லோ சத்தம் போடோணும். இந்த மனுசன் ஏன் கும்மியடிக்குது... 🤥

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

இந்தப் பிரச்சனைக்கு இந்தியாவெல்லோ சத்தம் போடோணும். இந்த மனுசன் ஏன் கும்மியடிக்குது... 🤥

அவர் இந்தியாவுக்கு மிக வேண்டப்பட்டவர். இந்தியாவின் விசுவாசம் இப்போதும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.