Jump to content

`சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது!’ - மும்பை உயர் நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால், கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கொய்யாப்பழம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையைக் கழற்ற முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிறார் வதை
 
சிறார் வதை

ஆனால், அச்சிறுமி கத்தி கூச்சல்போட, அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அந்தச் சிறுமியின் வாயைப் பொத்தி அந்தக் கொடூரத்தைச் செய்துவிட்டு சிறுமியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு வெளியில் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார் அந்த நபர். சிறுமியை அவரின் தாயார் தேடியபோது எங்கும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீடு அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளேயிருந்து அவரது மகளின் அழுகைச் சத்தம் வந்ததால், கதவைத் திறந்தபோது, சிறுமி நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தார்.

உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி புஸ்பா கனடிவாலா வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருக்கும் விளக்கம் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. ``குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால் கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும். இவ்வழக்கில் சிறுமியின் ஆடையைக் குற்றவாளி கழற்றிவிட்டு மார்பகத்தைத் தொட்டாரா அல்லது அப்படியே ஆடையுடன் தொட்டாரா அல்லது கையை ஆடைக்குள்விட்டுத் தொட்டாரா என்று தெளிவாக குறிப்பிடப்படப்படவில்லை.

 

எனவே இந்தச் செயல் பாலியல் தாக்குதலில் வரவில்லை. சிறுமி உட்பட இந்த வழக்கில் அனைவரின் வாக்குமூலத்திலும் எந்தவித முரண்பாடும் இல்லை. அதோடு குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியின் மார்பகத்தைத் தடவியிருக்கிறார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சட்டப்பிரிவு 7-ன் கீழ் தோல்மீது தோல்பட்டு செய்யப்படும் அத்துமீறல்கள்தான் பாலியல் தாக்குதலாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 7-வது சட்டப் பிரிவுப்படி பாலியல் நோக்கத்தோடு பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றைக் கையால் தொட்டதாக இருக்க வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு 7-வது சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக வரவில்லை” என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆனால், சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பாலியல் தாக்குதலாகக் கருத வேண்டும் என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். தண்டனை, குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு இந்த வழக்கில் சிறுமியை மானபங்கப்படுத்தியதாகக் கருதி, 354-வது சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு மட்டும் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு
 
தீர்ப்பு

மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் இந்தத் தீர்ப்பு அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், இதைப் பாலியல் தாக்குதலாகக் கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது, இது போன்ற மற்ற வழக்குகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

`சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது!’ - மும்பை உயர் நீதிமன்றம் | Touching a girl with a dress cannot be accepted as sexual assault: Mumbai high Court verdict (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர்😄 நீதிபதி பெண் போல இருக்கின்றது ….வாழ்க இந்தியா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியின் மீது இப்படியொரு அத்துமீறல்(😝) நடத்திப் பார்த்தால் நீதிபதியின் உண்மை முகம் தெரியவரும்

(கடுமையான சொற்பிரயோகத்தினைப் பொறுத்தருள்க)

😡

Link to comment
Share on other sites

On 26/1/2021 at 02:13, Kapithan said:

நீதிபதியின் மீது இப்படியொரு அத்துமீறல்(😝) நடத்திப் பார்த்தால் நீதிபதியின் உண்மை முகம் தெரியவரும்

(கடுமையான சொற்பிரயோகத்தினைப் பொறுத்தருள்க)

😡

அண்ணே, அந்த தீர்ப்பு குடுத்தது ஒரு கிழவியாம். அதுக்கிடட போய் நீங்க சொல்ற மாதிரி -------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பாலியல் வன்கொடுமை இல்லையா?: தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

spacer.png

 

பாலியல் வழக்கு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 27) நிறுத்தி வைத்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரெக்டே(39), பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியைக் கொய்யாப் பழம் தருவதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமியின், மார்பகத்தை தொட்டு பாலியல் தொந்தரவு செய்து ஆடையை அவிழ்க்க முயன்றிருக்கிறார். இதனால் சிறுமி அழ ஆரம்பித்ததால் வீட்டுக்குள்ளே வைத்துப் பூட்டிவிட்டு ஓடியிருக்கிறார். இதையடுத்து அழுகை குரல் கேட்டு ஓடி வந்த அவரது தாய், சிறுமியை மீட்டிருக்கிறார்.

இதுகுறித்து சதீஸ் ரெக்டே மீது சிறுமியின் பெற்றோர் நாக்பூர் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் சதீஸ் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் போக்சோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து சதீஸ் ரெக்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 

இந்த மனுவை விசாரித்து நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கிய தீர்ப்பு தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. “போக்சோ சட்டத்தில், பாலியல் நோக்கத்துடன் ஒருவரைத் தோலுடன் தோல் உரசினால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும். வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்குக் கீழ் வராது. போக்ஸோ சட்டத்தின் பிரிவு 8இன் கீழ் பாலியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றம் அல்ல’ என்று வழங்கிய தீர்ப்பு சர்ச்சைக்குள்ளானது.

நாட்டில் பெண்களும், சிறுமிகளும் வெளியில் செல்லும் போதும், அக்கம் பக்கத்தினராலும் பாலியல் தொந்தரவுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்ப்புக்குப் பெண்கள் அமைப்பினர், நீதித் துறையைச் சார்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராகத் தேசிய பெண்கள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் உச்ச நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு சென்றார். மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, முன்னெப்போதும் இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டதில்லை. இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த தீர்ப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு அனுமதி வழங்கியது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
 

https://minnambalam.com/public/2021/01/27/43/sc-stays-bombay-hc-order-skin-to-skin-contact-necessary-offence-sexual-assault-pocso

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை சொல்லோணுமெண்டால் இது ஊர்களிலை நடக்கிற குரும்பட்டிக்கதை.  இதிலை பிரச்சனை என்னவெண்டால் வயது ஒற்றவர்கள் செய்யும் போது பிரச்சனை வராது. 
மிஞ்சிய மிச்ச வயதுக்காரர் செய்யும் போது மரணதண்டனையும் தப்பில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.