Jump to content

Captain Cookம் Kamay Botany Bay(Kurnell)ம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

0-F959-F8-B-1544-45-DA-B8-FF-EB7-C2696-A
Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில்  குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்...

large.BFC0EA65-0734-42E4-8F6B-864BE8F0B586.jpeg.115d54aa32f160bea60126b6aa5ac449.jpeg
அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு  நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்திருந்தாலும், பழங்குடி மக்கள் எப்போதும் தங்கள் இந்த நிலத்துடனான பிணைப்பை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.. 

8-DFAE43-C-41-BB-4-A79-9-C75-A3-BD0159-F
Kurnell, இதுதான் Captain Cook மற்றும் அவரது Endeavour மாலுமிகளும் பழங்குடியின மக்களுக்கும் இடையிலான முதல் தொடர்பின் புள்ளி ..இதிலிருந்தே இன்றைய அவுஸ்ரேலிய வரலாறு தொடங்குகிறது..

E2-F7-D82-D-FE33-4837-BC74-350-C03703-A7

1770 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் (பின்னர் கேப்டன்) ஜேம்ஸ் குக் மற்றும் அவரது எண்டெவர் குழுவினர் இங்கே கால்பதித்தார்கள்..அவர்களை இந்த நிலத்தின் பாரம்பாரிய உரிமையாளர்களான பழங்குடிகளில் இருவர் ஈட்டியுடன் எதிர்த்தார்கள் என்பதை  இன்று சித்திரமாகவும் கல்வெட்டிலும் பதிந்திருப்பதை காணலாம்.. 

large.05217BC0-9D07-4E96-B355-209E33C5E16E.jpeg.a5ff17dd51cdd724a433a567703aa994.jpeg

 ஜேம்ஸ் குக்குடன் வந்திருந்த இயற்கை ஆர்வலர்/தாவரவியலாளர் ஜோசப் பேங்க்ஸ்( Sir Joseph Banks)  மற்றும் டேனியல் சோலாண்டர்(Daniel Solander) ஆகியோர் முதலில் இந்த இடத்தை 8 நாட்களில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்து கேப்டன் குக்கிடம் வழங்கினார்கள் என வரலாறு கூறுகிறது.. 

அவர்கள் எட்டு நாட்கள் தங்கியிருந்து ஆராய்ந்ததை, நான் ஒரு சில மணித்தியாலங்கள் மட்டும் தங்கியிருந்து ஆராய/அனுபவிக்க முடியாது ஆனாலும் இயலுமானவரை முயற்சித்தேன்...
அதே போல இந்த வரலாறு மனதை கொஞ்சம் நெருடியது என்பதையும் மறுக்கமுடியாது.. 

Captain Cook Memorial Obelisk 

FAD2-D7-BC-44-E8-4-FF3-9991-75-A4-A31-BC

1870ல் கட்டப்பட்டது.. நான்கு பக்கங்களிலும் அவருடைய வருகைப்பற்றி சிறு குறிப்புகள்.. அதில் ஒன்று..
அவருக்கும் Gweagal என்ற பூர்வீக குடிகள் இரண்டு பேரைபற்றிய குறிப்புகள்.. 


Back Inscription
THE LANDING PLACE
OF CAPTAIN COOK
April 28th, 1770.
The following brief extracts relating to the Landing of Captain Cook and his party on the rock opposite this tablet are taken from the original MS Journal of Sir Joseph Banks, in the Mitchell Library, Sydney : 
The journal records that 
The natives resolutely disputed the landing "although they were by two, and we thirty or forty at least." 
Parleying with these two continued for about a quarter of an hour.  "They remained resolute, so a musket was fired over them, the effect of which was that the youngest of the two dropped a bundle of lances on the rock....  He, however, snatched them up again and both renewed their threats and opposition.  A musket loaded with small shot was now fired at the oldest of the two who was about 40 yards from the boat, it struck him on the legs but he minded it very little, so another was immediately fired at him, on this he ran up to the house about 100 yards distant and soon returned with a shield.  In the meantime we had landed on the rock."
Several "lances" were immediately thrown and fell among the party.  This caused two further discharges of small shot, when, after throwing another lance, the natives fled.”

43-ADFB33-F9-C3-495-A-951-C-E781-E8-C66-

குக்கின் தரையிறக்கம் மற்றும் வரலாற்று ரீதியான காலனித்துவத்தின் 200 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு தகடு

The Eyes of the land and the sea

large.B77B7C79-64C9-401F-8C7C-79C0FD611395.jpeg.2f18e3f756beb84cf4d3971fc9af62c2.jpeg
“ HMP Endeavourன் வருகையை/வரலாற்றை இந்த இடத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகளான Gweagal பிரிவினரின் ஆன்மீக/புனிதமான விலங்கான திமிங்கலத்தின் விலா எலும்புகள் ஒவ்வொன்றிலும் பொறித்துள்ளார்கள்..

097-D4-E39-9711-443-B-9-F3-B-AAF340-CB07

12037273-D2-C7-419-C-8567-E5-A8-C4117-F9

Cook வருகையின் 250வது ஆண்டு நிறைவை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டது..

Cape Solander look out 

large.279153E5-44AD-444F-8971-56CB85108476.jpeg.98b38fc52abd03c575e058b32e240a47.jpeg
இந்தப்பிரதேசம் வெள்ளைநிற மணல் குன்று மலைகள்..எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ள இடங்களாக அறியப்படுகிறது.

The Gweagal என்ற பூர்வீக குடிகள் இதன் பாரம்பரிய உரிமையாளர்கள். வெள்ளை களிமண்ணினை தங்களது உடலில் வர்ணங்களாக பூசுவார்கள், அதேபோல தங்களது வள்ளங்களில் நெருப்பை உருவாக்கி மீன்களை ஈர்க்கவும் பயன்படுத்தினார்கள் என அறிய முடிந்தது. 

52-E6270-D-2-E01-4-FEF-A26-A-38-F7076260

Captain Cookஉடன் வந்திருந்த தாவரவியலாளர் ஜோஸ்பே பேங்க்ஸ் மற்றும் டேனியல் சோலாண்டர் இந்த பிரதேசத்தை ஆராய்ந்து அறிக்கையை Captain Cookடம் சமர்பித்தார்கள்.. இவர்களது நினைவாக banksia மற்றும் இந்த Cape Solander drive உள்ளது..
இங்கே June/July மாதங்களில் சூடான நீரலைகளை தேடி வரும் Humpback திமிங்கலங்களை பார்க்கமுடியும்.. 


La Perouseம் Bare Islandம்

large.38BAC033-BDEC-4929-9C3F-ED5A528EB452.jpeg.68288955cfe4f1145596a6e76102456f.jpeg

"ஒரு சிறிய வெற்று தீவு" என்று விவரிக்கப்படும் தீவையே இலகுவான குறிகாட்டியாக கேப்டன் குக் விபரித்திருந்தார், அன்று முதல் இந்த பெயராலேயே இது அழைக்கப்படுகிறது..

5-FC135-F8-573-F-4-F11-8-F03-FF22-FA22-B
Macquarie Watchtower-1820ல் கட்டப்பட்டது.

Captain Cook கண்டுபிடித்து 18 வருடங்களின் பின் Captain Arthur Phillipம் கைதிகளை உள்ளடக்கிய முதலாவது கடற்படையும் 18/01/1788ல் Botany Bayயில் நங்கூரம் இடுகிறார்கள்.

73328823-7-B46-4-D44-B48-E-CC292658511-Bமாலைப்பொழுதில் தூரத்தே தெரியும் Port Botany

large.6830A92A-1631-4BEB-A010-338831A004E3.jpeg.0dfabde96e7b74e2ddbb96bf805c570a.jpeg
சூரிய அஸ்தமனம் - Bare Island 


ஆனால் கேப்டன் ஆர்தர் பிலிப் இடத்தைஆய்வு செய்தபோது, அது பாதுகாப்பான நன்னீர் அல்லது பொருத்தமான நங்கூரம் இல்லாததால் வசிப்பது பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டது, எனவே Port Jacksonற்கு செல்ல முடிவு செய்கிறார்.. முதலாவது காலனித்துவத்திற்கான அடிக்கல் Port Jacksonல் தொடங்கப்பட்டது..

அதேநேரத்தில் இவர்கள் வந்து சில நாட்களின் பின் பிரெஞ்சு மாலுமியான Jean François de Galaup, comte de Lapérouse இரு கடற்கலங்களுடன் நங்கூரமிடுகிறார்.. அவரது நினைவாக இந்த இடத்திற்கு La Perouse என பெயரிடப்பட்டது.. 
இங்கே இருக்கும் பூர்வீக குடிகள் Gooriwal மக்கள் ஆகும்.

large.2B32C59E-8D31-44C9-A07A-B5F3C0C64DE6.jpeg.03d0ef1135996824f91aabee9d182e40.jpeg

E54-A3120-3-F39-4-BA6-8420-4-D04-E2-D48-
La Perouse மஞ்சள், செவ்விளநீர் நிற மணற்குன்றுகளை உடையது.. இங்கே ஒரு சிறிய Bare Islandம் உள்ளது..

99-DFFDAD-26-BE-4-F5-C-BE51-F714-ABC894-

இன்று அவுஸ்திரேலிய தினம் என்பதால் இந்த இடத்தைப்பற்றிய சிறு குறிப்பை பகிர விரும்பினேன்.. 
இந்த இரு வரலாற்று இடங்களுக்கும் பூர்வீக குடிகளின் சந்தை மற்றும் பூர்வீக்குடிகளின் மாயானத்திற்கும் மீண்டும் வர சந்தர்ப்பங்கள் உள்ளதால், இன்னமும் விரிவாக எழுதமுடியும் என நினைக்கிறேன்..

 நன்றி
- பிரபா சிதம்பரநாதன்

large.317EDFDA-419F-4612-B3F2-0A88AD10BBC0.jpeg.e6776fd8fcc4d103b9c850d50cb5d13b.jpeg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர், பாடசாலையில் இருந்து இளமையிலேயே விலகி விட்டாலும், பின்னர், மாலை நேர கல்வி மூலம், பட்டப்படிப்பு வரை தொடர்ந்து, றோயல் நேவியில் இணைந்து கொண்டார். கணிதம், வான சாத்திரம் போன்றவைகளில் மிக திறமை கொண்டவராக உள்ளார்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தினை அளக்கும் நோக்குடனே, கேப்டன் ஜேம்ஸ் குக் உலகை சுற்றி வர இங்கிலாந்தின் சயின்ஸ் சொசைட்டியினால் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த வகையில் உலகினை சுற்றி வந்தபோதே, ஆசியினை கண்டறிந்தார்.

போன ஒவ்வொரு இடத்தில் இருந்தும், சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான, கோணத்தினை கணக்காக அளந்து அறிவதே அவரது முக்கிய வேலை.

இந்த வகையில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தூரம் 93 million miles (147.29 million km) என உலகம் அறிந்து கொண்டது.

இவர், பசுபிக் கடலில் தஹீட்டி தீவில், நரபலியொன்றினை தனது முதலாவது பயணத்தின் போது காண நேர்ந்தது.

இரண்டாவது பயணத்தில், காச நோயினையும், பாலியல் நோயினையும் கொண்ட நோயாளிகளை, தனது கப்பலில் இருந்து, சிகிச்சைக்காக தீவுக்கு கொண்டு வந்து சேர்த்தார், அதனால் தீவில் பெரும் நோய் பரவ, அவர் காரணமாக இருந்தார் என்றே அவரும், அவரது சகாக்களும் கொலை செய்யப்பட்டார் என ஒரு காரணமும் சொல்லப்படுகின்றது.

How the foolish rumour that Hawaiians ate Cook began | NITV

How the foolish rumour that Hawaiians ate Cook began | NITV

பிப்ரவரி 14ம் திகதி, தீமை நீங்கிய ஒரு முக்கிய நாளாக, தீவு மக்களால், இன்றும் கொண்டாடப்படுகின்றது.

Death of Captain Cook stock image | Look and Learn

வட கிழக்கு இங்கிலாந்தின் இவர் வாழ்ந்த வீட்டினை, அவுஸ்திரேலிய அரசு விலைக்கு வாங்கி, ஒவ்வொரு கல்லாக பெயர்த்து, உள்ளே இருந்த தளபாடங்களுடன் மெல்போன் நகருக்கு கொண்டு போய், அப்படியே வைத்து உள்ளனர். 

Cooks' Cottage - WikipediaCaptain Cook's Cottage, is located in the Fitzroy Gardens, Melbourne, Australia. The cottage was constructed in 1755 in the English village of Great Ayton, North Yorkshire, by the parents of Captain James Cook, James and Grace Cook, and was brought to Melbourne in 1934.

Cooks' Cottage Inside 01.jpg

Cooks' Cottage Inside 03.jpg

Cooks' Cottage Inside 04.jpg

Cooks' Cottage Inside 05.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரிவான படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி பிரபா,நாதம்.

குக் குக் என்று பெயர் வர 70களில் வெளிநாடு வந்தவர்கள் தோமஸ் குக் இன் ரவலேஸ் செக் தான் எடுத்துக் கொண்டு வெளிக்கிடுவார்கள்.அது தான் ஞாபகத்துக்கு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

 

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

47 minutes ago, நிலாமதி said:

 

மிக்க நன்றி. 

இன்று Australia Day/Invasion Day/Survival Day.. இந்த நிலத்திற்கு உரிமையானவர்களுக்காகவே இந்த சிறுகுறிப்பு. 

பூர்வீக குடிகள் எவ்வாறு இந்த நிலம், கடல், தாவரம் மற்றும் விலங்குகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை அறியும் ஆவல் எப்பொழுதும் உண்டு.. ஆகையால்தான் அவற்றை தேடி போவதுண்டு..

அவர்களுக்கு நடந்தவற்றில் சிலவே வரலாறாக பதியப்பட்டுள்ளது, பல விடயங்கள் இன்னமும் வெளியே தெரியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

 

மிக்க நன்றி. 

இன்று Australia Day/Invasion Day/Survival Day.. இந்த நிலத்திற்கு உரிமையானவர்களுக்காகவே இந்த சிறுகுறிப்பு. 

பூர்வீக குடிகள் எவ்வாறு இந்த நிலம், கடல், தாவரம் மற்றும் விலங்குகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை அறியும் ஆவல் எப்பொழுதும் உண்டு.. ஆகையால்தான் அவற்றை தேடி போவதுண்டு..

அவர்களுக்கு நடந்தவற்றில் சிலவே வரலாறாக பதியப்பட்டுள்ளது, பல விடயங்கள் இன்னமும் வெளியே தெரியாது..

இந்த சரித்திரத்தின் பின்னால் பழங்குடிகள் மேல் வெள்ளையின வந்தேறுகுடிகளால் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு இருக்கிறது. இன்றுவரை தணியாத நெருப்பாக பழங்குடிகள் மனதில் எரியும் இந்தத் தீயினை அணைப்பதற்கு வெள்ளையினத்தவர்கள் காட்டும் அக்கறை போதியதல்ல என்பதே பலரின் கணிப்பு. 

உங்களின் பகிர்வுக்கு நன்றிகள். உங்களின் இடம்பார்க்கும் ஆவல் உங்களின் எழுத்துக்களிலும் படங்களிலும் சொல்லிச் செல்கிறது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி......!  உள்ளூர ஒரு வேதனை, இவர்கள் கால் வைத்த இடங்களில் எல்லாம் அங்கு வாழ்ந்த இனங்களை எல்லாம் அழித்து வளங்களை சுரண்டிக்கொண்டு வாழ்ந்து வருவதுதான் வரலாறு. அன்று நாகரீகமற்றவர்களாக இருந்தவர்களுக்கு துப்பாக்கியின் வரவும் வெடிமருந்து பாவனையும் அவர்களுக்கு கிடைத்த வரம். இன்று இவர்கள் கலாசாரங்களுடன் நாகரீகமாகவும் வாழ்ந்த இனங்களுக்கு பாடம் எடுப்பதைப் பார்த்தால் "சாத்தான் வேதம் ஓதுவது" போலத்தான் நினைக்கத் தோன்றுகின்றது.....!  🤔

Link to comment
Share on other sites

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பூர்வீக குடிகள் எவ்வாறு இந்த நிலம், கடல், தாவரம் மற்றும் விலங்குகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை அறியும் ஆவல் எப்பொழுதும் உண்டு.. ஆகையால்தான் அவற்றை தேடி போவதுண்டு..

தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி பிரபா. 

எனக்கும் இதே தேடலில் மிக்க ஆர்வம் உண்டு. ஆதியை நோக்கிய தேடல் எப்போதும் சுவாரசியமானது. கூடவே இன்னோர் உலகத்துக்குச் செல்லும் உணர்வைத் தர வல்லது.

ஆகவே இந்தத் தேடலில் உள்ள இன்னொருவரைக் கண்டதில் மகிழ்ச்சி! தொடர்ந்தும் தேடுங்கள், சொல்லுங்கள்; அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம். 

 

Link to comment
Share on other sites

விளக்கமாக படங்களுடன் தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா. மேலதிகமாக தகவல்களை பகிர்ந்த நாதத்துக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.