Jump to content

அட கல்யாணமேதான் ! --- சோம. அழகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                            அட  கல்யாணமேதான் !

                                                                                                                   - சோம. அழகு

            அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு –  ‘இந்தக் கட்டுப்பட்டி ஆட்டுமந்தைச் சமூகம் வழங்க முடியாத நியாயத்தை கொரோனா எனக்கு வரமாக வழங்கியது’. கருப்பும் சிவப்புமே எனக்கான நிறங்களாகிப் போன பின்பு, (வெண்நுரை பொங்கி ஆர்ப்பரிக்கும் நீலக் கடலின் கரையையும் பசுமையைப் போர்த்தியிருக்கும் மலை முகடுகளையும் புரவியேறிக் கடந்து வந்து என்னைக் கண்டடையும் இளவரசன் தோன்றும்) வண்ண வண்ணக் கனவுகள், வெட்கம், நாணம் போன்ற தண்டக்கருமாந்திரங்கள் எல்லாம் துளியும் வருதில்லை! முழுமையாக என் விருப்பப்படி பதிவுத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணம் என்பதில்லாமல் போனாலும் கூட, குறைந்த அளவிலான கூட்டத்தோடு நன்றாகவே நடந்தது. ‘குறைந்த’ என்பதில் சுப.உதயகுமார் அங்கிள், பாமரன் அங்கிள், அப்பாவின் மூட்டா (MUTA) பேரியக்கத் தோழர்கள் பெரும்பான்மையாகக் கலந்து கொள்ள இயாலாமல் போன வருத்தம் ஒன்று மட்டுமே எனக்கு ! மற்றபடி பிரச்சனை பிடித்த, சி(சீ)க்கு பிடித்த சில உறவுகளைத் தாமாக வர இயலாமல் செய்த கொரோனாவை மெச்சாமல் இருக்க முடியவில்லை. இதற்கு நன்றி நவிலும் முகமாக, மணமான இரண்டு மாதங்கள் கழித்து கொரோனாவை வீட்டிற்கு அழைத்து வந்து அப்பா, அம்மா, தங்கை, நான் என ஆளுக்கு நான்கு நாட்கள் வீதம் நன்கு கவனித்து மரியாதை செய்து வழியனுப்பி வைத்தோம்.  

 

                        பொய்யும் வழுவும் தோன்றிய பின்னான (நன்றி - தொல்காப்பியம்) இக்காலத்தில் காதலுக்கோ (இன்றைய பெரும்பாலான காதல் திருமணத்தில் முடிவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்) காதல் திருமணத்திற்கோ ஆன மெனெக்கிடுதல் எனக்கு இல்லாமல் போனது இயற்கையாகவே தோன்றியது. போதாக்குறைக்கு சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்றோரை வாசித்துத் தொலைத்தது வேறு ! எனவே ‘மணமான பின்பு கொண்டவனுடனான காதல் மட்டுமே உண்மையானது என்ற கொள்கைப் (!) பிடிப்பு !’ என்று சுற்றி வளைத்தும் கூறலாம்; அல்லது காதலில் தொபுக்கடீர் எனக் குப்புற அடித்து விழுந்து முசரக்கட்டையைப் பெயர்த்துக் கொள்ளும் பொறுமையும் சாமர்த்தியமும் போதவில்லை என்று நேரடியாகவும் கூறலாம்.

 

                        சாந்த சொரூபியான (அட, நம்புங்க !) என் முகத்தைப் பார்த்ததும் என் மாமனாருக்கும் மாமியாருக்கும் “இந்தப் பொண்ணுக்கு மூக்கு நுனியில சம்மணம் போட்டுல்ல உக்காந்துட்டு இருக்கும் கோபம்!” என்று அவர்கள் ஜோசியர் சொன்னது அடியோடு மறந்து போய், “இவனை இனி சீராட்டிப் பாராட்டி வளர்த்தெடுக்கச் சரியான பெண் இவளே!” என்று எக்குத்தப்பாகத் தோன்றி வைக்க, என் கலகலப்பான பேச்சைப் பார்த்து மாப்பிள்ளைக்கு பல்பு எரிய, தலைவனைப் பார்த்ததும் எனக்கு முன்னால் என் அப்பாவிற்குத் தலைக்கு மேல் பிரகாசமாய் பல்பு எரிந்து, “இவளைச் சமாளிக்கவே அவதாரம் எடுத்தவர் இவர்ர்ர்” என்று தோன்ற…. அப்புறம் என்ன, ஐயர் யாத்தனர் கரணம் தான் (மீண்டும் தொல்காப்பியம்!). இரு வீட்டாரும் ‘April Fool’ சொல்லிக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை ! ஹிஹிஹி…

 

                        மணமகன் வீட்டார் வந்து பார்த்துச் சம்மதம் சொல்லிச் சென்ற பின், திருமணத்தை நோக்கிய அடுத்த நகர்வாகப் பெண்ணின் பெற்றோர் பெரும்பாலும் உறவினரை மணமகன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் வரன் தேர்வினை உறுதி செய்வது வழக்கம். மாறாக என் விஷயத்தில் பெற்றோருடன் தோழர் பொன்னுராஜ் அங்கிள், கலா ஆன்டி இவர்கள் மட்டுமே சென்றது எனக்கான மனநிறைவு. திருமணப்பதிவின் போதும் என் தரப்பில் சாட்சியாக தோழர் நாகராஜன் அங்கிள் வந்தது மேலும் எனக்கான பெருமை. அப்பாவுக்கும் எனக்கும் தலையாய உறவினர்கள் தோழர்களே என்பது ஈண்டும் நிலைநாட்டப்பெற்றது பேருவகை !

 

                        புது வாழ்க்கை, புதிய உறவுகள், புதிய தொடக்கம், புது இடம். முழுமையாகத் துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டதைப் போல் மனம் சுற்றிமுற்றி இருந்த எல்லாவற்றையும் நுட்பமாக ரசிக்கத் துவங்கியது. புதுமையை உள்வாங்கிக் கொள்ளவும் மனமுவந்து பூசிக்கொள்ளவும் இது ஒரு நல்ல உத்தி. கிட்டத்தட்ட மலையடிவாரத்தில் அமையப்பெற்ற, நான் வாக்கப்பட்ட(!) வீடு ரசிப்பதற்கேற்ற சூழலையும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தது. நமக்குத்தான் ரசித்துவிட்டுக் கடந்து செல்லும் நல்ல பழக்கமில்லையே ! உடனே அதை இரண்டொரு வரிகளில் வடித்து வடிகட்டிச் செதுக்கிப் பெற்றோருக்கும் உடன்பிறந்த ஜந்து குட்டிக்கும் அனுப்பித் தொலைக்கும் கொடூர வியாதி வாய்த்திருக்கிறதே !

 

            ‘மலையின் மீது சோம்பிக் கவிந்து கிடந்த முகில் இப்போதுதான் தவழ்ந்து செல்லத் துவங்குகிறது’

 

            ‘எங்கே மண்ணுக்குள் சென்று விடுவோமோ என்கிற பதட்டம். அந்தப் பயத்தில் தரையைக் கூட நனைத்து விடாத கவனம். சிணு சிணுவென்று சிணுங்கும் இத்தூறலும் ரசிக்கவே செய்கிறது’

 

            ‘இங்கு அடுப்பங்கரை சாளரத்தில் நான் இடும் மிக்சரை எனக்குப் பழக்கப்பட்ட அதே கடுக் முடுக் சத்தத்துடன் உட்கொள்ளும் அணில் மற்றும் காக்கைகள் புதிய சொந்தங்களாகிப் போனதில் அங்குள்ள அணிலும் புறாவும் இன்னும் என் சாளரத்தில் பசியாறிக் கொண்டிருப்பதாய் நம்ப விழைகிறேன். ஏனோ இதில் misophonia வருவதில்லை’

           

                        முதன்முறையாக பெண்ணைப் பிரிந்த துக்கம் தொண்டை, மூக்கு, காது என மானாவாரியாக எல்லாவற்றையும் அடைக்க, நான் இப்படியெல்லாம் எழுதி அனுப்பியதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தோ என்னவோ, ‘கவித ! கவித !’ என்று வசைபாடினார்கள் என் பெற்றோர். இப்படியே நிறைய எழுதித் தள்ளி ‘கவிதையல்ல !’ என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிடுமாறு அப்பாவிடம் இருந்து நேயர் விருப்பம் வேறு ! உணர்ச்சிக் களஞ்சியமான அம்மா கூட நான் மணமாகிச் சென்ற நிதர்சனத்தை நான் எதிர்ப்பார்க்காத பக்குவத்துடன் ஏற்றுக்கொண்டாள். உலகியல் விஷயங்களின் எதார்த்தத்தையும் நடைமுறையின் இயல்புகளையும் அதீத நிதானத்தோடு அணுகும் அப்பாதான் இதை ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள் என அம்மாவின் வழியாக அறிந்தேன். என்னைக் கொண்டவனுடைய வீட்டில் விடும் போது, “இதெல்லாம் இயற்கையாய் நடப்பதுதானே? உலக வழக்கம்தானே?” என்பதைப் போன்ற முகபாவத்தோடு வலம் வந்தார்கள். வண்டியேறிய மறு நிமிடம் என் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது, அப்பாவிடம் இருந்து. “Slowly it dawns on me that we are going to live in a house without Alagu”. நான் இல்லாது போன தனது அறையை எங்ஙனம் எதிர்கொள்வது எனப் புரியாமல் ‘என்னவோ போல் இருக்கு’ என்று அமைதியாய் முடித்துக் கொண்டாள் தங்கை.

 

                        அதிகாலைப் புலரியில் நீட்டி முறித்து எழ முயலும் போதெல்லாம் கணப்பொழுது சுருக்கிப் பிடித்து இழுக்கும் பின்னங்கால் தசை, நாள் முழுக்க நின்று தீர்க்கும் அம்மாவை அழைத்து வருகிறது. என் விரல்களின் நுனியில் நிரந்தரமாகக் குடியேறத் துவங்கும் கறைகள், எங்களுக்காகக் களிப்போடு கறையைப் பூசிக்கொண்ட அம்மாவின் விரல்களை நினைவுபடுத்துகிறது. அவளது உள்ளங்கை சொரசொரப்பு பிஞ்சினும் மென்மையாய் இருந்த எனது கைகளுக்கு இன்னும் சில நாட்களில் கடத்தப்படுவதில் மகிழ்ச்சியே !

 

                        இவற்றிலும் இன்னும் பலவற்றிலும் மனநிறைவு பெறும் சூட்சமத்தையும் கூட மறைமுகமாய்க் கற்றுக் கொடுத்திருக்கிறாள் போலும் ! உணவில் எல்லோரும் தெரிவு செய்தது போக மிச்சமிருப்பதே தனக்கு என்ற விதியைத் தன்னிச்சையாக உருவாக்கி எங்களது நிறைவிலேயே அகமகிழ்வு காணும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறையவே உண்டு. அம்மாவுக்கு(ம்) மிகவும் பிடித்த இட்லி உப்புமா எங்கள் உபயத்தில்(!) ஒரு போதும் அவளுக்குக் கிட்டியதேயில்லை. “ஒரு மாசமாவது கவனமா சமையல் செஞ்சு கையில சுட்டுக்காம இருந்து காமியேன். பாப்போம்” என்று கூறும்போதெல்லாம் கண்சிமிட்டி புன்னகைத்து வைப்பாள் அம்மா. இப்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முறையாவது நான் வாங்கும் சுடுபுண், வலியையும் தாண்டி அவளது புன்னகையைச் சூடிச் செல்கிறது. என் சமையல் ரசித்து உண்ணப்படுவதைக் கண்டு கிட்டும் நுண்ணிதின் மகிழச் செய்யும் தருணங்கள் அச்சிறு சிறு காயங்களை மாயமாக்குகின்றன.

 

                        “இப்போதுதான் கல்யாணம் முடிஞ்சுது. அதுக்குள்ள ஏன் எல்லாத்துக்கும் ‘நான்.. நான்’னு நிக்குற? எல்லா வேலையையும் நான் பாத்துக்குறேன்… நீ போ” என்று செல்லக் கோபம் காட்டும் போது, அடுக்களையில் நான் நுழையும் நொடியில் இருந்து நான் வெளியேறும் வரை ‘ஜாக்கிரதை’, ‘கவனம்’, ‘பாத்து..’ என ஓராயிரம் முறை பதற்றத் தொனியில் அதட்டும் போது, ‘அய்யய்யோ ! வேண்டாம்.. போதும்’ என நான் கால் பிடித்து விடுகையில் நெளியும் போது, காலை நேர இளவெயிலில் இனிமையாக அளவளாவிக் கொண்டிருக்கும் போது, கார் பயணத்தின் போது ‘வா…கொஞ்ச நேரம் தூங்கு ஊரு போற வரை’ என தம் மடியைத் தந்து தலை கோதி விட்ட போது, மனம் விட்டு என்னிடம் பழைய கதைகளைப் பகிர்ந்து கொண்ட போது… இன்னும் பற்பல தருணங்களிலும் எனது இன்னொரு தாயாகிப் போனார்கள் என் மாமியார். ‘தேள் கொட்டுகிறது’ எனத் தெரிந்தாலும் அதனிடமும் அபத்தமாக அன்பைக் காட்டும் ஜென் குருவைப் போல இந்த உலகின் நடைமுறைக்குச் சற்றும் பொருந்தாத மற்றும் தேவைக்கு அதிகமான நல்ல உள்ளத்தோடு இருக்கும் எனது மாமானார்.

           

                        சமையல் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தருவது, செம அரட்டை அடிப்பது என என்னைத் தனது குட்டித் தங்கையாகவே பாவிக்கும் சுகன்யா அக்கா. பக்குவமும் நிதானமும் கூடிய உடன் பிறந்த சகோதரன் அமையாத குறையை கார்த்தி அத்தான் ஈடு செய்கிறார்கள். அக்கா மற்றும் அத்தானின் கிண்டலிலும் கேலியிலும் இழையோடும் உரிமை அவர்களை என் மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்ததில் வியப்பேதும் இல்லை ! என் தங்கையின் பிரிவாற்றாமையை நான் சற்றும் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அதே குணாதிசயங்களோடு படைத்து அனுப்பப்பட்ட குரு, என் கொழுந்தன். அனைவரின் கைகளுக்குள்ளும் குட்டி தேவதையாகவே வலம் வரும், நான் பெறாமலேயே எனது மூத்த மகளாகிப் போன, அத்விகா.

 

                        அப்புறம்… எனது கோணங்கித்தனங்களைச் சகித்துக் கொள்ள, எவ்விதத் தயக்கமும் இன்றி நான் நானாக இருக்க, என்னில் உறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை முழுமையாக வெளிக்காட்டிக்கொள்ள, என் பெற்றோர் இதற்கென்றே அளவெடுத்துக் கண்டுபிடித்துத் தந்த, எனக்கென அமையப் பெற்ற, பல்வேறு வேலைகளுக்கு இடையில் காலப்போக்கில் என்னை நான் தொலைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள, எனக்கு எல்லாமுமாகிப் போன என்னவன். “இத வாங்கிக் குடுங்க.. அங்க கூட்டிடுப் போங்க… இப்படியெல்லாம் நொச்சு பண்ணவே மாட்டியா? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க?” – பாராட்டுப் பத்திரம் வாசித்த என்னவனிடம் புத்தகங்கள் வாங்கித் தரச் சொல்லிப் பெற்றுக் கொண்டேன். இக்கேள்விகள் வந்து விழுந்த போது ஒரு புறம் பெருமை(!) பொங்கி வழிய மறுபுறம் பெரும்பாலான பெண்களுக்குரியதாகிப் போன பண்புகள் என்னில் வேரூன்ற விடாது பார்த்துக் கொண்ட காம்ரேடு தோழர்கள் அமையப் பெற்ற என் சூழலை நினைத்துக் கொண்டேன்.

 

                        என்னில் எட்டிப் பார்க்கும் பெண்மை கண்டு மகிழும் தருணங்களும் உண்டு… ‘கண்ணும் எழுதேம்’, ‘வெய்துண்டல் அஞ்சுதும்’ என என்னவனில் முழுமையாகக் கரைந்து போகவே விழைகிறேன்… ‘Life is not a fairy tale and am no Disney princess’ என்ற அவதானிப்புடன்.

 

                        இவையனைத்தும், மணமான புதிதில் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் உற்சாகமாக மட்டும் நின்று விடாது என்றே நம்ப விழைகிறேன். அதாவது, பாழாய்ப் போன ஆங்கிலத்தில் தோய்ந்து போன சமூகத்தில் (என்னையும் சேர்த்துதான்) இப்படியும் சொல்லித் தொலைக்கலாமோ – Let me hope things do not get over just as an initial euphoria.

 

                                                                                                                        - சோம. அழகு

 

நன்றி, திண்ணை இணைய வார இதழ்

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு திண்ணை இதழிலேயே 'அட கல்யாணமே !' என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. அதனை மேலே பதிவிட்ட 'அட கல்யாணமேதான்!' என்ற கட்டுரையின் முன்பதிவாய்க் (prequel) கொள்ளலாம்.

'அட கல்யாணமே !' என்ற கட்டுரையின் மின் இணைப்பு http://puthu.thinnai.com/?p=34480

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரா ..... உறவுகளை தனித்தனியாக விளித்து அறிமுகப்படுத்துவதை ரசித்தேன்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்விற்கு... நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று நீண்ட கதை என்றாலும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

பாராட்டுக்கள்   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.