Jump to content

கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் - இனிய பாரதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் - இனிய பாரதி

 

பாறுக் ஷிஹான்

கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(25) இரவு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயமானது கனிந்து வந்த பழத்தை தட்டி எறிந்தவர்கள் சிலர்.இந்த விடயத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சில மாகாண சபை உறுப்பினர்கள் தான் பிரதேச தரமுயர்வினை தடுத்தவர்கள்.தேர்தலுக்கு முன்னர் என்னால் அரச உயர்மட்டங்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை சாதகமாக பரிசீலனை செய்யப்பட்டிரந்த நிலையில் தேர்தலுக்கு முன்னர் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இருப்பினும் தமிழ் தேசிய வாதிகள் சிலர் தங்களது அரசியலுக்காக பஸில் ராஜபக்ஸவினை சந்தித்து தேர்தலின் பின்னர் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி இருந்தனர்.அவர்கள் கேட்டதற்கு இணங்க இக்கோரிக்கை பிற்போடப்பட்டது.பின்னர் தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன்.அதன் பின்னர் என்னால் குறித்த கோரிக்கை உரிய தரப்பினரிடம் முன்வைக்கப்பட்ட போதிலும் அது பிரயோசனமற்றதாகிவிட்டது.இது நான் தோற்றகடிக்கப்பட்டதனாலாகும்.இன்று கருணா அம்மானிற்கு மக்கள் அளித்திருந்த வாக்குகளை அன்று எனக்கு அளித்திருந்தால் இந்த கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு கனிந்த கனியாக ருசிக்க கூடியதாக இருந்திருக்கும் என்பது எனது வெளிப்படையான கருத்து என்றார்.
farook-sihan2-1.jpg?189db0&189db0


 

https://www.meenagam.com/கல்முனை-தமிழ்-பிரதேச-தரம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

48397289_341534689958926_431000310462493

இவ்வளவு நாள் எந்த சந்துக்குள்ளால இருந்தார் இன்னிக்கு லைம் லைற்றுக்கு வந்திருக்கார்..

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் - இனிய பாரதி

 

பாறுக் ஷிஹான்

கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(25) இரவு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயமானது கனிந்து வந்த பழத்தை தட்டி எறிந்தவர்கள் சிலர்.இந்த விடயத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சில மாகாண சபை உறுப்பினர்கள் தான் பிரதேச தரமுயர்வினை தடுத்தவர்கள்.தேர்தலுக்கு முன்னர் என்னால் அரச உயர்மட்டங்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை சாதகமாக பரிசீலனை செய்யப்பட்டிரந்த நிலையில் தேர்தலுக்கு முன்னர் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இருப்பினும் தமிழ் தேசிய வாதிகள் சிலர் தங்களது அரசியலுக்காக பஸில் ராஜபக்ஸவினை சந்தித்து தேர்தலின் பின்னர் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி இருந்தனர்.அவர்கள் கேட்டதற்கு இணங்க இக்கோரிக்கை பிற்போடப்பட்டது.பின்னர் தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன்.அதன் பின்னர் என்னால் குறித்த கோரிக்கை உரிய தரப்பினரிடம் முன்வைக்கப்பட்ட போதிலும் அது பிரயோசனமற்றதாகிவிட்டது.இது நான் தோற்றகடிக்கப்பட்டதனாலாகும்.இன்று கருணா அம்மானிற்கு மக்கள் அளித்திருந்த வாக்குகளை அன்று எனக்கு அளித்திருந்தால் இந்த கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு கனிந்த கனியாக ருசிக்க கூடியதாக இருந்திருக்கும் என்பது எனது வெளிப்படையான கருத்து என்றார்.
farook-sihan2-1.jpg?189db0&189db0


 

https://www.meenagam.com/கல்முனை-தமிழ்-பிரதேச-தரம/

 

இவனெல்லாம் ஒரு கள்வன். அந்த காலத்தில் எப்படி எல்லாம் கொள்ளை அடித்தார்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. வாய்ச்சவடால்களுக்கு மட்டும் குறைவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Robinson cruso said:

இவனெல்லாம் ஒரு கள்வன். அந்த காலத்தில் எப்படி எல்லாம் கொள்ளை அடித்தார்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. வாய்ச்சவடால்களுக்கு மட்டும் குறைவில்லை.

இவன் கள்ளன் தான் ஆனால் இந்த கள்ளன் சொன்ன விஷயத்தில் உண்மை இருக்கா இல்லையா என்று சும்மை கேட்டு சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

இவன் கள்ளன் தான் ஆனால் இந்த கள்ளன் சொன்ன விஷயத்தில் உண்மை இருக்கா இல்லையா என்று சும்மை கேட்டு சொல்லுங்கள் 

உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அதை சொல்லவேண்டியவர்கள் சொல்லவேண்டும். இவனைப்போன்ற போக்கிரிகள் சொல்லக்கூடாது. நான் அறிந்த வரையில் அப்படி இல்லை என்றுதான் கேள்விபட்டேன். இருந்தாலும் இப்போது அங்குள்ளவர்கள் அறிந்து எழுதினால் உண்மையை அறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஊரில பார்க்கும் போது நினச்சன் ஆள் எதுக்கோ வந்திருக்கார் போல பேட்டி கொடுக்கத்தான் வந்திருகார் போல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.