Jump to content

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!

IMG-20210127-104907.jpg

யாழ்.குடாநாட்டிலிருந்து நெடுந்தூர பயணிகள் சேவைக்கான பேருந்து நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய,

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் சுமார் 122 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலைய திறப்பு விழா,

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா,

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குறித்த பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/22951

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா.?

FB_IMG_1611670923071.jpg

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்..

யாழ் நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கான பெயர் பலகைகளிலும் சிங்கள மொழிக்கு முதலுரிமையும் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடகிழக்கில் நிர்வாக மொழியாக முதல் தமிழ் மொழி உள்ள போதிலும் இலங்கை அரச திணைக்களங்கள்  தமிழ் மொழியின் முதன்மை தன்மையை புறக்கணித்து இரண்டாவதாக பின்தள்ளியுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முற்று முழுவதுமாக தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களே வாழ்கின்ற ஒரு நிலை இருந்தும் அரச திணைக்களங்களின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகள் தமிழ் உணர்வாளர்களையும், மக்களையும் மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எனவே சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தனி சிங்கள மாவட்டங்களில் தமிழ் மொழியை முதல் மொழியாக போட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?  அல்லது போடத்தான் விட்டிருப்பார்களா? இதை இந்த சிங்கள பேரினவாத அரசும், அதன் அரச திணைக்களங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே தமிழ் மக்களின் தாய் மொழியை இரண்டாம் நிலைப்படுத்தும்  சம்மந்தப்பட்ட அரச திணைக்களத்தின் இச் செயலை வன்மையாக எதிர்ப்பதுடன் கடும் கண்டனத்தையும் பேரவையினராகிய நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

மேலும் யாழ் மாநகர சபை இவ் விடயத்தை கவனத்திலேடுத்து சபையின் அனுமதியைப்பெற்று  சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு உரிய முறையில் தெரிவித்து மீண்டும் தமிழ் மொழி முதலாவதாக மாற்றப்பட்ட புதிய பெயர் பலகையினை மாற்றியமைக்க ஆவணை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

எஸ்.நிஷாந்தன்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

https://vanakkamlondon.com/world/srilanka/2021/01/100148/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1611670923071.jpg

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

நிலத்திற்கு கீழ்... ஐந்து மாடி உள்ளது.

அங்கு சைக்கிள், கார், பேரூந்து தரிப்பிடம் எல்லாம் உள்ளதாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழ்நகர பகுதிகளில் சுற்றிதிரியும் கட்டாக்காலி நாய்கள், மாடுகளை கட்டுபடுத்துங்கள்.

பலகோடி செலவுபண்ணி கட்டுமானங்கள் செய்தாலும் நகர பகுதிகளின் நடுவே மாடு குடும்பத்தோடு படுத்திருக்கிறது,

நடைபாதை பூங்காக்களின் புற்களை மேய்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

யாழ் நகரில் இடம் போதாமையால் இந்த கட்டடத்தின் ஒரு பகுதி பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு கட்டட ஒப்பந்தம் கொடுத்தொர்களால்  சில கிராமங்களில் சிறிய சிறிய கட்டங்களாக  கட்டப்பட்டிருக்கலாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

அங்கஜன்  டக்கி  ஆட்சியில் இருக்கும்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையை போடும் செயல்களில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அங்கஜன்  டக்கி  ஆட்சியில் இருக்கும்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையை போடும் செயல்களில் .

புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள்  கீழ்வரும் கருத்தை  எழுத அருகதை/உரிமை இருக்கோ தெரியாது. இருந்தாலும்........

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அதிகாரிகள் அசண்டை; கைவிடப்பட்ட மண்டைதீவு சுற்றுலா மையம் - 16.8 மில்லியன்  ரூபா மக்கள் நிதி வீண்விரயம் | Muthalvan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

FB_IMG_1611670923071.jpg

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

ஓம், யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கு, பொத்துவில், அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு கூட நேரிடையாக பஸ் உள்ளது.

https://www.facebook.com/JaffnaBus/photos/a.958064214529898/958064197863233/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள்  கீழ்வரும் கருத்தை  எழுத அருகதை/உரிமை இருக்கோ தெரியாது. இருந்தாலும்........

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அதிகாரிகள் அசண்டை; கைவிடப்பட்ட மண்டைதீவு சுற்றுலா மையம் - 16.8 மில்லியன்  ரூபா மக்கள் நிதி வீண்விரயம் | Muthalvan News

இது எல்லாம் ஒரு வகையான புணர் நிர்மானங்கள் தாத்தா..நாகரீகம் முற்றிட்டால் இப்படித் தான் செய்வார்கள் கேட்கப் போனால் வக்காலத்து வாங்க வருவீனம் நின்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அது ஒரு தந்திரம் சனம்  இல்லாத இடத்தில் 20 லட்ஷத்தில் முடிக்கிற  வேலைக்கு 20 கோடி கணக்கு காட்டலாம் கேட்பார் கிடையாது பிரதான வீதிகளில் நடந்து முடிந்த வேலைக்கு கணக்கு எல்லோரும் பார்ப்பார்கள் அதனால் தேவையில்லாத இடங்களில் ரோடு போடுவார்கள் முக்கிய பிரதான வீதிகள் தேவை மக்களுக்கு அத்தியாவசியமான தேவைகள் செய்ய இழுத்தடிப்பார்கள் .

சுமத்திரனில்   உள்ள கடுப்பில் சனம்  வேறு வழி இன்றி குத்த  இந்த அங்கஜன் கூட்டம் தட்டு தடுமாறி வந்து இருக்கினம் இவர் அங்கு வந்ததும் வராததுமாக தேவையற்ற திட்டங்களில் வெறுமே திட்ட விளம்பர பலகை மட்டும் மேளதாளத்துடன் திரை நீக்கம் செய்துவைக்கிறார் கடைசியில் அதுவே அவருக்கு அடுத்த தேர்தலில் ஆப்பாகி விடும் என்பதை இலகுவாக மறந்துவிடுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

முதலில் யாழ்நகர பகுதிகளில் சுற்றிதிரியும் கட்டாக்காலி நாய்கள், மாடுகளை கட்டுபடுத்துங்கள்.

பலகோடி செலவுபண்ணி கட்டுமானங்கள் செய்தாலும் நகர பகுதிகளின் நடுவே மாடு குடும்பத்தோடு படுத்திருக்கிறது,

நடைபாதை பூங்காக்களின் புற்களை மேய்கிறது.

வாழ்த்துக்கள் அங்கஜன்  டக்ளஸ் ஊர் கொஞ்சம் வளர்ச்சியடைகிறது இல்லாவிட்டால் யாழ்பாணத்தில் இப்பவும் சண்டை நடக்கிறது என்பார்கள் .

மட்டக்களப்பில் பல கோடி  செலவு செய்ததாக கட்டினார்கள் காட்டினார்கள் மாடுகள் இருந்தது வெள்ளத்திலும் மிதந்தது ஆனால் தற்போது தனியார் பேருந்துகள் அதிலிருந்து செல்கின்றன 

அது போக இலங்கை மாடுகள் செல் கேளாது  ரெண்டு போட்டு விரட்டினால் திரும்ப வராது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

அது போக இலங்கை மாடுகள் செல் கேளாது  ரெண்டு போட்டு விரட்டினால் திரும்ப வராது 

மாடுகளுக்கு எதுக்கு அடிப்பான், அதன் உரிமையாளர்களுக்கு சகட்டுமேனிக்கு அபராதம் விதித்தால் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வரும், இல்லையென்றால் நகரசபை அவற்றை உரிமையாக்கி கொள்ளலாம்.

 

இலங்கையில்  தமிழருக்கென்று  மூன்று பெரும் நகரங்கள் இருந்தன, அதில் இரண்டு எம் கையைவிட்டு போய்விட்டது. எஞ்சிய யாழ்நகரையாவது குப்பை கூழங்களின்றி, கட்டாக்காலி கால்நடைகளின்றி அழகாகவும் சுத்தமாகவும் பேணப்படவேண்டுமென்பது மனசில் படும் ஆதங்கம்.

இங்கே வெளிநாடுகளில் பல தசாப்தங்களாய் வாழ்கிறவர்களுக்குகூட இன்னும் இந்நாடுகளின் வானம் தொட்டுவிட்ட வளர்ச்சியை பார்த்து அதன் பிரமிப்பிலிருந்து விடுபடவேயில்லை. நேற்றுத்தான் இந் நாடுகளுக்கு வந்தவர்கள்போலவே இன்றும் உணர்பவர்கள் பலர். தினம் தினம் புதுமைகள்.

அவற்றை நினைக்கும்போது எமது தாயகபகுதியும் வேலைவாய்ப்பு பொருளாதாரம் அபிவிருத்தியென சிறு அளவிலாவது உயர்ந்து நிக்கவேண்டுமே என்ற ஏக்கம் பெரு மூச்சாய் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

உண்மை இது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

அதே பஸ் ஸ்ரான்ட தான் முக்கியம் அதில் தமிழ் இல்லாட்டியும் அவர்களின்  செய்கையை பாராட்டணும் 😜 முன்பு இதே டக்கி யும்  இருந்தது அங்கஜனும் இருந்தவர் புதிசாக ஒன்றுமில்லை வழக்கம்போலவே எல்லாம் நடக்குது .

அடுத்த முறை எலக்சன் வைக்கும் போது  வடபகுதிக்கு முற்றாக மதுபானத்தை தடை செய்யுங்கள் அதன் பின் பார்ப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

அன்று தொடக்கம் மாற்றுகருத்து அரசியல்வாதிகளும் நல்லதையே செய்கின்றார்கள். இதில் மாற்றுக்கருத்து என்னிடம் இல்லை. ஆனால் ஒன்றை நிறுவிய பின் அதை பராமரிப்பதில் மிகவும் தவறு விடுகின்றார்கள். அண்மைக் காலங்களில் யூரியூப் வீடியோக்கள் மூலம் அதிக இடங்களை/தெரியாத இடங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
அவற்றில் தேவையில்லாத இடங்களுக்கு அபிவிருத்தி அல்லது அபிவிருத்தி செய்த இடங்களை ஒழுங்கில்லாத பராமரிப்பு. இவற்றை பார்க்கும் போது ஏனோ தானோ என செய்கின்றார்கள் போலவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


எங்கட திண்ணையை போல, சந்தடி சாக்கில்லாமல் சுண்ணாம்பை தூணில  தடவி  "பச்சக்" எண்டு வெத்திலை குதம்பலை துப்பாமல் போனால் சரி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 21:40, குமாரசாமி said:

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

படங்களை பார்த்ததும் நான் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள் 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Sasi_varnam said:


எங்கட திண்ணையை போல, சந்தடி சாக்கில்லாமல் சுண்ணாம்பை தூணில  தடவி  "பச்சக்" எண்டு வெத்திலை குதம்பலை துப்பாமல் போனால் சரி.
 

நாங்களும் அங்கே தொடர்ந்து இருந்தால் எமது மனநிலையும் அங்கு வாழ்பவர்கள் போலவே இருந்திருக்கக்கூடும்.

புலம்பெயர் தேசங்களுக்கு வந்த பின்னர் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என நிறையவே கற்றுவிட்டோம். இங்கே இருக்கும் அரசியல் கட்டமைப்புகள் சம உரிமைகள் மொழி கலாச்சார புரிந்துணர்வுகள் நாம் பிறந்த மண்ணிலும் வராதா என்ற எக்க உணர்வுகள் நெஞ்சை பிளக்கின்றன. இவற்றை மனதில் வைத்து நல்லது ஏதாவதை எழுதினால் விதண்டாவாத பதில்கள் தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people

உடையாரின் காசில் சடையார் வாணம் விடுவதென்பது இதுதான்...

போஸ்டரில் உள்ள எவரும் பேருந்து நிலையத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.. கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வெட்கமின்றி திறந்து வைத்ததோடு மட்டுமில்லாமல் போஸ்டர் வேறு...

யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பன் நானென்பது அசிங்கம் கொமாரு...

 

சுப்ரமணிய பிரபா

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people

உடையாரின் காசில் சடையார் வாணம் விடுவதென்பது இதுதான்...

போஸ்டரில் உள்ள எவரும் பேருந்து நிலையத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.. கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வெட்கமின்றி திறந்து வைத்ததோடு மட்டுமில்லாமல் போஸ்டர் வேறு...

யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பன் நானென்பது அசிங்கம் கொமாரு...

 

சுப்ரமணிய பிரபா

தமிழ் சிறி,

எமது தெற்காசிய நாடுளில் இது தான் அரசியல் நடைமுறை   நல்ல விடயங்களை, அடுத்தவன் செய்தாலும் தனது என்று உரிமை கொண்டாடுவதும், தனது ஆட்சியில் நடந்த எதிர்மறை விடயங்களுக்கு தாங்கள்  பொறுப்பெடுக்காமல் அடுத்தவர்  மீது போடுவதும் அங்கு சாதாரண விடயம். மகிந்த அதை ஒரு படி மேலே போய் செய்கிறார். 

இதை வாசிக்கும் போது  சுவிற்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான தொடரூந்து சுரங்கமான Gotthard-Basistunnel (Gotthard Base Tunnel(  (57 km) திறப்பு விழா 2016 ஜூன் மாதம் நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான அரசு தலைவர்கள் அநேகர் கலந்து கொண்ட அந்த வைபவத்தில் அன்றைய போக்குவரத்து அமைச்சர் Doris Leuthard  (CVP)பேசும் போது தனது காலத்தில் இது திறந்து வைக்கப்பட்டது தனது அதிஷ்டம் என்றும் ஆனால் இந்த திட்டத்திற்காக மிக அதிகமாக உழைத்தவர் தனக்கு முன்பு பதவியில் இருந்த வேறு கட்சியை செர்ந்த  Moritz Leuenberger (SP)என்றும் அவரை பாராட்டினார்.  எமது நாட்டில் என்றால் 57 கி.மீ நீளத்திற்கும் பதவியில் இருப்பவரின் பிரமாண்டமான கட்அவட் தொங்கியிருக்கும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்த பெயர்ப் பலகை தமிழ் முதலாவாதாய் மாற்றப்படுகிதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்அவுட் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இருந்து கொப்பியடிக்கபட்ட தீமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.