Jump to content

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!

IMG-20210127-104907.jpg

யாழ்.குடாநாட்டிலிருந்து நெடுந்தூர பயணிகள் சேவைக்கான பேருந்து நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய,

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் சுமார் 122 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலைய திறப்பு விழா,

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா,

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குறித்த பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/22951

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா.?

FB_IMG_1611670923071.jpg

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்..

யாழ் நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கான பெயர் பலகைகளிலும் சிங்கள மொழிக்கு முதலுரிமையும் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடகிழக்கில் நிர்வாக மொழியாக முதல் தமிழ் மொழி உள்ள போதிலும் இலங்கை அரச திணைக்களங்கள்  தமிழ் மொழியின் முதன்மை தன்மையை புறக்கணித்து இரண்டாவதாக பின்தள்ளியுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முற்று முழுவதுமாக தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களே வாழ்கின்ற ஒரு நிலை இருந்தும் அரச திணைக்களங்களின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகள் தமிழ் உணர்வாளர்களையும், மக்களையும் மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எனவே சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தனி சிங்கள மாவட்டங்களில் தமிழ் மொழியை முதல் மொழியாக போட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?  அல்லது போடத்தான் விட்டிருப்பார்களா? இதை இந்த சிங்கள பேரினவாத அரசும், அதன் அரச திணைக்களங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே தமிழ் மக்களின் தாய் மொழியை இரண்டாம் நிலைப்படுத்தும்  சம்மந்தப்பட்ட அரச திணைக்களத்தின் இச் செயலை வன்மையாக எதிர்ப்பதுடன் கடும் கண்டனத்தையும் பேரவையினராகிய நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

மேலும் யாழ் மாநகர சபை இவ் விடயத்தை கவனத்திலேடுத்து சபையின் அனுமதியைப்பெற்று  சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு உரிய முறையில் தெரிவித்து மீண்டும் தமிழ் மொழி முதலாவதாக மாற்றப்பட்ட புதிய பெயர் பலகையினை மாற்றியமைக்க ஆவணை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

எஸ்.நிஷாந்தன்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

https://vanakkamlondon.com/world/srilanka/2021/01/100148/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1611670923071.jpg

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

நிலத்திற்கு கீழ்... ஐந்து மாடி உள்ளது.

அங்கு சைக்கிள், கார், பேரூந்து தரிப்பிடம் எல்லாம் உள்ளதாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழ்நகர பகுதிகளில் சுற்றிதிரியும் கட்டாக்காலி நாய்கள், மாடுகளை கட்டுபடுத்துங்கள்.

பலகோடி செலவுபண்ணி கட்டுமானங்கள் செய்தாலும் நகர பகுதிகளின் நடுவே மாடு குடும்பத்தோடு படுத்திருக்கிறது,

நடைபாதை பூங்காக்களின் புற்களை மேய்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

யாழ் நகரில் இடம் போதாமையால் இந்த கட்டடத்தின் ஒரு பகுதி பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு கட்டட ஒப்பந்தம் கொடுத்தொர்களால்  சில கிராமங்களில் சிறிய சிறிய கட்டங்களாக  கட்டப்பட்டிருக்கலாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

இப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

அங்கஜன்  டக்கி  ஆட்சியில் இருக்கும்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையை போடும் செயல்களில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அங்கஜன்  டக்கி  ஆட்சியில் இருக்கும்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையை போடும் செயல்களில் .

புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள்  கீழ்வரும் கருத்தை  எழுத அருகதை/உரிமை இருக்கோ தெரியாது. இருந்தாலும்........

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அதிகாரிகள் அசண்டை; கைவிடப்பட்ட மண்டைதீவு சுற்றுலா மையம் - 16.8 மில்லியன்  ரூபா மக்கள் நிதி வீண்விரயம் | Muthalvan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

FB_IMG_1611670923071.jpg

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

ஓம், யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கு, பொத்துவில், அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு கூட நேரிடையாக பஸ் உள்ளது.

https://www.facebook.com/JaffnaBus/photos/a.958064214529898/958064197863233/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள்  கீழ்வரும் கருத்தை  எழுத அருகதை/உரிமை இருக்கோ தெரியாது. இருந்தாலும்........

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அதிகாரிகள் அசண்டை; கைவிடப்பட்ட மண்டைதீவு சுற்றுலா மையம் - 16.8 மில்லியன்  ரூபா மக்கள் நிதி வீண்விரயம் | Muthalvan News

இது எல்லாம் ஒரு வகையான புணர் நிர்மானங்கள் தாத்தா..நாகரீகம் முற்றிட்டால் இப்படித் தான் செய்வார்கள் கேட்கப் போனால் வக்காலத்து வாங்க வருவீனம் நின்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

சனமே நடமாடாத இடங்களுக்கும் சுடலை வீதிகளுக்கும்  மின்சார விளக்கு வசதிகளும் வீதி வசதிகளும் செய்திருக்கின்றார்கள். ஆனால் பல பிரதான வீதிகளுக்கும் மக்கள் அதிகமாக  நடமாடும் இடங்களுக்கும் அப்படியான சிறு வசதிகள் கூட இல்லை.

அது ஒரு தந்திரம் சனம்  இல்லாத இடத்தில் 20 லட்ஷத்தில் முடிக்கிற  வேலைக்கு 20 கோடி கணக்கு காட்டலாம் கேட்பார் கிடையாது பிரதான வீதிகளில் நடந்து முடிந்த வேலைக்கு கணக்கு எல்லோரும் பார்ப்பார்கள் அதனால் தேவையில்லாத இடங்களில் ரோடு போடுவார்கள் முக்கிய பிரதான வீதிகள் தேவை மக்களுக்கு அத்தியாவசியமான தேவைகள் செய்ய இழுத்தடிப்பார்கள் .

சுமத்திரனில்   உள்ள கடுப்பில் சனம்  வேறு வழி இன்றி குத்த  இந்த அங்கஜன் கூட்டம் தட்டு தடுமாறி வந்து இருக்கினம் இவர் அங்கு வந்ததும் வராததுமாக தேவையற்ற திட்டங்களில் வெறுமே திட்ட விளம்பர பலகை மட்டும் மேளதாளத்துடன் திரை நீக்கம் செய்துவைக்கிறார் கடைசியில் அதுவே அவருக்கு அடுத்த தேர்தலில் ஆப்பாகி விடும் என்பதை இலகுவாக மறந்துவிடுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

முதலில் யாழ்நகர பகுதிகளில் சுற்றிதிரியும் கட்டாக்காலி நாய்கள், மாடுகளை கட்டுபடுத்துங்கள்.

பலகோடி செலவுபண்ணி கட்டுமானங்கள் செய்தாலும் நகர பகுதிகளின் நடுவே மாடு குடும்பத்தோடு படுத்திருக்கிறது,

நடைபாதை பூங்காக்களின் புற்களை மேய்கிறது.

வாழ்த்துக்கள் அங்கஜன்  டக்ளஸ் ஊர் கொஞ்சம் வளர்ச்சியடைகிறது இல்லாவிட்டால் யாழ்பாணத்தில் இப்பவும் சண்டை நடக்கிறது என்பார்கள் .

மட்டக்களப்பில் பல கோடி  செலவு செய்ததாக கட்டினார்கள் காட்டினார்கள் மாடுகள் இருந்தது வெள்ளத்திலும் மிதந்தது ஆனால் தற்போது தனியார் பேருந்துகள் அதிலிருந்து செல்கின்றன 

அது போக இலங்கை மாடுகள் செல் கேளாது  ரெண்டு போட்டு விரட்டினால் திரும்ப வராது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

அது போக இலங்கை மாடுகள் செல் கேளாது  ரெண்டு போட்டு விரட்டினால் திரும்ப வராது 

மாடுகளுக்கு எதுக்கு அடிப்பான், அதன் உரிமையாளர்களுக்கு சகட்டுமேனிக்கு அபராதம் விதித்தால் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வரும், இல்லையென்றால் நகரசபை அவற்றை உரிமையாக்கி கொள்ளலாம்.

 

இலங்கையில்  தமிழருக்கென்று  மூன்று பெரும் நகரங்கள் இருந்தன, அதில் இரண்டு எம் கையைவிட்டு போய்விட்டது. எஞ்சிய யாழ்நகரையாவது குப்பை கூழங்களின்றி, கட்டாக்காலி கால்நடைகளின்றி அழகாகவும் சுத்தமாகவும் பேணப்படவேண்டுமென்பது மனசில் படும் ஆதங்கம்.

இங்கே வெளிநாடுகளில் பல தசாப்தங்களாய் வாழ்கிறவர்களுக்குகூட இன்னும் இந்நாடுகளின் வானம் தொட்டுவிட்ட வளர்ச்சியை பார்த்து அதன் பிரமிப்பிலிருந்து விடுபடவேயில்லை. நேற்றுத்தான் இந் நாடுகளுக்கு வந்தவர்கள்போலவே இன்றும் உணர்பவர்கள் பலர். தினம் தினம் புதுமைகள்.

அவற்றை நினைக்கும்போது எமது தாயகபகுதியும் வேலைவாய்ப்பு பொருளாதாரம் அபிவிருத்தியென சிறு அளவிலாவது உயர்ந்து நிக்கவேண்டுமே என்ற ஏக்கம் பெரு மூச்சாய் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

உண்மை இது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

அதே பஸ் ஸ்ரான்ட தான் முக்கியம் அதில் தமிழ் இல்லாட்டியும் அவர்களின்  செய்கையை பாராட்டணும் 😜 முன்பு இதே டக்கி யும்  இருந்தது அங்கஜனும் இருந்தவர் புதிசாக ஒன்றுமில்லை வழக்கம்போலவே எல்லாம் நடக்குது .

அடுத்த முறை எலக்சன் வைக்கும் போது  வடபகுதிக்கு முற்றாக மதுபானத்தை தடை செய்யுங்கள் அதன் பின் பார்ப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அவற்றை சிறு அளவிலாவது பண்ணுகிறவர்கள், எமக்கு பிடிக்காதவர்களாயிருந்தாலும் அவர்கள் பண்ணுவதை வரவேற்போம், ஆனால் அவர்களை எமக்கு எப்போதுமே பிடிக்காது என்ற கொள்கையில் உறுதியாய் நிற்போம்.

அன்று தொடக்கம் மாற்றுகருத்து அரசியல்வாதிகளும் நல்லதையே செய்கின்றார்கள். இதில் மாற்றுக்கருத்து என்னிடம் இல்லை. ஆனால் ஒன்றை நிறுவிய பின் அதை பராமரிப்பதில் மிகவும் தவறு விடுகின்றார்கள். அண்மைக் காலங்களில் யூரியூப் வீடியோக்கள் மூலம் அதிக இடங்களை/தெரியாத இடங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
அவற்றில் தேவையில்லாத இடங்களுக்கு அபிவிருத்தி அல்லது அபிவிருத்தி செய்த இடங்களை ஒழுங்கில்லாத பராமரிப்பு. இவற்றை பார்க்கும் போது ஏனோ தானோ என செய்கின்றார்கள் போலவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


எங்கட திண்ணையை போல, சந்தடி சாக்கில்லாமல் சுண்ணாம்பை தூணில  தடவி  "பச்சக்" எண்டு வெத்திலை குதம்பலை துப்பாமல் போனால் சரி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 21:40, குமாரசாமி said:

பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. துப்பரவாக வைத்திருந்தால் இன்னும் சந்தோசம்.

படங்களை பார்த்ததும் நான் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள் 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Sasi_varnam said:


எங்கட திண்ணையை போல, சந்தடி சாக்கில்லாமல் சுண்ணாம்பை தூணில  தடவி  "பச்சக்" எண்டு வெத்திலை குதம்பலை துப்பாமல் போனால் சரி.
 

நாங்களும் அங்கே தொடர்ந்து இருந்தால் எமது மனநிலையும் அங்கு வாழ்பவர்கள் போலவே இருந்திருக்கக்கூடும்.

புலம்பெயர் தேசங்களுக்கு வந்த பின்னர் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என நிறையவே கற்றுவிட்டோம். இங்கே இருக்கும் அரசியல் கட்டமைப்புகள் சம உரிமைகள் மொழி கலாச்சார புரிந்துணர்வுகள் நாம் பிறந்த மண்ணிலும் வராதா என்ற எக்க உணர்வுகள் நெஞ்சை பிளக்கின்றன. இவற்றை மனதில் வைத்து நல்லது ஏதாவதை எழுதினால் விதண்டாவாத பதில்கள் தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people

உடையாரின் காசில் சடையார் வாணம் விடுவதென்பது இதுதான்...

போஸ்டரில் உள்ள எவரும் பேருந்து நிலையத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.. கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வெட்கமின்றி திறந்து வைத்ததோடு மட்டுமில்லாமல் போஸ்டர் வேறு...

யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பன் நானென்பது அசிங்கம் கொமாரு...

 

சுப்ரமணிய பிரபா

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people

உடையாரின் காசில் சடையார் வாணம் விடுவதென்பது இதுதான்...

போஸ்டரில் உள்ள எவரும் பேருந்து நிலையத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.. கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வெட்கமின்றி திறந்து வைத்ததோடு மட்டுமில்லாமல் போஸ்டர் வேறு...

யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பன் நானென்பது அசிங்கம் கொமாரு...

 

சுப்ரமணிய பிரபா

தமிழ் சிறி,

எமது தெற்காசிய நாடுளில் இது தான் அரசியல் நடைமுறை   நல்ல விடயங்களை, அடுத்தவன் செய்தாலும் தனது என்று உரிமை கொண்டாடுவதும், தனது ஆட்சியில் நடந்த எதிர்மறை விடயங்களுக்கு தாங்கள்  பொறுப்பெடுக்காமல் அடுத்தவர்  மீது போடுவதும் அங்கு சாதாரண விடயம். மகிந்த அதை ஒரு படி மேலே போய் செய்கிறார். 

இதை வாசிக்கும் போது  சுவிற்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான தொடரூந்து சுரங்கமான Gotthard-Basistunnel (Gotthard Base Tunnel(  (57 km) திறப்பு விழா 2016 ஜூன் மாதம் நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான அரசு தலைவர்கள் அநேகர் கலந்து கொண்ட அந்த வைபவத்தில் அன்றைய போக்குவரத்து அமைச்சர் Doris Leuthard  (CVP)பேசும் போது தனது காலத்தில் இது திறந்து வைக்கப்பட்டது தனது அதிஷ்டம் என்றும் ஆனால் இந்த திட்டத்திற்காக மிக அதிகமாக உழைத்தவர் தனக்கு முன்பு பதவியில் இருந்த வேறு கட்சியை செர்ந்த  Moritz Leuenberger (SP)என்றும் அவரை பாராட்டினார்.  எமது நாட்டில் என்றால் 57 கி.மீ நீளத்திற்கும் பதவியில் இருப்பவரின் பிரமாண்டமான கட்அவட் தொங்கியிருக்கும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்த பெயர்ப் பலகை தமிழ் முதலாவாதாய் மாற்றப்படுகிதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்அவுட் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இருந்து கொப்பியடிக்கபட்ட தீமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.