Jump to content

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போராடுவது, ஹர்த்தால் போன்றவை அவர்கள் தமது  உரிமையை பெற்றுக் கொள்வதற்கான போராட்டம் ...அஞ்சலி செலுத்துதல் மனிதாபிமானம் ....இங்கு நான் உட்பட பலர் அவர்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவித்து விட்டே எமது கருத்துக்களை பகிர்ந்து இருந்தோம்.
நிழலி  மேலே எழுதிய மாதிரி யாழ் யூனி இது வரை எமது மீனவர் பிரச்சனைக்காய் குரல் கொடுத்ததை காணவில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

ஒரே நாட்டுக்குள் எல்லை மீறி சென்று மீன் பிடித்தால்கூட அடித்து விரட்டுகிறார்கள், பிடித்து கட்டி வைக்கிறார்கள் சிறைப்பிடிக்கிறார்கள்.

இது நடப்பது இந்தியாவிற்குள்.

கரையோர தமிழர்களின் வாழ்வாதாரமான மீன் பிடி இடங்களில் சிங்கள சகோதரங்கள் பாரிய வள்ளங்களுடன் வந்து மீன் பிடித்தால் பாரதூரம் எதுவுமேயில்லை.

சிங்கள மீன்பிடிகாரரோடை எங்களாலை போட்டி போட ஏலாது எண்டு நான் என்ரை காதாலை கேட்டது முல்லைத்தீவில்லை  யாழ்ப்பாணமில்லை....மட்டக்களப்பிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ரகசியமாக போய் வருகிறார் என்றும் பேசினோமே, கவனிக்கவில்லையா? 

என்னையோ உங்களையோ தமிழ்நாட்டு நீதி துறை தண்டணை கொடுத்து சிறையில் போட காத்து கொண்டிருக்கிறதாக கற்பனை செய்து கொள்வோம். நாங்களும் அமைச்சர் மாதிரி இரகசியமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னைக்கு போய்வர முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

என்னையோ உங்களையோ தமிழ்நாட்டு நீதி துறை தண்டணை கொடுத்து சிறையில் போட காத்து கொண்டிருக்கிறதாக கற்பனை செய்து கொள்வோம். நாங்களும் அமைச்சர் மாதிரி இரகசியமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னைக்கு போய்வர முடியுமா?

அமைச்சர் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

என்னதான் விரோதியா இருந்தாலும், அவனது மரணத்துக்கு வருந்த வேண்டும் என்பது மாண்பு.

ஆகவே, ஹர்த்தால் தூண்டப்பட்ட ஒன்று என்னும் எனது கருத்துக்கு, ஈசி ஷேர்காரர்கள் ஒரு மனிதாபிமானம் கூட இல்லாமல் எதிர்க்கருத்து வைத்தார்கள்.  இப்போது அதே யாழ் மண்ணில் இருந்து, படித்த சமூகத்தில் இருந்து வருகிறது மனிதாபிமான போதிப்பு. 🙂

ஹர்த்தால் தூண்டப்பட்ட ஒன்று என்பது உண்மையோ பொய்யோ, ஆனால் எதிர்ப்பைக் காட்டுவதற்கு மிக மிக நியாயமான காரணங்களுண்டு. 

அதனால் ஹர்த்தாலுக்கு எனது ஆதரவு உண்டு. 

🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நிழலி,

போராட்டம் தவறு என்று எங்கே சொன்னேன்? பின்னால் இருந்து தூண்டப்படும் ஹர்த்தால் தவறு என்றுதானே சொன்னேன்.

நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். யாழ்ப்பாண MP, உதாரணமாக கஜேந்திரகுமார் அல்லது சுமேந்திரன் கேட்பதுக்கும், இன்னுமொரு யாழ்ப்பாண MP கடல்தொழில் அமைச்சர் கேட்பதுக்கும் வித்தியாசம் உண்டு. கடல் தொழில் அமைச்சராக ஒரு சிங்களவர் இருந்தால் கூட, அவரது கவனத்தினை பெற, ஒரு போராட்டம் நியாயமாகலாம்.

இந்த சங்கங்கள், முதலில் அணுக வேண்டியது டக்கியரை. அவர் கடல்தொழில் அமைச்சராக, ராஜதந்திர வேலைகளை, யாழ்ப்பாண, கொழும்பு இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பேசி, அமைச்சரவையில் பேசி, இந்திய அரசுடன் பேச என்ன நடவடிக்கை எடுத்தார் என்று சொல்லுங்கள்.

இந்த சங்கங்களுக்கு அவர் என்ன உத்தரவாதம் கொடுத்தார் என்றாவது சொல்லுங்கள்?  

அவரின் மீது இந்திய கொலை வழக்கு ஒன்றின் காரணமாக, இந்தியாவுடன், தமிழகத்துடன் முரண்படாமால், தன்னை வெளிப்படுத்தாமல், இந்த போராடங்களை ஊக்குவிக்கிறார் அல்லது கண்டும் காணாமல் இருக்க்கிறார் . 

நாதர்ஸ்,

குத்தியர் மீது கொலை வழக்கு இருக்கும்போது எந்த அடிப்படையில் அவரை இலங்கை போக அனுமதித்தார்கள்  என்கின்ற விடயத்தை நீங்கள் ஊகித்திருந்தாலே இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்க மாட்டீர்கள்.

😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.