Jump to content

ஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார்

(ஆர்.ராம்)
இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்காக ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மூன்று கடிதங்களை அனுப்புவதாகவே இணக்கம் காணப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 
 

spacer.png

அதன்படி தற்போது முதலாவது கடிதம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியும் பின்னடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளர். 

இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில், 

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் வைத்திருப்பதனால் எவ்விதமான பயனுமில்லை என்பதை கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த பிரதிபலன்களால் கூட்டமைப்பும் அதனுடன் சார்ந்த ஏனைய தரப்புக்களும் 2012ஆம் ஆண்டிலிருந்து நாம் வலியுறுத்தி வந்ததன் பிரகாரம் அவ்விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு இணக்கம் கண்டுள்ளன. 

அதனடிப்படையிலேயே நாம் உள்ளிட்ட மூன்று கூட்டணிக் கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் கையொப்பமிட்டபோது கோரிக்கை கடிதமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், அவரின் அலுவலகம், மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செயற்பாடானது, இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை செய்விப்பதற்கான வலுவான கோரிக்கையையும் அதேநேரம், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து அவ்விடயத்தினை மீளெடுத்து ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதை மட்டும் கொண்ட கோரிக்கையை மட்டும் உள்ளடக்கியதாகும். 

அத்துடன், ஐ.நா.செயலாளர் நாயகம் இதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கும், அல்லது பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான காரணங்களை சேகரிப்பதற்குமாக சிறியப் பொறிமுறையை ஒத்ததாக 12 மாதங்கள் காலவரையறையுடன் கட்டமைப்பொன்றை அமைப்பதற்கும் கோரப்பட்டுள்ளது. 

இதுபொறுப்புக்கூறலை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியின் முதல் செயற்பாடாகும். இதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் மற்றும் பொதுச்சபையின் உறுப்பு நாடுகள் ஆகிய தரப்புக்களுக்கும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை செய்யவேண்டும் என்பதை வலிறுத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அத்தரப்புக்களிடத்திலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டும். 

அதேநேரம் மூன்றாவதாக, ஐ.நா.செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் உறுப்பு நாடுகள், மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை அதிகாரிகள் ஆகியவற்றுக்கு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சான்றாதாரங்களைக் குறிப்பிட்டு அவர்களிடத்தில் எழுத்துமூலமான கோரிக்கை முன்வைக்க வேண்டும். 

ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அது சார்ந்த தரப்புக்களுக்கான கோரிக்கை கடிதமம் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து மேற்படி அடுத்த இரண்டு செயன்முறைக்கான தனித்தனியாக இரண்டு கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைப்பதென்று இணக்கம் காணப்பட்டது. 

ஆனால் தற்போது அவ்விடயம் பற்றி ஏனைய தரப்புக்கள் கரிசனை கொள்வதாக இல்லை. அவ்விடயம் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலிறுத்தி நான் மின்னஞ்சலை அனுப்பியுள்ளபோதும் இதுவரையில் அதுகுறித்து எந்த பதிலளிப்புக்களும் கிடைக்கவில்லை என்றார். 
 

https://www.virakesari.lk/article/99248

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

7fac2452dca5ab3c0c3db543a2724212.gifவிடுங்கப்பா.. ரயலாக் சிக்னல் கிடைக்காமல் இருக்கும் .. 👍

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

ஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார்

சிங்களவர்கள் குடியேறிக் கந்தளாய் சிங்களவர் வசமாவதற்குக் பிரதான காரணம் சம்பந்தரின் தந்தை இராயவரோதயம் எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பண்டாரநாயக்க குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்று என்னுடன் வேலைபார்த்த திருகோணமலை சேர்ந்த சில நண்பர்களும் அதனை உறுதிப்படுத்தினர்.. தந்தைவழி மகனும் தமிழர்களை அலட்சியம் செய்து சிங்களவருக்கு ஆதரவாக இருப்பார் என்பதை நம்பமுடிகிறது.

விக்னேசுவரன் தமிழர்களுக்கு எதிராக என்ன செய்தார்...? அவரை எதற்காக கயேந்திரன் சம்பந்தரோடு இணைக்கவேன்டும்.? புரியவில்லை.!! 🤔  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

விக்னேசுவரன் தமிழர்களுக்கு எதிராக என்ன செய்தார்...? அவரை எதற்காக கயேந்திரன் சம்பந்தரோடு இணைக்கவேன்டும்.? புரியவில்லை.!! 🤔  

சம்பந்தனின்.... வண்டவாளங்களை தமிழர் நன்றாக அறிவார்கள்.

ஆனால்... விக்கி ஐயா அப்படி எல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சிங்களவர்கள் குடியேறிக் கந்தளாய் சிங்களவர் வசமாவதற்குக் பிரதான காரணம் சம்பந்தரின் தந்தை இராயவரோதயம் எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிரபல அரசியல்வாதி R. இராஜவரோதயம் சம்பந்தனின் உறவுமுறை எனினும் அவரது தந்தை இல்லை. சம்பந்தனின் தந்தை A. இராஜவரோதயம் இலங்கை சிவில் நிர்வாகத்தில் தொழில்புரிந்தார். எனவே இரண்டு நபர்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை காரணமாக தவறான புரிதலுக்கு வாய்ப்புண்டு. 

Link to comment
Share on other sites

7 hours ago, vanangaamudi said:

பிரபல அரசியல்வாதி R. இராஜவரோதயம் சம்பந்தனின் உறவுமுறை எனினும் அவரது தந்தை இல்லை. சம்பந்தனின் தந்தை A. இராஜவரோதயம் இலங்கை சிவில் நிர்வாகத்தில் தொழில்புரிந்தார். எனவே இரண்டு நபர்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை காரணமாக தவறான புரிதலுக்கு வாய்ப்புண்டு. 

சில அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை மிக நுட்பமாகப் பயன்படுத்தி மக்களின் மதிப்பையும், ஆதரவினையும் பெற்றுக் கொள்வார்கள். அரசியல்வாதி சம்பந்தனும் அந்த வழியைப் பின்பற்றியே வந்துள்ளார். மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்ட பிரபல அரசியல்வாதி ரட்னவரோதயம். இராயவரோதயம் அவர்களின் மகன் என்று மக்கள் தன்னைப்பற்றி எண்ணியதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். கல்லோயா திட்டத்தில் பணியாற்றி, அங்கு சிங்கள மக்கள் பெரும்தொகையாகக் குடியேறுவதற்கு உதவிய, ஏ. இராயவரோதயத்தின் மகனே இரா. சம்பந்தர் என்று ஒரு சிலருக்குத்தான் தெரியும்போல் உள்ளது.

இந்தியாவின் பிரதமராக இருந்த நேருவும் தன் பிள்ளைகளுக்கு காந்தி என்று பெயர் இட்டு, நேரு குடும்பம்  காந்தியின் வாரிசுகள் என்று இந்திய மக்கள் பலரையும் நம்பவைத்தார். இன்றும் பல இந்தியர்கள் மட்டுமல்ல உலக மக்களும் காந்தியின் வாரிசுகளே நேரு குடும்பம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தரை விட பெரிய கள்வன் இந்த விக்கி ஐயா என்பது போக போக புரியும் 

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

சம்மந்தரை விட பெரிய கள்வன் இந்த விக்கி ஐயா என்பது போக போக புரியும் 

கள்வன் என்று கருதுபவனையும் ஐயா என்று அழைக்கும் உங்கள் பண்பு போற்றுதற்கு உரியது. 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.