Jump to content

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.

spacer.png

தைப்பூசத் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.

spacer.png
 

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
spacer.png

 

spacer.png
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில் இருக்கும் போதெல்லாம் இன்றைய தினம் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முழுகிவிட்டு வயலுக்கு சென்று நெற்கதிர்களை அறுத்து வெள்ளைத்துணியால் மூடி வீட்டுக்குகொண்டு வந்து சாமிக்கு விளக்கு வைத்து விட்டு வீட்டு நெற்கதிர்களை வீட்டு தீராந்தியில் மாவிலையுடன் சேர்த்து கட்டுவது வழக்கம்.

அதே போல் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் குலதெய்வ வாசலிலும் கட்டி விடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2021 at 20:57, குமாரசாமி said:

நான் ஊரில் இருக்கும் போதெல்லாம் இன்றைய தினம் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முழுகிவிட்டு வயலுக்கு சென்று நெற்கதிர்களை அறுத்து வெள்ளைத்துணியால் மூடி வீட்டுக்குகொண்டு வந்து சாமிக்கு விளக்கு வைத்து விட்டு வீட்டு நெற்கதிர்களை வீட்டு தீராந்தியில் மாவிலையுடன் சேர்த்து கட்டுவது வழக்கம்.

அதே போல் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் குலதெய்வ வாசலிலும் கட்டி விடுவோம்.

யாழ்ப்பாணத்தில் ஐயர் மாரோ புதிர் எடுப்பது  இங்கில்லை  

 நீங்கள் சொன்னது போலதான் நாங்களும் எடுப்பம் சிலவற்றை வீட்டு கூரையில் சொருகி விடுவம் நெற்கதிர்களை சிட்டுக்குருவிக்கு பழைய கதிரையும் சேர்த்து  நாளுக்கு நாள் வந்து சாப்பிட்டு செல்லும் அது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில் ஐயர் மாரோ புதிர் எடுப்பது  இங்கில்லை  

 நீங்கள் சொன்னது போலதான் நாங்களும் எடுப்பம் சிலவற்றை வீட்டு கூரையில் சொருகி விடுவம் நெற்கதிர்களை சிட்டுக்குருவிக்கு பழைய கதிரையும் சேர்த்து  நாளுக்கு நாள் வந்து சாப்பிட்டு செல்லும் அது 

தனி,
யாழ்ப்பாணத்திலையும்நாங்கள் தான் புதிர் எடுப்பது. இது ஒரு விழா அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில் ஐயர் மாரோ புதிர் எடுப்பது  இங்கில்லை  

 நீங்கள் சொன்னது போலதான் நாங்களும் எடுப்பம் சிலவற்றை வீட்டு கூரையில் சொருகி விடுவம் நெற்கதிர்களை சிட்டுக்குருவிக்கு பழைய கதிரையும் சேர்த்து  நாளுக்கு நாள் வந்து சாப்பிட்டு செல்லும் அது 

ஒரு சில கோவில்களுக்கு நான் கதிர் வெட்டிக்கொண்டு போய் கொடுத்திருக்கின்றேன். புதிர் பொங்கலும் வீட்டில் பொங்குவோம். மாட்டுக்கும் ஒரு பங்கு நிச்சயம். ஆனால் இப்படி விழா எல்லாம் எடுப்பதில்லை. ஐயர்மார் சம்பந்தப்படுவதுமில்லை.
நாங்கள் சைவ சமய ஆக்கள் எல்லோ...!😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.