Jump to content

`ரஜினி என்னை விட்டுக் கொடுக்கமாட்டார்!' - தனிக்கட்சி ஆரம்பிக்கும் அர்ஜுனமூர்த்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் அர்ஜுன மூர்த்தி. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவில் நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டனர். ரஜினி கட்சியைக் கட்டமைப்பதற்கான பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில், கொரோனா அச்சுறுத்தல், உடல்நலம் உள்ளிட்ட விஷயங்களால் அரசியல் கட்சி தொங்கப்போவதில்லை என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பூட்டினார் ரஜினி. இந்த அறிவிப்பால் மனமுடைந்த தமிழருவி மணியன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ரஜினியுடன் தான் தொடர்ந்து பயணிக்கப் போவதாக கூறிய அர்ஜுன மூர்த்தி, விரைவில் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியிருந்தார். அதற்கு முன்னோட்டமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘மாற்றத்தின் வழியில் புதிய பயணம்’ என்று ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் அர்ஜுன மூர்த்தி.

அர்ஜுன மூர்த்தி
 
அர்ஜுன மூர்த்தி

அர்ஜுன மூர்த்தி புதிய அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து அவரிடமே பேசினோம்.

நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறதே?

வலிமையான மாற்றத்தை நோக்கி நிறைய பேசிவிட்டோம். நான்கரை கோடி வாக்காளர்கள் 49 வயதுக்கு கீழானவர்கள். இவர்கள் மாறுபட்ட சிந்தனையை விரும்புகிறார்கள். இந்த இளைஞர்களின் அரசியல் தேவையை நான் உணர்ந்திருப்பதாலேயே, பா.ஜ.க-விலிருந்த என்னை தன்னுடன் வந்து பணியாற்றுமாறு ரஜினி கேட்டுக் கொண்டார். கொரோனா இடர்பாடுக்குப் பிறகு, ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு நிதி வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியை சிலர் கையில் எடுத்து விளையாட அனுமதிக்கக் கூடாது. தவிர, இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு வழிகாட்டியாக நான் இருக்க விரும்புகிறேன். ஆகவே, அரசியல் கட்சியைத் தொடங்கி, 2021 தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.

உங்கள் கட்சியின் நோக்கம் என்ன?

அதிகாரிகளின் ஆலோசனைப்படிதான் இன்றைய அரசு நடைபெறுகிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை. கடந்த 37 ஆண்டுகளாக பல துறைகளிலும் புதுமையைப் புகுத்தி ஒரு மாற்றத்தை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்தியாவிலேயே புத்திகூர்மை உள்ளவர்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். நான் தொலைநோக்குப் பார்வையுடன் இருந்ததால்தான் ரஜினி என்னை அழைத்து அருகில் வைத்துக் கொண்டார். எனக்கு 60 வயதாகிவிட்டது. என்னுடைய தொலைநோக்குப் பார்வை வீணாகிவிடக் கூடாது. அரசியலில், ஆட்சி இயக்கத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதுதான் என்னுடைய நோக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவும் போகிறேன்.

ரஜினி
 
ரஜினி

உங்கள் அரசியல் பயணத்துக்கு ரஜினியின் ஆதரவை கேட்பீர்களா?

திறமையை பாராட்டுவதற்கு என்றும் சங்கோஜப்படாதவர் ரஜினி. என் திறமையை அறிந்ததால்தான், என்னை அழைத்து மக்களிடம் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தவர் ரஜினி. அவரை நான் நிர்பந்திக்கப் போவதில்லை. அவருக்கு அழுத்தம் தரவும் நான் விரும்பவில்லை. இதனால்தான், அவர் படத்தை நான் பயன்படுத்தப் போவதில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. நான் திறமைசாலி என்பதால், என்னை அவர் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210128-110816.jpg 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.