Jump to content

பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.

  • January 27, 202110:56 am

முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரின் சொத்துக்குவிப்பு விபரங்களை பட்டியல் இட்டு ” மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பு” AI, மற்றும் ஹியூமன் றைச் வோச் (HRV) அமைப்புகள் ஐநாமனித உரிமை பேரவை (UNHER) ஊடாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களுக்கு அறிக்கையினை அனுப்பியுள்ளதுடன் இந்த சொத்துகுவிப்பு பிள்ளையானுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரணை செய்ய உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிள்ளையானிடம் உள்ள சொத்து விபரப்பட்டியல்:


#இலங்கையில்..
1)மட்டக்களப்பு மாநகரம் பூம்புகார் எனும் இடத்தில் வீடு இதன் பெறுமதி 2,கோடி.
2)கொழும்பு ராஜகிரிஜயில் றோயல் அப்பாட்மெனட் வீடு இதன்பெறுமதி 6.5,கோடி.
3)கொழும்பு கறுவாத்தோட்டம் வீடு இதன்பெறுமதி 23,கோடி.
4)மட்டக்களப்பு வாவிக்கரை இல1 வீதி இதன்பெறுமதி 12,கோடி.
5)திருகோணமலை உப்புவெளி சுற்றுலாவிடுதி இதன்பெறுமதி 5, கோடி.
6)நுவரேலியா நகர் சுற்றுலாவிடுதி இதன் பெறுமதி 17, கோடி.
7)மட்டக்களப்பு பாசிக்குடா 12,ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 25,கோடி.
8)திருகோணமலை கும்புறுபிட்டி 50, ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 20,கோடி.
9)மட்டக்களப்பு திராய்மடு நிலம் 80, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
10)மட்டக்களப்பு புறுட்டுமான்ஓடை 115,ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்நவில்லை.
11)மட்டக்களப்பு மாங்கேணி 10, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
12)ஆழ்கடல் படகுகள்12, கொழும்பு டிக்கோவிட்ட எனும் இடத்தில் இதன்பெறுமதி 20,கோடி.


#வெளிநாடுகளில ..
13)சிங்கப்பூர் ஒகஷாவீதி அல்பிறட்றவர் என்ற இடத்தில தொடர்மாடிகுடியிருப்பு வீடு இதன்பெறுமதி 7.5,கோடி.
14)சுவிஷ்நாட்டில் சுரிச்நகரில் நகைக்கடையும் கட்டடமும இதன்பெறுமதி 150,கோடி.
15)வெளிநாடுகளில் உள்ள பல வங்கிகளில் இருப்பு 20 மில்லியன் அமரிக்க டொலர்.

இவ்வாறு 15, விதமான இடங்களில் சொத்துக்களை பிள்ளையான் தன்னகத்தே வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை முன்எடுக்குமாறு அந்த சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.meenagam.com/பிள்ளையானின்-சொத்துக்கள/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பிள்ளையானிடம் உள்ள சொத்து விபரப்பட்டியல்:


#இலங்கையில்..
1)மட்டக்களப்பு மாநகரம் பூம்புகார் எனும் இடத்தில் வீடு இதன் பெறுமதி 2,கோடி.
2)கொழும்பு ராஜகிரிஜயில் றோயல் அப்பாட்மெனட் வீடு இதன்பெறுமதி 6.5,கோடி.
3)கொழும்பு கறுவாத்தோட்டம் வீடு இதன்பெறுமதி 23,கோடி.
4)மட்டக்களப்பு வாவிக்கரை இல1 வீதி இதன்பெறுமதி 12,கோடி.
5)திருகோணமலை உப்புவெளி சுற்றுலாவிடுதி இதன்பெறுமதி 5, கோடி.
6)நுவரேலியா நகர் சுற்றுலாவிடுதி இதன் பெறுமதி 17, கோடி.
7)மட்டக்களப்பு பாசிக்குடா 12,ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 25,கோடி.
8)திருகோணமலை கும்புறுபிட்டி 50, ஏக்கர் நிலம் இதன்பெறுமதி 20,கோடி.
9)மட்டக்களப்பு திராய்மடு நிலம் 80, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
10)மட்டக்களப்பு புறுட்டுமான்ஓடை 115,ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்நவில்லை.
11)மட்டக்களப்பு மாங்கேணி 10, ஏக்கர் இதன்பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
12)ஆழ்கடல் படகுகள்12, கொழும்பு டிக்கோவிட்ட எனும் இடத்தில் இதன்பெறுமதி 20,கோடி.


#வெளிநாடுகளில ..
13)சிங்கப்பூர் ஒகஷாவீதி அல்பிறட்றவர் என்ற இடத்தில தொடர்மாடிகுடியிருப்பு வீடு இதன்பெறுமதி 7.5,கோடி.
14)சுவிஷ்நாட்டில் சுரிச்நகரில் நகைக்கடையும் கட்டடமும இதன்பெறுமதி 150,கோடி.
15)வெளிநாடுகளில் உள்ள பல வங்கிகளில் இருப்பு 20 மில்லியன் அமரிக்க டொலர்.

எல்லாம் பொய்...பொய்......பொய்...பொய்...... பொய்...பொய்...... . சிப்பிக்குள் இருந்து வெளியேறிய முத்து அவர். 
கறை படியா திலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சாட்டும் அமைப்புகள் பிழையான கருத்துக்களை வெளியிடுகின்றன. மக்களுக்கு அபிவிருத்தி காட்ட அரசியலுக்குள் புகுந்தவர் மேல் இப்படி பழி போடக்கூடாது. அவர் சொர்க்கத் தங்கம். இப்போ வரி வரியாய் வரிஞ்சு கட்டிக்கொண்டு வரப்போகுது பெரிய படை, வக்காலத்து வாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 

கிருபன் சார்! இணைத்த செய்தி பொய்யா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 

கொலையையே விசாரிக்காமல் வெளில விட்டுப்போட்டார் கோத்தா, கொள்ளையையே விசாரிக்கப்போகிறார் எண்டு உங்கை ஒருத்தர், சிரிச்சு, சிரிச்சு, ஈசி சேறிலை இருந்து விழுந்து போனார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

கிருபன் சார்! இணைத்த செய்தி பொய்யா? :cool:

அண்ணா , எனக்கு அவரது சொத்து வழக்கு பற்றி தெரியாது ....ஆனால் இதில் குறிப்பிட பட்டு இருக்கும்  ஊரில் இருக்கும் சொத்துக்களில் அநேகமானவை பொதுமக்களினுடையதாய் இருக்க கூடும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

அண்ணா , எனக்கு அவரது சொத்து வழக்கு பற்றி தெரியாது ....ஆனால் இதில் குறிப்பிட பட்டு இருக்கும்  ஊரில் இருக்கும் சொத்துக்களில் அநேகமானவை பொதுமக்களினுடையதாய் இருக்க கூடும் 
 

கறுவாதோட்டம்  தான் என்னது. ராஜகிரி... தமிழ் சிறியர் வாங்கி விட்டது. சொல்லிப்போடாதீங்கோ. கோவிப்பார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

கொலையையே விசாரிக்காமல் வெளில விட்டுப்போட்டார் கோத்தா

சிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கறுவாதோட்டம்  தான் என்னது. ராஜகிரி... தமிழ் சிறியர் வாங்கி விட்டது. சொல்லிப்போடாதீங்கோ. கோவிப்பார்.  

பாதுகாப்பாய் இருக்கும் என்று வேறொருவர் பெயரில் மாற்றி எழுதி, கைமாற்றி கைக்கு எட்டாமற் போய், சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் ஏமாந்த அரசியல்வாதிகளும் உண்டு. வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலேயே உண்டு பாருங்கோ.

Link to comment
Share on other sites

என்னத்தை சொன்னாலும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்த சேவையை மறக்க முடியாது. அந்த காலத்தில் அது கிழக்கு  தமிழர்களுக்கு ஓரளவாவது வாழக்கையை கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது. படித்தவர்கள் , புத்திசாலிகள் எண்டு மார் தட்டிக்கொண்டு வீணுக்கு தீர்மானங்களை நிறைவேற்றுபவர்களுடன் ஒப்பிடும்போது , பிள்ளையான் படிக்காத மேதையாக சேவை செய்ததை பாராட்ட வேண்டும். எந்த ஒரு நாணயத்துக்கும் இரு பக்கம் இருப்பதுபோல இங்கும் இருக்கத்தான் செய்யும். எந்த அரசியல்வாதி அதிகாரத்தில் இருக்கும்போது கொள்ளையடிக்காமல் இருந்திருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது பார்க்கும்போது பிள்ளையான் கொள்ளையடித்தது பெரிய காரியம் இல்லை. அதற்ககாக பிள்ளையானின் இப்படியான செயல்களை ஆதரிக்க முடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டை தான் நீதிமன்றம் அண்மையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது 😂
 

எல்லாம் அடாத்தாகவும், பயமுறுத்தியும் எடுத்தவைதானே. வாவிக்கரை வீடு சாம் தம்பிமுத்துவின் பரம்பரை வீடு என்பதால் பசையும் செல்வாக்கும் உள்ள மகன் வழக்குப்போட்டார். அதனையும் வளைத்துப்போட 2 கோடி கொடுக்க ரெடிதானே!

9 hours ago, குமாரசாமி said:

கிருபன் சார்! இணைத்த செய்தி பொய்யா? :cool:

செய்தியின்படி சுவிஸில் ஒரு நகைக்கடையும் புள்ளையான் பெயரில் இருக்கு. அவர் சுவிஸுக்கு வந்தா வாங்கினார்?

அதிகாரமும், ஆயுதமும் கையில் இருக்கும்போது அதை வைத்து ஊரைக்கொள்ளையடிக்க ஒரு கூட்டமே சேர்ந்துவிடும். சொத்துக்களை எப்படி கையகப்படுத்துவது, எப்படி முதலீடுவது என்று ஆலோசனை சொல்லவும், பினாமியாக இருக்கவும் பலர் வருவார்கள். 

 

8 hours ago, ரதி said:

அண்ணா , எனக்கு அவரது சொத்து வழக்கு பற்றி தெரியாது ....ஆனால் இதில் குறிப்பிட பட்டு இருக்கும்  ஊரில் இருக்கும் சொத்துக்களில் அநேகமானவை பொதுமக்களினுடையதாய் இருக்க கூடும் 
 

புள்ளையான் தான் மறியலில் இருந்து கல்லுடைத்து உழைத்த காசிலா இத்தனை சொத்தையும்  வாங்கினார்?😂

53 minutes ago, Robinson cruso said:

எந்த அரசியல்வாதி அதிகாரத்தில் இருக்கும்போது கொள்ளையடிக்காமல் இருந்திருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது பார்க்கும்போது பிள்ளையான் கொள்ளையடித்தது பெரிய காரியம் இல்லை. அதற்ககாக பிள்ளையானின் இப்படியான செயல்களை ஆதரிக்க முடியாது

வடக்கு என்றால் யாழ்ப்பாணம் என்று கருதும் சில யாழ் மையவாதிகள் போல கிழக்கு என்றால் மட்டக்களப்பு மாத்திரம் என்று நினைக்கும் புள்ளையான் கொள்ளையடித்ததை வைத்து மாபியா கும்பல் ஒன்றை வைத்திருக்கின்றார். ஆனால் இவரும் ராஜபக்‌ஷக்களின் அடிமைதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எல்லாம் அடாத்தாகவும், பயமுறுத்தியும் எடுத்தவைதானே. வாவிக்கரை வீடு சாம் தம்பிமுத்துவின் பரம்பரை வீடு என்பதால் பசையும் செல்வாக்கும் உள்ள மகன் வழக்குப்போட்டார். அதனையும் வளைத்துப்போட 2 கோடி கொடுக்க ரெடிதானே!

செய்தியின்படி சுவிஸில் ஒரு நகைக்கடையும் புள்ளையான் பெயரில் இருக்கு. அவர் சுவிஸுக்கு வந்தா வாங்கினார்?

அதிகாரமும், ஆயுதமும் கையில் இருக்கும்போது அதை வைத்து ஊரைக்கொள்ளையடிக்க ஒரு கூட்டமே சேர்ந்துவிடும். சொத்துக்களை எப்படி கையகப்படுத்துவது, எப்படி முதலீடுவது என்று ஆலோசனை சொல்லவும், பினாமியாக இருக்கவும் பலர் வருவார்கள். 

 

புள்ளையான் தான் மறியலில் இருந்து கல்லுடைத்து உழைத்த காசிலா இத்தனை சொத்தையும்  வாங்கினார்?😂

வடக்கு என்றால் யாழ்ப்பாணம் என்று கருதும் சில யாழ் மையவாதிகள் போல கிழக்கு என்றால் மட்டக்களப்பு மாத்திரம் என்று நினைக்கும் புள்ளையான் கொள்ளையடித்ததை வைத்து மாபியா கும்பல் ஒன்றை வைத்திருக்கின்றார். ஆனால் இவரும் ராஜபக்‌ஷக்களின் அடிமைதானே.

எல்லாம் அப்படி எடுக்கவில்லை...வாவிக்கரை வீடு  எப்படி எடுக்கப்பட்டது என்று நான் ஏற்கனவே எழுதி விட்டேன்....எல்லா அரசியல்வாதிகளும்  கல் உடைத்த காசிலா சொத்து வேண்டி குவிக்கினம்... எனக்கு தெரிய சும்மை தவிர வேறு ஒருத்தரும் வேறு தொழிலுக்கு போவதில்லை எங்கால் அவர்களுக்கு இவ்வளவு சொத்து
முந்தி கருணாவுக்கு பின்னால் திரிஞ்ச கூட்டம் இப்ப பிள்ளையானுக்கு பின்னால திரியுது ...அந்தாள் கொள்ளையடித்தாலும்  தன்னால் முயன்றதை மக்களுக்கு செய்கிறார் ...மற்றவர்களை மாதிரி வாயால் வடை சுடவில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைப் படுகொலை செய்தமைக்காக கருணா குழுவுக்கு ரூபாய் 50 மில்லியன்களைக் கோத்தா வழங்கினார் என்பதை அக்காலத்தில் பொலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் இக்கொலை வழக்கில் சாட்சியமளித்தார். உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் இக்கொடுக்கல் வாங்கலில் தூதராகச் செயற்பட்டிருந்தார். கருணாவின் கீழேயே பிள்ளையான் அக்காலத்தில் கொலைகளிலும், கடத்தல் மற்றும் கப்பம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வந்ததால், அவருக்கும் இதில் ஒரு பங்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

அத்துடன் கொழும்பில் பல தமிழ் வியாபார நிலைய உரிமையாளர்களிடம் பல மில்லியன்களைக் கருணாவும் பிள்ளையானும் கப்பமாக அறவிட்டு வந்ததும், இதனைக் கண்டித்து அவ்வர்த்தகர்கள் கொழும்பின் பெட்டா, கோட்டை , கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் ஒருநாள் கதவடைப்புப் போராட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.

இதைத்தவிரவும் மட்டக்களப்பில் காலம் காலமாக வாழ்ந்துவந்த பல வட மாகாண தமிழ் வர்த்தகர்களின் சொத்துக்களும் இவர்களால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. 

இதைத்தவிரவும் கிழக்கில் மக்களிடம் அச்சுருத்திப் பறித்துக்கொண்ட சொத்துக்களும் ஏராளம். 

இத்துடன், கிழக்கு மாகாணத்திற்கென்று புலிகளால் அனுப்பப்பட்ட, கிழக்கில் மக்களிடமிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பெருமளவு பணம் கருணாவிடமும், பிள்ளையான் ஜெயம் ஆகியோரிடமும்தான் இருந்தது. 

இவையெல்லாமுமே இவரையும் கருணாவையும் கோடீஸ்வரர் பட்டியலிலும் இலங்கையில் ஐந்தாவது கோடீஸ்வரர் என்னும் உயரத்திற்கும்  கொண்டுசேர்த்தது.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் புலிகளின் மௌனிப்புடன்

அடிக்கடி  எழுதியது  தான்

இனி இந்திய  தமிழக அரசியல் தான் இங்கும்  என்று.

பிள்ளைகளையாவது கையேந்தாமல்  வாக்களிக்கும் நிலைக்கு கொண்டு வரட்டும் தாயகம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

முள்ளிவாய்க்காலில் புலிகளின் மௌனிப்புடன்

அடிக்கடி  எழுதியது  தான்

இனி இந்திய  தமிழக அரசியல் தான் இங்கும்  என்று.

பிள்ளைகளையாவது கையேந்தாமல்  வாக்களிக்கும் நிலைக்கு கொண்டு வரட்டும் தாயகம்???

கர்ணாவுக்கு வாக்களித்த , மக்கள் பிள்ளையானுக்கு வாக்களித்த மக்கள் தொகையை பாருங்கள் உங்களுக்கு புரியும் இதை எழுதினாலும் நாங்கள் அவங்கள் போடும் எலும்பை தின்பவர்கள் என்பீர்கள் உங்கள்  பாசையில்  

மேலும் 172 பட்டதாரிகளாக இருந்தும் சேர்க்கபடாமல் இருப்பவர்களுக்கு பிள்ளையானின் வேண்டுகோளுக்கு அமைய  நியமனம் வழங்கப்பட இருக்கிறது , மட்டக்களப்பில் பட்டதாரிகளாக இருக்கும் சுமார் 1300 பேர்  வரையிலானவர்கள் கல்வி அமைச்சிடம்  கொடுத்த வேண்டுகோளின் பேரின் ஆசியர்களாக மேற்கு வலயம் மட்டு, கல்குடா வலயம் அது போக ஒரு தேசிய பாடசாலை என்பதும் மேற்கில் கிடைக்க இருக்கிறது  இதை நான் சொன்னால் இதுதான் வளர்ச்சியா அபிவிருத்தியா என கேட்பார்கள் கேலியும் செய்வார்கள் இதை விட அம்மக்களுக்கு வேறு என்ன தேவை கல்வி போதும் அவர்கள் பிழைத்துக்கொள்ள .

நாளைக்கு கேட் கணும் அவர் ஊடகவியலாளரிடம் இவ்வளவு சொத்து இருக்கிறதா என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மேலும் 172 பட்டதாரிகளாக இருந்தும் சேர்க்கபடாமல் இருப்பவர்களுக்கு பிள்ளையானின் வேண்டுகோளுக்கு அமைய  நியமனம் வழங்கப்பட இருக்கிறது ,

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

காய் நகர்த்தல் மற்றும் மறைமுக அடக்குமுறை இன அழிப்பு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

எனது மடியில் கனம். அதனால் பலவற்றை எழுத முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

நல்லாட்ட்சி அரசாங்கம் இருக்கும் போது அதே பட்டதாரிகள் பூங்காவிலும் நடு ரோட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினார்கள் நீங்கள் பார்க்கலையா 

அது மட்டும் அல்லாமல் மகிந்த ராஜபக்சக்கு ஒரே தடவையில் 30000 பேர் பட்டதார்ரிகளுக்கு வேலைவாய்ப்பும் , மோட்டார் சைக்கிள் , பெண்களுக்கு ஸ்கூட்டியும் வழங்கியதால் அவருக்கு இப்ப கூட தமிழ் படிச்ச பட்டதாரிகள் வாக்களிக்கிறார்கள் என்பது கன பேருக்கு தெரியாத உன்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, satan said:

இதற்கான பதிலை எதிர்காலத்திற்தான் கொடுக்க முடியும். படித்தவர்களுக்கு வேலையளிப்பது குறித்த திணைக்களத்தின் பொறுப்பு. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதற்கு? தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை வைத்தன, பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர், விண்ணப்பம் கொடுத்தனர், விடுவெளிகள் இருக்கும் பட்ஷத்தில் விண்ணப்பித்தனர். அப்போவெல்லாம் செவி மடுக்காத அரசாங்கம் சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

நீங்கள் இப்படி எழுதியதில் வியப்பு எதுவும் இல்லை ...வெளி நாட்டில் இருக்கும் உங்களால் இப்படித் தான் சிந்திக்க முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய நியமனம் வழங்குவதென்றால் அதற்கு பின்னால் அரசின் திட்டத்திற்கான காய் நகர்த்தல் கண்டிப்பாக உண்டு.

 

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்த ராஜபக்சக்கு ஒரே தடவையில் 30000 பேர் பட்டதார்ரிகளுக்கு வேலைவாய்ப்பும் , மோட்டார் சைக்கிள் , பெண்களுக்கு ஸ்கூட்டியும் வழங்கியதால் அவருக்கு இப்ப கூட தமிழ் படிச்ச பட்டதாரிகள் வாக்களிக்கிறார்கள் என்பது கன பேருக்கு தெரியாத உன்மை 

இதைத்தான் பலதடவை சொல்லியுள்ளேன். அரசு  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தங்கள் முகவர்மூலம் பிச்சையாக போட்டு, தன் சொந்தநலனையும், வாக்கு வங்கியையும் நிரப்பி, அவர்களின் உரிமையையும், நிலங்களையும் பறித்து,  அவர்களின் வாயையும்  அடைக்கிறது. முகவர்களும் தங்கள் வங்கி கணக்குகளையும் நிரப்பி, சொத்துக்களையும் குவித்து, அடியாட்களையும் வளர்ப்பதுதான் நடக்கிறது. அற்ப சொற்ப நலன்களுக்காக உரிமைபறிபோவதை யாரும் கணக்கெடுப்பதில்லை. எல்லாம் விழுங்கப்பட்ட பின் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேதனையடைவார்கள். அதன் பலனை இப்போ அனுபவிக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

 

இதைத்தான் பலதடவை சொல்லியுள்ளேன். அரசு  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தங்கள் முகவர்மூலம் பிச்சையாக போட்டு, தன் சொந்தநலனையும், வாக்கு வங்கியையும் நிரப்பி, அவர்களின் உரிமையையும், நிலங்களையும் பறித்து,  அவர்களின் வாயையும்  அடைக்கிறது. முகவர்களும் தங்கள் வங்கி கணக்குகளையும் நிரப்பி, சொத்துக்களையும் குவித்து, அடியாட்களையும் வளர்ப்பதுதான் நடக்கிறது. அற்ப சொற்ப நலன்களுக்காக உரிமைபறிபோவதை யாரும் கணக்கெடுப்பதில்லை. எல்லாம் விழுங்கப்பட்ட பின் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேதனையடைவார்கள். அதன் பலனை இப்போ அனுபவிக்கிறோம்.

இதுதான் உண்மை. ஆனால் இதனை மறைத்து தமது தலைவர்கள் என்று சொல்வோரின் பின்னால் கண்களை இறுக மூடி, காதுகளைக் கட்டிக்கொண்டு பின்செல்கிறார்கள். 

தமது புதிய தலைமைகள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கைக்கூலிகள் என்று நன்கு தெரிந்த பின்னரும் அவர்கள்  பின்னால் செல்பவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இன்று இருக்கிறார்கள். அவர்கள் செய்வதைத் தெரிந்தே செய்வதால் நாம் அவர்களை மாற்ற முடியாது. அவர்கள் கேட்கப்போவதுமில்லை, ஏற்கப்போவதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டும் அல்லாமல் மகிந்த ராஜபக்சக்கு ஒரே தடவையில் 30000 பேர் பட்டதார்ரிகளுக்கு வேலைவாய்ப்பும் , மோட்டார் சைக்கிள் , பெண்களுக்கு ஸ்கூட்டியும் வழங்கியதால் அவருக்கு இப்ப கூட தமிழ் படிச்ச பட்டதாரிகள் வாக்களிக்கிறார்கள் என்பது கன பேருக்கு தெரியாத உன்மை 

இதே மஹிந்த ஒருதடவை சொன்னார். நான் வடக்கு மக்களுக்கு வீதிகளை அமைத்தேன், புகையிரதம் ஓட வைத்தேன், பல அபிவிருத்திகளை செய்தேன் ஆனால் அவர்களது மனங்களை  என்னால் வெல்ல முடியவில்லை. அவர்கள் என்னை தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள். அந்தத் தோல்வியே  தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போ சிங்களவரை உசுப்பி, ஆசை காட்டி சிங்கள மக்களாலேயே வென்றோம் எனும் மாயை காட்டுகிறார்கள். அப்படிஎன்றால் ஏன் சில விலைபோன  முகவர்களை தம் கட்சியின் பெயரில் எம்மத்தியில்  களமிறக்க வேண்டும்? அவர் எங்களுக்கு உதவுவதாக நினைத்து எதை எதையோ செய்கிறார் ஆனால் அவை எல்லாம் எங்களுக்கு தேவைதானா என்பதை தெரிந்து கொள்வதில்லை.  நாங்கள் இழந்ததை, எமது உரிமையை திருப்பி தருமா? இதை செய்வதன்மூலம் எம்மிடம் இருந்து பறித்ததை நிலையாக தன் வசம் வைத்திருப்பதற்கு  வழங்கப்படும் கையூட்டு என்பதுமட்டுமல்ல எம்மை திசை திருப்பும் யுக்தி என்பது  எம்மில் பலருக்கு விளங்குவதில்லை. எம்மிடம் இருந்து பறித்த எமது  உரிமையைத் திருப்பித் தந்தால் எமக்கு எது தேவையோ அதை நாமே  நிறைவேற்றுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

இதே மஹிந்த ஒருதடவை சொன்னார். நான் வடக்கு மக்களுக்கு வீதிகளை அமைத்தேன், புகையிரதம் ஓட வைத்தேன், பல அபிவிருத்திகளை செய்தேன் ஆனால் அவர்களது மனங்களை  என்னால் வெல்ல முடியவில்லை. அவர்கள் என்னை தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள். அந்தத் தோல்வியே  தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போ சிங்களவரை உசுப்பி, ஆசை காட்டி சிங்கள மக்களாலேயே வென்றோம் எனும் மாயை காட்டுகிறார்கள். அப்படிஎன்றால் ஏன் சில விலைபோன  முகவர்களை தம் கட்சியின் பெயரில் எம்மத்தியில்  களமிறக்க வேண்டும்? அவர் எங்களுக்கு உதவுவதாக நினைத்து எதை எதையோ செய்கிறார் ஆனால் அவை எல்லாம் எங்களுக்கு தேவைதானா என்பதை தெரிந்து கொள்வதில்லை.  நாங்கள் இழந்ததை, எமது உரிமையை திருப்பி தருமா? இதை செய்வதன்மூலம் எம்மிடம் இருந்து பறித்ததை நிலையாக தன் வசம் வைத்திருப்பதற்கு  வழங்கப்படும் கையூட்டு என்பதுமட்டுமல்ல எம்மை திசை திருப்பும் யுக்தி என்பது  எம்மில் பலருக்கு விளங்குவதில்லை. எம்மிடம் இருந்து பறித்த எமது  உரிமையைத் திருப்பித் தந்தால் எமக்கு எது தேவையோ அதை நாமே  நிறைவேற்றுவோம்.

இவர்கள் எமது உரிமைகளையும் தாயகத்தையும் விற்றுத்தான் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் வாங்குகிறார்கள். இதில் இடைத்தரகர்களாக இருப்பவர்கள்தான் பிள்ளையான், கருணா, அமல், டக்கிளஸ், அங்கஜன் போன்றோர்.

மகிந்த எனும் போர்க்குற்றவாளியை இக்களத்தில் போற்றுமளவிற்கு விலைபோய்விட்டார்கள் என்பது வேதனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

இவர்கள் எமது உரிமைகளையும் தாயகத்தையும் விற்றுத்தான் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் வாங்குகிறார்கள்.

இவர்கள் அரசுக்கு முண்டு கொடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வைக்கும்  கோசம் இது.  உண்மையானால்: இன்று இவர்கள் பிரிவு அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டிருக்கவேணுமே? வேலையற்ற  படித்த பட்டதாரிகள் என்கிற பதமே இருந்திருக்காதே? ஒவ்வொரு தேர்தலின்போதும் அதே பல்லவியோடல்லவா வருகிறார்கள்? சிங்களம் தூக்கியெறியும் எலும்பை நிரந்தரமென்று நினைக்கிறார்கள். இன்று கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, நாளைக்கு வருமானதுக்குமேல் சொத்து சேர்த்தார், மோசடி செய்தார் என்று கொடுத்ததை பறித்துவிடும். அடியாட்களை தன் கூலிப்படையாய் பயன்படுத்தும், காரியம் முடிந்தவுடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று போட்டுத்தள்ளும். அதுவரை அக்களிக்கட்டும்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.