Jump to content

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.!

Screenshot-2021-01-27-11-26-25-051-org-m

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது."

- இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும். ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது.

இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/01/28/22032/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது."

வல்லரசுகள் ரஷ்ய/சீன கவுண்மேந்து கூட இப்பிடியொரு அறிக்கைய காலாகாலத்துக்கும் விட்டது கிடையாது......  சிறிலங்கா உலகத்துக்கே வல்லரசு...😎

எங்கை போய் முட்டுறது... 🥀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இங்குதான் நாட்டில் உள்ள நாரை, நரி, நண்டெல்லாம் கூவுறது. அங்கு போய் மண்டியிடுவினம். சமாளிச்சு, பொய்சொல்லி நாடகமாடி, நம்மடையளும் சான்றிதழ் கொடுத்து தப்பிவிடலாம் என எண்ணி மக்களை ஏமாற்ற வீராப்பு  பேசுறது. கடந்த அரசாங்கம் விட்ட பிழையால் நாம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு திரும்பி வருவினம். கடந்த அரசாங்கமும் விட்ட தவறை மறைக்க முயன்றும் முடியாமலே இந்த முடிவை எடுத்தது என்பது தெரிந்தும் சாட்டுவார்கள் குற்றம்.  

Link to comment
Share on other sites

ஆனனபடட துருக்கி எர்டாகோனே இப்போது அடிபணிந்து வாலை சுருட்டிக்கொண்டு போய் விடடானாம் , இவற்ர வாய்ச்சவடால்கள் எல்லாம் வேற்று வெட்டுகள்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2021 at 06:51, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2021 at 00:24, குமாரசாமி said:

வல்லரசுகள் ரஷ்ய/சீன கவுண்மேந்து கூட இப்பிடியொரு அறிக்கைய காலாகாலத்துக்கும் விட்டது கிடையாது......  சிறிலங்கா உலகத்துக்கே வல்லரசு...😎

எங்கை போய் முட்டுறது... 🥀

ஆக .... வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்ல வில்லை,  நாம  சிங்கமய்யா, சிங்கம்... சிங்கள் ஆ தான் உலகத்துக்கே தண்ணி காட்டுவோம்.

பண்ணியில் பண்ணிப்பாருங்கோவன்..

 

*****

2008ல் ராணுவம், மடுவினை கடந்து மன்னார் நோக்கி போகிறது.

இதே ரம்புக்வெல வாய் எகத்தாளம் கதைக்கிறது.... உலகமே வந்தாலும், தம்மை நிறுத்த முடியாது என்று....

ஒரு வெள்ளை ஐலண்ட் பேப்பரில் எழுதுகின்றார்..... சிங்களவர்களே, ஒரு நாள் உலகம் உங்கள் மண்டையில் பெரிய குட்டு ஒன்று வைக்கும்.

அதன் போது, உங்கள் நாட்டினை இழக்கும் நிலையில் இருப்பீர்கள். கவலைப்படுவதை தவிர வேறு ஒன்றுமே செய்யமுடியாமல் போகலாம்.

அவர் சொன்ன நிதர்சனம் வருகின்றது என்றே நினைக்கிறேன்.

இலங்கை சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களின் பெரும் தவறே, ராஜ்ஜியங்களை இழக்க காரணமாகி உள்ளமை வரலாறு.

ராவணன் தொடங்கி, விஜயபாகுவின் மூன்று மகன்கள், சிங்கள பகுதியையும், சங்கிலியன் யாழ்பாணத்தினையும் போர்த்துகேயரிடமும் இழக்க..... விட்ட அதே தவறினை போர்த்துக்கேயர் விட, ஒல்லாந்தரும், பின்னர் பிரிட்டிஷ்காரரும், கண்டியின் கடைசி நாயக்கர் (சொன்னா, சிலபேர் கோவிப்பார்கள்) விட்ட தவறினால், கண்டியும் வீழ , பிரிட்டிஷ்காரர் நீங்கும் போது, ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் விட்ட தவறினால், தமிழர் நிலம் சிங்களவனிடம் சிக்கிய நிலைமையும் நடந்தது.  

இப்போதும் அதே தவறு நடப்பதாகவே தோன்றுகிறது.

சீனா காரன்  கொடுக்கும் மன, பண பலத்தினால் வந்த திமிர்.

சிங்களவனுக்கு புரியாத ஒரு விடயம், சீனாவுக்கு, டிரம்ப் இடைஞ்சல் உண்டாக்கிய, சில வர்த்தக தடைகளில், விட்டுக்கொடுப்புகளை செய்வதன் மூலம், அமெரிக்கா, இலங்கைகளுள் செய்ய நினைப்பதை, சிங்களவன் தடுக்க முடியாமல் போகலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.