Jump to content

பாக். பிரதமரின் விஜயம்; இந்தியாவின் அணுகுமுறைக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கிறதா இலங்கை ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாக். பிரதமரின் விஜயம்; இந்தியாவின் அணுகுமுறைக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கிறதா இலங்கை ?

Screenshot-2021-01-28-11-30-40-324-com-a

இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு இராஜதந்திர நகர்வுக்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன் பிரதிமைகள் இலங்கைக்கு இலாபகரமானதாக அமையுமா அல்லது நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வியுடன் அது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை வருகைக்குப் பின்னர் அதீதமான மாற்றங்கள் இலங்கைப் பரப்பில் ஏற்படத் தொடங்கியுள்ளதாக கடந்த பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு பதிலளிக்கும் விதத்தில் உள்நாட்டிலும் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் இயங்க ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு நகர்வாகவே பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக தெரிகிறது. அதனை பற்றியதாகவே இக்கட்டுரையும் அமையவுள்ளது.

பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை வருகையை இலங்கை ஆட்சியாளர்கள் முதன்மைப்படுத்தி வருகின்றனர்.பாகிஸ்தான் பிரதமரது இலங்கை விஜயம் பொருளாதார அடிப்படையைக் கடந்து இராணுவ விடயங்களிலும் அரசியல் ரீதியிலும் அதிக கரிசனையுடையதாக அமைய வாய்ப்பு அதிகமுண்டு. காரணம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் முதன்மையான நாடு கிடையாது. அது இராணுவ ஆட்சியிலும் அரசியல் ரீதியில் இந்தியாவுக்கு எதிரானது என்ற அடிப்படையிலும் நோக்கப்படும் நாடு என்பது கவனத்திற்குரியதாகும். இலங்கை ஜனநாயகத்தை முதன்மைப்படுத்தும் நாடு மட்டுமன்றி சட்டத்தின் ஆட்சிக்குள் இயங்குவதற்கு அதிகம் முயற்சிக்கும் தேசமாக விளங்குகிறது. அதற்காக சுதந்திரத்திற்கு பிந்திய காலத்தை அதிகம் செலவிட்டுள்ளது.. தற்போது மட்டுமே அதிலிருந்து விலகுவதாக அதிக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனாலும் அவ்வப் போது இராணுவ ஆட்சிக்கான முனைப்புக்களை வெளிப்படுத்திய போதும் பிராந்திய சர்வதேச அழுத்தங்களால் அதற்கான வாய்ப்புகளிலிருந்து தவறியுள்ளது. ஆனால் சமகாலத்தில் ஆட்சியிலுள்ள சக்திகள் இராணுவத்தின் பங்கினை வலுவானதாக மாற்றிக் கொண்டு செல்வதென்பது ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அத்தகைய சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும் வி-தத்தில் பாகிஸ்தான பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் அமையலாம் என்ற நோக்கில் பார்க்கப்படுகிறது. காரணம் கொவிட்-19 மற்றும் கடந்த முப்பது வருடம் வடக்கு கிழக்கு மீதான போர் என்பன இலங்கை இராணுவத்தின் வலுவை அதிகரித்துள்ளது. அதன் செல்வாக்கு அரசியலில் பதிவாகும் காலமாக கொவிட்-19 அமைந்துள்ளது. இது உலகத்தில் அனேக நாடுகளில் நிகழ்ந்து வருகிறது. ஆனால் இலங்கையில் சற்று அதிகமானதாக காணப்படுகிறது. இதன் விளைவு இராணுவ தேசமாக மாற்'றிவிடுமா என்ற எண்ணத்தைர வலுவானதாக ஆக்கக்கூடியதே. பாகிஸ்தானின் அனுபவம் அவ்வாறானதாகவே அமைந்திருந்தது. யாஸாயாக் ஹான் முதல் பர்வேஸ் முஸாராப் வரை பாகிஸ்தான் அரசியலில் இராணுவத்தின் பிரசன்னத்தை அதிகரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகளே காரணமானவர்களாக காணப்பட்டனர். அதிலும் முன்னாள் பிரதமர் அலி பூட்டோ இராணுவத்தில் 11வது நிலையிலிருந்த உல் ஹக்கை இராணுவத் தளபதியாக்கியதன் விளைவே பூட்டோ தூக்கிலிடப்பட்டார் என்பது கவனத்திற்குரிய செய்தியாகும்.

தென் பூகோள நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகம் சார் அரச கட்டமைப்புகளை விட அதிகாரம் சார் கட்டமைப்புக்களின் வளர்ச்சியே முதன்மையானதாக காணப்படுகிறது. அனேகமான நாடுகள் அதிகாரப் போட்டிக்காகவே ஆட்சி அதிகாரத்தை நாடுகின்றனர். அத்தகைய அரச கட்டமைப்புகளும் அதிகார வர்க்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆட்சியாளரைப்பற்றியும் அவர்களது பாதுகாப்பு மற்றும் அதிகார அளவீடுகள் பற்றியதாகவே அரசியலமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.தென் பூகோள நாடுகளின் அனேக அரசியலமைப்புக்கள் பொருளாதாரக் கொள்கையற்று சமூக நோக்குநிலையற்று விளங்குகின்றன. இதனாலேயே இந்நாடுகளது பொருளாதார வளர்ச்சி சாத்தியமற்றதாக அமைந்துவிடுகின்றன. அது மட்டுமன்றி ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்படும் மோதல் இராணுவத்தின் பிரசன்னத்தை நோக்கிய நகர்வை சாத்தியமாக்குகின்றது. கண்டியர் ஆதிக்கம் வீழ்ந்தது போல் கறுவாத் தோட்ட அரசியலும் ஹம்பாந்தோட்டையின் அரசியலால் வீழட்ச்சியை நோக்கியுள்ளது. இதே தருணமே பாகிஸ்தானின் ஆட்சித் துறையில் இராணுவ பிரசன்னத்திற்கு வழியமைத்தது.

இத்தகைய நகர்வு உள்நாட்டில் எப்படியானதாக அமைந்தாலும் எதிர்வினைகள் பலவீனமானதாகவே அமையும். ஆனால் பிராந்திய மட்டத்திலும் பூகோள மட்டத்திலும் மிக எச்சரிக்கை உடையதாக அமைய வாய்ப்புள்ளது. ஜே.வி.பி. இனது எழுச்சியின் போதும் வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்தின் போதும் அத்தகைய எதிர் வினைகளை பிராந்தியத் தளத்திலிருந்து அவதானிக்க முடிகிந்தது.அத்தகைய அனுபவம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் அவதானிக்க முடிந்தது. அதில் பிராந்திய பூகோள சக்திகள் இணைந்திருந்தன என்பதை அக்காலப்பகுதியில் காணமுடிந்தது. எனவே அதற்கான வாய்ப்புக்களை தடுக்கும் உத்திகளை பிராந்'திய பூகோள தளத்திலிருந்து பார்த்துக் கொள்வதற்கான சூழல்கள் அதிகரி-ப்பதாக தெரிகிறது. ஆனாலும் பாகிஸ்தான் பிரதமரது இலங்கைப் பயணம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.

முதலாவது இந்தியாவின் அண்மைய நடவடிக்கைகளுக்கு ஒரு பதில் அளிப்பது அல்லது எதிர்வினையாறட்றுவதாகவே தெரிகிறது. இந்திய வெளியுறவு அமைச்சரது விஜயம் அதிக நெருக்கடியை இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் அதனை சமநிலைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை ஆட்சித்துறைக்கு உண்டு. அதிகாரச் சமநிலைக்கான போராட்டம் ஒன்றின் களத்துக்குள் அரசுகள் இயங்குகின்றன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நடைமுறை இந்தியாவுக்கும் பூகோள சக்திகளுக்கும் ஒரு செய்தியை கொடுக்கும். அதற்கு பதிலளிக்க இந்தியா உடனடியாக முயலும். அது எதிரானதாக மட்டும் அமையாது சார்பானதாகவும் அமைய வாய்ப்புண்டு. சார்பானதாக அமைந்தால் அது இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமானதாக மாறும்.

இரண்டாவது பாகிஸ்தான் பிரதமர் வருகை என்பது வெளிப்படையாக இரு நாட்டுக்குமான உறவாகவே கருத வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வாறு எண்ணுவதை விட தனது எதிரி நாட்டின் பிரசன்னம் தனது இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும் என்ற நோக்கில் அமையும். சுதந்திரத்திலிருந்து இரு நாட்டு அரசியலும் எதிர் துருவங்களாக செயல்பட்டதன் விளைவு என்பது மறுக்க முடியாது. எனவே இந்தியா இத்தகைய உறவை தனக்கு எதிரான உறவாகவே பார்க்க முயலும்.

மூன்றாவது பாகிஸ்தான் பிரதமரது விஜயம் சீன சார்புச் சக்திகளின் உறவைக் காட்டுவதாகவே இந்தியா மட்டுமல்ல பூகோள அரசுகளும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் கருத வாய்பட்புள்ளது. காரணம் சீன- பாகிஸ்தான் உறவானது பொருளாதார மற்றும் இராணுவ பாதுகாப்பு சார்ந்தது. மிக அண்மையில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டதுடன் இரு நாட்டுக்குமான நட்புறவை இரும்பாலான பிணைப்பு என பிரதமர் குறிப்பிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.அது மட்டுமல்ல இலங்கை அத்தகைய உறவுக்குள் சென்றுவிட்டாலும் தடுத்து நிறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என இந்தியா முனைகின்ற போது பாகிஸ்தான பிரதமரது இலங்கை விஜயம் அவ்வளவு ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

நான்கு இதனை இலங்கை ஒரு இராஜதந்திர உத்தியாகவே பார்கிறது. அதாவது இந்தியாவுக்கு இலங்கையின் போக்கு எப்படியானதாக அமையும் என்பதை சுட்டுவதாகவே தெரிகிறது. அதாவது இலங்கை விடயத்தில் இந்தியாவின் எல்லையை வெளிப்படுத்தியதுடன் அதனை இந்தியா மீறுமாயின் இலங்கை பயணிப்பதற்குரிய பாதை எதுவென்பதும் சுட்டப்பட்டுள்ளது.அதில் பாகிஸ்தான் ஒரு எடுகோளாகவே இலங்கை கருகிறது. பலமான சீன -பாகிஸ்தான் இலங்கை நட்புறவு உருவாகும் என்பதையும் இந்தியாவுக்கு உணர்த்தியுள்ளது

ஐந்து இத்தகைய எண்ணத்திற்கு சமகாலத்தில் இரு விடயங்களை அடையாளப்படுத்த முடியும். அதாவது இந்தியா வான்பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு 19.01.2021 இல் வழங்கியுள்ளது. 20.01.2021 இல் இலங்கை கடற்படையில் மோதுண்டு தமிழக மீனவர்கள் இறந்துள்ளதாகவும் அவர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய சிறியரக கபட்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

எனவே பாகிஸ்தான் பிரதமரது இலங்கை விஜயம் அதிகமான எதிர்வினைகளை ஆற்றக்கூடியதாகும். இலங்கை ஆட்சித்துறையிலுள்ளவர்கள் எப்போது நெருக்கடி காலத்தில் முகாமை செய்யும் இராஜதந்திரத்தை கொண்டவர்கள் என்பதை கவனித்தல் அவசியம். இந்தியத் தரப்பு எத்தகைய நகர்வை நோக்கி பயணிக்கப் போகிறது என்பது முக்கியமானதாகும். தற்போதை வெளியுறவும் தமிழக தேர்தல் களமும் இலங்கையிடம் கட்டுப்படுவதை அதிகம் ஒரு தெரிவாக இந்தியா கொள்ள வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

http://aruvi.com/article/tam/2021/01/28/22036/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.