Jump to content

தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி

naam-tamilar-party-is-the-guide-for-national-and-dravidian-parties-seeman-interview கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் | படம்: ஜெ.மனோகரன்.

234 தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சென்னை மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் தலா 117 ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடுகின்றனர். வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை அப்போது அறிவிப்பேன்.

தேசியக் கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் எங்கள் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்குகிறது. ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்பதைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகவே திமுகவில் சுற்றுச்சூழல் பாசறை அமைக்கப்பட்டது.

இயற்கை வேளாண்மை, ஆடு, மாடு வளர்ப்பு அரசுத் தொழிலாக்கப்படும் என்று நான் பேசியபோது கேலி செய்த கட்சிகள், தற்போது இதையே பேசி வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும், திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் வாக்குக்காகச் செய்கிறார்கள். நாங்கள் அதை உணர்வாகச் செய்கிறோம். அவ்வளவுதான் வேறுபாடு.

திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு முன் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதைச் செய்யவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது. தென் மாநிலங்களில் தங்களுடைய இருப்பைத் தக்க வைக்க முயற்சி செய்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாகக் களத்தில் இறங்கியிருக்கும்.
அதே நேரத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் செவி சாய்க்காது. 4 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றதைக் கண்டும், காணாமல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள்தான் இதைத் தடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''.

இவ்வாறு சீமான் கூறினார்.

அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது? நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? வாக்காளர்களை எவ்வாறு அணுகி வாக்குச் சேகரிப்பது? என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/626364-naam-tamilar-party-is-the-guide-for-national-and-dravidian-parties-seeman-interview-1.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

இந்த திரி பற்றுமா ? ரெல் மீ.! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

tenor.gif

இந்த திரி பற்றுமா ? ரெல் மீ.! 👍

நிச்சயம்..... பெற்றோல் ஊத்தியாவது, பத்த வைக்கவேணும் தோழர். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயம்..... பெற்றோல் ஊத்தியாவது, பத்த வைக்கவேணும் தோழர். 🤣

நீங்கள்  ஒன்றும் பற்றவைக்க தேவையில்லை கருத்துக்களத்தில்  சீமான் என்ற பெயரை பார்த்தவுடன் உடலெல்லாம் பதறி  வேர்த்துக்கொட்டியபடி கொஞ்சப்பேர் ஓடிவருவினம் பாருங்க .வெய்ட்  அண்ட் சி ......................😆

 

மறை நீர் பற்றி அழகாக நம்மாழ்வார் சொல்லியிருப்பார் அதை சீமான் லூசு ஊர் ஊராக போய்  கூட்டங்களில் சொல்லும்போது கூட அந்த மக்களுக்கு புரிந்து இருக்குமா தெரியலை கடைசியாக பூமி திரைப்படத்தில் கதாநாயகன் மறைநீர் பற்றி விளக்குவார் படம் பார்க்கும் மக்களுக்கு விளங்கி இருக்குமா என்பது சந்தேகமே .மறைநீரை விளங்கிக்கொண்டவரால் கே கே ஸ் ல் சீமெந்து  தொழில் சாலை மீள  இயங்க அனுமதிக்க மாட்டினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீங்கள்  ஒன்றும் பற்றவைக்க தேவையில்லை கருத்துக்களத்தில்  சீமான் என்ற பெயரை பார்த்தவுடன் உடலெல்லாம் பதறி  வேர்த்துக்கொட்டியபடி கொஞ்சப்பேர் ஓடிவருவினம் பாருங்க .வெய்ட்  அண்ட் சி ......................😆

 

மறை நீர் பற்றி அழகாக நம்மாழ்வார் சொல்லியிருப்பார் அதை சீமான் லூசு ஊர் ஊராக போய்  கூட்டங்களில் சொல்லும்போது கூட அந்த மக்களுக்கு புரிந்து இருக்குமா தெரியலை கடைசியாக பூமி திரைப்படத்தில் கதாநாயகன் மறைநீர் பற்றி விளக்குவார் படம் பார்க்கும் மக்களுக்கு விளங்கி இருக்குமா என்பது சந்தேகமே .மறைநீரை விளங்கிக்கொண்டவரால் கே கே ஸ் ல் சீமெந்து  தொழில் சாலை மீள  இயங்க அனுமதிக்க மாட்டினம் .

உண்மைதான் பெருமாள்.... நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பிரதேசத்தில், 

சீமெந்து தொழிற்சாலை அமைவது... ஆபத்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான் பெருமாள்.... நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பிரதேசத்தில், 

சீமெந்து தொழிற்சாலை அமைவது... ஆபத்தானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாராப்பா சீமான் திரி ஆரம்பிச்சது..... ஓகோ... கிருபன் அய்யாவே...

உங்களுக்கு போரடிச்சு போச்சு கிருபன் சார்... அதுதான் நீங்களே போட்டு தொடங்கி இருக்கிறியள்..

சாரி.... வீ ஆர் வெரி பிஸி... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

தாராப்பா சீமான் திரி ஆரம்பிச்சது..... ஓகோ... கிருபன் அய்யாவே...

உங்களுக்கு போரடிச்சு போச்சு கிருபன் சார்... அதுதான் நீங்களே போட்டு தொடங்கி இருக்கிறியள்..

சாரி.... வீ ஆர் வெரி பிஸி... :grin:

நாதமுனியர்.... உந்த பிஸி, கிஸி எல்லாத்தையும் கிடப்பிலை போட்டுட்டு... 😁

குமாரசாமி அண்ணையையும், பையன் தம்பியையும் கூட்டிக் கொண்டு,  ஓடி வாங்கப்பூ... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான் பெருமாள்.... நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் பிரதேசத்தில், 

சீமெந்து தொழிற்சாலை அமைவது... ஆபத்தானது.

ந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம்.

உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு முழுக்க ஆடம்பரம் என நாம் கண்டுள்ள வளர்ச்சி, கடந்த 30 வருடங்களில் அபரிமிதமானது. 
 
ஆனால் கூர்ந்து பார்த்தால் இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், நாம் தொலைத்த வளங்கள் ஏராளம். அதில் ஒன்று தண்ணீர்.  பூமியில் 71% தண்ணீர் உள்ளது. அதில் 99.7% தண்ணீர் மனிதர்களால் பயன்படுத்தமுடியாது.

மீதமுள்ள 0.3% தண்ணீர் மட்டுமே மனிதன் பயன்படுத்த தக்கதாக உள்ளன. அந்தத் தண்ணீரைத்தான் நாம் விவசாயத்திலிருந்து, ராக்கெட் உற்பத்தி வரைக்கும் பயன்படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு....
 

ஒரு ஏ4 அளவு பேப்பர் - 11 லிட்டர் தண்ணீர்
ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் - 5 லிட்டர் தண்ணீர்
 
ஒரு கிளாஸ் பீர் - 74 லிட்டர் தண்ணீர்
ஒரு பர்கர் - 2500 லிட்டர் தண்ணீர்
 
ஒரு கிளாஸ் பால் - 208 லிட்டர் தண்ணீர்
ஒரு கிளாஸ் ஒயின் - 118 லிட்டர் தண்ணீர்
 
ஒரு ஜோடி காலணி -  7770 லிட்டர் தண்ணீர்
ஒரு டி ஷர்ட் - 1960 லிட்டர் தண்ணீர்
 
ஒரு ஜீன்ஸ் - 6660 லிட்டர் தண்ணீர்
ஒரு பார் சாக்லேட் - 2500 லிட்டர் தண்ணீர் 
 
1.1 டன் எடையுள்ள கார் - 4 லட்சம் லிட்டர் தண்ணீர்
 
அதிர்ச்சியடையாதீர்கள். இதுதான் உண்மை.  அடுத்த உலகப் போர் ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கான நீர் அரசியல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு,  நடந்துகொண்டிருக்கின்றன. எப்படி என்கிறீர்களா? அந்த காரணத்தை,  நாம் இழந்துவிட்ட இரண்டு வளமான ஆறுகள் சொல்லும்.
 
உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்! #WhereIsMyGreenWorld
 
நொய்யல் ஆறு
 
திருப்பூர்,  துணிகளுக்குப் பேர் போன நகரம். ஆனால் அங்கு உற்பத்தி செய்யப்படும் துணி வகைகள் பெரும் பாலும் ஏற்றுமதியே செய்யப்படுகின்றன. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 6000 லிட்டர் தண்ணீரும், ஒரு டி ஷர்ட் தயாரிக்க 1900 லிட்டர் தண்ணீரும் என ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதற்கான தண்ணீரை நம் நீராதாரங்களிலிருந்து எடுப்பதோடு மட்டுமல்லாமல், துணிகளுக்குச் சாயமிட்டப் பிறகு அந்த சாயக் கழிவுகளும் நீர்நிலைகளில்தான் கொட்டப்படுகிறது. இந்தச் சாயக் கழிவுகளால் அழிந்ததுதான் நொய்யல் ஆறு. 

பாலாறு
 
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தோல் பொருட்களைத் தயாரிப்பதற்கான பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றுமதி செய்யும் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்களில் இருந்த தோல் பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரால் பாலாறு நாசமானது. 

தண்ணீரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்!
 
 
ஏன் உலக நாடுகள் இங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அங்கு இல்லாத தொழில் நுட்பமா, அங்கு இல்லாத வளங்களா, அங்கு இல்லாத எந்திரங்களா? பிறகு ஏன் உலக நாடுகள் இந்தியாவில் கடை போடுகின்றன. காரணம் தங்கள் வளங்களின் மீது அவர்களுக்குள்ள அக்கறை. அவற்றை பாதுகாக்க ஆரம்பித்து விட்டார்கள். மனித வளச் சுரண்டலையும், இயற்கை வளச் சுரண்டலையும் செய்ய அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாம்தான் வளங்களை வாரிக் கொடுப்பதில் வள்ளல்கள் ஆயிற்றே. 
நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களால் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. மாறாக பொருட்களின் வழியே பல கோடி லிட்டர் தண்ணீரையே ஏற்றுமதி செய்கிறோம்.
 
உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்! #WhereIsMyGreenWorld
 
நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நாமே நம் நீர் ஆதாரங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பெரும்பாலான பொருட்களை உலக நாடுகள் நம் நாட்டிலிருந்துதான் உற்பத்தி செய்து இறக்குமதி செய்துகொள்கின்றன. 
 

மேலும் அந்தப் பொருட்கள் இங்குள்ள எல்லோருக்குமானவையாகவும் இல்லை என்பது மற்றொரு சோகம். பணம் படைத்தவர்கள்தான் ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் திருடு போவதோ, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதோ பெரும்பாலானோருக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அந்த வகையில் எளிய மக்கள் முட்டாளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது சோகம். இது மட்டுமா?
இங்கு 10 ல் 9 பேர் ஷவரில் குளிக்க விரும்புகிறார்கள். நம் அன்றாட தண்ணீர் செலவில் ஷவரில் குளிக்க மட்டுமே 27 சதவிகிதத்தை வீணாக்குகிறோம். ஒருவர் ஷவர் மூலம் ஒருமுறை குளிக்கும் தண்ணீரில், குடிசைப் பகுதியினர் ஒரு முழு நாளுக்குப் பயன்படுத்தலாம். வெஸ்டர்ன் டாய்லெட்டில் நாம் செய்யும் ஒரு சிங்கிள் ஃப்ளஷில் 12 லிட்டர் தண்ணீர் போகிறது. நகரங்களில் குழாய்களில் உள்ள விரிசல்கள் வழியே 50% நீர் வீணாகிறது.
 
உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்! #WhereIsMyGreenWorld
 
உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள்.
 

நாம் இதுவரை தொலைத்த தண்ணீரை இனி நம்மால் மீட்டெடுக்க முடியாது. ஆனால் இப்போது மிச்சமுள்ள நீர் ஆதாரங்களை நாம் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கு இந்த நிமிடத்தில் இருந்து நமது பணியை துவக்கவேண்டியது அவசியம். இனிவரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து தண்ணீராக இருக்க வேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகள் இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் உற்பத்தியைச் செய்வது தண்ணீரைத் திருட மட்டுமல்ல. ஊதியம், காப்புறுதி இதர சலுகைகள், தொழிலாளர் உரிமைகள் என்பன மிகவும் குறைவு. எனவே இலாபம் அதிகம். 

எனவே தண்ணீரைக் காக்க வேண்டுமென்றால், மேற்குத் தராதரத்திற்கு ஊதியத்தையும், இதர பாதுகாப்புகளையும் கூட்ட வேண்டும். உற்பத்தித் துறை சுருங்கும், தண்ணீரில் மிதக்கலாம்!😎

ஆனால், அப்படி செய்ய முதல் மாற்றுத் தொழில்களுக்கு உதவும் கல்வியை வளர்த்து விட்டுத் தான் பிளக்கைப் பிடுங்க வேண்டும்! இல்லையேல் உலக உணவுத் திட்டத்தில் தங்கியிருக்க வேண்டி வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்.... உந்த பிஸி, கிஸி எல்லாத்தையும் கிடப்பிலை போட்டுட்டு... 😁

குமாரசாமி அண்ணையையும், பையன் தம்பியையும் கூட்டிக் கொண்டு,  ஓடி வாங்கப்பூ... 🤣

ம்ம்..ம்.. 

க்....க்கும்...

உங்கை எல்லோரும் நிண்டு அடிபட, கிருபன் அய்யாவை காணக்கிடையாது. ஆள் தொடங்கின வேலை, நல்லா போகுதோ எண்டு அப்பப்ப வந்து பார்ப்பார்.... நல்லா போகலை எண்டால், பெட்ரோலை எட்டி நின்று ஊத்திப்போட்டு போடுவார். 

ஆனால், அவர் தொடங்கின திரி எண்டபடியால, பூட்டச்சொல்லி, பெட்டிசம் போடார்.... அது மட்டும் அடிச்சு சொல்லலாம்...

நாங்க வரேல்லை இந்த விளையாட்டுக்கு...  :grin:

Link to comment
Share on other sites

Quote

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு எண்டு ஜோசித்தால்.... அவர்... நம்ம தத்தி.... ஸ்டாலின் தான் இதை சொல்லி, மீம்ஸ் காரரிடம் வாங்கிக் கட்டியவர். 😄

அவர் சொன்னது: கேக்கிறவன் கேனையன் எண்டால், கேரளாவில  எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுச்சாம். (ஒரு தலைவனுக்கு இந்த உவமானம் தேவையா என்று கிழித்தார்கள்).

அது சரி நீங்கள் புகுந்து விளயாடுங்கோ. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால், ஒரு தமிழக மீனவனைக்கூட, இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. எங்களுக்கென்று தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து, எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் வாக்கு கேட்போம்''.

கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்து கொண்டு ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக 80களில் ராமேஸ்வரக் கடலில் படகேறிய நெடுமாறன் நினைவுக்கு வருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

ஏன் அது உண்மையாக இருக்கக் கூடாது..? இலங்கைக் கடர்பரப்புக்குள் போவது தண்டனைக்குரியதாக செயற்படுத்தினால் போயிற்று.. 👍

48 minutes ago, Kavi arunasalam said:

கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்து கொண்டு ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக 80களில் ராமேஸ்வரக் கடலில் படகேறிய நெடுமாறன் நினைவுக்கு வருகிறார்.

ஆமிக்காறன் சுடுவான் பேசாம வீட்டில இருந்தாப் போச்சு.. 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

ஏன் அது உண்மையாக இருக்கக் கூடாது..? இலங்கைக் கடர்பரப்புக்குள் போவது தண்டனைக்குரியதாக செயற்படுத்தினால் போயிற்று.. 👍

👍 இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்க்கை மேலும் இவர்களால்  பாதிக்கப்படுவது முடிவுக்கு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை  தாண்டும் மீனவர்களின் படகை மட்டும் தடுத்து வைத்தால் காணும் டி  ஆர் பாலு பாய்ந்துவிழுந்து வந்து மறுபடியும் ராஜபக்ஸவின்  காலில் விழுந்து கிடப்பார் .அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் ஒரு கடத்தல் அங்கு நடைபெறுவதில்லை கேரள கஞ்சா என்று சொல்லப்படும் பொருள் உண்மையில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆந்திர மீனவர்களால் கடத்தப்படும் பொருள் இடையில் தரகர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பினாமிகள் மூலம் இலங்கையின் கரையோரங்களை அடைகிறது .இங்கு கேரளா கஞ்சா என  ஊடகங்கள் விளிப்பது  ஒருவித திசை திருப்பல் இந்த கடத்தல் விடயம் அரசுகளுக்கு தெரியும் . கடத்தலின் பெரும் வகி பாகம் இருபெரும்  தமிழக கட்சியின் பினாமிகளே  . 70அல்லது 80 வள்ளம்கள்  இலங்கை கரைக்கு கிட்ட வருகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் சரக்கு இன்னும் கைமாறப்படவில்லை டன் கணக்கில் உள்ள கஞ்சா உள்ள வள்ளம் பொருள் கைமாறாமல் துறைமுகம் திரும்புவதில்லை பதிலாக அது ஆழ்  கடலிலேயே  நிக்கும் வேலை செய்பவர்கள் மட்டும் வேறு படகுகள் மூலம் உணவு தண்ணீர் உடன்  மாறிக்கொள்வார்கள் . அதே அவர்கள் கூட்டமாக முல்லைதீவு பக்கமாக கிழக்காக  கிளம்பினார்கள் என்றால்  சர்வதேச கப்பலுக்கு லிங்க் பண்ணுகிறார்கள் என அர்த்தம் .

கொடுமை என்னவென்றால் யாரோ கடத்தல் செய்ய யாரின் பெயரையோ முகப்பில் போட்டு வியாபாரம் செய்தார்கள் 2009 மட்டும் .

எனவே கூட்டமாக வரும் படகு கூட்டத்தை பிடித்துக்கொண்டு மீனவர்களை  அனுப்பி விட்டாலே காணும் சிலவேளை டன்  கணக்கில் தங்கம் உள்ள படகுகளும் மாட்டும்  போர்முடிந்ததும் அவசர அவசரமாக வந்து பொன்னாடை போர்த்திய கையோடு சில மீனவ படகுகளை விடுவிக்க வேண்டுகோள் வைத்தவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

எல்லை  தாண்டும் மீனவர்களின் படகை மட்டும் தடுத்து வைத்தால் காணும் டி  ஆர் பாலு பாய்ந்துவிழுந்து வந்து மறுபடியும் ராஜபக்ஸவின்  காலில் விழுந்து கிடப்பார் .அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் ஒரு கடத்தல் அங்கு நடைபெறுவதில்லை கேரள கஞ்சா என்று சொல்லப்படும் பொருள் உண்மையில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆந்திர மீனவர்களால் கடத்தப்படும் பொருள் இடையில் தரகர்களாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பினாமிகள் மூலம் இலங்கையின் கரையோரங்களை அடைகிறது .இங்கு கேரளா கஞ்சா என  ஊடகங்கள் விளிப்பது  ஒருவித திசை திருப்பல் இந்த கடத்தல் விடயம் அரசுகளுக்கு தெரியும் . கடத்தலின் பெரும் வகி பாகம் இருபெரும்  தமிழக கட்சியின் பினாமிகளே  . 70அல்லது 80 வள்ளம்கள்  இலங்கை கரைக்கு கிட்ட வருகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் சரக்கு இன்னும் கைமாறப்படவில்லை டன் கணக்கில் உள்ள கஞ்சா உள்ள வள்ளம் பொருள் கைமாறாமல் துறைமுகம் திரும்புவதில்லை பதிலாக அது ஆழ்  கடலிலேயே  நிக்கும் வேலை செய்பவர்கள் மட்டும் வேறு படகுகள் மூலம் உணவு தண்ணீர் உடன்  மாறிக்கொள்வார்கள் . அதே அவர்கள் கூட்டமாக முல்லைதீவு பக்கமாக கிழக்காக  கிளம்பினார்கள் என்றால்  சர்வதேச கப்பலுக்கு லிங்க் பண்ணுகிறார்கள் என அர்த்தம் .

கொடுமை என்னவென்றால் யாரோ கடத்தல் செய்ய யாரின் பெயரையோ முகப்பில் போட்டு வியாபாரம் செய்தார்கள் 2009 மட்டும் .

எனவே கூட்டமாக வரும் படகு கூட்டத்தை பிடித்துக்கொண்டு மீனவர்களை  அனுப்பி விட்டாலே காணும் சிலவேளை டன்  கணக்கில் தங்கம் உள்ள படகுகளும் மாட்டும்  போர்முடிந்ததும் அவசர அவசரமாக வந்து பொன்னாடை போர்த்திய கையோடு சில மீனவ படகுகளை விடுவிக்க வேண்டுகோள் வைத்தவர்கள் .

இந்த நன்றி நவிலல்கள் எல்லாம் எதற்கு....? 
பார்க்கிறவனும் கேக்கிறவனும் கேணையன்.
புரிந்தவன் புத்திசாலி.😎
 

tamil makkal kural: nenjam marappathillai,kanimozhi srilanka visits

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

கேக்கிறவன் கேனையன் எண்டால் எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.😋

இந்தியாவிலையே தமிழ் நாடு சகல வளமும் சகல வல்லமையும் பொருந்திய நாடு.
 எதற்காக வட இந்திய பெரிய கட்சிகள் இரண்டும் தமிழ்நாட்டை கைப்பற்ற போராடுகின்றன என  சிந்தித்தால் நீங்கள் பிஸ்தா....🤠

Link to comment
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவிலையே தமிழ் நாடு சகல வளமும் சகல வல்லமையும் பொருந்திய நாடு.
 எதற்காக வட இந்திய பெரிய கட்சிகள் இரண்டும் தமிழ்நாட்டை கைப்பற்ற போராடுகின்றன என  சிந்தித்தால் நீங்கள் பிஸ்தா....🤠

தல நீங்கள், முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுகின்றிர்கள் 🤕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்.... உந்த பிஸி, கிஸி எல்லாத்தையும் கிடப்பிலை போட்டுட்டு... 😁

குமாரசாமி அண்ணையையும், பையன் தம்பியையும் கூட்டிக் கொண்டு,  ஓடி வாங்கப்பூ... 🤣

என்ன சிறித்தம்பி? அந்த கூட்டமே சீமான் தூக்கின வேலோடை தான் இப்ப நிக்கிது. இதுக்கு பிறகும் இந்தப்பக்கம் வருவினமே?

மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு |  DMK leader MK Stalin received a silver Vel gift at the Thiruthani Murugan  Temple | Puthiyathalaimurai - Tamil ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி

வேல் எடுத்த ஸ்டாலின்.. கலாய்த்த சீமான் ....🤠

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

மறை நீர் பற்றி அழகாக நம்மாழ்வார் சொல்லியிருப்பார் அதை சீமான் லூசு ஊர் ஊராக போய்  கூட்டங்களில் சொல்லும்போது கூட அந்த மக்களுக்கு புரிந்து இருக்குமா தெரியலை கடைசியாக பூமி திரைப்படத்தில் கதாநாயகன் மறைநீர் பற்றி விளக்குவார் படம் பார்க்கும் மக்களுக்கு விளங்கி இருக்குமா என்பது சந்தேகமே .மறைநீரை விளங்கிக்கொண்டவரால் கே கே ஸ் ல் சீமெந்து  தொழில் சாலை மீள  இயங்க அனுமதிக்க மாட்டினம் .

மறை நீரைப் பற்றி..... நம்மாழ்வாரும், சீமானும் மட்டுமே அக்கறை கொண்டுள்ளார்கள் போலுள்ளது.

ஏன் திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் அதனைப் பற்றி வாயே திறப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

ஏன் திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் அதனைப் பற்றி வாயே திறப்பதில்லை.

திராவிட  கட்சிகள்  தமிழனை அடிமைப்படுத்தி பணம் பார்க்க அரியணை ஏறுபவர்கள் அவர்களுக்கு மறை நீரை பற்றி விளங்கிக்கொள்ள ஆந்திரா கன்னடா மொழிகளில் விளக்கம் கொடுக்கணும் .😄

**

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கோவி: சீமானும் சீமானின் தாத்தாக்களும்.....(தேர்தல் ஸ்பெஷல்)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கைது – மலேசிய நாம்  தமிழர் இயக்கம் கடும் கண்டனம் – Malaysiakini

அவர்கள் திருந்தி இருந்தால்... 😎

தமிழ்த் தேசியத்துக்கு கிடைத்த வெற்றியே... 👍🏼

அதனை... பாமர மக்களிடமும், கொண்டு போய் சேர்த்த பெருமையில்..
செந்தமிழன் சீமானுக்கும்,  பெரும் பங்கு உண்டு. ❤️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.