Jump to content

`வால் ஸ்ட்ரீட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' - #GameStop கேங்ஸ்டர்ஸ் `சம்பவம்' செய்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான் திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

அத்அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கேம்ஸ்டாப் (GameStop). இது வீடியோ கேம்கள் மற்றும் அது தொடர்பான பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணிகளும் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது.

 

இதுபோன்ற சிறிய நிறுவனங்களை பெரிய பங்கு வர்த்தகர்கள் பொய்யான டிமாண்டை உருவாக்கி விலையேற்றத்தை உருவாக்குவது வழக்கம். அந்த நிறுவனத்தின் பங்கு அதிக விலைக்கு உயர்ந்தவுடன் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். அதிக விலைக்கு வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திப்பார்கள். இதுபோன்று பங்கு விலையில் அதிக ஏற்ற இறக்கங்களைப் பெரிய நிறுவனங்களில் செய்ய முடியாது. சிறிய நிறுவனங்கள்தான் அவர்களின் இலக்காக இருக்கும்.

கேம்ஸ்டாப் நிறுவனத்தை இதற்காகப் பெரும் வர்த்தகர்கள் தேர்ந்தெடுத்தனர். கேம்ஸ்டாப் பங்கின் விலை ஜனவரி 21 அன்று 43 டாலர் என்னும் அளவுக்கு வர்த்தகமாகி வந்தது.

பங்குச் சந்தையில் வர்த்தகர்கள் பங்கை வாங்கி அதன் பிறகு, அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பார்கள். இது ஒரு வகை. மற்றொரு வகையில் தினசரி வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை ஏறும் என்று நினைத்து, பங்குகளை முதலில் வாங்கி பிறகு விற்பதுபோல, ஒரு பங்கின் விலை இறங்கும் என்று நினைக்கும்போது பங்குகளை முதலில் விற்றுவிட்டு, பின்பு விலை குறைந்த பின் வாங்கி லாபம் பார்ப்பார்கள். இது தினசரி வர்த்தகத்தின் ஒரு வழிமுறை ஆகும். அதே சமயம், நாம் முதலில் விற்றுவிட்டு, பின் வாங்கும்போது விலை குறைவாக இருந்தால் லாபகரமாகவும், விலை ஏற்றத்தில் இருந்தால் நஷ்ட மாகவும் முடிய வாய்ப்புண்டு. இதற்கு ஷார்ட் டிரேடிங் என்று பெயர்.

அதன்படி ஜனவரி 22-ம் தேதி பெரிய பங்கு தரகு நிறுவனம் (Hedge Fund Group) அதிக அளவில் கேம்ஸ்டாப் பங்குகளை முதலில் விற்கத் தொடங்கியது. இந்த ஊரடங்கு காலத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் அதிக அளவு சிறு முதலீட்டாளர்கள் ஈடுபடத் தொடங்கினர். சிறு முதலீட்டாளர்களின் மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு மொத்த கணக்குகளில் 15 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. அது 20 சதவிகிதமாக 2020-ம் ஆண்டு உயர்ந்துள்ளது.

GameStop store
 
GameStop store AP Photo/Nam Y. Huh, file

அமெரிக்க பங்குச் சந்தை தற்போது உச்ச அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதற்கு புதிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அங்கு சிறு பங்குச் சந்தை முதலீட்டாளர்களை இணைப்பதற்குப் பல வலைதளங்கள், ஆன்லைன் குழுக்கள் உதவிகரமாக இருக்கின்றன. அதில், ரெட்டிட் (Reddit) என்பது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் எளிதாக பணம் பார்ப்பதற்கு சிறிய நிறுவனங்களையே அதிகம் விரும்புவார்கள். அதுதான் அதிக ஏற்ற இறக்கம் உடையதாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்கள் இது போன்ற சிறிய நிறுவன பங்குகளை வாங்கி நஷ்டமடைந்து விரைவாக பங்குச் சந்தையை விட்டுச் சென்று விடுவார்கள். அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள்.

 

ரெட்டிட் இணைய தளத்தில் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்கப்படுவதைக் கண்டுபிடித்தனர். அந்தப் பங்கின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் மூலம் ஒரு பெரிய நிறுவனம் அதிக அளவு ஷார்ட் செய்கிறது என்பதை அறிந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு பெரிய தரகு நிறுவனம் விற்ற அனைத்து பங்குகளையும் வாங்கத் தொடங்கினர். பொதுவாக, பெரிய பங்கு வர்த்தகர்கள் அதிக அளவில் பங்குகளை விற்கும்போது பங்கு விலை கடுமையாகக் குறையும். அதனால் அன்று சந்தை முடிவதற்குள் குறைந்த விலையில் விற்ற பங்குகளை வாங்கி அதிக லாபம் பார்ப்பது வழக்கம்.

ஆனால், பெரும் முதலீட்டாளர்கள் விற்ற பங்குகள் அனைத்தையும் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணி வாங்கத் தொடங்கியது. இதன் காரணமாகப் பங்கின் விலை உயரத் தொடங்கியது.

 
 

7.1 கோடி கேம்ஸ்டாப் பங்குகளை 6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 43,800 கோடி) என்ற அளவுக்கு பெரிய வர்த்தகர்கள் செயற்கையாகப் பங்குகளை விற்றனர். அத்தனை பங்குகளையும் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணி வாங்கிவிட்டது.

பங்குச் சந்தையில் இதுபோல பங்குகள் வாங்கும் பொழுது முழு பணமும் கையிருப்பு வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் போதும். அந்தப் பங்கை டெலிவரி எடுக்கும்போது மீதித் தொகையைக் கொடுத்துவிடலாம். வாங்கிய பங்குகளை அன்றே விற்று அந்த வியாபார கணக்கு சரி செய்யப்பட்டுவிடும். அதனால் முழுப் பணமும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. லாப நஷ்டங்கள் வித்தியாசத்தைச் செலுத்தினால் போதும். இதை மார்ஜின் டிரேடிங் என்பார்கள்.

அனைத்துப் பங்குகளையும் சிறு முதலீட்டாளர் கூட்டணி வாங்கி விட்டதால் பங்கின் விலை வானத்துக்கும் பூமிக்குமாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக ஜனவரி 21 அன்று 43 டாலருக்கு வர்த்தகமான ஒரு பங்கின் விலை 4 நாள்களில் 347 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல பெரிய பங்கு வர்த்தகர்கள் விழிக்கத் தொடங்கினர். பங்குச் சந்தையின் நிபந்தனைப்படி விற்ற பங்குகளை வாங்கி நேர் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல விலை குறையாமல் எட்டு மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து அந்தப் பங்கை வாங்கி தமது கணக்கை முடிக்கும் நிலை ஏற்பட்டது.

Wall Street
 
Wall Street AP Photo/John Minchillo

இதன் காரணமாக அந்தப் பெரிய தரகு நிறுவனத்துக்கு 13 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான் இதுபோன்ற திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப் பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.

நேற்றைய வர்த்தக முடிவில் கேம்ஸ்டாப் நிறுவன பங்கின் விலை 347.51 என்ற அளவில் 135% ஒரே நாளில் அதிகரித்து முடிவடைந்துள்ளது. இந்த விளையாட்டு இன்னும் முழுமை அடையவில்லை. பெரிய தரகு நிறுவனத்தின் நஷ்டம் வரும் நாள்களில் ஏற்படும் பங்கின் விலைக்கு ஏற்ப மாறலாம்.

 

இந்த விளையாட்டு இப்போது வெள்ளை மாளிகை வரை வந்து நிற்கிறது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேம்ஸ்டாப் நிறுவன பங்குகளில் ஏற்பட்ட அதிக மாற்றங்களை அமெரிக்க அரசு உற்று நோக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இது பெரிய பங்கு தரகு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தையில் பெரும்பாலும் பெரிய தரகு நிறுவனங்கள்தான் அதிக அளவில் பரிவர்த்தனைகள் செய்வதால் இந்த நிகழ்வு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகக் கடந்த இரு நாள்களாக அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் முடிந்து வருகிறது.

சிறு முதலீட்டாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் பெரிய தரகு நிறுவனங்களையும் வீழ்த்த முடியும் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் பங்குச் சந்தைகளின் விதிகளுக்குட்பட்டுதான் நடைபெற்றுள்ளன. இந்த நிகழ்வு பங்குச் சந்தையின் மற்றொரு முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. பங்குச் சந்தை என்பது வியாபாரம். அதில் ஒருவருக்கு ஏற்படும் நஷ்டம் மற்றவருக்கு ஏற்படும் லாபமாகும்.

பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று சிறு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பலர் அதிக நஷ்டம் அடைகின்றனர். பங்குச் சந்தையில் உள்ள ரிஸ்க்கை தெரிந்து அதன் பிறகு, முதலீடு செய்வதே நஷ்டத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றும். இதை ஒவ்வொரு முதலீட்டாளரும் உணர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற பாடத்தை அமெரிக்க நிகழ்வு உணர்த்தியுள்ளது.

`வால் ஸ்ட்ரீட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' - #GameStop கேங்ஸ்டர்ஸ் `சம்பவம்' செய்தது எப்படி? | how reddit's wallstreetbets blew up GameStop shares and made millions (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே  விவசாயி விக் இணைத்து  இருக்கிறார் ஆங்கிலத்தில்  நன்றி இணைப்புக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வால் ஸ்ட்ரீட் தகவல்களுக்கு நன்றி.
நேற்று யாழ்களத்தில் ஈசி ஷேர்காரர்கள் என்ற சொல்லை பார்த்து விட்டு பங்கு சந்தை தொடர்பானவர்கள் என்று முதலில் நினைத்து விட்டேன் 😂 பின்பு தான் விளங்கியது அது வேறு என்று.

 

Link to comment
Share on other sites

. அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள்

ராபின்ஹூட்என்பது ஒன் லைன்  மூலம் இலகுவாக பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு இணைய தளம், இப்போது அமெரிக்கால உள்ளவர்கள் மட்டுமே இதில் கணக்குகளை தொடங்க முடியும் என நினைக்கிறேன்.இதன் மூலமே அதிகளவான புதியவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனனர்

https://robinhood.com/signup

  உண்மையாக சொல்ல போனால் அமெரிக்கா பங்கு வர்த்தகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து..சரியான தகவல்கள் மூலம் நல்ல பங்குகளை வாங்குவீர்களானால்  நல்ல லாபம் பெற பெற முடியும்

எனது அனுபவத்தை எழுதுகிறேன் 
ஆரம்பத்தில் சில ஆயிரம் அமெரிக்கா டொலர் முதலீட்டுடன் பெரியளவான முன் அனுபவம் ஏதும் இன்றி பங்கு மார்க்கெட் ல கால் வைத்தேன் 
பயோ நானோ டைனமிக்ஸ் சார்ந்த ஒரு பங்கினை அது சம்பந்தமான செய்தியை பார்த்துவிட்டு காலையில் ஆர்டர் பண்ணினேன்(1share/ 1.36$)க்கு. எனக்கு (1share/1 .86$) கிடைத்தது அன்று இரவு அந்த பங்கு கிட்டதட்ட 1 share/7.32 $ வரை போனது.இப்போது அது 1share/10 -12 $ அளவில் போகிறது நன் வாங்கியது சில நூறு பங்குகள் இதுவே ஆயிரம் அளவுகளில் வாங்கியிருந்தால் எனது லாபங்கள் ஆயிரம்களில் இருந்து இருக்கும். 

எடிட் என்னும் இனொரு மருத்துவத்துறை சார்ந்த பங்கினை 32$க்கு வாங்கினேன்  அது இறுதியாக 96 $  வரை உயர்ந்து இப்போது குறைந்துள்ளது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

. அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள்

ராபின்ஹூட்என்பது ஒன் லைன்  மூலம் இலகுவாக பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு இணைய தளம், இப்போது அமெரிக்கால உள்ளவர்கள் மட்டுமே இதில் கணக்குகளை தொடங்க முடியும் என நினைக்கிறேன்.இதன் மூலமே அதிகளவான புதியவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனனர்

https://robinhood.com/signup

  உண்மையாக சொல்ல போனால் அமெரிக்கா பங்கு வர்த்தகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து..சரியான தகவல்கள் மூலம் நல்ல பங்குகளை வாங்குவீர்களானால்  நல்ல லாபம் பெற பெற முடியும்

எனது அனுபவத்தை எழுதுகிறேன் 
ஆரம்பத்தில் சில ஆயிரம் அமெரிக்கா டொலர் முதலீட்டுடன் பெரியளவான முன் அனுபவம் ஏதும் இன்றி பங்கு மார்க்கெட் ல கால் வைத்தேன் 
பயோ நானோ டைனமிக்ஸ் சார்ந்த ஒரு பங்கினை அது சம்பந்தமான செய்தியை பார்த்துவிட்டு காலையில் ஆர்டர் பண்ணினேன்(1share/ 1.36$)க்கு. எனக்கு (1share/1 .86$) கிடைத்தது அன்று இரவு அந்த பங்கு கிட்டதட்ட 1 share/7.32 $ வரை போனது.இப்போது அது 1share/10 -12 $ அளவில் போகிறது நன் வாங்கியது சில நூறு பங்குகள் இதுவே ஆயிரம் அளவுகளில் வாங்கியிருந்தால் எனது லாபங்கள் ஆயிரம்களில் இருந்து இருக்கும். 

எடிட் என்னும் இனொரு மருத்துவத்துறை சார்ந்த பங்கினை 32$க்கு வாங்கினேன்  அது இறுதியாக 96 $  வரை உயர்ந்து இப்போது குறைந்துள்ளது.
 

இப்போ எல்லோரும் செய்யவேண்டிய ஒரு கட்டாய வேலை 
காரணம் இப்போ சிறு குழந்தைகளாக தவழ்ந்துகொண்டு இருக்கும் 
சில கொம்பனிகள்தான் பின்னாளில் உலகை ஆள போகும் கொம்பனிகள்.
இப்போது ஒரு டாலர் கூட பெறுமதி இல்லாதவைகள் இன்னும் 5-10 வருடத்தில் 
$500 வரை செல்ல கூடிய வாய்ப்பு இருக்கிறது. 

க்ளவுட் அண்ட் நெட் செக்குரிட்டி 
டிஜிட்டல் பணம் (க்ரிப்டோ)
ரோபோடிக் 
எலக்ட்ரிக் வாகனம் 
எலக்ட்ரிக் சேகரிப்பும் பாதுகாப்பும் (சூரியன் + காற்றில் இருந்து)
5ஜி நெட்வெர்க் 
ட்ரான் டெக்னாலஜி (Drone Technolgy எதிர்கால பொருள் காவிகள் அவைதான் இன்னும் 10 வருடத்தில் நீங்கள் லொறிகளை காண மாட்டீர்கள்) 
மருத்துவம் (இனி உங்கள் வருத்தங்களுக்கு பெரிதாக மருந்து செய்ய போவதில்லை ... உங்கள் டிஎன்எ வையே மாற்றி அமைக்க போகிறார்கள். செல்களை மாற்றி அமைக்க போகிறார்கள் re-design your DNA and cells) 
குவந்தோம் கொம்ப்யூட்டர்ஸ் 

இவையெல்லாம் இப்போ தவழும் குழந்தை நிலையில் இருப்பன ஆனால் எதிர்கால உலகை ஆழ போகிறவர்கள்  யார் என்ன செய்கிறார்கள் என்று சரியான வாசிப்பு இருந்தால் போதும் 
இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விட கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை அல்லது காணொளி பார்த்துவிட்டு எவ்வாறு மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் வெற்றிகரமான முதலீட்டாளரக பலவிடயங்கள் உள்ளது அவற்றைக்கருத்திற்கொள்ளாமல் முதலீட்டில் குதித்தால் நீண்டகாலத்தில் பண இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது, இது ஓர் ஆலோசனை அல்ல எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  GME  என்ற GameStop இல் இரண்டு 100$ படி இன்று வாங்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

  GME  என்ற GameStop இல் இரண்டு 100$ படி இன்று வாங்கியுள்ளேன்.

$200 தானே பெரிதாக கவலைப்பட தேவை இல்லை 
  இது இனி ஏறும் மாதிரி தெரியவில்லை. இதற்கு எல்லாம் வழி சமைத்தவர் 
இன்று $13 மில்லியன்களை இழந்து உள்ளார். ஆனாலும் எந்த பங்கையும் விற்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை வருமான வரியில் விலக்கு பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு
பொதுவாக வருமான வரித்துறையினர் இரு வகையாகப்பார்க்கிறார்கள்
1. முதலீட்டு வர்த்தகம்
2. தின வர்த்தகம்
தின வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை முழுமையாக உங்கள் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம், ஆனால் முதலீட்டு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகள் உங்கள் எதிர்கால முதலீட்டு வர்த்தக வருமானத்திலிருந்து விலக்கு வழங்கப்படும், அத்துடன் முதலீட்டு வர்த்தகத்திற்கு வருமான வரியும் குறைவு,நாடுகளுக்கிடையே இதற்கு வேறுபாடு காணப்படலாம், மேலும் இந்த விபரம் ஒரு குத்து மதிப்பான விபரம் அத்துடன் நான் கணக்காய்வாளருமல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.