Jump to content

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.!

Screenshot-2021-01-29-09-48-01-239-com-a

2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் போரை நிறுத்தி பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்த்திரி பவன் முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருந்த 'வீரத் தமிழ்மகன்' முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகிறது.

ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து சாவடைந்த முத்துக்குமாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சென்னை கொளத்தூரில் இவ் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் நினைவேந்தல் இன்று (ஜன-29) காலை 09.00 மணி முதல் சென்னை கொளத்தூரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அன்புடையீர் வணக்கம்,

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் (29.01.2021) இன்றாகும்.

தன்னுடைய ஈடு இணையற்ற உயிர்த்தியாகத்தாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும் உலகெங்கும் தமிழினத்தை தலைநிமிரச் செய்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழர்களை ஒன்று திரட்டி வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புலவர் புலமைப்பித்தன், சத்யராஜ், த.வெள்ளையன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமாரின் திருவுடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் ஈழ சொந்தங்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் முதலான 27 ஈகியர் நினைவாக அந்த மலர்த்தூண் அமைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

29.01.2021 வெள்ளிக்கிழமை காலை 10.07 மணியளவில், முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த அதே நேரத்தில் வீரத்தமிழச்சி செங்கொடியின் சார்பாக தோழர்.பேரறிவாளனின் தாயார் அற்தம்மாள், முத்துக்குமாரின் தாயாகவும் திகழ்ந்த சகோதரி தமிழரசி கருக்குவேல்ராஜன் மலர்த்தூணுக்கு மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்க நிகழ்வை தொடங்கி வைக்கின்றனர்.

அவர்களை தொடர்ந்து நிகழ்வில் பங்குபற்றுவோர் மலர் வணக்கம் செலுத்தி மெழுகுவர்த்திகளை ஏந்தி, அந்த தியாகத் திருவிளக்குகள் நம் நெஞ்சில் மூட்டிய அக்கினிக் குஞ்சை நினைவூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

எவரும் பேசாமல், முழக்கங்கள் இல்லாமல், அந்த வீர தமிழ் மகனின் மரணவாக்குமூலம் மட்டுமே பின்னணியில் ஒலித்து கொண்டிருக்க, மௌனமலர் அஞ்சலியாக இந்த நிகழ்வு நடைபெறும் என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறோம்.

முத்துகுமார் முதலான 27 மாவீரர்களின் மனசாட்சியோடு நாம் ஒவ்வொருவரும் மனம்விட்டு பேச வாய்ப்பளிக்கும் விதத்தில் கனத்த அமைதியுடன் நாம் வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.

முத்துகுமாரின் குடும்பத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த மாவீரர்களின் குடும்பத்தினரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முத்துகுமாரின் திருவுடலுக்கு வீரவணக்கம் செலுத்தத் திரண்ட ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வுக்கு உரிமையுடன் அழைக்க வேண்டியது எங்கள் கடமையாகிறது.

அந்த தமிழர் பெருங்கூட்டம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கிறது என்பதை உறுதி செய்வது ஒன்றே இந்த வீரவணக்க நிகழ்வின் நோக்கம். நீங்கள் மட்டுமின்றி உங்கள் அமைப்பும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கின்றோம்.

இந்த நிகழ்வை பொறுத்தவரை நாங்கள் வெறும் நார் மட்டுமே. மலர்களாகிய நீங்கள் தான் இதை மாலையாக்க முடியும். எனவே 2021 சனவரி 29 காலை 9 மணியளவில் நிகழ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை உரிமையோடும் உண்மையோடும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி

இப்படிக்கு,

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு

செம்பியன்.

http://aruvi.com/article/tam/2021/01/29/22068/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகத்தின் நோக்கம் நிறைவேறாதது ஏன்?’ – தோழர் பாஸ்கர்

 
Untitled-1-1.jpg
 69 Views

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதினொரு ஆண்டுகள் கழிந்து பனிரெண்டாவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு கொந்தளிப்பு அப்போது நிறைவேறினாலும், அவரது நீண்டகால நோக்கம் நிறைவேறவே இல்லை.

அவ்வாறு நிறைவேறாது என்பதற்கான தடயங்கள் அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ஒட்டியே நன்கு தெரிந்து விட்டது.  இன்றுவரையிலும் அவ்வாறே. முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தினால் முக்கியமான இரு சாதகங்கள் மட்டும் ஏற்பட்டன.

முதலாவது

தமிழகத்தில் ஈழச் சிக்கல் மேலும் முன்னெப்போதும் விட பரவலான கவனத்தைப் பெற்றது.

இரண்டாவது

எண்ணற்ற நடுத்தர வர்க்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் அரசியல் அரங்கிற்கு வந்தனர்.

ஆனால் இவ்வாறு வந்தோரில் ஏகப்பெரும்பான்மையினரை  திடப்படுத்தாமல் இருக்கவே செய்தன முதன்மையான ஈழ ஆதரவு அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகமானது ஈழ ஆதரவு அமைப்புகள் புதியவை தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. இத்தகைய புதிய அமைப்புகள் ஈழச் சிக்கலுக்காகவே முதன்மையாகச் செயற்படுவதற்கு தோன்றின.

ஆனால் இவை முள்ளிவாய்க்காலின் முதன்மையான போர் குற்றவாளியான இந்திய விரிவாதிக்க அரசை அவ்வாறு அம்பலப்படுத்துவதற்கு தயாராய் இல்லாத அரசியல் கண்ணோட்டத்தில் இருக்கின்றன. இப்பொழுதோ இலங்கையில் இந்திய விரிவாதிக்க அரசின் கூட்டோடு முள்ளிவாய்க்காலை அரங்கேற்றிய கும்பலே மீண்டும் அங்கு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் ஆதரவோடு. ஈழச் சிக்கலுக்கான முதன்மையான பழைய மற்றும் புதிய அமைப்புகள் இதை தடுப்பதற்கு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

அதற்கு இரு காரணங்கள் மட்டும் இருக்கக்கூடும்.

முதலாவது காரணம் என்னவெனில்

இத்தகைய ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள் தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு முகங்கொடுப்பதிலேயே சிக்கியிருக்கக்கூடும்.

இரண்டாவது காரணம் என்னவெனில்

முள்ளிவாய்க்கால் போர் குற்றச் செயல் கும்பலான இராஜபக்ச கும்பலானது  இலங்கையில் ஆட்சிக்கு வந்தால் சீன சாய்வு ஆட்சியை நடத்தும் பட்சத்தில் அதற்கு எதிராய் இந்தியா தலையிடும் எனும் அனுமானம் ஆகும். எவ்வாறாயினும் இந்த அனுமானம் தவறே. இந்தியா தலையிட்டாலும் ஈழம் கிடைக்காது. இந்தியாதான் முதன்மைப் போர் குற்றவாளியாக இருக்கும் நிலையில் அதை எதிரியாய் வரையறுக்காத/அம்பலப்படுத்தாத நிலையில் ஈழம் அறவே கிடைக்காது. இதை இன்னமும் அங்கீகரிக்கத் தயாராய் இல்லை ஈழ ஆதரவு பழைய மற்றும் புதிய அமைப்புகள். முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய கொந்தளிப்பு வழங்கிய வாய்ப்பிலும் அதன் பின்னர் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இதே நிலைமைதான்.  இந்நிலையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் ஏற்படுத்திய உணர்வை தட்டியெழுப்பினால்தான் அத்தியாகத்தின் நோக்கத்தை நோக்கி நகருவதற்கு முடியும். அதற்கு யார் உண்மையான எதிரிகள்/துரோகிகள்/சந்தர்ப்பவாதிகள் என்பதை சரியாய் வரையறுப்பதும் அவசியம். “யார் உண்மையான தமிழ் தேசியவாதிகள்/எதிரிகள்/துரோகிகள்/சந்தர்ப்பவாதிகள்…..”

ஈழ ஆதரவு அமைப்புகள் இடையே  இந்த விஷயத்தில் தெளிவு இல்லை. அதனால் முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது.

https://www.ilakku.org/?p=40633

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் ...ஒருத்தரும் அஞ்சலி செலுத்தக் காணோம் ...அவ்வளவு தான் இவர்களது இறப்பிற்கு உள்ள மரியாதை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத் தமிழ்மகன்... முத்துக்குமாரனுக்கு, வீர வணக்கங்கள்.  😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீதான இனப்படுகொலை யுத்தத்திற்கு எதிராக தன்னை தானே தீமூட்டி எரித்து மக்களின் மனதில் அனலை விதைத்த  தமிழகத்து உணர்வாளன் முத்துக்குமார் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமை செயலகத்தில் நடைபெற்றது . 

Bild

Bild

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.