Jump to content

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு


Recommended Posts

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை  முதல்வரிடம் கையளிப்பு

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு

 

 
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிட பலகைகள் சீரமைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

அங்கு ஒவ்வொரு மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் அறிவுறுத்தலில் உள்ளூர் அச்சகம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகளை சீர்செய்ய சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்ட பலகை ஒன்று இன்று முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

அதனையடுத்து அனைத்து பலகைகளும் இன்று அகற்றப்பட்டு சீரமைத்து சில தினங்களுக்குள் மீளவும் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு (adaderana.lk)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை தமிழ் அழகாக நடுவில் இருப்பதே சிறப்பு.  பார்ப்பவர்களுக்கு எப்போதும் நடுப்பகுதியே முதலில் கண்ணில் தென்படும் என்பது எனது கருத்து.  தற்போதைக்கு வேறு வேலைகள் எதுவுமில்லாததால் இவ்வாறு பெயர்ப்பலகைகளை மாற்றியமைக்கலாம் - போதிய நிதியும் நேரமும் இருந்தால்.

முன்பு தந்தை செல்வாவின் காலத்தில் சிங்கள சிறீ எழுத்துக்குத் தார்பூசி அழித்தார்கள், பின்னர் தமிழ் ஸ்ரீ போட்டு வாகனங்களில் ஓடினார்கள்.  அக்காலத்திலும் நிறைய நேரமும் நிதியுமிருந்தது.  ஆனால் சில இளைஞர்கள்  அதனைப் பின்னரும் செய்து தங்கள் எதிர்ப்பைக்காட்ட ஆமி வந்து பெடியளைத் துவைத்தெடுத்தது.

போராட்ட வடிவங்களை மாற்றும் விடயத்தில் இந்த எழுத்து மற்றும் பெயர்ப்பலகைகளை மாற்றும் உத்திகளை சம்பந்தப்பட்டவர்கள் கையிலெடுக்கிறார்கள்.

அரசாங்கத்திலும் சில அமைச்சர்களுக்கு  வேலைகள் கொஞ்சம்  குறைவாக இருப்பதால் இத்தகைய மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுத் தங்கள் கடமைகளை உரிய முறையில் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் உலகம்தான் இவற்றில் அதிகம் கவனம் செலுத்தாமல் படுவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி என்றோ அல்லது KANDY என்றோ எழுதுவது தவறு.

மகாநுவர என்று தமிழிலும் Maha nuwara என்று ஆங்கிலத்திலும் எழுதுவது தான் சரியானது. சிங்கள மொழியில் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனவோ அதேபோல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் & உச்சரிக்கப்பட வேண்டும்.

சிறீலங்கா ஓர் பெளத்த சிங்கள நாடு, தழிழ் பிரதேசம் ஆனாலும் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். இப்படி தமிழில் எழுதுவதனால் தேவையில்லாமல் பிரதேசவாதமும் இனவாதமும் தூண்டப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கண்டி என்றோ அல்லது KANDY என்றோ எழுதுவது தவறு.

மகாநுவர என்று தமிழிலும் Maha nuwara என்று ஆங்கிலத்திலும் எழுதுவது தான் சரியானது. சிங்கள மொழியில் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனவோ அதேபோல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் & உச்சரிக்கப்பட வேண்டும்.

சிறீலங்கா ஓர் பெளத்த சிங்கள நாடு, தழிழ் பிரதேசம் ஆனாலும் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். இப்படி தமிழில் எழுதுவதனால் தேவையில்லாமல் பிரதேசவாதமும் இனவாதமும் தூண்டப்படுகிறது.

அப்படி என்றால்... சிங்களவன் இனி யாழ்ப்பாணத்தை, யாபனய என்று சொல்லக் கூடாது சரியா... மீரா. 😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

அப்படி என்றால்... சிங்களவன் இனி யாழ்ப்பாணத்தை, யாபனய என்று சொல்லக் கூடாது சரியா... மீரா. 😁🤣

இல்லை தனா சினா,

யாழ்ப்பாணம் என்று கூறுவது தவறு...

தமிழில் யாபாணய என்றும் ஆங்கிலத்தில் Japanaya என்றும் எழுதப்பட்டு உச்சரிக்கப்பட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

இல்லை தனா சினா,

யாழ்ப்பாணம் என்று கூறுவது தவறு...

தமிழில் யாபாணய என்றும் ஆங்கிலத்தில் Japanaya என்றும் எழுதப்பட்டு உச்சரிக்கப்பட வேண்டும்.

 

சீன மொழியில் எப்படி உச்சரிக்க வேண்டும்...? தவிர யாழ்ப்பாண மக்களில் சிங்கள இரத்தம் ஓடுவதாக சிங்கள இராணவமும் சொல்லிச்சு.🤪 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்ட பலகை ஒன்று இன்று முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

இதைப்பார்த்தால் சிங்கள அமைச்சர்களுக்கும், தேரர்களுக்கும் விசர் பிடிக்கப்போகுது. விஷேமாக அரசியற்கோமாளி விமல் உருத்தாண்டவமே ஆடிடுவார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.