Jump to content

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சர்வதேசம் நாட்டு அபிவிருத்திக்கென கொடுத்த உதவிகள் தமிழ்மக்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட போது வராத கேள்வி....
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரண உதவிகள் சிங்கள தேசத்திற்கு பரிமாறப்பட்ட போது வராத கேள்வி....
யுத்தத்தின் பின்னர் உலக நாடுகளால் தமிழர் பிரதேசங்களுக்கு மட்டும் என அளிக்கப்பட்ட உதவிகள் ஏனைய பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டப்பட்ட போது வராத கேள்வி...

மௌனிக்கப்பட்ட  விடுதலைப்புலிகள் மீது மட்டும் எழும் வரும்?

புலி மீது சேறடிப்பது என்று முடிவெடுத்தபின் சிங்களவன் என்ன செய்தால் என்ன இந்தியன் என்ன செய்தால் என்ன எங்களுக்கு புலி மீது சேறடிக்கணும் அதுதான் எங்கள்  இலக்கு .😁

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

1. யூட்டர் இன்னொரு இடத்தில் சொன்னதை நான் எதிர்க்கவில்லையென்பது பிரச்சினையா? அதை நான் உள்ளூர ஆமோதித்தால் ஏன் எதிர்க்க வேண்டும்? உங்களிடம் முதுகு சொறியல் வாங்கவா? அது ஏன் இங்கே பேசு பொருள் இப்ப? எழுத எதுவும் இல்லையா?

2.  புலிகள் தங்கள் பணத்தை நன்றாக நிர்வாகம் செய்தார்கள். அதில் தானமும் இருந்தது. ஆனால், தமிழ் மக்களின் கல்விக்காக, பொருளாதார உயர்வுக்காக என்று பிரதானமாக எதுவும் செய்யவில்லை என்பது அங்கே வசித்த என் அவதானிப்பு. அங்கே வசிக்காத உங்களுக்கு என்ன சொல்லப் பட்டது என்று நான் அறியேன்!

3. சுயவிளம்பரம் என்பதை நீங்கள் அந்த நோக்கத்தில் பயன்படுத்தியதை விட, அதிக சந்தர்ப்பங்களில் எதிர்கருத்தாளர் எதுவும் செய்யாமல் பேசுகிறார் என்று தட்டிக் கழிக்க அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்! அண்மைய திரிகளில் உங்கள் கருத்துக்களை நீங்களே தேடி வாசிக்க வேண்டும்! 

கந்தையா, நீங்கள் மீளவும் வேறு வரிகளில் எழுதியிருப்பதெல்லாம் போராட்டத்தின் தவறுகளுக்கு எல்லாத் தமிழர்களும் காரணகர்த்தர்கள் என்று தான்! அர்த்தமேயற்ற வெற்றுக் கோசம் இது!

எனவே தான் முள்ளிவாய்க்காலை உதாரணமாகக் காட்டினேன். உங்கள் வாதப் படி தமிழர்கள் அரைவாசிக் காரணமான ஒரு இன அழிவுக்கு, எப்படி தமிழர்களே வழக்குத் தொடுப்பது? 

எப்படி சிங்களவர்அனைவரும் போராட்ட வெற்றியைக்கொண்டடுகிறார்கள்? அதேபோல்  தமிழர்கள் அனைவரும் போராட்டத்தோல்வியை ஏன்  எற்க்ககூடாது?உங்கள் கருத்துகள் முன்னுக்கு பின் முரனாகவுள்ளது...ஒர் இடத்தில் என் வாதத்தை துணைக்கு அழைக்கிறிர்கள்.  இன்னேர்இடத்தில் எதிர்க்கிறிர்கள் .இது தமிழர் போராடடம்..தீர்வு தமிழர்களுக்கானது .தமிழர்களை ஏன? தனித்தனியாக நோக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் . யாரில் பிழையிருந்தாலும் நீதிமன்றமே தீர்ப்பு கூற வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

புலி மீது சேறடிப்பது என்று முடிவெடுத்தபின் சிங்களவன் என்ன செய்தால் என்ன இந்தியன் என்ன செய்தால் என்ன எங்களுக்கு புலி மீது சேறடிக்கணும் அதுதான் எங்கள்  இலக்கு .😁

பெருமாள்! இவர்கள் 20,30 வருடங்களாக புலிகள் மீது சேறடித்து என்னத்தை கண்டார்கள்? ஏதாவது ஒன்றை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்? எனக்கு எதுவுமே தெரியவில்லை. 10 வருடங்களாகி விட்டது. இவர்கள் தமிழில் எழுதுகின்றார்களே ஒழிய  சாரம்சம் அனைத்தும் இனவாத சிங்களத்தின் பிரதிபலிப்பாபகவே தெரிகின்றது.
பல இடங்களில் இவர்களை தமிழர்களாகவே பார்க்க முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்லும் கருத்து தோல்வியை அடிப்படையாக வைத்து சொல்லப்படுகிறது.ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு பேயில் பண்ணினால்  அந்த மாணவன் பள்ளிக்கூடம்..போய்யிருக்கக்கூடாது..என்பிர்கள் போலுள்ளது.

போர் தோல்வியையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிடுவது விசித்திரமாக உள்ளது. போரினால் விலைமதிபற்ற உயிர் இழப்புக்கள், உடல் அவயங்கள் இழப்புகள், பொருள் இழப்புக்களுமே ஏற்பட்டது.  போரில் காணாமல் போனோர்களை தேடி 12 வருடங்களின் பின்னரும் அவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மாணவன் பெயில் ஆனால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து படித்து நல்ல நிலையை தான் அடைவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

எப்படி சிங்களவர்அனைவரும் போராட்ட வெற்றியைக்கொண்டடுகிறார்கள்? அதேபோல்  தமிழர்கள் அனைவரும் போராட்டத்தோல்வியை ஏன்  எற்க்ககூடாது?உங்கள் கருத்துகள் முன்னுக்கு பின் முரனாகவுள்ளது...ஒர் இடத்தில் என் வாதத்தை துணைக்கு அழைக்கிறிர்கள்.  இன்னேர்இடத்தில் எதிர்க்கிறிர்கள் .இது தமிழர் போராடடம்..தீர்வு தமிழர்களுக்கானது .தமிழர்களை ஏன? தனித்தனியாக நோக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் . யாரில் பிழையிருந்தாலும் நீதிமன்றமே தீர்ப்பு கூற வேண்டும்..

வெற்றிக்கு ஆயிரம்பேர் தகப்பன் தோல்விக்கு ............................

ஜெயசுக்குறு முறியடிப்பு சமர்  ஆனையிறவு வெற்றி களின் போது  அப்ப  தமிழ்நாதம் அதில் பலரும் ஒலிநாடாவில் பதிவு இட்டார்கள் அப்போது எல்லோருமே புலிகளாக தெரிந்தார்கள் புலியை  எதிர்த்து பதிவுகள் பிளாக்குகளில்  இட்டவர்கள் கூட அமைதியானர்கள் . நீங்கள்  யார் என்றால் சிலோன் தமிழ் என்றோம்  கேட்டவன்  புரிந்து கொண்டு தமிழ் டைகர் என்று அவர்களாகவே சொன்னார்கள் நாங்கள் கேட்கவில்லை அப்படி சொல்லு என்று .

ஆனால் இப்போது போல் அப்போதும் ஒரு கூட்டம் நித்திரையின்றி தவித்தனர் அவர்களின் நயவஞ்சக சதிக்கு  ஆயிரக்கணக்கான மக்களும் புனித போராட்டமும் பலியாகியது இனத்தை துழைத்தோம் ஆனாலும் புலிகளின் புகழ்சியை இந்த பத்து வருடங்களில் அடக்க முடியாமல் இன்னும் யாழில் ........................................

6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

போர் தோல்வியையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிடுவது விசித்திரமாக உள்ளது. போரினால் விலைமதிபற்ற உயிர் இழப்புக்கள், உடல் அவயங்கள் இழப்புகள், பொருள் இழப்புக்களுமே ஏற்பட்டது.  போரில் காணாமல் போனோர்களை தேடி 12 வருடங்களின் பின்னரும் அவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மாணவன் பெயில் ஆனால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து படித்து நல்ல நிலையை தான் அடைவான்.

சாரி ராங் நம்பர் நீங்கள்  கேட்கவேண்டிய கேள்வி சிங்கள அரசை பார்த்து ?

நீங்கள்  தமிழ்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீங்கள்  கேட்கவேண்டிய கேள்வி சிங்கள அரசை பார்த்து ?

நீங்கள்  தமிழ்தானே ?

போரரில் தோல்வியடைவதையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிட்டவர் இங்குள்ள யாழ்கள உறுப்பினர் தான்.
நீங்கள்  தமிழ்தானே? ஏன் தமிழ் விளங்கவில்லை?

Link to comment
Share on other sites

10 hours ago, Kandiah57 said:

அந்த சம்பவத்தை அராயவும் தீர்ப்பு கூறவும் நான் விரும்பவில்லை..ஆனால் நீங்கள் ஒவ்வோர் திரியிலும் பிரபாகரனை மிகவும் மூர்க்கமாக எதிர்த்திர்கள் ஏன்?பிரபாகரனைப்போல் உறுதியான கொள்கைப்பற்றுள்ள..சுயநலமற்ற..தலைவனைப் இனி எக்காலத்திலும் தமிழ் இனம் பெறமுடியாது..நீங்கள விரும்பினால் தலைமையை நன்றாக விமர்சனம் செய்யலாம்..ஆனல். 04-02-1948 இலிருந்து தொடங்குங்கள் நானும் வாசிக்க ஆவலாகவுள்ளேன்..இதை விட்டு இடையில் வந்த புலிகளை மட்டும் விமர்சனம் செய்வது என்றால் அது உண்மையில் விமர்சனமில்லை.

(1) 04-02-1948 இருந்து ஆயுதப்போராட்ட ஆரம்பம் வரை..

(2) ஆயுதப்போராட்டக்காலம்..

(3) 18-05-2009இருந்து இன்று வரை  இந்த ஆய்வு முடியமுன் நாடு முழுக்க சிங்கள மயமாகிவிடும். இப்படியான விமர்சனத்தின் பயனாக..இனி எவனும் போராட்டத்துக்கு தலைமை எற்க வர முடியாதபடி எம்மை அறியமால் நாமே தடை செய்தவர்கள் ஆவோம் ஆகவே மறப்போம் மன்னிப்போம் நல்லதே நடக்கும்  எங்கள் அமைவிடம்  ஐரோப்பாவிலிருந்து இருத்தால் ஆறுபது ஆண்டுகளுக்குமுன் ஐ.நா சபையில் அங்கத்தவராகியிருப்போம். சிங்களவர் ஒரு மாநில சுய ஆட்சி தரவிரும்பமையே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்..

கந்தையா, எனது கருத்துகள் எவையும் பிரபாகரன் பற்றியதல்ல.   பிரபாகரனையோ அவரது இராணுவ திறமையையோ விமர்சனம்  செய்யும் தகுதி எனக்கு இல்லை. அதை நான் செய்யவும் இல்லை. நீங்கள்  தான் அடிக்கடி  பிரபாகரனை வலிந்து இங்கே கொண்டு வருகின்றீர்கள்.

எப்படி எவர்  போரிட்டாலும் தோல்வி நிச்சயம் கிடைத்திருக்கும்  என்று ஒன்றிற்கு பல தடவை அழுத்தி  சொல்லிவிட்டு பிரபாகரன் போராடினதால் தான் தோல்வி கிடைக்கும் என்ற உணமையை அறிந்துகொண்டோம்  என்று கூறினீர்கள். உங்கள் கருத்துப் படி தோல்வி கிடைக்கும் என்ற உண்மையை அறிவதற்காக போர் செய்து அதனால் பலியான லட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் பற்றி நீங்கள் கூறவில்லை. அந்த உணமையை அறிவதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் என்று நினைத்தீர்களோ தெரியாது.  

பிரபாகரன் ஒரு இராணுவ மேதை. இராணுவ பலத்தை மட்டும் பெருக்குவதன் மூலம் தமிழர்கள் தமிழ் ஈழத்தை அடையலாம் என்று முழுமையாக நம்பி அதற்காகவே அர்ப்பணிப்புடன்  செயற்பட்டவர்.  இராணுவ ரீதியில் பல சாதனைகளை செய்த சிறந்த இராணுவத்தலைவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

"முள்ளிவாய்க்காலில் அடைத்து வைக்கப் பட்டு இறந்த தமிழர்கள் இறந்தது அவர்களின் தவறு.."

  விடுதலைப் புலிகளும் இராணுவமும் மோதஆரம்பித்த காலத்திலிருந்து இராணுவம் அழித்தது பொதுமக்களையும், அவர்களின் சொத்துதுகளுமே அதிகம். புலிகளின் முகாம்களை தெரிந்தும் அதனை தாக்காது பொதுமக்களையும் அவர்களின் வீடுகளையுமே  குறி வைத்து தாக்கியது. ஒன்று புலிகளின்   எதிர்தாக்குதலில் ஏற்பட்ட உயிர்,உடைமை, விமான சேதம். புலிகளை மக்கள் வெறுத்து தனிமைப்படுத்தல், பொதுமக்களின் அழிவுகளினால் புலிகளை போராட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பது, சாட்டோடு சாட்டாக மக்களையும், சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக்குவது. ஆனால் மக்கள் புலிகள் இருக்கும் இடமே தமக்கு பாதுகாப்பெனஉணர்ந்து அவர்கள் இருக்கும் இடங்களை நாடி குடியமர்ந்தார்கள். அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றுவிட்டு அவர் அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து புலிகளை சுட்டுக்கொன்றோம் என செய்தி வெளியிட்டார்கள். உறவுகள் இறந்தவரின் உடலைக் கேட்ட போதுஅவன் ஒரு புலி என்று கையெழுத்து போட்டு உடலைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அதற்கு உடன்பட மறுத்து உடலை பெற்றுக்கொள்ளாமலே சென்ற உறவுகளும், இதைப்பார்த்து வெறுப்புற்று இயக்கத்தில் இணைந்தவர்களும் உண்டு. குண்டு போட்டு அழிக்கப்பட்ட மக்களையும், அவர் வீடுகளையும் போராளிகள் என்றும் அவர்களின் முகாம்கள் என்றும் விளக்கம் கொடுத்தார்கள். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவித்து குண்டுபோட்டு அழித்த பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள், எத்தனையெத்தனை? செஞ்சோலை  உட்பட.  வன்னிப்போரின்போது அங்கு சிக்கியிருந்த அத்தனை மக்களையும் கொன்றொழிப்பதே அரசின் முழுத்திட்டம். பொதுத் தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றி சாட்சிகளில்லாமல் அழிப்பது, அங்கிருந்த மக்களின் தொகையை வேண்டுமென்றே குறைத்துக்கூறியது, மக்கள் வெளியேறும் வழிகளை தடுத்தது, உணவு மருத்துவ வசதிகளை தடுத்தமை, மனித குலத்துக்கு எதிரான எரி குண்டுகளையும், ஆயுதங்களையும் பாவித்தமை, சமய நிறுவன உணவுகளஞ்சியங்களை குண்டு போட்டு அழித்தமை, வைத்தியசாலைகள் பாடசாலைகள், ஆலையங்கள், பதுங்கு குழிகள், மக்கள் தஞ்சமடைந்த இடங்களில் கண்மூடித்தனமான எறிகணை, விமானக்குண்டுத் தாக்குதல்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக போர் உக்கிரம் அடைய முன்னே ஒட்டுக்குழுக்களின் வி. முரளிதரனின் உதவியுடன் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி உள்நுழைந்து நோயாளர் காவுவண்டிகள், சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு  மக்களோடு மக்களாக கலந்து துல்லியமாக போராளிகளின் அசைவுகளை தெரிந்துகொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது சாட்சி. இதற்கு மேல் மக்கள் தப்புவார்கள் என்று அரசு எதிர்பார்க்காததால் மக்களை மீட்டு பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடு தங்குமிட வசதி ஏதும் பொறுப்புள்ள, மக்களை பாதுகாப்பாக மீட்க போர்செய்த அரசு செய்திருக்கவில்லை. இது இவ்வாறிருக்க பொதுமக்களை அடைத்து வைத்திருந்தால் இராணுவம் தங்களை தாக்காது பாதுகாக்கும், போக இடமே இல்லாதபோது போகவிடும்என்று நம்புமளவிற்கு நம்மில் சிலர் முட்டாள்களாக இருக்கலாம் புலிகள் அப்படியிருந்திருக்க மாட்டார்கள்.  

 

14 hours ago, Justin said:

இதை சிங்களவன் சில இடங்களில் சொல்கிறான்.

இதுவரையில் சிங்களவன் உண்மையைத்தவிர வேறெதுவும் சொன்னதேயில்லை. ஆகவே இதுவும் சத்தியம் நம்புங்கோ. தான் செய்வதற்கு ஒரு காரணம் சொல்வான் அதுவே வேத வாக்கு நமக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

  விடுதலைப் புலிகளும் இராணுவமும் மோதஆரம்பித்த காலத்திலிருந்து இராணுவம் அழித்தது பொதுமக்களையும், அவர்களின் சொத்துதுகளுமே அதிகம். புலிகளின் முகாம்களை தெரிந்தும் அதனை தாக்காது பொதுமக்களையும் அவர்களின் வீடுகளையுமே  குறி வைத்து தாக்கியது. ஒன்று புலிகளின்   எதிர்தாக்குதலில் ஏற்பட்ட உயிர்,உடைமை, விமான சேதம். புலிகளை மக்கள் வெறுத்து தனிமைப்படுத்தல், பொதுமக்களின் அழிவுகளினால் புலிகளை போராட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பது, சாட்டோடு சாட்டாக மக்களையும், சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக்குவது. ஆனால் மக்கள் புலிகள் இருக்கும் இடமே தமக்கு பாதுகாப்பெனஉணர்ந்து அவர்கள் இருக்கும் இடங்களை நாடி குடியமர்ந்தார்கள். அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றுவிட்டு அவர் அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து புலிகளை சுட்டுக்கொன்றோம் என செய்தி வெளியிட்டார்கள். உறவுகள் இறந்தவரின் உடலைக் கேட்ட போதுஅவன் ஒரு புலி என்று கையெழுத்து போட்டு உடலைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அதற்கு உடன்பட மறுத்து உடலை பெற்றுக்கொள்ளாமலே சென்ற உறவுகளும், இதைப்பார்த்து வெறுப்புற்று இயக்கத்தில் இணைந்தவர்களும் உண்டு. குண்டு போட்டு அழிக்கப்பட்ட மக்களையும், அவர் வீடுகளையும் போராளிகள் என்றும் அவர்களின் முகாம்கள் என்றும் விளக்கம் கொடுத்தார்கள். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவித்து குண்டுபோட்டு அழித்த பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள், எத்தனையெத்தனை? செஞ்சோலை  உட்பட.  வன்னிப்போரின்போது அங்கு சிக்கியிருந்த அத்தனை மக்களையும் கொன்றொழிப்பதே அரசின் முழுத்திட்டம். பொதுத் தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றி சாட்சிகளில்லாமல் அழிப்பது, அங்கிருந்த மக்களின் தொகையை வேண்டுமென்றே குறைத்துக்கூறியது, மக்கள் வெளியேறும் வழிகளை தடுத்தது, உணவு மருத்துவ வசதிகளை தடுத்தமை, மனித குலத்துக்கு எதிரான எரி குண்டுகளையும், ஆயுதங்களையும் பாவித்தமை, சமய நிறுவன உணவுகளஞ்சியங்களை குண்டு போட்டு அழித்தமை, வைத்தியசாலைகள் பாடசாலைகள், ஆலையங்கள், பதுங்கு குழிகள், மக்கள் தஞ்சமடைந்த இடங்களில் கண்மூடித்தனமான எறிகணை, விமானக்குண்டுத் தாக்குதல்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக போர் உக்கிரம் அடைய முன்னே ஒட்டுக்குழுக்களின் வி. முரளிதரனின் உதவியுடன் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி உள்நுழைந்து நோயாளர் காவுவண்டிகள், சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு  மக்களோடு மக்களாக கலந்து துல்லியமாக போராளிகளின் அசைவுகளை தெரிந்துகொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது சாட்சி. இதற்கு மேல் மக்கள் தப்புவார்கள் என்று அரசு எதிர்பார்க்காததால் மக்களை மீட்டு பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடு தங்குமிட வசதி ஏதும் பொறுப்புள்ள, மக்களை பாதுகாப்பாக மீட்க போர்செய்த அரசு செய்திருக்கவில்லை. இது இவ்வாறிருக்க பொதுமக்களை அடைத்து வைத்திருந்தால் இராணுவம் தங்களை தாக்காது பாதுகாக்கும், போக இடமே இல்லாதபோது போகவிடும்என்று நம்புமளவிற்கு நம்மில் சிலர் முட்டாள்களாக இருக்கலாம் புலிகள் அப்படியிருந்திருக்க மாட்டார்கள்.  

 

இதுவரையில் சிங்களவன் உண்மையைத்தவிர வேறெதுவும் சொன்னதேயில்லை. ஆகவே இதுவும் சத்தியம் நம்புங்கோ. தான் செய்வதற்கு ஒரு காரணம் சொல்வான் அதுவே வேத வாக்கு நமக்கு. 

Satan இவர்களுக்கு பொழுது போகனும் புலிகளை சாடி, விட்டுவிடுங்கள் நல்லவர்களா வேஷமிட்டு திரியும் பொழுது போக்கர்கள். ஏதற்கெடுத்தாலும் புலிகளில் தான் இவர்களின் தரங்கெட்ட விமர்சனம், இவர்களிடம் விடுதலைக்கான நல்ல பொறிமுறையில்லை, இவர்களுடன் எமது நேரத்தை செலவிடுவதை விட, மக்களுக்கு எம்மால் இயன்றதை செய்வது நல்லது

3 hours ago, tulpen said:

 

பிரபாகரன் ஒரு இராணுவ மேதை. இராணுவ பலத்தை மட்டும் பெருக்குவதன் மூலம் தமிழர்கள் தமிழ் ஈழத்தை அடையலாம் என்று முழுமையாக நம்பி அதற்காகவே அர்ப்பணிப்புடன்  செயற்பட்டவர்.  இராணுவ ரீதியில் பல சாதனைகளை செய்த சிறந்த இராணுவத்தலைவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

உங்களின் நக்கலை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்,

தலைவர் இராணுவ, அரசியல். பொருளாதார... எல்லாவற்றிலும் மேதை, அவரைப்பற்றி கதைக்க / விமர்சிக்க உங்களுக்கு / யாருக்குமே எந்தவித அருகதையுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஈழ தமிழ் மக்களுக்காகத்தான் கொடுக்கப்பட்டது.
அதில் கல்வி சுகாதாரம் வீதி போக்குவரத்து ஓய்வூதியம் என பல விடயங்கள் இதற்குள் சேரும்.

***

இது தான் உங்கள் பூசணிக்காய்? 🤔

வெளியில் இருந்து வந்த நிதி , உள்ளூரில் வரி உட்பட பல்வேறு வழிகளில் சேர்க்கப் பட்ட நிதி என்பவற்றின் பெரும்பகுதி போர் நடவடிக்கைகள் சம்பந்தப் பட்டதேயொழிய நீங்கள் சொல்கிற  பகுதிகளுக்கு செல்லவில்லை என்பதை அங்கே வாழ்ந்தோர் அறிவர்! 

இது குற்றச்சாட்டல்ல, போரியல், அரசியல் அமைப்பான புலிகள் மக்களின் பொருளாதாரம் கல்வி பற்றி அக்கறை கொள்ளக் கடமையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை! எனவே, இதை ஒரு தகவலாகத் தான் சொல்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் விடயங்களில் சில அங்கே இருந்த அரசசாரா அமைப்புகளால் செய்யப்பட்டன. போக்குவரத்து போன்ற விடயங்கள் புலிகளுக்கு மேலதிக வருமானம் ஈட்டும் துறைகளென்பதால் அவர்களே செய்தனர்.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

  விடுதலைப் புலிகளும் இராணுவமும் மோதஆரம்பித்த காலத்திலிருந்து இராணுவம் அழித்தது பொதுமக்களையும், அவர்களின் சொத்துதுகளுமே அதிகம். புலிகளின் முகாம்களை தெரிந்தும் அதனை தாக்காது பொதுமக்களையும் அவர்களின் வீடுகளையுமே  குறி வைத்து தாக்கியது. ஒன்று புலிகளின்   எதிர்தாக்குதலில் ஏற்பட்ட உயிர்,உடைமை, விமான சேதம். புலிகளை மக்கள் வெறுத்து தனிமைப்படுத்தல், பொதுமக்களின் அழிவுகளினால் புலிகளை போராட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பது, சாட்டோடு சாட்டாக மக்களையும், சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக்குவது. ஆனால் மக்கள் புலிகள் இருக்கும் இடமே தமக்கு பாதுகாப்பெனஉணர்ந்து அவர்கள் இருக்கும் இடங்களை நாடி குடியமர்ந்தார்கள். அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றுவிட்டு அவர் அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து புலிகளை சுட்டுக்கொன்றோம் என செய்தி வெளியிட்டார்கள். உறவுகள் இறந்தவரின் உடலைக் கேட்ட போதுஅவன் ஒரு புலி என்று கையெழுத்து போட்டு உடலைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அதற்கு உடன்பட மறுத்து உடலை பெற்றுக்கொள்ளாமலே சென்ற உறவுகளும், இதைப்பார்த்து வெறுப்புற்று இயக்கத்தில் இணைந்தவர்களும் உண்டு. குண்டு போட்டு அழிக்கப்பட்ட மக்களையும், அவர் வீடுகளையும் போராளிகள் என்றும் அவர்களின் முகாம்கள் என்றும் விளக்கம் கொடுத்தார்கள். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவித்து குண்டுபோட்டு அழித்த பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள், எத்தனையெத்தனை? செஞ்சோலை  உட்பட.  வன்னிப்போரின்போது அங்கு சிக்கியிருந்த அத்தனை மக்களையும் கொன்றொழிப்பதே அரசின் முழுத்திட்டம். பொதுத் தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றி சாட்சிகளில்லாமல் அழிப்பது, அங்கிருந்த மக்களின் தொகையை வேண்டுமென்றே குறைத்துக்கூறியது, மக்கள் வெளியேறும் வழிகளை தடுத்தது, உணவு மருத்துவ வசதிகளை தடுத்தமை, மனித குலத்துக்கு எதிரான எரி குண்டுகளையும், ஆயுதங்களையும் பாவித்தமை, சமய நிறுவன உணவுகளஞ்சியங்களை குண்டு போட்டு அழித்தமை, வைத்தியசாலைகள் பாடசாலைகள், ஆலையங்கள், பதுங்கு குழிகள், மக்கள் தஞ்சமடைந்த இடங்களில் கண்மூடித்தனமான எறிகணை, விமானக்குண்டுத் தாக்குதல்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக போர் உக்கிரம் அடைய முன்னே ஒட்டுக்குழுக்களின் வி. முரளிதரனின் உதவியுடன் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி உள்நுழைந்து நோயாளர் காவுவண்டிகள், சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு  மக்களோடு மக்களாக கலந்து துல்லியமாக போராளிகளின் அசைவுகளை தெரிந்துகொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது சாட்சி. இதற்கு மேல் மக்கள் தப்புவார்கள் என்று அரசு எதிர்பார்க்காததால் மக்களை மீட்டு பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடு தங்குமிட வசதி ஏதும் பொறுப்புள்ள, மக்களை பாதுகாப்பாக மீட்க போர்செய்த அரசு செய்திருக்கவில்லை. இது இவ்வாறிருக்க பொதுமக்களை அடைத்து வைத்திருந்தால் இராணுவம் தங்களை தாக்காது பாதுகாக்கும், போக இடமே இல்லாதபோது போகவிடும்என்று நம்புமளவிற்கு நம்மில் சிலர் முட்டாள்களாக இருக்கலாம் புலிகள் அப்படியிருந்திருக்க மாட்டார்கள்.  

 

இதுவரையில் சிங்களவன் உண்மையைத்தவிர வேறெதுவும் சொன்னதேயில்லை. ஆகவே இதுவும் சத்தியம் நம்புங்கோ. தான் செய்வதற்கு ஒரு காரணம் சொல்வான் அதுவே வேத வாக்கு நமக்கு. 

சாத்தான், இது தான் மிகப் பெரிய பூசணிக்காயாக எனக்குத் தெரிகிறது!🤣 

மே 17-18 அளவில் முன்னரங்க நிலை தகரும் வரை குறுகிய முள்ளிவாய்க்கால் நிலப்பரப்பில் தஞ்சமடைந்த மக்கள் தரை வழியே அல்லது செஞ்சிலுவைச் சங்க கப்பல் வழியே வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை!

காயமடைந்த மக்களைக் கூட காயத்தின் தீவிரம் பார்த்துத் தான் கப்பலில் ஏற அனுமதித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது போல, அல்லது தெரிந்தாலும் அதை மறைக்கிறீர்கள்!

இதற்கு ஆதாரம் சிங்களவனின் செய்தி அல்ல: நீங்கள் இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டும் ஐ.நா அறிக்கையிலேயே இருக்கிறது! மேலதிக ஆதாரங்கள் அங்கேயிருந்து தப்பி வந்த மக்களின் சாட்சி, சிலர் இதை எழுதியும் இருக்கிறார்கள் (அலெக்ஸ் பரந்தாமனின் தொடர் யாழிலேயே இருக்கிறது).

எனவே தான், முள்ளிவாய்க்கால் மரணங்களுக்கு சரி அரைவாசிக் காரணம் தமிழர் தரப்பான புலிகள் என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை! உங்கள் கற்பனைகள் உங்கள் உரிமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இவர்கள் மதில் மேல் பூனை அல்ல புலிகளின் அழிவுக்கு காரணமான அனைத்தையும் உள்ளேயும் வெளியேயும் செய்தவர்கள். அதனால் தான் புலிகளின் ஒரு பக்கத்தை மட்டுமே முழுமையாக பொறுக்கி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

நாம் எவ்வளவோ எழுதியும் கெஞ்சியும் அவர்கள் புலிகளை தூற்றுவதையும் எம்மை கோபப்படுத்துவதையும் நிறுத்துவதாக இல்லை என்பதே இவர்களின் நோக்கத்தை தெளிவாக சொல்கிறது 

எனவே நேரம் பொன்னானது.
***

டொட்.

 

உங்களுக்கு கோபம் வரவேண்டுமென்பதற்காக எதையும் எழுதுவதில்லை! 

புலிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் உங்களுக்கு அந்தப் பக்கங்களை ஒரு சக கருத்தாளர் சொல்லும் போது "களையெடுத்தல்" எனும் பதம் பாவிக்குமளவுக்குக் கோபம் வர வேண்டியது ஏன் எனப் புரியவில்லை!

தமிழ் தேசிய வரலாற்றில் ஒளிப்பு, மறைப்பு, திரிப்பு என்பன எங்கள் தலைமுறையோடு ஒழிந்து போகட்டும்! 

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

உங்களின் நக்கலை உங்களுடன் வைத்துகொள்ளுங்கள்,

தலைவர் இராணுவ, அரசியல். பொருளாதார... எல்லாவற்றிலும் மேதை, அவரைப்பற்றி கதைக்க / விமர்சிக்க உங்களுக்கு / யாருக்குமே எந்தவித அருகதையுமில்லை

உடையார் நான் எந்த நக்கலும் செய்யவில்லை. உணமையைதான் எழுதினேன். 

மற்றது அருகதை, தகுதி என்று ஏதோவெல்லாம் எழுதுயுள்ளீர்கள்.

ஒரு மக்கள் கூட்டத்தின்  எதிர்காலத்தில்   பாரிய   தாக்கம் செலுத்திய/ செலுத்தும் அளவுக்கான  அரசியல் தீர்மானங்களை எடுத்த அரசியல் தலைமைகளைப்பற்றிய பொது  விமர்சனம் என்பது உலகில்  பொது தளங்களில்  இயல்பானது. இதில் எவரும் புனிதர்கள் அல்லர்.

எவரின்  தனிப்பட வாழ்ககையையும் நான் விமர்சிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் யார்மீதும் வசைமாரியும் செய்யவில்லை. அதை இங்கு செய்பவர்கள் யாரென்றால்  தேசியத்தை குத்தகைக்கு எடுத்த நினைப்பில்  உள்ளோரே. தமிழ் தேசியவாதம் என்பது  ஒரு அமைப்பின் மீதான விசுவாசம் மட்டுமல்ல. அது பரந்து பட்டது.     

இறுதியாக, 

நான் எந்த அரசியல் தலைவர்மீது விமர்சனம் வைக்கலாம். எவர் மீது விமர்சனம் வைக்கக்கூடாது என்பது தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கில்லை.

அதே போல் உங்களை, எவர் மீது விமர்சனம் வைக்கக்கூடது  என்று  கூறும் நாகரீகமற்ற உரிமை எனக்கும் இல்லை.  எமது உரிமைக்காக ஜெனிவாவில் நியாயம் கேட்கும் எமக்கு மற்றவரின் கருத்து வெளிப்பாட்டு உரிமையில் தலையிடும் உரிமையும்  இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளில் தமிழீழ கல்வித்துறை என்ற ஒன்று இருக்கவும் இல்லை. அதற்கு பொறுப்பாக இங்குமரன் என்றழைக்கப்பட்ட பேபி சுப்பிரமணியம் பொறுப்பாக இருக்கவும் இல்லை. 

தமிழீழ கல்வித்துறையால் முன்னோடித் தேர்வு என்ற ஒன்று நடாத்தப்படவும் இல்லை. அந்த தேர்வில் மாவட்ட ரீதியில் அதி சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு  தலைவரின் கையால் 5,000/=  வழங்கப்படவும் இல்லை.

போராளிகள் மாவீரர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படவும் இல்லை, 

சாதாரண மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்கள் விற்கப்படவும் இல்லை.

தமிழீழ வைப்பகம் ஊடாக சேமிப்பு வைத்திருந்தவர்களுக்கு வட்டி வழங்கப்படவும் இல்லை, வியாபாரக் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்கப்படவும் இல்லை வங்கி மேலதிகப்பற்றும் வழங்கப்படவில்லை.

தமிழீழ விளையாட்டுத்துறையால் அல்லது தமிழீழ கலை பண்பாட்டுக் களகத்தினால் போட்டிகள் நடாத்தப்படவும் இல்லை பரிசுகள் வழங்கப்படவும் இல்லை.

95/96 இல் கிளாலி ஊடாக வன்னிக்கு வந்திறங்கியவர்களுக்கு கடற்கரையில் வைத்து தேனிரும் பாணும் வழங்கவும் இல்லை, கிளிநொச்சி வரை போக்கு வரத்து வசதி செய்யவும் இல்லை.

செல்லடி கிபிர் மிக் அடியால் காயப்பட்ட மக்களை தமது வாகனங்களில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முன் யோசனையில்லாதவருக்கு காலில் அசுத்தம் அப்பினால் மூன்று இடத்தில் அப்புமாம்" - இப்படித் தான் போய்க் கொண்டிருக்கு திரியின் பதில்கள்:

நான் பதில் சொன்ன முதல் கருத்து விசுகரின்: "புலிகளுக்கு யுத்த காலத்தில் நாம் கொடுத்த பண உதவி மக்களின் பொருளாதாரம், கல்வியை உயர்த்தவே கொடுத்தோம்" என்ற கருத்து!

அதற்கு நான் கொடுத்த பதில் : "யுத்தச் செலவுக்குத் தான் பணம் பிரதானமாகப் பயன்பட்டது, மிச்சமெல்லாம் இரண்டாம் பட்சம், அல்லது புலிகள் சுயசார்பாக இருக்க எடுத்த தொழில் முயற்சி" 

மேலே மீரா, கடைசியாக வந்திருக்கிறார், மேலே பதில்களை வாசித்தாலும் அவருக்கு விளங்கியிருக்காது. 

ஒரு உதாரணம் மட்டும் கல்வி வளர்ச்சிக்கு - மட்டூக்கள் ரூ மச் என்று கருதினால் அகற்றி விடுங்கள்:

இளங்குமரன் கல்விப் பொறுப்பாளராக இருந்த காலத்தில் தான் யாழ் மத்திய கல்லூரியின் றொமெய்ன் மண்டபம் உடைந்த அதே நேரம் இன்னொரு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசிடம் இருந்து நிதி வந்தது. அந்த நிதி முழுவதும் கல்லூரிக்கு வர எவ்வளவோ போராட வேண்டி இருந்தது, சிங்கள அரசுடன் அல்ல!

அதே காலப் பகுதியில் கல்லூரிக்கு புதிய பாண்ட் வாத்திய செற் கொழும்பில் இருந்து வந்தது. அப்படியே கவர் கூட உடைக்காமல் எடுத்துச் செல்லப் பட்டது! நாங்கள் ஏனைய கல்லூரிகளிடம் இருந்து இரவலாக வாத்தியங்கள் பெற்றுப் பாவித்தோம்!

பேபி கல்விப் பொறுப்பாளராக இருந்து கல்வித் திணைக்களக் கூட்டங்களைக் கூட  நடத்தினார்! ஆனால் முதல் நோக்கமாக கல்வி முன்னேற்றம் இருக்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியும் நான் எழுதுவது உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விளங்காது என்று.

புலிகளால் எவ்வளவு தூராம் போராடிக்கொண்டு மக்களின் கல்வி பொருளாதார அபிவிருத்திகளை செய்யமுடியுமோ அதனை செய்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

எனக்கு தெரியும் நான் எழுதுவது உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விளங்காது என்று.

புலிகளால் எவ்வளவு தூராம் போராடிக்கொண்டு மக்களின் கல்வி பொருளாதார அபிவிருத்திகளை செய்யமுடியுமோ அதனை செய்தார்கள்.

புலிகள் இயக்கத்தின் உப கட்டமைப்புகள் எத்தனை என்ற தரவுகளை பதிவிட முடியுமா சகோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

புலிகள் இயக்கத்தின் உப கட்டமைப்புகள் எத்தனை என்ற தரவுகளை பதிவிட முடியுமா சகோ??

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, யாழ் செல்லும் படையணி, பதுங்கித் தாக்குதல் அணிகள், குறிபார்த்து சுடும் படையணி, ஆழஊடுருவி பதுங்கித்தாக்குதல் அணி, சிறுத்தைப் படையணி, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, வேவுப்பிரிவு

02. கடற்புலிகள், நீரடி நீச்சல் பிரிவு, கடல் வேவு அணி, சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்), நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி, கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி, நீரடி நீச்சல் அணி, படகு கட்டுமான பகுதி, கடற்கண்காணிப்பு பிரிவு (Radar Monitoring)

03. வான்புலிகள்
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை (அரசியல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
06. புலனாய்வுத்துறை (வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு)
07. படையப் புலனாய்வுப் பிரிவு
08. தமிழீழப் படைத்துறைப் பள்ளி
09. படைய தொடக்க பயிற்சிக் கல்லூரி, விசேட பயிற்சிக் கல்லூரி, படைய அறிவியல் கல்லூரி (MO), இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி
10. ஒட்டுக்கேட்கும் பிரிவு (Communication Monitoring – இராணுவ நகர்வுகளை விமானதாக்குதல்களை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் அணி)
11. வரைபட பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி (model), தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் தயாரிக்கும் அணி)
12. சமர் ஆய்வு மையம்
13. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
14. அனைத்துலகச் செயலகம் (வெளிநாட்டு கிளைகள் நிர்வாகம்)
15. வழங்கற் பிரிவு
16. விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் – http://www.ltteps.org/
17. எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை
18. தலைமைச்செயலகம்
19. தலைமைச்செயலக பாதுகாப்பு அணி
20. இராணுவ தொழிநுட்ப பிரிவு (கணனிப்பிரிவு)
21. போர்க்கருவி தொழிலகம்

 
 

01. ஒளிப்பதிவுப் பிரிவு (உள்ளக படப்பிடிப்பு, களப் படப்பிடிப்பு)
02. நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் சேவை மையம்)
03. மருத்துவப் பிரிவு, திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை
04. தமிழீழ சுகாதார சேவைகள் (மருத்துவ சேவை, உடல்உளநலன் விழிப்புணர்வு சேவைகள்)
05. வெண்புறா ( செயற்கைகால் உற்பத்தி நிலையம்)

 
 

01. தமிழீழக் காவற்துறை (காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவு, குற்ற புலனாய்வுப் பிரிவு, சீர்திருத்தப் பள்ளி)
02. தமிழீழ வன வளத்துறை
03. தமிழீழ நிதித்துறை
04. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
05. தமிழீழ நீதித்துறை (தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ சட்டவாக்கப்பிரிவு, நீதிமன்றுகள்) – http://www.eelamjudicial.org/
06. தமிழீழ நிர்வாக சேவை (மாவட்ட திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான செயலகங்கள்)
07. சூழல் நல்லாட்சி ஆணையகம்
08. பெண்கள் அபிவிருத்தி மறுவாழ்வு மையம்
09. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
10. தமிழீழ விளையாட்டுத்துறை
11. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
12. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களம்
13. தமிழீழ போக்குவரவு கழகம்
14. வடகிழக்கு மனிதவுரிமைகள் செயலகம் (NESoHR)
15. தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ( விசா வழங்கும் பகுதி)
16. தமிழீழ மாணவர் அமைப்பு (அன்னை பூபதி பொதறிவுப்போட்டி)
17. தமிழீழ வைப்பகம் http://www.bankoftamileelam.net/
18. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
19. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு)
20. சுங்கவரித் துறை
21. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
22. பொருண்மிய மதியுரையகம் (The Economic Consultancy House)
23. அனைத்துலக தொலைத்தொடர்புசெயலகம்
24. மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
25. தமிழீழ கல்விக் கழகம்
26. தமிழீழ கட்டுமானப் பொறியியல் செயலகம்

 
 

01. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
02. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
03. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
04. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
05. அன்பு இல்லம் (முதியோர்)
06. தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி)
07. இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுதிறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது)
08. சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)­.
09. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
10. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

 
 

01. அறிவமுது பொத்தகசாலை
02. விடுதலைப் புலிகள் செய்தி இதழ், ஈழநாதம் செய்தி இதழ், வெளிச்சம் செய்தி இதழ், சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்)
03. ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு
04. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
05. நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு, ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகை தயாரிப்பு, மொழியாக்கப்பிரிவு)
06. புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, சிங்கள வானொலி
07. தமிழீழ இசைக்குழு
08. இணைய செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில இணையமும் புதினம் என்ற தமிழ் செய்தி இணையமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன)

 
 

01. மாவீரர் பணிமனை
02. தியாகசீலம்
03. மாவீரர் துயிலும் இல்லங்கள்

 
 

01. சேரன் வாணிபம், சேரன் சுவையகம்
02. பாண்டியன் உற்பத்திப் பிரிவு, பாண்டியன் வாணிபம், பாண்டியன் சுவையூற்று
03. சோழன் தயாரிப்புகள்
04. பொன்னம்மான் உரவகை வாணிபம்
05. தென்றல் இலத்திரனியலகம்
06. தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம்
07. அந்திவானம் பதிப்பகம்
08. இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
09. ஒளிநிலா திரையரங்கு
10. அந்திவானம் பதிப்பகம்.
11. இளவேனில் எரிபொருள் நிலையம்.
12. இளந்தென்றல் தங்ககம், A9 தங்ககம்
13. காலணி (பாதணி உற்பத்தி மையம்)
14. மருதம் வாணிபம்.
15. மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
16. மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
17. கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை

 
 

01. தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி
02. தொழில் நுட்பக் கல்லூரி
03. அரசறிவியற் கல்லூரி
04. தமிழீழ பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோதும் முழுமையடையவில்லை)
05. சிறுவர் கணனிப் பூங்கா

 
 

01. விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
02. கிராம கடற்றொழிலாளர் சங்கம் – சமாசம் – சம்மேளனம் (மாவட்டம்) – இணையம் (மாகாணம்) கட்டமைப்புகள்
03. மாவீரர் அரங்குகள்.
04. மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
05. மாவீரர் நினைவு வீதிகள்.
06. மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்­கள்.
07. மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
08. மாவீரர் நினைவுப் பூங்காக்கள் (தியாகசீலம் பூங்கா, சந்திரன் பூங்கா)
09. மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
10. மாவீரர் நினைவு நூலகங்கள்.
11. மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
12. மாமனிதர் விருதுகள் (தமிழ்த்தேசியப்பணி, சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
 

http://eelamhouse.com/?p=1082
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம். இப்ப மேலுள்ள லிஸ்ற்றில் ஒன்று மட்டும் இருக்கு.

லிஸ்ற்றில் ஒன்றிரண்டு விடுபட்ட்டும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இது தான் உங்கள் பூசணிக்காய்? 🤔

வெளியில் இருந்து வந்த நிதி , உள்ளூரில் வரி உட்பட பல்வேறு வழிகளில் சேர்க்கப் பட்ட நிதி என்பவற்றின் பெரும்பகுதி போர் நடவடிக்கைகள் சம்பந்தப் பட்டதேயொழிய நீங்கள் சொல்கிற  பகுதிகளுக்கு செல்லவில்லை என்பதை அங்கே வாழ்ந்தோர் அறிவர்! 

இது குற்றச்சாட்டல்ல, போரியல், அரசியல் அமைப்பான புலிகள் மக்களின் பொருளாதாரம் கல்வி பற்றி அக்கறை கொள்ளக் கடமையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை! எனவே, இதை ஒரு தகவலாகத் தான் சொல்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் விடயங்களில் சில அங்கே இருந்த அரசசாரா அமைப்புகளால் செய்யப்பட்டன. போக்குவரத்து போன்ற விடயங்கள் புலிகளுக்கு மேலதிக வருமானம் ஈட்டும் துறைகளென்பதால் அவர்களே செய்தனர்.  
 

சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டதைக்கூட/ அங்கீகரித்ததை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த துரதிஷ்டங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டதைக்கூட/ அங்கீகரித்ததை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த துரதிஷ்டங்கள்.

சிங்கள மக்களுக்கு தீவிர தேசியர்களைப் பப்பாவில் ஏற்றி விட்டால் அங்கேயே பேசாமல் இருந்து விடுவர் என்பது தெரியுமல்லவா? எனவே  கற்பனைகளை அவர்கள் அவர்கள் அங்கீகரிப்பர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விளங்க நினைப்பவன் said:

போர் தோல்வியையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிடுவது விசித்திரமாக உள்ளது. போரினால் விலைமதிபற்ற உயிர் இழப்புக்கள், உடல் அவயங்கள் இழப்புகள், பொருள் இழப்புக்களுமே ஏற்பட்டது.  போரில் காணாமல் போனோர்களை தேடி 12 வருடங்களின் பின்னரும் அவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மாணவன் பெயில் ஆனால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து படித்து நல்ல நிலையை தான் அடைவான்.

நான் சொன்ன கருத்து பிழையாக கருதப்பட்டுள்ளது.எந்த ஒரு செயலும்..தோல்வியடையும்போது..சிலர் அது செய்தது பிழை..அப்படிச்செய்திருக்கக்கூடாது. .இப்படிச்செய்திருக்கலாம். .....என்று சொல்லுவதற்க்கு. தகுதி தேவையில்லையா? வெற்றி என்பதற்க்கு வரவிலக்கணம்..99%. தோல்வி ஆகும். ஆகவே தோல்வியடையும் எந்தச்செயலும் செய்யப்படாது எனக் கூறமுடியாது..தெரியாத விடயம் பற்றி கருத்து கூறக்கூடாது..அப்படிக்கூறும் கருத்துகள் பிழையானவை. பரீட்சைப்பேயிலும் ஒர் தோல்வி. போராட்டத்தோல்வியும் ஒர் தோல்வி. இரண்டும். தோல்விதான். இழப்புக்கள் பற்றி கருத்துக்கூறவில்லை....இரணடாம உலக யுததத்தில் ஜேர்மானி..யப்பன்....போன்ற நாடுகள் படுமோசமான இழப்புக்களையடைத்தன..இன்று அந்த நாடுகள் எப்படியிருக்கின்றன....இப்போ போராடத் தெரிந்தவர்கள் போராடலாம்...பேசி தீர்வு பெறக்கூடயவாரகள் பேசித்தீர்வை பெறலாம்....

22 hours ago, விளங்க நினைப்பவன் said:

போரரில் தோல்வியடைவதையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் பெயில் விடுவதையும் ஒப்பிட்டவர் இங்குள்ள யாழ்கள உறுப்பினர் தான்.
நீங்கள்  தமிழ்தானே? ஏன் தமிழ் விளங்கவில்லை?

இது உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சிங்கள மக்களுக்கு தீவிர தேசியர்களைப் பப்பாவில் ஏற்றி விட்டால் அங்கேயே பேசாமல் இருந்து விடுவர் என்பது தெரியுமல்லவா? எனவே  கற்பனைகளை அவர்கள் அவர்கள் அங்கீகரிப்பர்! 

உங்களைப் போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உங்களைப் போல்.

ஓம், நானும் அது தான் இங்கே பப்பாவில் உங்கள் போன்ற ஆட்களை "ஏற்றிக் கொண்டிருக்கிறேன்" அங்கேயே மெய்மறந்து இருக்க வேணும்! செயல் எல்லாம் கூடாது சரியா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

எந்த ஒரு செயலும்..தோல்வியடையும்போது..சிலர் அது செய்தது பிழை..அப்படிச்செய்திருக்கக்கூடாது. .இப்படிச்செய்திருக்கலாம். .....என்று சொல்லுவதற்க்கு. தகுதி தேவையில்லையா? வெற்றி என்பதற்க்கு வரவிலக்கணம்..99%.

100 முறை சரியாகச் செய்திருந்தாலும் 101 வது முறை ஒரு தவறு செய்துவிட்டால்அதையே குத்திக்காட்டும் நமது சமூகம், ஒரு தடவையாவது முயற்சி செய்திருக்காது. இதுவும்கடந்து  போகும் என்பதை விட இதுவும் பழகிப்போகும் என்பதே பல சமயங்களில் நம்  இழப்புக்கும், வாழ்க்கைக்கும் பொருந்துகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.