Jump to content

பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

spacer.png

 

இந்த வருடத்தை மாஸ்டருடன் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். 50% இருக்கை அனுமதிக்கு மத்தியில் பெரிய வசூல் சாதனையைப் படைத்து, திரையரங்கில் படங்கள் வெளியாவதற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது.

spacer.png

மாஸ்டரைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 28ஆம் தேதி சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படமும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரிக்குத் திரையரங்க ரிலீஸை சில படங்கள் உறுதி செய்திருக்கிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 90ஆவது படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டு நண்பர்களின் கதையாக கமர்ஷியல் டிராமாவாக உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.

spacer.png

 

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் ரோபோ சங்கர் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது சக்ரா. எம்.எஸ்.ஆனந்தன் படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்மி அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஷால் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்த மாதம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகிறது சக்ரா.

spacer.png

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் படம் ட்ரிப். காட்டுக்குள் ட்ரிப் செல்லும் நண்பர்களுக்கு நடந்த த்ரில்லர் அனுபவங்களே படம். சுனைனா படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தானத்துக்கு ரொம்ப நாளாக ரிலீஸாக முடியாமல் கிடப்பில் இருக்கும் படம் சர்வர் சுந்தரம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் படம் உருவாகியிருக்கிறது. 2017 செப்டம்பரிலேயே வெளியாகியிருக்க வேண்டியது என்பதில் இருந்து, எந்த அளவுக்குத் தாமதமாகியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ரிலீஸ் உறுதி செய்து தள்ளிப் போய், இப்போது பிப்ரவரி ரிலீஸை உறுதி செய்திருக்கிறார்கள்.

spacer.png

இந்தப் படங்களோடு இன்னொரு படத்தின் ரிலீஸ் குறித்தப் பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது. அந்தப் படம்தான் வேட்டை நாய். ஆர்.கே.சுரேஷ் மற்றும் ராம்கி இருவரும் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் திரைப்படமாக சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தையும் பிப்ரவரியிலேயே ரிலீஸ் செய்துவிடப் பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது.
 

 

https://minnambalam.com/entertainment/2021/01/31/25/feb-release-movies

Link to comment
Share on other sites

13 minutes ago, கிருபன் said:

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 90ஆவது படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டு நண்பர்களின் கதையாக கமர்ஷியல் டிராமாவாக உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் என எனக்குப் பிடித்த நடிகர் நடிகையர்கள்; சூப்பர் குட் ஃபிலிம் தயாரிப்பு வேறு. எனவே இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Link to comment
Share on other sites

செய்தி இணைப்புக்கு நன்றி கிருபன். 

நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுப தினம். வார இறுதியை ஜாலியாக கழிக்க நல்ல கதையம்சம் உடைய புதிய திரைப்படங்கள் இவ்வாண்டில் வரும் என எதிர்பார்ப்போம். 96, நடிகையர் திலகம், நேர்கொண்ட பார்வை, 2016 வந்த sometimes  முதலான  சிறந்த திரைப்படங்கள் போன்று 2021 இலும் வரும் என்று எதிர்பார்ப்போம்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.