Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 23 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2021 அன்று யாழ் இணையம் தனது 23 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து மீள ஒளிக்கீற்று தென்படும் காலகட்டத்தில் யாழ் இணையம் 23 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

சுய ஆக்கங்கள் இயன்றவரை பின்வரும் கருப்பொருள்களில் இருத்தல் விரும்பப்படுகின்றது

  • கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி கால அனுபவங்கள்,
  • கோவிட்-19  பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்
  • யாழ் கள அனுபவங்கள்
  • எதிர்கால வாழ்வு பற்றிய திட்டமிடலும், சாத்தியமான வடிவமைப்புக்களும்

இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 23 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 23 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  • கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  • ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  • ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தனிப்பட்ட கருத்து.. இந்த ஆண்டில் இருந்தாவது கள உறவுகளின் தரமான ஆக்கத்திற்கு 1.2.3ஆம் பரிசுக்குரிய ஆக்கஙகளாக தெரிவு செய்து தாயக உறவுகளுக்கு படிக்க வசதி அற்ற அல்லது தற்காலிக உதவியாக போய் சேரட்டும்.. அந்த பரிசுத் தொகை கூட எங்களுக்கு வேண்டாம்..அந்த பரிசுத் தொகைகளையும் கள உறவுகள் பொறுப்பு எடுத்தல் நன்று.யாராச்சும் சண்டைக்கு வராதீங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம்,

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 23 இனை  சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

சுய ஆக்கங்கள் இயன்றவரை பின்வரும் கருப்பொருள்களில் இருத்தல் விரும்பப்படுகின்றது

  • கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி கால அனுபவங்கள்,
  • கோவிட்-19  பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்
  • யாழ் கள அனுபவங்கள்
  • எதிர்கால வாழ்வு பற்றிய திட்டமிடலும், சாத்தியமான வடிவமைப்புக்களும்

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்கள அனுபவம் பற்றி எழுதலாம் எண்டு இருக்கிறன். கட்டாயம் வெட்டுக்கொத்து இருக்கும். படிக்கிற ஆக்களுக்கு வாயால இரத்தமும் வரலாம். அவ்வளவு பயங்ங்ங்கரமாய் இருக்கும். 👹

படிக்கிற ஆக்களுக்கு பிரசர் குளிசை இலவசம். :cool:
 

கதாநாயகியை தவிர வில்லன் ,வில்லி பாத்திரங்கள் உண்டு.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 01:45, யாயினி said:

எனது தனிப்பட்ட கருத்து.. இந்த ஆண்டில் இருந்தாவது கள உறவுகளின் தரமான ஆக்கத்திற்கு 1.2.3ஆம் பரிசுக்குரிய ஆக்கஙகளாக தெரிவு செய்து தாயக உறவுகளுக்கு படிக்க வசதி அற்ற அல்லது தற்காலிக உதவியாக போய் சேரட்டும்.

ஒருவரும் இன்னும் எழுதவேயில்லை! பரிசு கொடுத்தால்தான் ஆக்கங்கள் வரும்போலிருக்கு!😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஒருவரும் இன்னும் எழுதவேயில்லை! பரிசு கொடுத்தால்தான் ஆக்கங்கள் வரும்போலிருக்கு!😬

ஏன்  நீங்க ஆரம்பித்து  வைக்கலாம்  தானே ராசா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

ஏன்  நீங்க ஆரம்பித்து  வைக்கலாம்  தானே ராசா??

வெட்டி ஒட்டவே (வாசித்த பின்னர்) நேரம் போதாமல் இருக்கு! கனக்க ஐடியா இருக்கு ஆனால் நேரம்தான் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒருவரும் இன்னும் எழுதவேயில்லை! பரிசு கொடுத்தால்தான் ஆக்கங்கள் வரும்போலிருக்கு!😬

கிருபன் நீங்களும் சுவியும் எதினாலோ முழு உறுப்பினர்களும் எழுதிய மாதிரி இருக்கும்.
எனவே இருவரும் களம் இறங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2021 at 22:09, குமாரசாமி said:

வில்லி பாத்திரங்கள் உண்டு

வில்லி யாரா இருப்பா ? என்றதில் எனக்கு ஏகப்பட்ட  டவுட் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபன் நீங்களும் சுவியும் எதினாலோ முழு உறுப்பினர்களும் எழுதிய மாதிரி இருக்கும்.
எனவே இருவரும் களம் இறங்குங்கள்.

Résultat de recherche d'images pour "ice on the head gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2021 at 15:01, பெருமாள் said:

வில்லி யாரா இருப்பா ? என்றதில் எனக்கு ஏகப்பட்ட  டவுட் 😁

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 16:28, குமாரசாமி said:

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

 

அந்த லிங்கை  இங்கை செருகி இன்னுமொரு பச்சை வாங்கி விட்டார்.  கு சா அண்ணா கில்லாடி தான்  ;)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sabesh said:

அந்த லிங்கை  இங்கை செருகி இன்னுமொரு பச்சை வாங்கி விட்டார்.  கு சா அண்ணா கில்லாடி தான்  😉

 

பிள்ளைகள் அழுவது தனக்கு இன்னும் இன்னும் அதிகமாய் வேண்டும் என்றுதான்.....!  😂

Crying Baby GIFs - Get the best GIF on GIPHY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

பிள்ளைகள் அழுவது தனக்கு இன்னும் இன்னும் அதிகமாய் வேண்டும் என்றுதான்.....!  😂

Crying Baby GIFs - Get the best GIF on GIPHY

நான் முற்றும் துறந்தவன் எண்டால் நம்மவே போறியள்.😁

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதிக்கான இணைப்பு முகப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதியப்படும் ஆக்கங்கள் அதிக பார்வைக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியிலும் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.  கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை " யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

On 22/2/2021 at 22:28, குமாரசாமி said:

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

ஆராயிருக்கும் அந்த கோல்டன்ஸ்?🤔 அதுவும் குமாரசாமியை குடியிருக்க விடாமல் பண்ணக்கூடிய ஆக்கள் 😝

On 22/2/2021 at 22:28, குமாரசாமி said:

 

frame Steuerelement

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2021 at 22:09, குமாரசாமி said:

நான் யாழ்கள அனுபவம் பற்றி எழுதலாம் எண்டு இருக்கிறன். கட்டாயம் வெட்டுக்கொத்து இருக்கும். படிக்கிற ஆக்களுக்கு வாயால இரத்தமும் வரலாம். அவ்வளவு பயங்ங்ங்கரமாய் இருக்கும். 👹

படிக்கிற ஆக்களுக்கு பிரசர் குளிசை இலவசம். :cool:
 

கதாநாயகியை தவிர வில்லன் ,வில்லி பாத்திரங்கள் உண்டு.😉

நிழலியருக்கு  தலையில் முடியே வளரவிடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருப்போம் .😄

On 22/2/2021 at 21:28, குமாரசாமி said:

இந்த திரிக்கு போய் பாருங்கோ. இரண்டு கோல்டன் லேடிஸ் வந்துட்டு போயிருக்கினம்.இதுக்கு மேலை சொல்ல வெளிக்கிட்டன் எண்டால் நான் இஞ்சை குடியிருக்கேலாது. 🤣

அட இவாவே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

நிழலியருக்கு  தலையில் முடியே வளரவிடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருப்போம் .😄

  என்ன  பெருமாள் நீங்கள்? நான் எப்பவோ தொடங்கீட்டன் எல்லோ. தலைமுடி என்ன தாடி முடி கூட  நினைச்சு பாக்க கூடாது எண்டதிலை கண்ணும் கருத்துமாய் இருக்கிறன் 😎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம்,

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதியில் இதுவரை பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆர்வமுடனும் உற்சாகமாகவும் சுய ஆக்கங்களை பதிந்து சிறப்பிக்கும் கள உறுப்பினர்களுக்கு நன்றிகள்.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புதிய அகவையில்  இன்று காலடி பதிக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம்,

யாழ் இணையம் 23 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் இக் கொரோனா நெருக்கடிக் காலத்திலும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 54 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கதைக் களம்

கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

கவிதைக் களம்

கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

_______________________________________________________________________________________

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு:

 

யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இப்படி செய்வார்களா அனைத்து பதிவுகளில் வேறுபட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி பலருக்கும் தெரிவித்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.