Jump to content

மியான்மாரும் இலங்கையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மாரும் இலங்கையும்
======================

 


ஒரு நாடு இராணுவக் கட்டுக்கோப்புடன் இயங்குவது நல்லதே. ஆனால் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குவது வரவேற்கத்தக்கதல்ல.

மியான்மாரின் ஆங் சான் சூ கீ மீண்டும் இராணுவப் புரட்சியின் விளைவாகச் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் பல வருடங்கள் இவர் இராணுவத்தின் வீட்டுக் காவல், அடையாளம் தெரியாத இடத்தில் சிறை என சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்தான். அன்று அவர் சிறையில் இருக்கும்போது சமாதான தேவதையாகவே உலகினால் அடையாளப்படுத்தப்பட்டார். 1991இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றுக் கொண்டார். 

ஆனாலும் கடந்த தசாப்த காலத்தில் தொடர்ச்சியாக மியன்மாரில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தாக்குதல் தொடர்பாக அவர் காட்டிய மௌனமும் ரோகிங்கியா முஸ்லிம்களை மியன்மாரின் தேசிய இனமாக கருதவில்லை என்ற அவர் கருத்தும் அந்தத் தேவதையின் முகத்திரையைக் கிழித்து அவரின் மத, இன வாதக் கோர முகத்தை உலகிற்கு காட்டியது. இதன் விளைவாக இவருக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசையும் திரும்பப் பெறவேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலித்தது. இதனாலேயே, இம்முறை அவர் சிறைப் பிடிக்கப்பட்ட நிலையில் அதேயளவு அனுதாபம், ஆதரவு இல்லையென்று கூறலாம். 

மியான்மாருக்கும் இலங்கைக்கும் நிறைய விடயங்களில் ஆச்சரியமான வகையிலான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் தேரவாத புத்த மதம் நாட்டு மக்களின் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படுவதோடு இரண்டு நாடுகளிலும் புத்த மதம் தேசிய மதமாகவே அரசினால் போசிக்கப்படுகிறது. மக்களுக்காகவே அரசு என்ற விழுமியத்திலிருந்து விலகி மதத்திற்காகவே நாடு என்ற வகையில்தான் இரண்டு நாடுகளும் இயங்குகின்றன. 

பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இந்த இரண்டு நாடுகளிலுமே, சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும் சிறுபான்மையினருக்கு எதிராகத் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டிக் கலவரம் நடைபெற்றதைப் போலவே மியன்மாரிலும் 1930 இல் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் பர்மிய தேசியவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 200க்கு மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்கள். மியான்மாரில் வாழ்ந்த இந்தியர்களுள் பெரும்பான்மையாவர்கள் தமிழர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1942 இல் ஜப்பானியர்கள் மியான்மாரைக் கைப்பற்ற முன்னேறியபோது அரை மில்லியன் இந்தியர்கள் நாடு திரும்ப முயற்சித்தனர். இவர்கள் நாடு திரும்ப ஜப்பானியர் வருகை மட்டுமன்றி கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிராக பர்மிய தேசியவாதிகள் மேற்கொண்ட இன ஒடுக்குமுறைத் தாக்குதல்களும் காரணமாகும். இந்த இடப்பெயர்வின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காட்டு விலங்குகள், நோய், பட்டினி போன்றவற்றால் வரும் வழியிலேயே இறந்து போனார்கள். இவர்களுள் உயிர் தப்பியவர்கள் 700 km தூரத்தை ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடந்தே கடந்தார்கள்.

இதே காலப்பகுதியில் ஜப்பானியர்களால் பிடிக்கப்பட்ட தமிழர்கள் 415 km தூரமான புகையிரதப் பாதை அமைக்கும் வேலையில் ஏனைய பல யுத்தக் கைதிகளுடன் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது ஏறக்குறைய 150,000 தமிழர்கள் நோய், விலங்குகளின் தாக்குதல், ஜப்பானியர்களின்  சித்திரவதைகளால் இறந்து போனார்கள் என்பது ஒரு உபரித் தகவல்.

சுதந்திரத்தின் பின்னர் இரண்டு நாடுகளிலும் சிறுபான்மைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன. இரண்டு நாடுகளிலுமே இந்திய வம்சாவழியினர் வேற்று மனிதர்களாகவே அரசினால் பார்க்கப்பட்டதுடன் அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் குடியுரிமை அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர். 
மியன்மாரில் 1962 இல் ஆட்சியைப் பிடித்த இராணுவம் 1962 – 1964 க்கு இடைப்பட்ட காலத்தில் 300,000 இந்தியர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களை இந்திய அரசு தனது கப்பல்களை அனுப்பி, இந்தியாவிற்கு அழைத்து வந்தது. 
இதே காலப்பகுதியில்தான்  (1964) அப்போதைய பிரதமரான சிறிமாவோ இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம், பின்னர் 1974 இல் செய்த மாற்றம் என்பவற்றின் அடிப்படையில் 300,000 இந்தியத் தமிழர்கள் இந்திய அரசு அனுப்பிய கப்பல்களில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைவிடவும் இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக அரசின் ஆசிர்வாதத்துடன் தொடர்ந்தும் இன ஒடுக்குமுறைத் தாக்குதல் நடைபெற்று வந்ததைப் பற்றி இங்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.

மியான்மார் எவ்வாறு முதலில் இந்தியர்களை (தமிழர்களை) அடக்கி ஒடுக்கிய பின்னர் ரோகிங்கியா முஸ்லிம்களில் மீது கை வைத்ததோ அதைப்போலவே 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இந்து, கிறிஸ்தவ தமிழர்களை ஒடுக்கிய பின்னர் இலங்கை அரசும் இஸ்லாமியத் தமிழர்கள் மீது வன்முறையைத் தூண்டி வருகிறது. 

இவற்றை விடவும் இன்னும் சில ஆச்சரியமான ஒற்றுமைகள் உள்ளன.

நேற்று வரை தேசியத் தலைவராக இருந்த ஆங் சான் சூ கீயும் இலங்கையில் அதிகாரம் உள்ளவராக இருக்கும் மகிந்தவும் ஒரே ஆண்டு (1945) பிறந்தவர்கள். இருவரும் தமது நாட்டின் பிரபலமான அரசியல்வாதிகளின் பிள்ளைகள்; தந்தையர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள்.

இருவருமே 1990 ஆண்டு காலப்பகுதியில் மனித உரிமைபற்றி அதிகம் பேசி உலக அரங்கில் தங்களை சமாதான தேவதைகளாக காட்டிக் கொண்டவர்கள். பின்னர் கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் இருவருமே சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைத் தாக்குதல்களை தூண்டிவிடுபவர், முன்னெடுப்பவர் அல்லது அனுமதித்தவராக இருந்துள்ளார்கள்.

இன்றுள்ள சூழலில் மியன்மார் மீண்டும் இராணுவத்தின் கைக்குச் சென்றுள்ளது. இலங்கையில் அதேபோல இராணுவத்தின் ஆட்சி நேரடியாக இல்லாத போதும் அரச கட்டமைப்பின் நுனிமுதல் அடிவரை இராணுவத்தில் இருந்தவர்கள், இருப்பவர்களால்தான் நிரப்பப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் இன்று இராணுவத்தின் செல்வாக்கே அதிகரித்து உள்ளது. மியான்மாரில் வெளிப்படையான இராணுவ ஆட்சி நடைபெறுவது மட்டுமே உள்ள  ஒரே ஒரு வேறுபாடு.

இந்த இரண்டு நாடுகளின் செயற்பாடுகளையும், முன்னர் ஆட்சி செய்தவர்கள், இன்று செய்கின்றவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது இலங்கையும் மியான்மாரும் ஒட்டாமல் பிறந்த இரட்டையர்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள பௌத்த மக்கள் பின்பற்றுவது தேரவாத புத்த மதமாக இருந்தாலும் இரண்டு நாட்டு ஆட்சியாளர்களும் பின்பற்றுவது என்னவோ தீவிரவாதப் புத்த மதம்தான் போலிருக்கிறது.

 

 

https://www.facebook.com/101881847986243/posts/266012458239847/?d=n

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.