Jump to content

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

February 3, 2021
146383247_4265352713481659_1940698343151

23 Views

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

144582808_3552846074764193_8262755123601

சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது.

144582808_3552846074764193_8262755123601

சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த பேரணி  ஆரம்பமாகவுள்ளது.

144943235_3702831479754731_4232067279544

காவல்துறையினர் வீதி தடைகள் போட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்க நினைத்த போதிலும் பேரணி தொடர்கிறது .

145620726_3702831439754735_5719867877966

வாகன இலக்கங்கள் காவல்துறையினரால் பதிய படுகின்றது .

https://www.facebook.com/watch/?v=3726656387449090

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
 

 

https://www.ilakku.org/?p=41161

 

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை, அதிரடிப்படையின் எதிர்ப்பினை மீறி தொடரும் போராட்டம்

February 3, 2021
IMG_0121-696x464.jpg

16 Views

காவல்துறை மற்றும்  விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்தியபோதிலும் அவற்றினையும் தாண்டி  பொத்துவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

IMG_0097.jpg

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள்,பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக பொத்துவிலில் இருந்து வாகன பேரணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது வாகன பேரணியை முன்னெடுப்பதற்காக சிவில் அமைப்புகள்,அரசியல் கட்சிகளின்,சர்வமத பிரதிநிதிகள்,பொது அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG_0102.jpg

பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பமானபோது விசேட அதிரடிப்படையினரும் கால்துறையினரும் இணைந்து போராட்டத்தினை தடுக்க முற்பட்டதுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்த பதாகையினை அகற்றி , நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது கால்துறை தாக்குதல் நடாத்த முற்பட்டதை தொடர்ந்து முறுகல் நிலையேற்பட்டது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரின் எதிர்ப்பினையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக பொத்துவில்  ஏற்றம் பகுதியில் காவல்துறை தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்கள் வழி மறிக்கப்பட்டு கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_0121.jpg

இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும்  காவல்துறையினரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

அக்கரைப்பற்று பகுதிக்கு பேரணி வருகைதந்ததை தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த போராட்டம் அக்கரைப்பற்று நகர் ஊடாக அட்டாளைசேனை வரையில் நடைபெற்றது.

காவல்துறை நீதிமன்ற கட்டளையினைக்கொண்டு தடைகளை ஏற்படுத்தியபோதிலும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

https://www.ilakku.org/?p=41195

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரைலயன போராட்டம்-தடை உத்தரவுகளுடன் தொடரும் பயணம்

 
1-21-696x450.jpg
 16 Views

“தடைகளை தாண்டி இலட்சியப்பயணம் தொடரும் பின்வாங்கப் போவதில்லை எல்லோரும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

எமது உணர்வு எமது உரிமை” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=41220

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடத்த தடை

 
1-23.jpg
 21 Views

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் ஆரம்பமாகி காவல்துறை மற்றும் படையினரின் தடைகளை தகர்த்து நடைபெற்றும் வரும்  நிலையில், யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் இன்று காலை பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி நடைபெற்றுவருகிறது. வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of one or more people and people standing

இந்நிலையில், ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில்  இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையால் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த  தடை உத்தரவு  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடை உத்தரவு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி உள்ளிட்டோருக்கு  எதிராகவும் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=41231

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியுள்ளது.

spacer.png

இன்று காலை(03.02.2021) அம்பாறை பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமான போதே பொலிஸார் நீதிமன்றத் தடையுடன் வந்தனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்துக்கே நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

spacer.png

இன்று பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் வரும் 6ஆம் திகதி பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டது.

spacer.png
வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.


தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆரம்பமானது “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம்..! | Virakesari.lk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வெற்றி பெற 

பொத்துவில்   தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் இருக்கும் தமிழர்கள் ஊருகளும் பிரச்சினைகளும்  நடந்தும் வாகனத்திலும் செலும் எம்பிக்களுக்கு தெரியட்டும் 

( இந்த அரசாங்கத்திடம் சண்டை பிடிச்சே பெற முடியல சண்டைக்கு முன்னர் அந்த நாள் அரசியல் வாதிகளாலே பெற முடியல  இப்படி ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தியாவது ஏதாவது தீர்வு கிட்டுமா என மனசு கேட் கிறது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

( இந்த அரசாங்கத்திடம் சண்டை பிடிச்சே பெற முடியல சண்டைக்கு முன்னர் அந்த நாள் அரசியல் வாதிகளாலே பெற முடியல  இப்படி ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தியாவது ஏதாவது தீர்வு கிட்டுமா என மனசு கேட் கிறது )

நிச்சயமாக இதுபோன்ற போராட்டங்களுக்கு சிங்கள தரப்பிடமிருந்து எந்த தீர்வும் வரபோவதில்லை.

ஆனால் ஆயுதரீதியான போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை தீவில் எந்த இனரீதியான பிரச்சனைகளும் இல்லையென்று உலகத்துக்கு காண்பிக்க முயலும் மாறி மாறி வரும் சிங்கள அரசுகளுக்கு குடைச்சல்தான்.

தொழிநுட்பங்கள் வளராத அந்த காலத்தில் எமது தலைமைகள் நடத்திய அரசியல் ஆயுத போராட்டங்கள் வெளியுலகுக்கு காண்பிக்கபடாது முடக்கப்பட்டு எம் பக்க நியாயங்களை மறைத்தார்கள், இன்று தனிமனிதனே சர்வதேசத்துக்கு ஆதாரங்களை வழங்கமுடியும் என்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நிச்சயமாக சிங்களவர்களுக்கு இந்தவகையான போராட்டங்கள் எரிச்சலூட்டுபவையும்,சர்வதேசரீதியில் பாதகமானவையும்தான்.

புலம்பெயர்நாடுகளில் சிங்கள அரசுகளுக்கெதிராக நடத்தும் போராட்டங்களைவிட உள்நாட்டில் சிறுபான்மை இனங்கள் நாங்கள் நிம்மதியாக இல்லையென்று சொல்லி அரசுக்கெதிராக நடத்தும் போராட்டங்கள்,  சர்வதேச அளவில் வலிமையானவை.

ஆனால் சர்வதேசம் அதிரடியாக இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுதருமா என்பது கேள்வி குறிதான் ,

உதவி வழங்கும்நாடுகளின் கூட்டத்தின் போதும், மனித உரிமைகள் அமர்வின்போதும்   சிங்கள அரசும் மக்களும் சிறுபான்மை இனத்துக்கு அநீதி இழைக்கபடுவதுபற்றி சிறுபான்மை இனங்கள் எழுப்பும் குரல்பற்றி   ஒரு கேள்வியாக ,ஆயுதமாக கண்டிப்பாக இலங்கை அரசின்முன் எழுப்புவார்கள், கைக்கொள்வார்கள்.

இன்றையநிலமையில் தமிழர் முன்னாடி இருக்கும் கடைசி பாதுகாப்பு நம்பிக்கை சர்வதேச சமூகம்தான். வேறு எதுவுமேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு தடைகளையும் மீறி மட்டக்களப்பை வந்தடைந்தது பேரணி!

SayanolipavanFebruary 3, 2021
 

 

protest.jpg


பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது.
வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தின்போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

அத்தோடு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற தடையுத்தரவினை காண்பித்து ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டபோது அத்தனையும் மீறி போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் சுமார் 100 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்த குறித்த போராட்டத்திற்கு அட்டாளைச் சேனையில் முஸ்லிம்களும் இணைந்து வலுச்சேர்ந்தனர்.

இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு அனைத்து விதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1612378857451.jpg

 

FB_IMG_1612378859471.jpg

 

 

http://www.battinews.com/2021/02/blog-post_7.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பை வந்தடைந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம்’

 
1-24-696x322.jpg
 46 Views

பல்வேறு தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று  மாலை மட்டக்களப்பை வந்தடைந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தின்போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு  காவல்துறையினர்,விசேட அதிரடிப்படையினர் நீதி மன்றத்தின் ஊடாக தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

பொத்துவிலில் இருந்து தாழங்குடா வரையில் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பினை வந்தடைந்த குறித்த போராட்டத்தில் அட்டாளைச் சேனையில் முஸ்லிம்களும் இணைந்து வலுச்சேர்ந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை  வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=41238

Link to comment
Share on other sites

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது எல்லையை இன்று 2021.02.03 மதியம் 1.30 மணியளவில் வந்தடைந்தது

இதன் போது கல்முனை பொலிஸார் மாளிகைக்காடு சந்தியில் வைத்து இந்த பேரணிக்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காட்டி இந்த போராட்டத்தை கைவிடுமாறு கோரும் நீதிமன்றம் தடை உத்தரவை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் வழங்கி வைத்தனர்

இதன் போது பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதுடன் பயணம் தொடர்ந்தது

இன்று காலை பொத்துவிலில் இருந்து ஆரம்பமான இப் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் இடம்பெற்றதுடன், வரும் 6ஆம் திகதி பொலிகண்டியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஜனநாயக உரிமையைத் தடுக்க எந்தச் சட்டத்திலும் இடமில்லை – சுமந்திரன்

 
IMG_0210-696x522.jpg
 21 Views

எங்களுடைய ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை. இருந்தபோதும் அரச இயந்திரம், பொலிஸார் ஊடாக தடை உத்தரவு பெறுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் இன அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சிப் பேரணி வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று பொத்துவிலில் ஆரம்பித்து மாலை மட்டக்களப்பு ­ தாழங்குடாவில் தரித்துள்ளது. முதல் நாள் பேரணியில் பங்கேற்றதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:­

“கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டியும் சமூகங்களுக்கிடையே முறுகல்கள் ஏற்படும் எனப் பொய்யாகக் காண்பித்தும் அரச தரப்பினர் சில நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளைப் பெற எத்தனிக்கின்றனர். கொழும்புத் துறைமுகத்தில் கிழக்கு முனையம் தொடர்பாக சில நாள்களாக பெரியதொரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கின்றது. அதில் கொரோனா வைரஸ் தொற்றைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை. பொலிஸாரும் எந்த நீதிமன்றத்தையும் நாடவில்லை.

ஆனால், எங்கள் அடிப்படை உரிமைகளை நாங்கள் பெறவேண்டும் என ஜனநாயக ரீதியாக அஹிம்சை வழியில் எவருக்கும் பாதகமில்லாமல் வீதியில் நடக்கின்றபோது அதற்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்தெந்த எல்லைக்குள் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்படுகின்றதோ அதை மதிப்போம்; மீறமாட்டோம்.

தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக திரண்டு பெரும் எழுச்சியாக வடக்கை நோக்கிப் போகும்போது எவராலும் அதைத்தடுக்க முடியாது. விசேடமாக சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. என்றுமே இல்லாதவாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தடைகளை விதிக்க அரசு முனைகின்றது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. நாங்கள் முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இன்றும் இதே இடத்திலிருந்து பேரணியைத் தொடருவோம். அனைவருடைய ஆதரவும் எங்களுக்குத் தேவை” ­ என்றார்.

 

https://www.ilakku.org/?p=41278

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் பேரணியில், காத்தான்குடி முஸ்லிம்களும் இணைந்து கொண்டனர்…

February 4, 2021

polikandi4.jpg

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை அடைந்துள்ளது.

2வது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடா இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகர எல்லைக்குள் நுழைந்த போது பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது காத்தான்குடி நகரின் மத்திய பகுதியை பேரணி அடைந்துள்ளது.

polikandi2.jpg

எங்கே எங்கே உறவுகள் எங்கே?, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும்., வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழங்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக் கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எஸ்.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

polikandi3.pngpolikandi1.jpg

 

https://globaltamilnews.net/2021/156462/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் ஐ.நா உறுதி

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர் அகமது ஷாஹீத் (Ahmed Shaheed) மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் கரிமா பென்னவுன் (Karima Bennoune) ஆகியோரின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த அமைதி போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் இருவருக்குமான கடிதம் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்கள் இருவரும் இவ்வாறு கூறியுள்ளனர்.

இது குறித்து பதில் அனுப்பியுள்ள அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்,

அன்புமிக்க வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த பத்துக் கோரிக்கைகள் அடங்கிய சிறப்புக் கடிதமும் தகவல்களும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான இந்த போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும்.

போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என இவ் அலுவலகத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த ஐ.நாவின் விசேட அணிக்கான முக்கியஸ்தர் சியான் யு லிங் (Chian Yew Lim) உறுதிப்படுத்தியுள்ளார்.
 

https://www.meenagam.com/பொத்துவில்-தொடக்கம்-பொல-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- படங்களின் தொகுப்பு

 
IMG_0155-696x522.jpg
 42 Views

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள்,தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம், தற்போது திருகோணமலை நோக்கி  நகர்ந்துகொண்டிருக்கின்றது.

IMG_7208.jpg

நேற்று பொத்துவிலில் தொடங்கிய பேரணியானது தாண்டியடி, கோமாரி,

IMG_7157.jpg

திருக்கோவில்,தம்பிலுவில்,அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை,பாலமுனை,நிந்தவூர்,காரைதீவு,சாய்ந்தமருது,கல்முனை,

IMG_7078.jpg

பாண்டிருப்பு,பெரியகல்லாறு ஊடாக களுவாஞ்சிகுடியை சென்றடைந்தது.பின்னர் அங்கிருந்து பேரணியானது தாழங்குடாவினை சென்றடைந்தது.

    IMG_0149.jpg

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு,

IMG_7086.jpg

மனித உரிமை மீறல்கள், சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது, பயங்கரவாத தடைச் சட்டம் ,

IMG_0172.jpg

சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=41317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பை வந்தடைந்த தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி

தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்திறற்கு சென்று அங்கிருந்து திருகொணமலை வீதி ஊடாக ஏறாவூருக்கு சென்றடைந்துள்ளது. 

spacer.png

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தபோது அதில் பங்குபற்றுபவர்களுக்கு எதிராக நீதிமன்றில் எடுக்கப்பட்ட தடை உத்தவை பொலிசார் வழங்கி வைத்தனர். 

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரகுமார், சிறீதரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியேந்திரன், ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதியான அருண்தம்பிமுத்து காணாமல் போன உறுவுகள் உட்பட பல் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியையடுத்து பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பை வந்தடைந்த தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

மௌனமாக இருப்பதால்

ஒன்றுமே  இல்லை  என்றாகிவிட்டது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, valavan said:

நிச்சயமாக இதுபோன்ற போராட்டங்களுக்கு சிங்கள தரப்பிடமிருந்து எந்த தீர்வும் வரபோவதில்லை.

ஆனால் ஆயுதரீதியான போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை தீவில் எந்த இனரீதியான பிரச்சனைகளும் இல்லையென்று உலகத்துக்கு காண்பிக்க முயலும் மாறி மாறி வரும் சிங்கள அரசுகளுக்கு குடைச்சல்தான்.

தொழிநுட்பங்கள் வளராத அந்த காலத்தில் எமது தலைமைகள் நடத்திய அரசியல் ஆயுத போராட்டங்கள் வெளியுலகுக்கு காண்பிக்கபடாது முடக்கப்பட்டு எம் பக்க நியாயங்களை மறைத்தார்கள், இன்று தனிமனிதனே சர்வதேசத்துக்கு ஆதாரங்களை வழங்கமுடியும் என்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நிச்சயமாக சிங்களவர்களுக்கு இந்தவகையான போராட்டங்கள் எரிச்சலூட்டுபவையும்,சர்வதேசரீதியில் பாதகமானவையும்தான்.

புலம்பெயர்நாடுகளில் சிங்கள அரசுகளுக்கெதிராக நடத்தும் போராட்டங்களைவிட உள்நாட்டில் சிறுபான்மை இனங்கள் நாங்கள் நிம்மதியாக இல்லையென்று சொல்லி அரசுக்கெதிராக நடத்தும் போராட்டங்கள்,  சர்வதேச அளவில் வலிமையானவை.

ஆனால் சர்வதேசம் அதிரடியாக இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுதருமா என்பது கேள்வி குறிதான் ,

உதவி வழங்கும்நாடுகளின் கூட்டத்தின் போதும், மனித உரிமைகள் அமர்வின்போதும்   சிங்கள அரசும் மக்களும் சிறுபான்மை இனத்துக்கு அநீதி இழைக்கபடுவதுபற்றி சிறுபான்மை இனங்கள் எழுப்பும் குரல்பற்றி   ஒரு கேள்வியாக ,ஆயுதமாக கண்டிப்பாக இலங்கை அரசின்முன் எழுப்புவார்கள், கைக்கொள்வார்கள்.

இன்றையநிலமையில் தமிழர் முன்னாடி இருக்கும் கடைசி பாதுகாப்பு நம்பிக்கை சர்வதேச சமூகம்தான். வேறு எதுவுமேயில்லை.

இதே சர்வ தேசமே இலங்கையை காக்கிறது நாம் தீர்வு கிடைக்கும் என்று காத்திருக்கிறோம் 🙄🙄🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் – பொலிகண்டி 2ம் நாள் பேரணி திருகோணமலையில் நிறைவடைந்தது!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவிலிருந்து திருகோணமலை வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, இந்தப் போராட்டம் இன்று இரவு 8.20 மணியளவில் திருகோணமலை சிவன் கோயிலடியில் நிறைவடைந்தது.

இதையடுத்து, நாளை காலை எட்டு மணிக்கு சிவன் கோவிலடியிலிருந்து முல்லைத்தீவை நோக்கி பேரணி பயணிக்கவுள்ளது.

இன்று தொடர்ந்த பேரணியில் மட்டக்களப்பில் வைத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து கொண்டதுடன் திருகோணமலைக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வாகரையை அண்மிக்கிறது!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேரணி வாகரையை அண்மித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு, தாழங்குடாவில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமான இரண்டாம் நாள் பேரணியானது மட்டக்களப்பு நகரை அடைந்ததுடன் அங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பேரணியுடன் இணைந்துகொண்டனர்.

கருப்புக் கொடிகளுடன் கலந்துகொண்ட உறவினர்கள், கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொடுக்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பி பேரணியை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் திருகோணமலை நோக்கிச் செல்லும் பேரணிக்கு தமிழர் பகுதிகளிலும் முஸ்லிம் பகுதிகளிலும் மகத்தான வரவேற்பளிக்கப்படுவதுடன் பெருமளவானோர் பேரணியில் இணைந்து வருகின்றனர்.

வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதிக்கு பேரணி சென்றபோது அங்கு பெருமளவான முஸ்லிம்கள் பங்குகொண்டு வரவேற்பளித்ததுடன் போராட்டத்திலும் கலந்துகொண்டனர். ஓட்டமாவடியில் முன்னாள் அமைச்சர் அமீர்அலி தலைமையிலானோர் அணிதிரண்டு ஆதரவு வழங்கினர்.

அத்துடன், பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு முஸ்லிம்கள் குடிநீர் மற்றும் குளிர்பானம் வழங்கி ஆதரவு வழங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேரணியானது திருகோணமலை வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ‘இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிவேண்டும்’, ‘தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்து’ மற்றும் ‘படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடு’ போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பொலிஸார், அதிரடிப்படையினர் தொடர்ந்து பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் பேரணி தடைகளை மீறி வடக்கை நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பொத்துவில்-முதல்-பொலிகண-9/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் பேரணியை வரவேற்று கலந்துகொண்ட ஆதரவாளர்கள்!

 
IMG_20210204_163252.jpg

 

(குமணன்)

 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இணைந்து கொண்டு பேரணி திருமலை நோக்கி நகர்கின்றது.

 

IMG_20210204_163154.jpg

 

IMG_20210204_163213.jpg

 

IMG_20210204_163255.jpg

 

IMG_20210204_163302.jpg

 

IMG_20210204_163309.jpg

 

IMG_20210204_163310.jpg

 

IMG_20210204_163351.jpg

 

IMG_20210204_163508.jpg

 

IMG_20210204_165349.jpg

 

IMG_20210204_165402.jpg

 

IMG_20210204_165414.jpg


http://www.battinews.com/2021/02/blog-post_22.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை நடை பயணம் காட்டுகின்றது’ – சுமந்திரன்

 
01-1-696x464.jpg
 51 Views

பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும் தான் முகம் கொடுக்க முடியும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி நகரை அடைந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு கூறினார்.

12.jpeg

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

“பேரான்மை ஆட்சி, எங்களை அடக்குகின்ற ஆட்சி, எங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்கின்ற முறையை எதிர்த்து பல விடயங்களை முன்வைத்துள்ளோம். அனைத்து இடங்களிலும் எங்களோடு மக்கள் இணைந்து போராடுகின்றார்கள்.

முஸ்லிம்களின் பிரச்சனையாகவுள்ள ஜனாசா எரிப்பு விவகாரத்தினையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகள், எங்களது அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி செய்யப்பட வேண்டும். எங்களது நிலங்கள் அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும். வழிபாட்டு தலங்கள் உடைக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும்.

08.jpg

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவோம் என்று சொல்லிச் சொல்லி இழுத்தடிப்பு செய்கின்றார்கள். அது கொடுக்கப்பட வேண்டும். நாங்கள் பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும்தான் முகம் கொடுக்க முடியும்.

14.jpeg

இதுவரைக்கும் எங்களை தனித் தனியாக கையாண்டார்கள். எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக சொல்கின்றோம்.” என்றார்.

 

https://www.ilakku.org/?p=41363

 
 
 

நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் தொடரும் -யாழ். மாநகர முதல்வர்

 
1.png
 65 Views

தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  

கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் இன்று கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை என்றும் இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேவேளை, புலம்பெயர் தேசங்களில் எமது தமிழ் மக்கள் தாயகத்தில் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=41355

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் – பொலிகண்டி பேரணி ஏழாம் திகதியே யாழ்ப்பாணம் வரும்- ஒருநாள் நீடிப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் பேரணியை முடிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது ஏழாம் திகதியே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் ஆறாம் திகதி வரை போராட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றங்களின் மூலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வருவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், மட்டக்களப்பில் ஏற்பட்ட எழுச்சியையடுத்து, கிளிநொச்சி ஊடாகவும் போராட்டம் செல்ல வேண்டுமென சி.சிறிதரன் எம்.பி தரப்பினர் விடுத்த கோரிக்கையையடுத்து, கிளிநொச்சி ஊடாக பேரணி பயணிக்க ஏற்பாடாகியுள்ளது.

இதன்படி, வரும் 7ஆம் திகதி பேரணி யாழ்ப்பாணத்தை சென்றடையும்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/பொத்துவில்-பொலிகண்டி-பே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது தலைவர்களுக்கும், தலைவர்களின் எஜமானர்களுக்கும் எதிராக இம்மக்கள் எழுப்பும் உணர்வுபூர்வமான கோரிக்கைகள் சிலரை சங்கடத்திலும் கோபத்திலும் ஆள்த்தக்கூடும்.

அதனாலோ என்னவோ இப்பேரணிபற்றி தமது அதிருப்தியையும் இதனால் எதுவுமே ஆகப்போவதில்லை எனும் தமது எண்ணத்தையும் அவப்போது உதிர்க்கிறார்கள்..

ஒரு கருத்தினை நீக்குகிறீர்கள் என்றால் அதற்கான காரணத்தைக் கூறும் கண்ணியமாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அதுகூட இப்போது இங்கிருக்கவில்லை என்பது வேதனையான விடயம். 

நான் முதலில் இட்ட கருத்தைத்தான் இப்போது மீண்டும் எழுதியிருக்கிறேன். இதில் உள்ள தவறு என்னவென்று கூறிவிட்டு உங்களின் விருப்பத்துடன் கருத்தை அழியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியில் விஷமிகளினால் திட்டமிடப்பட்ட இடையூறு

 

தமிழர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது திருகோணமலைப் பகுதியில் வைத்து சிலர் தாக்குத்தல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.திருகோணமலை – மடத்தடிச் சந்திப் பகுதியில் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துகொண்டிருந்தபோதே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் சில வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் முல்லைத்தீவிலுள்ள இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களை குறித்த பகுதிக்கு விரையுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை இன்று நண்பகலை அண்டி முல்லைத்தீவு – உடுப்புக்குளம் பகுதி யில் தமிழர்மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் மதத் தலைவர்கள் இணைந்து பேரணி வரவேற்கப்பட்டு பேரணியோடு இணைந்து தொடர்ந்து முல்லைத்தீவு நகரம் நோக்கிச் செல்லவுள்ளனர்.எனவே, முல்லைத்தீவில் பேரணியோடு ஒன்றுகூடக் கூடியவர்கள் உடுப்புக்குளம் பகுதியில் இணைந்து கொள்ளுங்கள் என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.(15)

 

http://samakalam.com/பொத்துவில்-முதல்-பொலிகண-4/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.