Jump to content

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உங்கள் புரிதலுக்கு,

சுமந்திரனுக்கான STF பாதுகாப்பின் பின்னால் நிற்பது US. அல்லது அவருக்கும் ரெண்டு சிரிப்புப் பொலிஸ்தான் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும். 

STF பாதுகாப்பு கொடுப்பது US இல்லை சிங்கள அரசுதான்  போர்க்குற்றம் என்று சொல்லக்கூடாது உலகம் முழுக்க பறந்து  பறந்து  சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கியவர் இப்ப சைக்கிள் கொஞ்சம் ஓட தொடங்கியதால் சுருதி மாற்றி பாடுகிறார் .பண்டிதர் வீட்டில் அஞ்சலி செலுத்தியதுக்கு இதே STF பாதுகாப்புடன் தான் போனதுக்கு பார்லிமென்டில் சிங்களவர்கள் சத்தம் போட்டவர்கள் இப்போ அதே சிங்களம் அமைதியாக இருக்குதே அந்த அமைதியே யார் பாதுகாப்பு வழங்கு கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லுது பொம்பியையே அலற வைத்து அனுப்பிய சிங்களம் அமெரிக்கா சொல்லி பாதுகாப்பு கொடுக்கும் ஒரு தமிழருக்கு என்ன மரியாதை செய்து இருக்கும் ?

அதே பண்டிதர் வீட்டுக்கு விக்கியர்  போயிருந்தால் எத்தனை விசாரணை நடந்து இருக்கும் ? சுமத்திரனே கதையை கிளப்பி விட்டு இருப்பார் தனக்கு அமெரிக்கா பாதுகாப்பு என்று .

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்கு துணை போய் சிங்க‌ள‌ பேரின‌வ‌திக‌ளை தூண்டும் மடத்தனத்தை கைவிடுங்கள்!உலமா கட்சி எச்சரிக்கை

இர‌ண்டு ச‌மூக‌ங்க‌ள் நூறு வீத‌ உட‌ன்பாட்டோடு ப‌ய‌ணிக்க‌ முடியாது. முஸ்லிம்க‌ளுக்கும் சிங்க‌ள‌ அர‌சுக்குமிடையில் 98 வீத உட‌ன் பாடு உள்ள‌து. முஸ்லிம்க‌ளுக்கும் த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்குமிடையில் 98 வீத‌ முர‌ண்பாடு உள்ள‌து என உலமா கட்சியின் தேசிய தலைவர் மௌலவி முபராக அப்துல் மஜித் தெரிவிக்கிறார்.

 

 

குறிப்பாக த‌மிழ் பேரின‌வாத‌த்தை விட‌ சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் சிறிய‌ள‌வு பிர‌ச்சினைக‌ளையே முஸ்லிம்க‌ளுக்கு செய்துள்ள‌து. அத‌னால் த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்கு துணை போய்சிங்க‌ள‌ பேரின‌வ‌திக‌ளை தூண்டும் ம‌ட‌த்த‌ன‌த்தை கை விடுங்க‌ள் என அவர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

இதுதொடர்பாக அவர் நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டு இருக்கிறார.

 

 

அதில்

 

 

  1. இந்த‌ நாட்டில் 1 கோடி 20 ல‌ட்ச‌ம் சிங்க‌ள‌வ‌ர் உள்ள‌ன‌ர். ஆனால் இன்று வரை எந்த‌வொரு மாகாண‌த்தில் இருந்தும் முஸ்லிம்க‌ள் அனைத்து உட‌மைக‌ளும் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ பின் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌தில்லை.
  2. ப‌ள்ளிவாய‌ல்க‌ளில் சுட‌ப்ப‌ட்ட‌து போல் சுட‌ப்ப‌ட்ட‌தில்லை.
  3. ஏறாவூர், பொல‌ன்ன‌றுவை போல் அழிக்க‌ப்ப‌ட‌வில்லை.
  4. க‌ல்முனை ப‌ஸார், சாய்ந்த‌ம‌ருது, அக்க‌ரைப்ப‌ற்று ச‌ந்தைக‌ள் ப‌ல‌ த‌ட‌வை குண்டு வைத்து த‌க‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து போல் தாக்க‌ப்ப‌ட்ட‌தில்லை.
  5. ஆயுத‌த்தால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்முனை உப‌ செய‌லக‌ம் 98 வீத‌மான‌ முஸ்லிம்க‌ளின் நில‌ங்க‌ளை கொண்ட‌ க‌ல்முனை ப‌ஸாரை த‌மிழ் கிராம‌ சேவ‌க‌ பிரிவில் ப‌லாத்காரமாக‌ இணைத்துக்கொண்ட‌து போல் ந‌ட‌ந்த‌தில்லை. இத‌னை பார்த்துக்கொண்டிருந்த‌ முஸ்லிம் ம‌க்க‌ளின் அர‌சிய‌ல் அதிகார‌ம் போன்ற‌ முட்டாள்க‌ள் இருந்த‌துமில்லை.
  6. குருக்க‌ள் ம‌ட‌ம், உண்ணிச்சை போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு சென்ற‌ முஸ்லிம்க‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌ட்ட‌து போன்று சிங்க‌ள‌ ப‌குதிக‌ளில் ந‌ட‌க்க‌வில்லை.
  7. நாட்டில் யுத்த‌ம் நில‌விய‌போது அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் த‌ம‌து தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ த‌மிழ் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ த‌மிழ் ப‌குதிக‌ள் ஊடாக‌ கொழும்பு செல்ல‌ ப‌ய‌ந்து 100 வீத‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் வாழும் ம‌ஹா ஓய‌ ப‌குதி மூல‌மே அச்ச‌மின்றி கொழும்பு சென்று வ‌ந்த‌ன‌ர்.
  8. காரைதீவில் வைத்து கிழ‌க்கு மாகாண‌ ச‌பையின் ச‌க‌ முஸ்லிம் பொலிசாரை அதே மாகாண‌ த‌மிழ் பொலிசாரால் சுட்டுக்கொன்ற‌து போல் சிங்க‌ள‌ பொலிசார் த‌ம‌து ச‌க‌ முஸ்லிம் பொலிசாரை கொன்ற‌தில்லை.
  9. த‌மிழ் புலிக‌ள் த‌ம்முட‌ன் இருந்த‌ த‌மிழ் பேசும் முஸ்லிம் இராணுவ‌த்தை அவ‌ர்க‌ள் முஸ்லிம் என்ப‌த‌ற்காக‌ சுட்டுக்கொன்ற‌து போல் சிங்க‌ள‌ இராணுவ‌ம் த‌ம்முட‌ன் இருந்த‌ சிங்க‌ள‌ம் பேசாத‌ முஸ்லிம் பொலிசாரைக்கூட‌ சுட்டுக்கொன்ற‌தில்லை.
  10. திருகோண‌ம‌லை ச‌ன்முகா க‌ல்லூரியில், பொக‌வ‌ந்த‌லாவ‌ த‌மிழ் வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்த‌ முஸ்லிம் ஆசிரியைக‌ள் விர‌ட்ட‌ப்ப‌ட்ட‌து போல் எந்த‌வொரு சிங்க‌ள‌ பாட‌சாலையிலும் விர‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை.

ஒன்றை நினைவில் கொள்ளுங்க‌ள். இன்று வ‌ரை த‌மிழ் பேரின‌வாத‌த்தை விட‌ சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் சிறிய‌ள‌வு பிர‌ச்சினைக‌ளையே முஸ்லிம்க‌ளுக்கு செய்துள்ள‌து. அத‌னால் த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்கு துணை போய்சிங்க‌ள‌ பேரின‌வ‌திக‌ளை தூண்டும் ம‌ட‌த்த‌ன‌த்தை கை விடுங்க‌ள் என அவர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://annachinews.com/archives/10950

Link to comment
Share on other sites

இந்த மக்கள் போராட்டத்தில் ஏனைய தமிழ் அரசியல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஒருவரையும் படங்களில் காண முடியவில்லை. விக்கி ஐயா, கஜேந்திரன்ஸ், மாவை, அனந்தி போன்றாரை காணவில்லை.

அங்கஜன், டக்கிளஸ், பிள்ளையான் போன்றோரை காண முடியாமைக்கு காரணம் இருக்கு, ஆனால் இவர்கள் ஏன் இன்னும் பங்கெடுக்கவில்லை? அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தமக்கு வாக்களியுங்கள் என்று கேட்டவர்கள் இதில் பங்குகொள்ளவில்லையா? அல்லது யாழ் நகரில் நடைபெறப்போகும் போராட்டங்களில் (மட்டும்) கலந்து கொள்ளப் போகின்றார்களா?

 

Link to comment
Share on other sites

30 minutes ago, colomban said:

த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்கு துணை போய் சிங்க‌ள‌ பேரின‌வ‌திக‌ளை தூண்டும் மடத்தனத்தை கைவிடுங்கள்!உலமா கட்சி எச்சரிக்கை

இர‌ண்டு ச‌மூக‌ங்க‌ள் நூறு வீத‌ உட‌ன்பாட்டோடு ப‌ய‌ணிக்க‌ முடியாது. முஸ்லிம்க‌ளுக்கும் சிங்க‌ள‌ அர‌சுக்குமிடையில் 98 வீத உட‌ன் பாடு உள்ள‌து. முஸ்லிம்க‌ளுக்கும் த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்குமிடையில் 98 வீத‌ முர‌ண்பாடு உள்ள‌து என உலமா கட்சியின் தேசிய தலைவர் மௌலவி முபராக அப்துல் மஜித் தெரிவிக்கிறார்.

 

 

குறிப்பாக த‌மிழ் பேரின‌வாத‌த்தை விட‌ சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் சிறிய‌ள‌வு பிர‌ச்சினைக‌ளையே முஸ்லிம்க‌ளுக்கு செய்துள்ள‌து. அத‌னால் த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்கு துணை போய்சிங்க‌ள‌ பேரின‌வ‌திக‌ளை தூண்டும் ம‌ட‌த்த‌ன‌த்தை கை விடுங்க‌ள் என அவர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

இதுதொடர்பாக அவர் நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டு இருக்கிறார.

 

 

அதில்

 

 

  1. இந்த‌ நாட்டில் 1 கோடி 20 ல‌ட்ச‌ம் சிங்க‌ள‌வ‌ர் உள்ள‌ன‌ர். ஆனால் இன்று வரை எந்த‌வொரு மாகாண‌த்தில் இருந்தும் முஸ்லிம்க‌ள் அனைத்து உட‌மைக‌ளும் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ பின் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌தில்லை.
  2. ப‌ள்ளிவாய‌ல்க‌ளில் சுட‌ப்ப‌ட்ட‌து போல் சுட‌ப்ப‌ட்ட‌தில்லை.
  3. ஏறாவூர், பொல‌ன்ன‌றுவை போல் அழிக்க‌ப்ப‌ட‌வில்லை.
  4. க‌ல்முனை ப‌ஸார், சாய்ந்த‌ம‌ருது, அக்க‌ரைப்ப‌ற்று ச‌ந்தைக‌ள் ப‌ல‌ த‌ட‌வை குண்டு வைத்து த‌க‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து போல் தாக்க‌ப்ப‌ட்ட‌தில்லை.
  5. ஆயுத‌த்தால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்முனை உப‌ செய‌லக‌ம் 98 வீத‌மான‌ முஸ்லிம்க‌ளின் நில‌ங்க‌ளை கொண்ட‌ க‌ல்முனை ப‌ஸாரை த‌மிழ் கிராம‌ சேவ‌க‌ பிரிவில் ப‌லாத்காரமாக‌ இணைத்துக்கொண்ட‌து போல் ந‌ட‌ந்த‌தில்லை. இத‌னை பார்த்துக்கொண்டிருந்த‌ முஸ்லிம் ம‌க்க‌ளின் அர‌சிய‌ல் அதிகார‌ம் போன்ற‌ முட்டாள்க‌ள் இருந்த‌துமில்லை.
  6. குருக்க‌ள் ம‌ட‌ம், உண்ணிச்சை போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு சென்ற‌ முஸ்லிம்க‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌ட்ட‌து போன்று சிங்க‌ள‌ ப‌குதிக‌ளில் ந‌ட‌க்க‌வில்லை.
  7. நாட்டில் யுத்த‌ம் நில‌விய‌போது அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் த‌ம‌து தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ த‌மிழ் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ த‌மிழ் ப‌குதிக‌ள் ஊடாக‌ கொழும்பு செல்ல‌ ப‌ய‌ந்து 100 வீத‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் வாழும் ம‌ஹா ஓய‌ ப‌குதி மூல‌மே அச்ச‌மின்றி கொழும்பு சென்று வ‌ந்த‌ன‌ர்.
  8. காரைதீவில் வைத்து கிழ‌க்கு மாகாண‌ ச‌பையின் ச‌க‌ முஸ்லிம் பொலிசாரை அதே மாகாண‌ த‌மிழ் பொலிசாரால் சுட்டுக்கொன்ற‌து போல் சிங்க‌ள‌ பொலிசார் த‌ம‌து ச‌க‌ முஸ்லிம் பொலிசாரை கொன்ற‌தில்லை.
  9. த‌மிழ் புலிக‌ள் த‌ம்முட‌ன் இருந்த‌ த‌மிழ் பேசும் முஸ்லிம் இராணுவ‌த்தை அவ‌ர்க‌ள் முஸ்லிம் என்ப‌த‌ற்காக‌ சுட்டுக்கொன்ற‌து போல் சிங்க‌ள‌ இராணுவ‌ம் த‌ம்முட‌ன் இருந்த‌ சிங்க‌ள‌ம் பேசாத‌ முஸ்லிம் பொலிசாரைக்கூட‌ சுட்டுக்கொன்ற‌தில்லை.
  10. திருகோண‌ம‌லை ச‌ன்முகா க‌ல்லூரியில், பொக‌வ‌ந்த‌லாவ‌ த‌மிழ் வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்த‌ முஸ்லிம் ஆசிரியைக‌ள் விர‌ட்ட‌ப்ப‌ட்ட‌து போல் எந்த‌வொரு சிங்க‌ள‌ பாட‌சாலையிலும் விர‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை.

ஒன்றை நினைவில் கொள்ளுங்க‌ள். இன்று வ‌ரை த‌மிழ் பேரின‌வாத‌த்தை விட‌ சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் சிறிய‌ள‌வு பிர‌ச்சினைக‌ளையே முஸ்லிம்க‌ளுக்கு செய்துள்ள‌து. அத‌னால் த‌மிழ் பேரின‌வாதிக‌ளுக்கு துணை போய்சிங்க‌ள‌ பேரின‌வ‌திக‌ளை தூண்டும் ம‌ட‌த்த‌ன‌த்தை கை விடுங்க‌ள் என அவர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://annachinews.com/archives/10950

டக்கிளஸ், கருணா,பிள்ளையான், அங்கஜன் போன்றோருக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் இவருக்கும். மக்கள் சுதந்திரம், விடுதலை பற்றி தன்னுணர்வு கொண்டு போராடினால் இவர்களுக்கான இடம் அரசியலில் இல்லாமல் போய்விடும். முக்கியமாக பிள்ளையான், கருணா, இவர் போன்றோரின் அடிப்படை அரசியலே பிரதேசவாதமும், முஸ்லிம் தமிழ் உறவுகளுக்கிடையிலான பிளவும் தான். அது சீர் செய்யப்பட்டால் இவர்களுக்கு அரசியல் செய்ய வெளி கிடைக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி கிளிநொச்சியை சென்றடைந்தது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பயணம் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் சென்றடைந்தது.

spacer.png

கிளிநொச்சி டிப்புா சந்தியை சென்றடைந்த  குறித்த பேரணிக்கு கிளிநொச்சியி் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இரணைமடு சந்தியில் கூடிய ஆதரவாளர்கள் ஆமோக வரவேற்பளித்து பேரணியை வரவேற்றனர். குறித்த பேரணியின் இன்றைய பயணம் கிளிநொச்சி டிப்புா சந்தியில் 7.30 மணியளவில் நிறைவு பெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை அதே இடத்திலிருந்து பொலிகண்டிவரை பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spacer.png

தொடர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டதத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் கைவிடப்பட்டது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி கிளிநொச்சியை சென்றடைந்தது | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

இந்த மக்கள் போராட்டத்தில் ஏனைய தமிழ் அரசியல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஒருவரையும் படங்களில் காண முடியவில்லை. விக்கி ஐயா, கஜேந்திரன்ஸ், மாவை, அனந்தி போன்றாரை காணவில்லை.

விக்கியரை காணவில்லை நடப்பதில் பிரச்சனையாக்கும் மற்றவர்கள் மாஸ்க் மறைத்து விட்டுத்தாக்கும் .

 

27 minutes ago, நிழலி said:

அங்கஜன், டக்கிளஸ், பிள்ளையான் போன்றோரை காண முடியாமைக்கு காரணம் இருக்கு, ஆனால் இவர்கள் ஏன் இன்னும் பங்கெடுக்கவில்லை? அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தமக்கு வாக்களியுங்கள் என்று கேட்டவர்கள் இதில் பங்குகொள்ளவில்லையா? அல்லது யாழ் நகரில் நடைபெறப்போகும் போராட்டங்களில் (மட்டும்) கலந்து கொள்ளப் போகின்றார்களா?

அவர்கள் வரமாட்டினம் தானே அடக்குமுறைக்கு என்று அவர்கள் கூவுவது ஒன்றும் புதுசு இல்லைதானே .

எரிக் சொல்கெம் வந்து மக்கள் போராடவேணும் என்றதும் ஜெய்சங்கருக்கும் அதி அவசர தேவை வந்துள்ளது .🥱

Link to comment
Share on other sites

43 minutes ago, பெருமாள் said:

May be an image of 1 person, standing and road

இருவருக்கும் கொரனோ  கடிக்காது போல் உள்ளது .

May be an image of 1 person, standing, sitting, outdoors and text that says "CREMATION Sri Lanka"

நன்றி.

இந்த படங்கள் இணைக்கப்பட்ட செய்திகளின் இணைப்பைத் தந்தால் தான் இவர்கள் இந்த P2P போட்டத்தில் தான் பங்குபற்றினார்களா அல்லது முந்தி நடந்த ஒரு போராட்டத்தின் படங்களா என கேள்வி யாரும் எழுப்பும் போது பதில் கொடுக்க கூடியதாக இருக்கும.

34 minutes ago, பெருமாள் said:

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், மரம், வானம் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அருமை!

12 வருட இடவெளியில் நிகழும் பெரும் மாற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

ஆனாலும் லண்டனில் வாகனப்பேரணிப் ப் பி 2பி க்கு  ஆதரவாக நடைபெறுகிறது

நல்ல விடயம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நன்றி.

இந்த படங்கள் இணைக்கப்பட்ட செய்திகளின் இணைப்பைத் தந்தால் தான் இவர்கள் இந்த P2P போட்டத்தில் தான் பங்குபற்றினார்களா அல்லது முந்தி நடந்த ஒரு போராட்டத்தின் படங்களா என கேள்வி யாரும் எழுப்பும் போது பதில் கொடுக்க கூடியதாக இருக்கும.

உங்கள் கேள்வி வருமட்டும் நானும் யோசிக்கல ஆனந்தியும் நிண்டவ பொலிஸுடன் தள்ளுமுள்ளு பட்டு நினைவு மாவை தொடக்கத்தில் ஒலிநாடா மூலம் எல்லாரும் வரணும் என்றவர் ஊர்வலத்தில் காணவில்லை கடைசி நாள் பார்ப்பம்யார் யார் வருகினம் என்று .

ஆனால்  ஒருத்தர் மட்டும் ஜோதிகா மழையில்  நனைந்து ஆடுவதுக்கு  ஒப்பாய் கறுத்த  சேட்டுடன் மாஸ்க்கையும் கழட்டி விட்டு படங்களுக்கு போஸ்  குடுத்து நல்ல அரசியல் அறுவடை செய்கிறார் .அவர் மறுபடியும் தழைத்தால் 2030ல் வடகிழக்கில் சிங்களவர்கள் தான் எம்பியாக இருப்பினம் .

4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:
2 hours ago, colomban said:

சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் சிறிய‌ள‌வு பிர‌ச்சினைக‌ளையே முஸ்லிம்க‌ளுக்கு செய்துள்ள‌து.

முஸ்லிம்க‌ளுக்கும் சிங்க‌ள‌ அர‌சுக்குமிடையில் 98 வீத உட‌ன் பாடு உள்ள‌து.

உடன்பாட்டுக்குள் எங்கிருந்து பேரினவாதம் வந்தது?  98% உடன் பாட்டை விட அந்த சிறிதளவு பிரச்சனை அவர்களுக்கு வலியை கொடுப்பதாலே அவர்கள் பேரணியில் கலந்து கொண்டார்கள். ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஷ்லீம்கள் பல போராட்டங்கள், கோரிக்கைகள், அறிக்கைகள், முறைப்பாடுகள் செய்தும் அசரவில்லை அரசு. அப்போவெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்த உலமா கட்சி அப்துல் முபாறக் இப்போ கூவுவுதன் காரணம் என்னவோ? கேட்டுச் சொல்லுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, satan said:

அப்போவெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்த உலமா கட்சி அப்துல் முபாறக் இப்போ கூவுவுதன் காரணம் என்னவோ? கேட்டுச் சொல்லுங்கோ!

அவரால் கேள்வியெல்லாம் கேட்கமுடியாது. முஸ்லீம்கள் சிலரால் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை, அதாவது தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்னும் பிரச்சாரத்தை தமிழர்களுக்குள்ளேயே தமிழன் என்னும் போர்வையில் செய்வது, அதை அவர் செவ்வனே செய்கிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

அவரால் கேள்வியெல்லாம் கேட்கமுடியாது. முஸ்லீம்கள் சிலரால் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை, அதாவது தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்னும் பிரச்சாரத்தை தமிழர்களுக்குள்ளேயே தமிழன் என்னும் போர்வையில் செய்வது, அதை அவர் செவ்வனே செய்கிறார்!

இவர் பேச்சை யாரும் காதில் வாங்குவதாகத் தெரியவில்லையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

இவர் பேச்சை யாரும் காதில் வாங்குவதாகத் தெரியவில்லையே. 

வணக்கம், நேற்று ஒரு திரியில் நீங்களும் கப்பித்தானும் இறுதி யுத்தகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதிக்குள் கருணா குழு உளவாளிகளின் செயற்பாடு, பின்னர் வவுனியா தடைமுகாமினுள் நடந்தவை, திருகோணமலையில் காயப்பட்டவர்களுக்கு நடந்த அநீதிகள், யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகள் இலக்குவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டமை என்று பலவிடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இவைபற்றிய முழுமையான தகவல்களைத் தரமுடியுமா? துரோகத்தின் நாட்காட்டி எனும் தொடருக்கு இவை மிகுந்த உதவியாக இருக்கும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கான பேரணி கிளிநொச்சியை வந்தடைந்தது – இன்று யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசம்

 
5-696x522.jpg
 8 Views

கிளிநொச்சியை நேற்றிரவு வந்தடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணி இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கவுள்ளது. இதில் பங்கேற்கப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தயாராகியுள்ளனர்.

தமிழ்பேசும் மக்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் சர்வதேசத்திடம் நீதி கோரியும் முன்னெடுக்கப்படும் மாபெரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தின் நான்காம் நாளான நேற்று வவுனியாவில் இருந்து காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி ஹொறவப்பொத்தானை வீதி ஊடாக மன்னார் நோக்கிப்பயணித்தது.

நண்பகல் 12 மணியளவில் மன்னார் மடுச் சந்தியை அடைந்த பேரணி அங்கிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நகர்நோக்கிச் சென்றது. இதன்போது, பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகரைச் சென்றடைந்தது.

மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர். அத்துடன், பேரணியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களின் இலக்கங்களையும் பொலிஸார் பதிவுசெய்த பின்னர் மன்னார் நகரப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். மன்னார், பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த பேரணி சென்றது.

வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர். மேலும், வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுடன் பெரும் எண்ணிக்கையான முஸ்ஸிம் மக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர்.

குறித்த பேரணி பெருமளவு மக்கள் வெள்ளத்துடன் மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகருக்குநேற்று மாலை சென்றது. அங்கிருந்து மாங்குளம், திருமுறிகண்டி, இரணை மடுச் சந்தி ஊடாகச் சென்ற பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை நேற்றிரவு 8 மணியளவில் வந்தடைந்தது. இறுதி நாளான இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கிப் பேரணி வருகின்றது.

இந்தப் பேரெழுச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ்பேசும் மக்கள் அரசுக்கு எதிராகவும் இராணுவத்துக்கு எதிராகவும் விண்ணதிரக் கோஷங்களை எழுப்புவதுடன் சர்வதேசத்திடம் நீதி கோரி வேண்டுகோள்களையும் விடுத்து வருகின்றனர்.

 

https://www.ilakku.org/?p=41580

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுடன் பெரும் எண்ணிக்கையான முஸ்ஸிம் மக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர்.

 

4 minutes ago, உடையார் said:

பேரெழுச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ்பேசும் மக்கள் அரசுக்கு எதிராகவும் இராணுவத்துக்கு எதிராகவும் விண்ணதிரக் கோஷங்களை எழுப்புவதுடன் சர்வதேசத்திடம் நீதி கோரி வேண்டுகோள்களையும் விடுத்து வருகின்றனர்.

விடுப்புப் பார்க்க கூடின கூட்டம் செய்யிற வேலையா இதெல்லாம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ நடைபயணத்துக்கான இன்றைய வழித்தடம்

 
9-696x435.jpg
 17 Views

கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கம்.
பரந்தன்.
இயக்கச்சி.
கொடிகாமம்.
பளை.
சாவகச்சேரி.
கைதடி.
நாவற்குழி.
அரியாலை.
யாழ் நகரம்.
யாழ் பொதுநூலகம்.
யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்.
யாழ் பல்கலைக்கழகம்.
நல்லூர் தியாகதீபம் நினைவிடம்.
கல்வியங்காடு.
கோப்பாய்.
நீர்வேலி.
வல்லைவெளி.
புறாபொறுக்கி சந்தி.
கரணவாய்
நெல்லியடி.
மாலுசந்தி
மந்திகை
பருத்தித்துறை
திக்கம்
அல்வாய்
வதிரிச்சந்தி.
உடுப்பிட்டி.
வல்வெட்டித்துறை தீருவில் வெளி.
வல்வெட்டித்துறை நகரம்.
நெடியகாடு.
பொலிகண்டி நிறைவிடம்.

 

https://www.ilakku.org/?p=41600

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆயிரக் கணக்கில் குவிந்த மக்கள்! கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது எழுச்சி பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி சற்றுமுன் கிளிநொச்சியில் இருந்து ஐந்தாவது நாளாக ஆரம்பமாகி உள்ளது. 

நேற்று காலை மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம் ஊடாக முறிகண்டி வந்தடைந்து மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது. 

இதையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளது. 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம் பௌத்த அதிகார வெறிபிடித்த அரசே எம்மை நிம்மதியாக வாழ விடு , இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும் எனும் விண்ணதிரும் கோசங்களோடு மக்கள் அலை வெள்ளமாய் பரந்தன் நோக்கி நகர்கின்றது. 

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் உரிமைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவை வழங்கி வருகின்றனர். 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg
 

 

https://www.ibctamil.com/srilanka/80/159383?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் பேரணி முகமாலையை வந்தடைந்தது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் ஐந்தாம் நாள் பேரணி இன்று (7) கிளிநொச்சியில் ஆரம்பமான நிலையில் சற்றுமுன்னர் முகமாலையை வந்தடைந்தது.

IMG-5722-300x225.jpgIMG-5721-300x225.jpgIMG-5720-300x225.jpgIMG-5709-300x225.jpgIMG-5705-300x225.jpg
 

பேரணியை பெரும் திரளான மக்கள் இணைந்து முகமாலையில் வரவேற்று இணைந்து கொண்டனர்.

இதன்படி இந்த பேரணி கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ்ப்பாணம் மாநகரம், யாழ்ப்பாணம் பொதுநூலகம், யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி. வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி. வல்வெட்டித்துறை தீருவில் வெளி,
வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து பொலிகண்டியில் நிறைவடையும்

 

.2701e51f-935c-4520-aae7-460897262111-696786b92b6-c9d4-4d8f-ab94-e3f15e4e958c-69690bee690-a420-4787-8afa-3f25d06db21e-300FB_IMG_1612676944958-300x200.jpgFB_IMG_1612676936196-300x225.jpgIMG-20210207-WA0001-300x120.jpgIMG-20210207-WA0002-234x300.jpgIMG-20210207-WA0003-300x111.jpgIMG-20210207-WA0000-300x108.jpg
 

 

https://newuthayan.com/மாபெரும்-பேரணி-முகமாலையை/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பேரெழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் சென்றுள்ளது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் சென்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இறுதிநாளாக பொலிகண்டி வரையான பேரணி இன்று மதியம் யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்தது.

இதையடுத்து கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி ஊடாக யாழ். மாநகர எல்லைக்குள் பேரணி சென்றுள்ளது.

யாழ். மாநகர எல்லை வளைவுப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியை வரவேற்றதுடன், அங்கிருந்தும் பேரணியுடன் பெருமளவானோர் இணைந்துள்ளனர்.

http://athavannews.com/பேரெழுச்சிப்-பேரணி-யாழ்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, இவையளுக்கு என்ன பெயர்? தேசிக்காய்கள் எண்டு சொல்லலாமோ? அல்லது வேறு ஏதாச்சும் பெயர் இருக்குதோ? உதெல்லாம் சும்மா. புலம்பெயர் தேசிக்காய்களின்ர பணத்தில ஊர்சுற்றுர காவாலிகள் செய்யிற தேவையில்லாத வேலை .

உதால ஒரு பிரியோசனமும் இல்லை. எங்களுக்கு சீனக் காரன் இருக்கிறான். இந்தியாவை அழிச்சுப்போடுவான். நாங்கள் எங்கட சரித்திரத் தலைவர்களான பிள்ளையானின்ர தலைமையிலையும், கருணாவின்ர தலைமையிலையும் இன்னும் அதிகம் அதிகமாக எங்கட எஜமானின்ர காலை .....குவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.