Jump to content

மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது

February 3, 2021
myanamar2.jpg Myanmar's soldiers walk near the congress compound in Naypyitaw, Myanmar, February 2, 2021. REUTERS/Stringer NO RESALES NO ARCHIVES

 

மியான்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முற்பட்டபோதும் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது.

நேற்று (2) இணையத்தள வழியாக மூடிய அறைக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நாடுகள் மியான்மார் இராணுவப்புரட்சிக்கு எதிராக கூடியிருந்தன. இதன் போது பிரித்தானியா கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தது.

15 உறுப்பினர்களை கொண்ட இந்த சபையில் 2 மணிநேரம் இடம்பெற்ற விவாத்தின் போது சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றுவதை தடுத்துவிட்டது.

சீனாவுடன் இணைந்த ரஸ்யாவும் தமக்கு அதிக கால அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தீர்மானம் தற்போதும் விவாதத்தில் உள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மியான்மார் மீது தடைகள் ஏதும் விதிக்கப்படாத வெறும் கண்டனத்தீர்மானத்தையே சீனா முறியடித்துள்ளது மேற்குலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.ilakku.org/?p=41196

 

 

Link to comment
Share on other sites

சீன இருக்கும் வரைக்கும் களவு, கொள்ளை, கொலை , ஜனநாயஹகொலை என்பவற்றை நிறுத்த முடியாது.

சீன இந்தளவுக்கு வளர்ச்சி என்பது மற்ற நாடுகளின் தொழில்நுட்பங்களை , கண்டுபிடுப்பக்களை களவெடுத்து முன்னேறியதே தவிர மட்ட்றப்படி வாய் சவடால்கள்தான்.

மற்றைய நாடுகளை கொள்ளையடிப்பது, உதவி என்று சொல்லி நாடுகளை அடிமையாக்குவது , கொள்ளை நோய்களை பரப்புவது இதுவே அவர்களது உலகுக்கான பங்களிப்பு. கேடு கெடட ஒரு நாடு என்றால் அது சீனாதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

 
1-19.jpg
 25 Views

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில்  முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை  கைது செய்து சிறை வைத்துள்ளது.
 
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.
 
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு  உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில் சுமார் 70 மருத்துவனைகள் மற்றும் மருத்துவ துறையினர் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மியான்மர் சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற குழு தெரிவித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

On 3/2/2021 at 08:57, Robinson cruso said:

 

சீன இந்தளவுக்கு வளர்ச்சி என்பது மற்ற நாடுகளின் தொழில்நுட்பங்களை , கண்டுபிடுப்பக்களை களவெடுத்து முன்னேறியதே தவிர மட்ட்றப்படி வாய் சவடால்கள்தான்.

 

எங்கள் மனத்திருப்திக்கு இவ்வாறு சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் சீன உலக அரங்கில் மறுக்கமுடியாத ஒரு பெரும் சக்தி. அதன் புதிய கண்டுபிடிப்புக்கள், வினைத்திறன் மிக்க உற்பத்தி நுணுக்கம் மற்றும் நிர்வாகத்திறன் என்பவை மேற்கு நாடுகளினால் பயபக்தியுடன் பார்க்கப்படுபவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, manimaran said:

எங்கள் மனத்திருப்திக்கு இவ்வாறு சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் சீன உலக அரங்கில் மறுக்கமுடியாத ஒரு பெரும் சக்தி. அதன் புதிய கண்டுபிடிப்புக்கள், வினைத்திறன் மிக்க உற்பத்தி நுணுக்கம் மற்றும் நிர்வாகத்திறன் என்பவை மேற்கு நாடுகளினால் பயபக்தியுடன் பார்க்கப்படுபவை.

அனேகமாக அது சீனாவில் தயாரித்த கொம்ப்யூட்டரில்தான் அடிச்சு பதிந்த கருத்தாய் இருக்கும் 
குறைந்த பட்ஷம் உதிரி பாகங்கள் என்றாலும் 
 

Link to comment
Share on other sites

3 hours ago, manimaran said:

எங்கள் மனத்திருப்திக்கு இவ்வாறு சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் சீன உலக அரங்கில் மறுக்கமுடியாத ஒரு பெரும் சக்தி. அதன் புதிய கண்டுபிடிப்புக்கள், வினைத்திறன் மிக்க உற்பத்தி நுணுக்கம் மற்றும் நிர்வாகத்திறன் என்பவை மேற்கு நாடுகளினால் பயபக்தியுடன் பார்க்கப்படுபவை.

சீன  வல்லரசு  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்படி வல்லரசு ஆனது என்பதில்தான் பிரச்சினை.

மற்றவர்களின் தொழில்நுட்பங்களை திருடி, பணத்தால் மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி, மற்ற நாடுகளின் வளங்களை சுரண்டி இப்படித்தான் வல்லரசாக்கினதே தவிர தங்களது அறிவையோ, தொழில் நுட்பத்தையோ பயன்படுத்தி அல்ல. நூற்றுக்கு எழுபது வீதம் பிற நாடுகளில் கொள்ளையடித்துதான் இப்படி முன்னேறினார்கள்.

போதாக்குறைக்கு இப்போது எல்லா நாடுகளிலும் கொள்ளை நோயை பரப்பி மக்களை கொலை  செய்து எல்லா நாடுகளின் பொருளாதாரத்தையும் அதல பாதாளத்துக்கு தள்ளி விடடார்கள்.

இப்படித்தான் சீனா வல்லரசாக்கியதே தவிர நேர்மையாக எதுவுமே செய்யவில்லை. உலக மக்களின் மேம்பாட்டுக்காக குறிப்பிடும்படியாக எதையுமே செய்யவில்லை.   

Link to comment
Share on other sites

On 3/2/2021 at 08:51, கிருபன் said:

மியான்மார் மீது தடைகள் ஏதும் விதிக்கப்படாத வெறும் கண்டனத்தீர்மானத்தையே சீனா முறியடித்துள்ளது மேற்குலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிறீலங்கா அரசு மகிழ்ச்சியில் அதியுச்சிக்குப் போயிருக்குமே....😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

ஆனால் சிறீலங்கா அரசு மகிழ்ச்சியில் அதியுச்சிக்குப் போயிருக்குமே

இப்படியான நகர்வை சுத்தி வளைப்பதற்கே, சொறி சிங்களத்தை UNHRC வழியாக கொண்டு வந்தது என்ற ஓர் கதையும் உண்டு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2021 at 03:57, Robinson cruso said:

சீன இருக்கும் வரைக்கும் களவு, கொள்ளை, கொலை , ஜனநாயஹகொலை என்பவற்றை நிறுத்த முடியாது.

சீன இந்தளவுக்கு வளர்ச்சி என்பது மற்ற நாடுகளின் தொழில்நுட்பங்களை , கண்டுபிடுப்பக்களை களவெடுத்து முன்னேறியதே தவிர மட்ட்றப்படி வாய் சவடால்கள்தான்.

மற்றைய நாடுகளை கொள்ளையடிப்பது, உதவி என்று சொல்லி நாடுகளை அடிமையாக்குவது , கொள்ளை நோய்களை பரப்புவது இதுவே அவர்களது உலகுக்கான பங்களிப்பு. கேடு கெடட ஒரு நாடு என்றால் அது சீனாதான்.

கொஞ்சம் நாலா பக்கமும் திரும்பிப் பாருங்கள் வங்காலையான். அப்போதுதான்  சீனா எங்கே இருக்கிறது என்பதும் மேற்கு எங்கே இருக்கிறது என்பதும் தெரிய வரும். 

சீனாவை உங்களுக்குப் பிடிக்காது என்பது உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் அதற்காக கண்ணை மூடிக்கொண்டு திட்டக் கூடாது சரியே.. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீட்டோ அதிகாரம் என்பதே சர்வாதிகாரம் தானே. தாங்கள் செய்தால் தண்டனை இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

ஆனால் சிறீலங்கா அரசு மகிழ்ச்சியில் அதியுச்சிக்குப் போயிருக்குமே....😋

போயிருக்கும் தான்.  மியான்மாரில் சீனாவால் ஆதரிக்கபடும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்காக யாழ்களத்திலும் சிலர் மகிழ்ச்சியில் அதியுச்சிக்குப் போகிறார்களே :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2021 at 09:57, Robinson cruso said:

சீன இருக்கும் வரைக்கும் களவு, கொள்ளை, கொலை , ஜனநாயஹகொலை என்பவற்றை நிறுத்த முடியாது.

சீன இந்தளவுக்கு வளர்ச்சி என்பது மற்ற நாடுகளின் தொழில்நுட்பங்களை , கண்டுபிடுப்பக்களை களவெடுத்து முன்னேறியதே தவிர மட்ட்றப்படி வாய் சவடால்கள்தான்.

மற்றைய நாடுகளை கொள்ளையடிப்பது, உதவி என்று சொல்லி நாடுகளை அடிமையாக்குவது , கொள்ளை நோய்களை பரப்புவது இதுவே அவர்களது உலகுக்கான பங்களிப்பு. கேடு கெடட ஒரு நாடு என்றால் அது சீனாதான்.

கிந்தியாவும் பெரிய திறம் எண்டு இல்லையே....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

போயிருக்கும் தான்.  மியான்மாரில் சீனாவால் ஆதரிக்கபடும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்காக யாழ்களத்திலும் சிலர் மகிழ்ச்சியில் அதியுச்சிக்குப் போகிறார்களே :rolleyes:

அட மோன,

மற்றவயளப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனா இந்தியாவுக்கு பாதகமா என்ன நடந்தாலும் நான் அதுக்கு சப்போட்.

விளங்கிச்சே..

இப்படிக்கு 

D. கந்தசாமி

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

அட மோன,

மற்றவயளப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனா இந்தியாவுக்கு பாதகமா என்ன நடந்தாலும் நான் அதுக்கு சப்போட்.

விளங்கிச்சே..

😄

நான் உங்களை சொல்லவில்லை நீங்கள் இந்தியாவை பற்றி விளங்கி கொண்டவர் 👍 என்பது தெரியும்.மியான்மாரில் சீனாவால் ஆதரிக்கபடும் சாதுவான இராணுவம் ஜனநாயக ஆட்சியை கைப்பற்றியதற்காக மகிழ்ச்சியில் அதியுச்சிக்கு போகிறவர்களை தான் குறிப்பிட்டேன்.
சீனாவின் பகுதிகளை இந்தியா சொந்தம் கொண்டாடுவை கண்டித்து நீங்கள்விட்ட  கண்டன அறிக்கையில் நானும் கையொப்பம் இடுகிறேன்.

Link to comment
Share on other sites

On 6/2/2021 at 04:40, குமாரசாமி said:

கிந்தியாவும் பெரிய திறம் எண்டு இல்லையே....😁

நான் இந்தியாவை திறம் எண்டு சொல்லவில்லை. இருந்தாலும் வெளிப்படைத்தன்மை, தனி மனித சுதந்திரம், மற்றைய நாடுகளுக்கு கடன் கொடுத்து அடிமையாக்குவது, தொழில்நுட்பங்களை திருடுவது போன்ற காரியங்களுடன் சீனாவை இந்தியாவுடன் ஒப்பிடவே முடியாது. நேர்மையற்ற நாடு என்றால் அது சீனாதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

நான் இந்தியாவை திறம் எண்டு சொல்லவில்லை. இருந்தாலும் வெளிப்படைத்தன்மை, தனி மனித சுதந்திரம், மற்றைய நாடுகளுக்கு கடன் கொடுத்து அடிமையாக்குவது, தொழில்நுட்பங்களை திருடுவது போன்ற காரியங்களுடன் சீனாவை இந்தியாவுடன் ஒப்பிடவே முடியாது. நேர்மையற்ற நாடு என்றால் அது சீனாதான்.

இந்தியர்களின் அட்டகாசங்கள் அளவில்லாதவை...!

வெளி நாடுகளில் பொதுவாக, உங்கள் படிப்பு தொடர்பான சான்றிதழ்களைக் காட்டும்படி கேட்க மாட்டார்கள்..!

இந்தியர்கள்   அளவில்லாமல்...பொய்களை அளந்து வேலைகளைப் பெற்றுக்கொள்வார்கள்...! அண்டிக் கொடுத்து  அடுத்தவர்களின் வேலைகளைப் பறித்தெடுப்பது இவர்களின் நரிக்குணங்களில் முக்கியமானதாகும்! மற்ற வேலைகள் எனின் ஓரளவுக்கு மன்னித்து விடலாம்! மனித உயிர்களுடன் பல மருத்துவர்கள் விளையாடுவது தான் மன்னிக்க முடியாதது! அறுவைச் சிகிச்சை மூலம், இவர்கள் பலியெடுத்த உயிர்கள் அளவில்லாதவை!


ஆபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல மருத்துவ நிறுவனங்கள் இந்தியர்களுடையவை.  காலாவதியான மருந்துகளை, இந்தியாவிலிருந்து  முடிவுத் திகதியை மாற்றி..புதிய பைக்கட்டுகளிலடைத்து ஏற்றுமதி செய்வார்கள்! எங்கள் தமிழ்க்கடை சொந்தக்காரர்களிடமும்....இந்தக் குணம் அதிகமாக உண்டு!
சீனன் இப்படியான சுத்து மாத்துக்கள் செய்வது  குறைவு என்றே கூறுவேன்!  
 

Link to comment
Share on other sites

21 minutes ago, புங்கையூரன் said:

இந்தியர்களின் அட்டகாசங்கள் அளவில்லாதவை...!

வெளி நாடுகளில் பொதுவாக, உங்கள் படிப்பு தொடர்பான சான்றிதழ்களைக் காட்டும்படி கேட்க மாட்டார்கள்..!

இந்தியர்கள்   அளவில்லாமல்...பொய்களை அளந்து வேலைகளைப் பெற்றுக்கொள்வார்கள்...! அண்டிக் கொடுத்து  அடுத்தவர்களின் வேலைகளைப் பறித்தெடுப்பது இவர்களின் நரிக்குணங்களில் முக்கியமானதாகும்! மற்ற வேலைகள் எனின் ஓரளவுக்கு மன்னித்து விடலாம்! மனித உயிர்களுடன் பல மருத்துவர்கள் விளையாடுவது தான் மன்னிக்க முடியாதது! அறுவைச் சிகிச்சை மூலம், இவர்கள் பலியெடுத்த உயிர்கள் அளவில்லாதவை!


ஆபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல மருத்துவ நிறுவனங்கள் இந்தியர்களுடையவை.  காலாவதியான மருந்துகளை, இந்தியாவிலிருந்து  முடிவுத் திகதியை மாற்றி..புதிய பைக்கட்டுகளிலடைத்து ஏற்றுமதி செய்வார்கள்! எங்கள் தமிழ்க்கடை சொந்தக்காரர்களிடமும்....இந்தக் குணம் அதிகமாக உண்டு!
சீனன் இப்படியான சுத்து மாத்துக்கள் செய்வது  குறைவு என்றே கூறுவேன்!  
 

எனக்கும் இந்தியர்களுடன் நல்ல அனுப்பவும் உண்டு. மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்த பொது இவர்களது நரிகுண்ங்களை அறிந்து கொள்ளலாம். எப்படியோ மதத்தவனை காட்டிக்கொடுத்து, மத்தவனை ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர்களை நிறையவே கண்டிருக்கிறேன். இலங்கையர்கள் என்றால் பொதுவாக அவர்களது ஒப்பந்த நாள் முடிவடைந்தவுடன் தாய் நாட்டுக்கு செல்லவே முயட்சிப்பார்கள். இவர்களோ சாகும் வரைக்கும் அங்கு இருக்கும் எண்ணத்துடன்தான் இருப்பார்கள். சீனர்களுடைய வெளிப்படை தன்மையற்ற செயல்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் முயட்சி உடையவர்கள் என்றாலும் நேர்மையானவர்கள் இல்லை. உலகுக்கு அவர்கள் நல்லவற்றைவிட தீமையையே அதிகமாக வழங்குகிறார்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பது என்பது அவர்களது அகராதியில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

எனக்கும் இந்தியர்களுடன் நல்ல அனுப்பவும் உண்டு. மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்த பொது இவர்களது நரிகுண்ங்களை அறிந்து கொள்ளலாம். எப்படியோ மதத்தவனை காட்டிக்கொடுத்து, மத்தவனை ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர்களை நிறையவே கண்டிருக்கிறேன். இலங்கையர்கள் என்றால் பொதுவாக அவர்களது ஒப்பந்த நாள் முடிவடைந்தவுடன் தாய் நாட்டுக்கு செல்லவே முயட்சிப்பார்கள். இவர்களோ சாகும் வரைக்கும் அங்கு இருக்கும் எண்ணத்துடன்தான் இருப்பார்கள். சீனர்களுடைய வெளிப்படை தன்மையற்ற செயல்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் முயட்சி உடையவர்கள் என்றாலும் நேர்மையானவர்கள் இல்லை. உலகுக்கு அவர்கள் நல்லவற்றைவிட தீமையையே அதிகமாக வழங்குகிறார்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பது என்பது அவர்களது அகராதியில் இல்லை.

சீனர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்பது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டது. 

ஆனால், உலகுக்கு தீமையையே வழங்குகிறார்கள் என்னும் உங்கள் கூற்று உங்களிடம் உள்ள prejudice ஐக் காட்டுகிறது. ☹️அது தவறானது என்பது எனது நிலைப்பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

ஆபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல மருத்துவ நிறுவனங்கள் இந்தியர்களுடையவை.  காலாவதியான மருந்துகளை, இந்தியாவிலிருந்து  முடிவுத் திகதியை மாற்றி..புதிய பைக்கட்டுகளிலடைத்து ஏற்றுமதி செய்வார்கள்! எங்கள் தமிழ்க்கடை சொந்தக்காரர்களிடமும்....இந்தக் குணம் அதிகமாக உண்டு!
சீனன் இப்படியான சுத்து மாத்துக்கள் செய்வது  குறைவு என்றே கூறுவேன்!  

தமிழ்க்கடைகாரர் யாராவது நேர்மையாக யாவாராம் செய்தால் வெள்ளீசாக இருக்கிறாயே என்று சுத்துமாத்தை சொல்லிக்கொடுத்து அதற்கு கொமிஷனும் வாங்கும் தொழில் செய்பவர்களும் இருக்கின்றார்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

தமிழ்க்கடைகாரர் யாராவது நேர்மையாக யாவாராம் செய்தால் வெள்ளீசாக இருக்கிறாயே என்று சுத்துமாத்தை சொல்லிக்கொடுத்து அதற்கு கொமிஷனும் வாங்கும் தொழில் செய்பவர்களும் இருக்கின்றார்கள். 

 உலகத்திலை கடை வியாபாரம் என்றால் கொஞ்சமாவது சுத்துமாத்து இருக்கும். நேர்மை கண்ணியத்தோடை வியாபாரம் செய்யிற ஒரு இனத்தை சொல்லுங்கோ பாப்பம்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

எங்கள் தமிழ்க்கடை சொந்தக்காரர்களிடமும்....இந்தக் குணம் அதிகமாக உண்டு!

டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் ,றால் ,மிளகாய் தூள்  தமிழ்க்கடையில் வாங்குவது எமனை வீட்டுக்கு கூப்பிடுவது போல் .

On 5/2/2021 at 05:58, manimaran said:

எங்கள் மனத்திருப்திக்கு இவ்வாறு சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் சீன உலக அரங்கில் மறுக்கமுடியாத ஒரு பெரும் சக்தி. அதன் புதிய கண்டுபிடிப்புக்கள், வினைத்திறன் மிக்க உற்பத்தி நுணுக்கம் மற்றும் நிர்வாகத்திறன் என்பவை மேற்கு நாடுகளினால் பயபக்தியுடன் பார்க்கப்படுபவை.

ஓவர் விசுவாசம் உடம்புக்கு கூடாது அதென்ன பய பக்தி விளங்கவில்லை ?😄

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

சீனர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்பது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டது. 

ஆனால், உலகுக்கு தீமையையே வழங்குகிறார்கள் என்னும் உங்கள் கூற்று உங்களிடம் உள்ள prejudice ஐக் காட்டுகிறது. ☹️அது தவறானது என்பது எனது நிலைப்பாடு. 

நான் சீனர்களின் தீமையைப்பற்றி நிறையவே எழுதி உள்ளேன். உலகுக்கு வழங்கிய அவர்களது தீமையான பங்களிப்பை எழுதி இருக்கிறேன். நான் தீமையை ஆதரிப்பவன் இல்லை என்ற ரீதியில் எழுதுகிறேன். சீன உலகுக்கு வழங்கிய எதாவது உருப்படியான நன்மையை எழுதினால் நல்லது. இலங்கையில் சீனர்கள் நடத்தும் நிறைய கூத்துக்கள் இருக்கின்றது. எழுத வேண்டி வந்தால் உங்கள் அன்பான சீனவிபற்றி இன்னும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

நான் சீனர்களின் தீமையைப்பற்றி நிறையவே எழுதி உள்ளேன். உலகுக்கு வழங்கிய அவர்களது தீமையான பங்களிப்பை எழுதி இருக்கிறேன். நான் தீமையை ஆதரிப்பவன் இல்லை என்ற ரீதியில் எழுதுகிறேன். சீன உலகுக்கு வழங்கிய எதாவது உருப்படியான நன்மையை எழுதினால் நல்லது. இலங்கையில் சீனர்கள் நடத்தும் நிறைய கூத்துக்கள் இருக்கின்றது. எழுத வேண்டி வந்தால் உங்கள் அன்பான சீனவிபற்றி இன்னும் எழுதலாம்.

அதைத்தான் தெழிவாகக் கூறிவிட்டேனே, சீனர்களை உங்களுக்குப் பிடிக்காது என்று. பிறகென்ன..?

மிகச் சரியாக இந்தியர்களின் கண்மூடித் தனமான சீன எதிர்ப்பைப் போன்று இருக்கிறது உங்கள் பார்வை.. ☹️

Link to comment
Share on other sites

28 minutes ago, Kapithan said:

அதைத்தான் தெழிவாகக் கூறிவிட்டேனே, சீனர்களை உங்களுக்குப் பிடிக்காது என்று. பிறகென்ன..?

மிகச் சரியாக இந்தியர்களின் கண்மூடித் தனமான சீன எதிர்ப்பைப் போன்று இருக்கிறது உங்கள் பார்வை.. ☹️

எனக்கு பிடித்ததோ இல்லையோ அதுவல்ல பிரச்சினை. ஏன் பிடிக்கவில்லை என்று தெளிவாக எழுதி உள்ளேன். நான் கேடடதட்கு பதில் எழுதினால் போதும். எதாவது சீனாவைப்பற்றி நன்மையான செய்திகள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மர் தமிழர்களின் கதை: ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

 
 
தங்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டாமென்று மியான்மர் காவல்துறையினரை கெஞ்சும் போராட்டக்காரர் ஒருவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தங்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டாமென்று மியான்மர் காவல்துறையினரை கெஞ்சும் போராட்டக்காரர் ஒருவர்

பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த இணையமும் இல்லை.

போலிச் செய்திகள் வாட்சாப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் மட்டுந்தான் பரவுமா என்ன? மக்கள் பலரும் தங்களின் அச்சத்துடன் போலிச் செய்திகளையும் பகிர தொடங்கியதால், நாட்டில் என்ன நடக்கிறது? 2015ஆம் ஆண்டு முதல் மீண்டு வந்த நமது வாழ்க்கை ஒரே இரவில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதா? என்று மியான்மர் மக்கள் பரிதவிக்க தொடங்கினர்.

அதே நாள் மதியம் 12 மணி முதல், தொலைத்தொடர்பு சேவை படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தது. மியான்மர் மக்கள் எது நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. ஆம், 1962ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கைக்கே அல்லல் பட்ட மக்கள், 2015ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று அடைக்கப்பட்டது என்று தெரியவந்ததாக பதறுகிறார் மியான்மரின் யாங்கோன் (ரங்கூன் என்றும் அழைக்கப்படுகிறது) நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ்.

மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அங்கு நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தமிழர்களின் பார்வையில் அறிவதற்காக மியான்மரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சில தமிழர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

ராணுவ ஆட்சி Vs மக்களாட்சி - ஒரு ஒப்பீடு

ராணுவ ஆட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது என்பதால், அது அந்த நாட்டு மக்களுக்கு புதிதல்ல. எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக சுவாசித்து வந்த சுதந்திர காற்று ஒரே இரவில் முடிவுக்கு வந்தது என்பது, கண் தெரியாத, வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவரை அடர்ந்த காட்டுக்குள் தனியாக அடைத்தது போன்றுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

ராணுவ ஆட்சியின்போது, 'உங்களுடன் பேச வேண்டும்' என்று கூறி அழைத்து செல்லப்பட்ட பெரும்பாலானோரை பத்து அல்லது இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மீண்டும் பார்க்க முடியாத சூழல் 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை நிலவி வந்ததாகவும், அது மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இயல்பு வாழ்க்கையை முடக்குவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், நீதித்துறை, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத்தின் ஆட்சியில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், அந்த நிலைமை படிப்படியாக மாறி வந்த வேளையில் அவை மீண்டும் கனவுபோல் மாறிவிட்டதாகவும் வேதனைப்படுகிறார் சுந்தர்ராஜ்.

"எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிலுள்ள பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்பி வந்தோம். மக்களாட்சிக்கு ஆதரவான இந்த ஒற்றுமை ஒலி, உணர்ச்சிவசப்பட்டு எங்களது கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. ஆனால் ராணுவமோ, இதுபோன்று ஒலியை எழுப்புவதாக யாராவது ஒருவர் புகாரளித்தாலும், ஊரிலுள்ள அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது. நாங்கள் எங்களது விருப்பு, வெறுப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்துவதற்கு உரிமை கிடையாதா?" என்று கேள்வியெழுப்பும் அவர், எனினும் மக்கள் ராணுவத்துக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்புவதை தொடர்வதாக கூறுகிறார்.

சுந்தர்ராஜ்

பட மூலாதாரம்,SUNDARRAJ

 
படக்குறிப்பு,

சுந்தர்ராஜ்

கொரோனா காலத்தில் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் வழியே வர்த்தகம் மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும், கல்வி கற்கவும் என எண்ணற்ற புதுமைகளை வாழ்க்கையில் புகுத்திக்கொள்ள மக்கள் முயற்சித்து வந்த காலகட்டத்தில் தங்களது ஜனநாயக உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த முதல் நாளன்று சில மணிநேரங்களுக்கு அமலில் இருந்த தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகள், நாட்கள் செல்ல செல்ல விரிவடைந்து, ஒரு கட்டத்தில் நாடுமுழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் தடை செய்யப்பட்டன.

49 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு, கல்வி - வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்த நாட்கள் இனி ஒருபோதும் திரும்ப கூடாது என்று ஒவ்வொரு நாளும் மியான்மர் மக்கள் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார் சுந்தர்ராஜ்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

மியான்மரில் முந்தைய ராணுவ ஆட்சியின்போதும், இப்போதும் மியான்மரில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அறிய முற்பட்டோம். அப்போது, மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும் வித்தியாசமான ஒருமித்த பார்வையை வெளிப்படுத்தினர்.

அதாவது, தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல நூறாண்டுகளுக்கு முன்னதாக மியான்மருக்கு வந்ததாகவும், இப்போது அங்கு வசிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களை 'தமிழர்கள்' என்று அழைத்துகொள்வதில் எந்தளவுக்கு பெருமிதம் கொள்கிறார்களோ, அதே அளவுக்கு தாங்கள் 'மியான்மர் குடிமகன்' என்றும் 'மியான்மர் தமிழர்' என்றும் கூறிக்கொள்வதிலும் பெருமிதமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், மியான்மர் நீண்டகாலமாக சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளிலும் தமிழர்கள் தனித்திருக்காது, நாட்டின் உரிமைக்காக மற்றனைத்து சமுதாயத்தினருடன் ஒன்றிணைந்து போராடுவதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

"1962ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம் மற்றும் அதைத்தொடர்ந்த அச்சத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கப்பல்களில் தமிழகத்துக்கு திரும்பினர். அப்போது மியான்மரையே தங்களது தாய்நாடாக கருதியவர்கள் இன்று வரை அந்த கருத்தில் உறுதியாக உள்ளனர்" என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

"மற்ற இனத்தை சேர்ந்தவர்களை போலவே, தமிழர்களும் மியான்மரில் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தமிழர்கள் வசித்து வந்த நிலங்கள் காரணம் ஏதுமின்றி பறிக்கப்பட்டு உள்ளது. ராணுவ ஆட்சியில், வேலைவாய்ப்பு, கல்வி என எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு சமஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை."

இதில் மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், மியான்மரின் மீது மிகுந்த தேசப்பற்றை வெளிப்படுத்தும் அங்கு வாழும் தமிழர்கள், அந்த நாட்டின் குடிமகனாகவே பெரும்பாலான நேரங்களில், இடங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான். அதாவது, மியான்மரின் குடிமகனுக்கு உரிய சலுகைகளை பெற தேவையான தேசிய அடையாள அட்டை, 90 சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு இன்னமும் கூட கொடுக்கப்படவே இல்லை என்று கூறுகிறார் சுந்தர்ராஜ்.

இதன் காரணமாக, மியான்மர் தமிழர்கள் சிறந்து கல்வியை பெற்று, நல்ல பணியில் இருப்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார். "மியான்மரில் தமிழர்களை மருத்துவராக, பொறியாளராக, அரசு ஊழியராக பார்ப்பதென்பது மிகவும் அரிது. தமிழர்கள் பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என கடைநிலை ஊழியர்களாகவே இன்னமும் நீடிக்கின்றனர். இதற்கு தேசிய அடையாள இல்லாததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மறுக்கப்படுவது மிக முக்கிய காரணமாகும்."

எனினும், 2015ஆம் ஆண்டு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர்கள் உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மியான்மரின் 'அம்மா'

ஆங் சான் சூச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆங் சான் சூச்சி

2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, எங்கு சென்றாலும், எதை செய்தாலும் "எங்களை வேற்றுமைப்படுத்துகிறார்களே" என்ற எண்ணம் மியான்மர் தமிழர்களிடத்தில் நிலவி வந்ததாகவும், அந்த உணர்வு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்ததும் முற்றிலும் மாறியுள்ளதாகவும் கூறும் சுந்தர்ராஜ், சூச்சியை மியான்மரின் 'அம்மா' என்று குறிப்பிடுகிறார்.

"வலுவான குடும்ப பின்னணி, வெளிநாட்டு கல்வி என்று வாழ்ந்து கொண்டிருந்த ஆங் சான் சூச்சி, மியான்மர் மக்கள் படும் துன்பத்தை பார்த்து நாட்டுக்கு திரும்பி வந்தார். 'ராணுவ ஆட்சியே நமது வாழ்க்கை, இதுவே இயல்புநிலை' என்று இருந்த மக்களுக்கு சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை கற்பித்தது மட்டுமின்றி, அதை அடைவதற்கு காந்தியின் அகிம்சை வழியிலேயே போராட வேண்டுமென்று சொல்லிக் கொடுத்து, எங்களுக்கும் நல்ல காலம் பிறகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்."

"எங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆங் சாங் சூச்சியை 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். மக்களுக்காகவே தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த அவர் மியான்மருக்கே 'அம்மா' ஆவார். அவர் வழங்கிய அறிவுரை, ஏற்படுத்தி கொடுத்த திட்டங்களை கொண்டே நாங்கள் கடந்த ஆறாண்டுகளாக, கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தி வந்தோம்" என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

மியான்மரில் பல மொழிகள் பேசப்பட்டாலும், பர்மிய மொழியே அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. குறிப்பாக, பர்மிய மொழியை மட்டுமே மையமாக கொண்ட மியான்மரின் திரைத்துறை, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பர்மிய திரைத்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கடைநிலை ஊழியராக தொடங்கி, இன்று 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவராக சுந்தர்ராஜ் விளங்குகிறார்.

"மியான்மர் வரலாற்றில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் சார்ந்த திரைப்படத்தை எடுத்தது நான்தான். 2019ஆம் ஆண்டு 'சிட்டிசன்' என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தில் ராணுவ ஆட்சியின் கோர முகத்தை வெளிப்படுத்தி இருந்தேன். இதுகுறித்து கேள்விப்பட்ட ஆங் சாங் சூச்சி என்னையும், படக்குழுவினரையும் அழைத்து பாராட்டு தெரிவித்து, தானும் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக கூறினார்" என்று ஆங் சாங் சூச்சியின் பாராட்டை பெற்ற தருணத்தை விவரிக்கிறார் சுந்தர்ராஜ்.

ஆங் சாங் சூச்சியும் ரோஹிஞ்சா முஸ்லிம்களும்

ஆங் சாங் சூச்சியும் ரோஹிஞ்சா முஸ்லிம்களும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆங் சாங் சூச்சியால் மட்டுமே மியான்மரில் மக்களாட்சியை சிறப்பாக நடத்திட முடியும் என்பது போன்ற கருத்தை அங்கு வாழும் தமிழர்கள் முன்வைத்தாலும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் அதே ஆங் சாங் சூச்சி மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள வேறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படுவதாக கூறுகிறார் அங்கு வாழும் வழக்கறிஞரான அகத்தியன். "மியான்மரில் 2015ஆம் ஆண்டு மக்களாட்சி அரசாங்கம் ஆட்சியை அமைத்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டு பெரும்பாலான இடங்களில் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக, உள்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் அனைத்தும் ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்தன. எனவே, அந்த துறை சார்ந்த நடவடிக்கைகளில் சூச்சி தலைமையிலான அரசால் தலையிடவோ அல்லது தாக்கம் செலுத்தவோ இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ரக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், இங்குள்ள சூச்சி தலைமையிலான அரசு செய்ததை போன்று சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தெரிந்தன" என்று கூறுகிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் உள்ளூர் ஊடகங்கள் ஒருவிதமான செய்தியையும், சர்வதேச ஊடகங்கள் வேறுவிதமான செய்தியையும் வெளியிட்டதாக கூறும் அகத்தியன், ஊடகங்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே இந்த விவகாரத்தில் வெளியுலகத்துக்கு தவறான புரிதல் ஏற்பட்டதற்கு காரணம் என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, தன்னைப் பொறுத்தவரை, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இன அழிப்பு குற்றச்சாட்டில், ஆங் சாங் சூச்சிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தொடர்பில்லை என்றும், அவர் இனஅழிப்பை ஆதரிக்கவில்லை என்றும் நம்புவதாக கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டங்களில் தானும் ஈடுபட்டு வருவதாக அகத்தியன் கூறுகிறார்.

போராட்டத்தை முன்னின்று நடத்தும் அகத்தியன்

பட மூலாதாரம்,AGATHIYAN

 
படக்குறிப்பு,

போராட்டத்தை முன்னின்று நடத்தும் அகத்தியன்

என்னதான் தீர்வு?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது உலகமே அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. அதே காலகட்டத்தில், அதாவது நவம்பர் 8ஆம் தேதிதான் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்று, அதில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, ஆங் சாங் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சியை தக்க வைத்தது.

ஆனால். எப்படி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, அதில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ, அதேபோன்று மியான்மரில் சூச்சியின் கட்சி மீது ராணுவம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரம் ஏதுமின்றி முன்வைத்தது.

ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

பட மூலாதாரம்,REUTERS

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுந்தர்ராஜ், "முன்னெப்போதுமில்லாத வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு, சிறப்பான முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். ஆனால், ராணுவமோ கொரோனா வைரஸை காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணத்துடனே தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டது. ஒரு கட்டத்தில், தேர்தல் தேதி உறுதியானவுடன், பெருந்தொற்று பிரச்சனையை கருத்திற்கொண்டு, பொது கூட்டங்களுக்கு மாறாக வானொலி, காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டே சூச்சி மக்களின் ஆதரவை பெற்றுவிட்டார். இந்த தோல்வியை ஏற்க விரும்பாத ராணுவம், கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது" என்று கூறுகிறார்.

மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்கவிட்டால், கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் மியான்மர் ராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.

இந்த விவகாரத்தில் தீர்வு எப்படி எட்டப்படக்கூடும் என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்ராஜ், "மக்கள் அமைதியான முறைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், ராணுவத்தின் ஆட்சியை அகற்றுவதற்கு இதெல்லாம் போதாது. மியான்மரின் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் தலையிட்டே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். மற்றபடி, தமிழர்கள், பௌத்த மதத்தினர், முஸ்லிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் தொடர்ந்து ஒருமித்த குரலில் போராடுவோம்" என்று கூறுகிறார்.

"உலகம் முழுவதும் மியான்மரில் தயார் செய்யப்படும் மரப்பொருட்கள் மற்றும் உணவு தானியங்களுக்கு சிறந்த பெயர் உள்ளது. இதைத்தவிர்த்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களும் இந்த நாட்டில் உள்ளன. ஆனால், இத்தனை இருந்தும் எங்களது வாழ்க்கை வாழ்வா - சாவா என்ற நிலையிலேயே தினமும் நகர்கிறது."

ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுதந்திரமும், ராணுவ ஆட்சியின் பிடியும்

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, லாவோஸ், வங்கதேசம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வாழும் சுமார் 5.4 கோடி மக்களில் பெரும்பாலானோர் பர்மிய மொழி பேசுபவர்களாக உள்ளனர். நாட்டின் மிகப் பெரிய நகரமாக யங்கோன் இருந்தாலும், நேபியேட்டோ தலைநகரமாக விளங்குகிறது.

1948ஆம் ஆண்டு மியான்மர் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெகுகாலம் நீடிக்கவில்லை. 1962 முதல் 2011 வரை ராணுவத்தின் ஆட்சியில் மியான்மர் இருந்தது. 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றிபெற்று ஆங் சாங் சூச்சி ஆட்சியமைத்தார்.

BBC Indian sports woman of the year
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
    • நல்லா கேட்டியள் போங்கோ... நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்
    • போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் மூன்று பேர் தேவை!
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG LSG   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பகிர்வுக்கு நன்றி. டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள். யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣. # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.