Jump to content

சாணக்கியனின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்த முஸ்லிம் தலைமைகள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – உலமா கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாண‌க்கிய‌ன் எம் பியால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌ பொத்துவில் முத‌ல் பொலிக‌ண்டி என்ற‌ ஆர்ப்பாட்ட‌த்தில் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌வும், க‌ல்முனையை இன‌ ரீதியில் இர‌ண்டாக‌ பிரித்து முஸ்லிம், த‌மிழ் முர‌ண்பாட்டை உருவாக்கிய‌ வ‌ட‌க்கு செய‌ல‌க‌த்தை த‌ர‌ முய‌ர்த்த வேண்டும் என்றும் கோஷ‌ம் எழுப்பிய‌மையான‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌துட‌ன் இச்செய‌ல் இந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தை ஆத‌ரித்து இதில் க‌ல‌ந்து கொண்ட‌ முஸ்லிம்க‌ளின் முக‌த்தில் க‌ரியை பூசியுள்ள‌து என‌வும் தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

முஸ்லிம்க‌ளின் ஜ‌னாஸாக்க‌ளை எரிப்ப‌த‌ற்கு எதிரான‌ கோஷ‌ம் என்ற‌ பெய‌ரில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஆர்ப்பாட்ட‌ம் முஸ்லிம்க‌ளை க‌றிவேப்பிலையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ம‌து கோரிக்கைக‌ளை வென்றெடுக்கும் த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌லின் சாண‌க்கிய‌மான‌ த‌ந்திர‌த்தின் ஒரு ப‌குதியாக‌வே இதில் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் அபிலாஷைக‌ளுக்கு எதிரான‌ கோஷ‌ங்க‌ளை பார்க்கும் போது தெரிகிற‌து.

அடிக்க‌டி சோடாப்போத்த‌ல் போன்று உண‌ர்ச்சியை ம‌ட்டும் வைத்து செய‌ற்ப‌டும் முஸ்லிம்க‌ள் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று கூட‌ சிந்திக்காம‌ல் இந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌த‌ன் மூல‌ம் வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கும், க‌ல்முனையை முஸ்லிம்க‌ளிட‌மிருந்து அப‌க‌ரிப்ப‌த‌ற்கும் துணை போன‌தாக‌வே உல‌குக்கு காட்டியுள்ள‌து.

இன்றைய‌ இந்த‌ அரசாங்க‌த்தில் கொரோனா ஜ‌னாஸாக்க‌ளை அட‌க்க‌ம் செய்ய‌ அனும‌திக்காம‌ல் இருப்ப‌து த‌வ‌று என்ப‌தில் மாற்று க‌ருத்தில்லை. அத‌ற்காக‌ முஸ்லிம் ச‌மூக‌ம் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌வும், க‌ல்முனை முஸ்லிம்க‌ளின் நில‌ புல‌ன்க‌ளை ப‌றிக்க‌ மேற்கொள்ள‌ப்ப‌டும் ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை த‌ர‌முய‌ர்த்த‌வும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஆர்ப்பாட்ட‌த்துக்கு ஆத‌ர‌வ‌ளித்த‌மை வ‌ர‌லாற்றுத்த‌வ‌றாகும். இது கையில் ஏற்ப‌ட்ட‌ காய‌த்துக்கு க‌ழுத்தை வெட்டிக்கொள்ளும் ம‌ட‌த்த‌ன‌மான‌ ந‌ட‌வ‌டிக்கையாகும்.

நாம் ஒரு போதும் த‌மிழ் பொது ம‌க்க‌ளுக்கு எதிரான‌வ‌ர்க‌ள் இல்லை. ஆனாலும் த‌மிழீழ‌ விடுத‌லைப்போராட்ட‌ம் ஆர‌ம்பித்த‌ கால‌ம் தொட‌க்க‌ம் இன்று வ‌ரை த‌மிழ்த்த‌ர‌ப்புக்க‌ள் முஸ்லிம்க‌ளை இவ்வாறு த‌ம‌து நோக்க‌த்துக்காக‌ க‌றிவேப்பிலையாக‌ பாவிக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌வாதிக‌ளாக‌வே இருந்து வ‌ந்துள்ள‌ன‌ர்.

ஆக‌வே, மேற்ப‌டி ஆர்ப்பாட்ட‌த்தில் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு, க‌ல்முனை செய‌ல‌க‌ த‌ர‌முய‌ர்வு போன்ற‌ கோஷ‌த்தை உல‌மா க‌ட்சி க‌ண்டிப்ப‌துட‌ன் இதில் க‌ல‌ந்து கொண்ட‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பும் கோர‌ வேண்டும் என‌வும் கோரிக்கை விடுக்கிற‌து.

http://annachinews.com/archives/10396?fbclid=IwAR2lCwb4PgZLIH2tBsqs5WzyN4p7320DjyLgB6INhFCqgpjoTQhc5WU8RjU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை சிங்களவன் அடித்து துரத்தினாலும், காசை வாங்கிக் கொண்டு, பிரித்தாளும் சிங்கள சூழ்ச்சிக்கு இரையாகி, இந்த மாதிரி நாதாரித்தனம் பண்ணுவது நிக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.