Jump to content

தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

 

இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. 

 

spacer.png

 

பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு  இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வருகை இடம்பெற்றது. முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு பிரதானி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது பரியார், பிரதம நீதியரசர் மற்றும் அவரது பரியார், சபாநாயகர் மற்றும் அவரது பரியார், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது பாரியார், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் அவரது பரியார் ஆகியோர் முறையே அதிதிகளாக வருகை தந்திருந்தனர். 

மேலும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சின் செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் என பலரும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனை அடுத்து தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டதுடன், 45 பாடசாலை மாணவ, மாணவிகளினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் ஜயமங்கள கீதம் பாடப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர் நீத்த சகல தேசாபிமானிகளுக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் விதமாக 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

 

spacer.png

இதனை அடுத்தே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் மரியாதை அணிவகுப்புகளும் அதனை தொடர்ந்து கலாசார அனுவகுப்புகளும் இடம்பெற்றன.

 

இந்நிலையில் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே கொழும்பு சுதந்திர சதுக்க வளாகம் பலத்த பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் அப்பகுதியெங்கும் பெளத்த கொடிகளும், சௌபாக்கியத்தை வெளிப்படுத்தும் கடுஞ்சிவப்பு சிங்கள கொடிகளும், முப்படைகளின் ஒவ்வொரு படையணியையும் வெளிப்படுத்தும் இராணுவ கொடிகளும் அளவுக்கு அதிகமாக பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த கொடிகளுக்கு மத்தியில் ஆங்காங்கே இலங்கையின் தேசிய கொடிகளும் மிகக் குறைவாக பறந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

 

நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக நேற்றைய சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் கட்டுப்பாட்டுடன், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்றன.

ஒவ்வொரு சுதந்திரதின நிகழ்வுகளின் போதும் பொதுமக்கள் நிகழ்வுகளை பார்வையிட அழைக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை  அவை அனைத்துமே நிறுத்தப்பட்டு வெறுமனே அதிதிகளுடன் மாத்திரம் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தேசியக் கொடிகளை குறைத்து பெளத்த, இராணுவ கொடிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு  இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.

பாவி மனிசன் செய்த வேலை. இன்று ஈழத்தமிழினம் நடுத்தெருவில்....

Bildergebnis für டட்லி சேனாநாயக்க சேர் பொன் ராமநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா மட்டும் இல்லையென்றால் இவர்களின் ஆட்டத்தை சொல்லியிருக்கமுடியாது.  இயற்கையும் ஒருபக்கம் கொடுத்தாலும் இன்னொருபக்கம் அடக்கிதான்  வைக்குது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vanangaamudi said:

27545667_1626596270758612_21663327138267

எவ்வளவு விமரிசனங்கள் இருந்தாலும்...பிரபாகரனாகட்டும் அல்லது சேர். பொன். இராமனாதனாகட்டும்..அவர்கள் நிமிர்ந்து நிற்கும் போது...எவ்வளவு கம்பீரமாக நிற்கின்றார்கள்...!

அன்று தேர் இழுத்தவர்கள்....இன்று தேரில் இருக்கின்றார்கள்..!

காலம் என்பது ஒரு சக்கரம் போன்றது...!😒

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.