Jump to content

BDSM பாலுறவு என்பது என்ன? வலிக்கும், பாலுறவுக்கும் என்ன தொடர்பு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் அல்லது ஆணின் கைகளைக் கட்டிப் போடுதல், அவரது உடலில் தனக்கு விருப்பமான விஷயங்களை, முழுக்க தன் கட்டுப்பாட்டில் செய்வது, அறைவது போல அடிப்பது, பெல்ட் அல்லது சவுக்கால் அவன் அல்லது அவளை அடிப்பது, முகத்தில் பிளாஸ்டிக் பை வைத்து அழுத்தி சுவாசிக்க முடியாமல் செய்வது - போன்ற இவை அனைத்தும் கொடூரமானவை போல தெரியும்; ஆனால் இதுபோன்று செய்வதால் சிலருக்கு பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் கிடைக்கிறது.

நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார். பாலுறவில் ஈடுபடும் துணைவரோ அல்லது தனக்குத் தானே துன்புறுத்தல்களை ஏற்படுத்தி, ஆனந்தம் கொள்ளும் நடைமுறை பற்றிய விவாதத்தை எழுப்புவதாக அது இருந்தது.

நாக்பூர் சம்பவம் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், இதுகுறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் மனதில் எழுந்தால் அதைப் புறக்கணித்துவிடக் கூடாது.

தனிப்பட்ட வாழ்வில் ஏதும் பிரச்னை இருந்தால், பாலுறவு வாழ்வில் பிரச்னைகள் இருந்தால், வினோதமான எண்ணங்கள் ஏதும் மனதில் தோன்றினால், அதுகுறித்து நிபுணர்கள், டாக்டர்கள், உளவியலாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

உங்களுடைய செயல்பாடு பாலுறவு துணைவரையோ அல்லது அவருடைய செயல்பாடு உங்களையோ துன்புறுத்தும் வகையில் இருந்தால், உதவியை நாட வேண்டும். தவறான தகவல்களை வைத்துக் கொண்டு செயல்பட்டால், பிரச்னை மேலும் சிக்கலாகிவிடும்.

 

பி.டி.எஸ்.எம். என்றால் என்ன?

மேற்கத்திய சமுதாயத்தில் பி.டி.எஸ்.எம். என்பது நன்கு அறியப்பட்ட விஷயமாக இருக்கிறது. ஆனால் பல நாடுகளில் இது கேள்விப்படாத வார்த்தையாக இருக்கிறது. பி.டி.எஸ்.எம். (BDSM) என்பது `உடல், செயல்பாடு, ஆதிக்கம் செலுத்துதல், அடங்கிப் போதல், துன்பத்துக்கு ஆளாகி சிற்றின்பம் அனுபவித்தல்' என்பதன் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துகளின் சுருக்கம் ஆகும்.

பி.டி.எஸ்.எம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுபோன்ற நிகழ்வுகளில் யாரையாவது துன்புறுத்துதல் அல்லது தனக்குத் தானே துன்புறுத்திக் கொள்வதன் மூலம் பாலுறவு விருப்பத்தைத் தூண்டுதல் பெறுகிறார்கள். பி.டி.எஸ்.எம். பாலுறவு வகையில் இவையெல்லாம் உள்ளன.

இதில் கட்டுப்பாட்டை காட்டுபவர் ஆதிக்கம் செலுத்துபவர் என்றும், துன்புறுத்தல்களை ஏற்பவர் அடங்கிச் செல்பவர் என்றும் கருதப்படுகிறார்.

துன்புறுத்தல் செயல்களை செய்பவரும், அதை ஏற்பவரும் இந்தச் செயலால் பாலுறவு எண்ணத்தின் தூண்டுதலைப் பெறுகிறார்கள். ஒருவரை அடிமை போல நடத்துதல் அல்லது தானே அடிமை போல நடந்து கொள்வது என்ற பாணியும் இதில் இருக்கிறது.

`துடைப்பத்தால் தூண்டப்படும் பாலுறவு'

இந்தியாவில் யாரும், எங்கேயும் பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. எனவே, பாலுறவு குறித்து அவர்களுக்குப் போதிய விஷயங்கள் தெரியவில்லை. அவர்களிடம் பல தவறான புரிதல்கள் உள்ளன.

எனவே, பத்திரிகைகள், இதழ்களில் பாலுறவு குறித்து நிறைய பேர் கேள்விகள் கேட்கிறார்கள், பாலியல் நிபுணர்கள் பதில்கள் அளிக்கின்றனர். மஹிந்தர் வத்ஸா என்பவர் அதுபோன்ற ஒரு நிபுணர். சமீபத்தில் அவர் காலமாகிவிட்டார்.

பி.டி.எஸ்.எம். பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்து அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார். சுமார் 35 ஆண்டு காலமாக அதுபோன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து வந்துள்ளார்.

பி.டி.எஸ்.எம். பற்றி பிபிசியுடன் பேசிய அவர், ``என் மனைவி என்னை துடைப்பத்தால் அடித்தால் தவிர, எனக்கு பாலுறவு விருப்பம் தூண்டப்படுவதில்லை. ஆனால், சமீபத்தில் என் மனைவி இறந்துவிட்டார். எனவே, துடைப்பத்தால் என்னை அடித்து, பாலுறவு விருப்பத்தைத் தூண்டக் கூடிய ஒரு மனைவியை நான் எப்படி கண்டுபிடிப்பது'' என்று ஒருவர் கேட்ட நிகழ்வைக் குறிப்பிட்டார்.

``இதில் எந்தத் தவறும் இல்லை. இதுபற்றி மக்கள் ஒருபோதும் வெளிப்படையாகப் பேசியதில்லை. அது தவறானது என நினைக்கிறார்கள். இப்போது, தங்களுடைய பாலுறவு விருப்பங்கள் பற்றி இந்தியர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக, நகர்ப்புறங்களில் இந்தப் போக்கு அதிகமாக உள்ளது' என்று மருத்துவர் வத்ஸா பதில் அளித்துள்ளார்.

நாவல் விற்பனை மூலம் வெளிப்பட்ட இந்தியர்களின் எண்ணம்

2012 ஆம் ஆண்டில் Fifty Shades of Grey என்ற நாவல் வெளியானது. கல்லூரிக்குச் செல்லும் ஒரு மாணவிக்கும், ஒரு தொழிலதிபருக்கும் இடையிலான விநோதமான உறவு பற்றியதாக அந்த நாவல் இருந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, கோடிக்கணக்கான மக்கள் அதைப் படித்தார்கள்.

லட்சக்கணக்கான இந்தியர்களும் அந்த நாவலைப் படித்தனர். 2015ல் அந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்ட போதும், நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்தப் படம் வெளியான சமயத்தில், பாலுறவுக்கு பயன்படுத்தும் பொம்மைகள் மற்றும் அவை தொடர்பான பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரித்தது.

பி.டி.எஸ்.எம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, பாலுறவு தொடர்பான பொருட்களை விற்கும் ஒரு இணையதளம் Fifty Shades of Grey கிட் என்ற பொருட்களின் தொகுப்பை விற்பனைக்குக் கொண்டு வந்தது. கைவிலங்குகள், ஒரு சவுக்கு, ஒரு பெல்ட், கண்களை மூடி கட்டும் ஒரு பட்டை போன்றவை அதில் இருந்தன. விற்பனை தொடங்கியதும், முதல் ஒரு வாரத்தில் 80 சதவீதம் விற்பனை அதிகரித்தது என்று அந்த இணையதளத்தின் நிர்வாகி சமீர் சரய்யா தெரிவித்தார்.

2015ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், ``அந்தத் திரைப்படம் பற்றிய கலந்தாடல்களால், அதன் பெயரில் விற்பனைக்கு வந்த பொருட்கள் நன்கு விற்கப்பட்டன. பொதுவாக, பார்வையாளர்கள் இணையதளத்திற்கு வந்து ரூ.4,600 செலுத்தி அந்தப் பொருட்களின் தொகுப்பை வாங்குகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

2015 பிப்ரவரி மாதத்தில், அதுபோன்ற ஒரு இணையதளத்தின் தலைமை நிர்வாகியான ராஜ் அர்மானி பிபிசிக்கு பேட்டி அளித்தார். இந்தத் திரைப்படம் தொடர்பான பொருட்களின் விற்பனை ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 122 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

``பாலுறவு உணர்வுகளில் புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்க்கும் காலக்கட்டத்துக்கு இந்திய சமூகம் வந்துவிட்டது. உயர் வருவாய் பிரிவில் உள்ள, மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்துக்கு ஆட்பட்ட இளைஞர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். எனவே இதுபோன்ற பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை'' என்று அவர் கூறியுள்லார்.

எதிர்காலம் பற்றி விழிப்பாக இருங்கள்

இந்திய சமூகத்தில் சீரான வேகத்தில் மாற்றங்கள் நிகழ்வதை இந்த விஷயங்கள் காட்டுகின்றன.

இதுபோன்ற பல நோயாளிகளிகள் தன்னிடம் வந்திருப்பதாக, இந்தியாவில் பிரபல பாலுறவு நிபுணரான டாக்டர் நாராயண் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

திர்காலம் பற்றி விழிப்பாக இருங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரிடம் வரும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக, நடுத்தர அல்லது உயர் வருவாய் பிரிவினராக உள்ளனர்.

பாலுறவு துணைவரின் மூர்க்கத்தனமான செயல்பாடு குறித்து பலரும் புகார் கூறினர். சிகரெட்டால் சூடு வைப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது, சங்கிலியால் கட்டிப் போடுவது, நாயின் கழுத்தில் போடும் பெல்ட்டை துணைவரின் கழுத்தில் கட்டிவிட்டு நாயை போல சுற்றி வரச் செய்வது, அவன் அல்லது அவளை மோசமாக நடத்துவது போன்ற புகார்கள் அதிகமாக வந்தன. எனவே, உறவில் ஈடுபடுபவரில் ஒருவருக்கு இது பிடித்திருக்கிறது, இன்னொருவருக்கு இது பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.

``ஒரு பாலுறவில் வலியும் காயங்களும் தான் ஒருவருக்கு பாலுறவு விருப்பத்தைத் தூண்டும் என்றால், அவருக்கு பாலியல் ரீதியில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். நீண்டகால நோக்கில் பார்த்தால், இது கேடு ஏற்படுத்துவதாக இருக்கும்'' என்று டாக்டர் ரெட்டி தெரிவித்தார்.

``புதுமையாகச் செய்வது ஆரம்பத்தில் கிளர்ச்சியைத் தருவதாக இருக்கலாம். ஆனால், சில காலம் கழித்து அது உடல் ரீதியாக வலியை ஏற்படுத்தும், மனதையும் பாதிக்கும்'' என்கிறார் அவர்.

வன்முறை செயலை `இயல்பானதாக' ஏற்கும் மனோநிலை

ஸ்டீபன் போப் என்ற உளவியல் சிகிச்சையாளர், பாலுறவு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.

வன்முறை செயலை `இயல்பானதாக' ஏற்கும் மனோநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி வானொலியின் 5 லைவ் நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுபோன்ற செயல்பாடுகளில் எதிர்மறை தாக்கங்கள் பற்றி குறிப்பிட்டார்.

``இது ஒரு வகையான, அமைதியாகப் பரவும் தொற்றுநோய் போன்றது. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதால் மக்கள் இதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக முடியும். உறவுகளின் தன்மையை குறைத்து மதிப்பிடுவதாக இது இருக்கும். வன்முறைத்தனமாக நடந்து கொள்வதை இயல்பான செயல்பாடு என கருதும் மனப்போக்கு உருவாவது வருத்தமான விஷயம்'' என்று அவர் கூறினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, இதனால் ஏற்படும் கேடுகள் பற்றி எதுவும் தெரிவதில்லை என்றார் அவர்.

``கடைசி நேரத்தில் தான் என்னிடம் வருகிறார்கள். கழுத்தை நெரிப்பதால் மூச்சுத் திணறி மயக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்ட பிறகு தான் என்னிடம் வருகிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

``கழுத்தை நெரிப்பது மிகவும் ஆபத்தான செயல்பாடு. ஆனால், கடைசி நேரத்தில்தான் அதுபற்றி அவர்கள் உணர்கிறார்கள்'' என்றும் ஸ்டீபன் போப் கூறினார்.

BDSM பாலுறவு என்பது என்ன? வலிக்கும், பாலுறவுக்கும் என்ன தொடர்பு? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

// இது ஒரு வகையான, அமைதியாகப் பரவும் தொற்றுநோய் போன்றது. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதால் மக்கள் இதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக முடியும். உறவுகளின் தன்மையை குறைத்து மதிப்பிடுவதாக இது இருக்கும். வன்முறைத்தனமாக நடந்து கொள்வதை இயல்பான செயல்பாடு என கருதும் மனப்போக்கு உருவாவது வருத்தமான விஷயம்'' என்று அவர் கூறினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, இதனால் ஏற்படும் கேடுகள் பற்றி எதுவும் தெரிவதில்லை என்றார் அவர்.”//

போன வருடமோ இல்லை அதற்கு முந்திய வருடமோ தெரியவில்லை, யாழ்பாணத்தில் இந்த மாதிரி நடந்தது.. மருத்துவர்களால் அறிவுரை கூறப்பட்டது..

இந்த உளவியல் சிகிச்சையாளர் சொல்வது போல இதுவும் ஒரு வியாதியே.. மெல்ல கொல்லும் வியாதி..

 

Link to comment
Share on other sites

On 6/2/2021 at 00:32, பிழம்பு said:

ஒரு பெண் அல்லது ஆணின் கைகளைக் கட்டிப் போடுதல், அவரது உடலில் தனக்கு விருப்பமான விஷயங்களை, முழுக்க தன் கட்டுப்பாட்டில் செய்வது, அறைவது போல அடிப்பது, பெல்ட் அல்லது சவுக்கால் அவன் அல்லது அவளை அடிப்பது, முகத்தில் பிளாஸ்டிக் பை வைத்து அழுத்தி சுவாசிக்க முடியாமல் செய்வது - போன்ற இவை அனைத்தும் கொடூரமானவை போல தெரியும்; ஆனால் இதுபோன்று செய்வதால் சிலருக்கு பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் கிடைக்கிறது.

இதெல்லாம் வன்முறை. இது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

Link to comment
Share on other sites

On 6/2/2021 at 00:32, பிழம்பு said:

``இது ஒரு வகையான, அமைதியாகப் பரவும் தொற்றுநோய் போன்றது. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பதால் மக்கள் இதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக முடியும். உறவுகளின் தன்மையை குறைத்து மதிப்பிடுவதாக இது இருக்கும்.

 

On 6/2/2021 at 00:32, பிழம்பு said:

தனிப்பட்ட வாழ்வில் ஏதும் பிரச்னை இருந்தால், பாலுறவு வாழ்வில் பிரச்னைகள் இருந்தால், வினோதமான எண்ணங்கள் ஏதும் மனதில் தோன்றினால், அதுகுறித்து நிபுணர்கள், டாக்டர்கள், உளவியலாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

உங்களுடைய செயல்பாடு பாலுறவு துணைவரையோ அல்லது அவருடைய செயல்பாடு உங்களையோ துன்புறுத்தும் வகையில் இருந்தால், உதவியை நாட வேண்டும். தவறான தகவல்களை வைத்துக் கொண்டு செயல்பட்டால், பிரச்னை மேலும் சிக்கலாகிவிடும்.

 

உண்மை. பலரும் அலட்சியப்படுத்தும் விடயங்கள். தகுந்த ஆலோசனைகளை, உதவிகளை நாடுவது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für B.D.S.M

இது ஒரு நோய் மாதிரி பரவி விட்டது. ஜேர்மனியில் பல இடங்களில் மரணத்துடன் முடிந்திருக்கின்றது. சலிப்பு தட்ட புதிது புதிதாக அனுபவிக்க விரும்புகின்றார்கள்.அது ஆபத்தில் முடிகின்றது.

இதில் ஊடகங்களின் பங்களிப்பும் முதலிடம் வகிக்கின்றது.

 

Alternative erwachsenen sex-appeal männer tragen leder polsterung kleidung

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für B.D.S.M

இது ஒரு நோய் மாதிரி பரவி விட்டது. ஜேர்மனியில் பல இடங்களில் மரணத்துடன் முடிந்திருக்கின்றது. சலிப்பு தட்ட புதிது புதிதாக அனுபவிக்க விரும்புகின்றார்கள்.அது ஆபத்தில் முடிகின்றது.

இதில் ஊடகங்களின் பங்களிப்பும் முதலிடம் வகிக்கின்றது.

 

Alternative erwachsenen sex-appeal männer tragen leder polsterung kleidung

 

அமைதியான ஆனந்தமான வாழ்வுக்கு 
காஜலிசம் ஒன்றே வழிவகுக்கும் 
அங்கும் இங்கும் அலையும் மக்களுக்கும் 
அலங்கோல பூமிக்கும் காஜலிசமே ஒரே தீர்வு 

Link to comment
Share on other sites

On 9/2/2021 at 08:03, மல்லிகை வாசம் said:

பாலுறவு வாழ்வில் பிரச்னைகள் இருந்தால், வினோதமான எண்ணங்கள் ஏதும் மனதில் தோன்றினால், அதுகுறித்து நிபுணர்கள், டாக்டர்கள், உளவியலாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.