Jump to content

பட்டமோடி - The Kite Runner


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டமோடி (The Kite Runner) 

51vRNqL61aL._SX318_BO1,204,203,200_.jpg

 

"மீண்டும் நல்வழிக்குத் திரும்ப ஒரு வழி இருக்கிறது!"

"There's a way to be good again!"

(இது பல ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக வெளிவந்து பின்னர் ஒரு திரைப்படமாகவும் வெளிவந்து விட்ட ஒரு படைப்பு. இதைப் பற்றி ஏற்கனவே யாழில் பகிரப் பட்டிருக்கக் கூடும், ஆனால் கொரனாவுக்கு முடங்கிய நாட்களில் வாசிக்கத் தகுந்த நல்ல புத்தகமாக இருப்பதால் இங்கே பகிர்கிறேன்)

"யுத்தம் என்பது குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் மட்டும் நடக்கும் ஒன்றல்ல. இந்த உபகரணங்களுக்கு அப்பால் மக்களின் துன்பத்தினாலும் வாழ்க்கை மாற்றங்களாலும் கூட யுத்தம் பிரதிநிதித்துவம் செய்யப் படுகிறது". இப்படிச் சொன்னவர் வன்னியில் இறுதி யுத்த நாட்கள் வரை வாழ்ந்து மீண்ட தமிழ்க்கவி. இந்த பட்டமோடி என்கிற கதையும் காலித் ஹொசைனியின் வரிகளில் ஆப்கானிஸ்தானின் யுத்த அவலங்கள் எப்படி ஒரு குடும்பத்தையும் அதன் சுற்றத்தாரையும் அலைக்கழிக்கிறது என்ற விவரணம் தான்.

ஆப்கானிஸ்தான் என்பது எங்கள் அனேகரின் கற்பனையில் வரண்ட நிலமும், வடக்கில் மலை சூழ்ந்த கணவாய்களும் கொண்ட நிலப்பரப்பு. 80 களில் சோவியத் ரஷ்யாவுக்கு இந்து சமுத்திரத்திற்கு ஒரு இலகுவான வழி வேண்டும் என்ற நோக்கத்தில் ஆப்கானை தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்திருந்தது, பெருமளவுக்கு. ஆனால், அதற்கு சில ஆண்டுகள் முன்புவரை மன்னராட்சியில் இருந்து வந்த ஆப்கான், மன்னரின் உறவினர் ஒருவர் செய்த சதிப்புரட்சி மூலம் குடியரசாக உருவாகி ஒரு சில ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. இந்த மன்னராட்சியின் முடிவோடு ஆரம்பிக்கும் கதை இறுதியில் சோவியத் ரஷ்யா உடைந்து, பனிப்போர் ஆரம்பித்து தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிப் பின்னர் மேற்கு நாடுகளால் தலிபான் முதலில் விரட்டப் பட்டதுடன் முடிவடைகிறது.

 

முடிவு என்று சொல்வதை விட, கதையின் முடிவில் ஒரு இளைய ஆப்கான் நாட்டவரின் வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பிக்கிறது என்பதாகவே காட்டப் படுகிறது.

யுத்தமில்லாத வாழ்க்கை சாதாரணமான வாழ்க்கை - உண்டு, உறங்கி, குடும்பம் நடத்தி ஒரு நாள் நிலத்தின் கீழ் துயில் கொள்ளும் சாதாரண நிலை!. ஆனால், மனித விழுமியங்களையும், எல்லைகளையும், முட்டி மோதி சோதித்துப் பார்க்கும் நிலையை எந்த யுத்தமும், போர் நிலைமையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்தச் சோதனையில் சிலர் மனிதத் தன்மையைத் துறக்க சிலர் அதீத மனிதத் தன்மை கொண்டோராக உருமாறும் அதிசயமும் நடக்கிறது. இந்த இரண்டு போக்குகளையும் காட்டி இறுதியில் மனிதத் தன்மை எப்படி ஒரு குடும்பத்தை முழுமையாக்கி நிறைவைக் கொண்டு வருகிறது என்று காட்டுவதே பட்டமோடியின் சுருக்கக் கதை. எனவே, தர்மம் வெல்கிறது என்ற பழைய தமிழ் சினிமா செய்தி சொல்லும் கதை போலத் தோன்றினாலும் சொல்லப் பட்டிருக்கும் எளிமை கலந்த உரை நடைப் பாணி அவ்வாறொரு தோற்றத்தைத் தராமல் ரசிக்க அனுமதிக்கிறது.

பட்டமோடி என்பது நான் கொடுத்த தமிழ் பெயர், சரியாக இருக்குமா தெரியவில்லை: ஆப்கானின் சில பகுதிகளில் பட்டம் விடுவது எங்கள் ஊர்களில் போல பிரபலமான  விளையாட்டாக இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. இந்த விளையாட்டில், வெட்டி விழுத்தப் படும் பட்டத்தை அது எங்கே சென்று வீழக் கூடுமென்று கணித்து ஓடிச் சென்று கைப்பற்றுபவருக்கே வெற்றி - அப்படி ஓடிக் கைப்பற்றுபவரே பட்டமோடி எனப்படுகிறார். அவ்வாறு நடைபெறும் ஒரு பட்டமேற்றல் போட்டியில் நடக்கும் ஒரு சம்பவம், அந்த சம்பவத்திற்கு அமீர் என்ற கதாபாத்திரம் காட்டும் எதிர்வினை என்பனவே கதையின் மூலைக்கல்!.

 

கதையின் மிகுதிப் பகுதி, அந்த மூலைக்கல்லான சம்பவத்தில் இருந்து அமீர் மீள எடுக்கும் நடவடிக்கைகளின் விபரிப்பு - எனவே தான் "திரும்பவும் நல்வழிக்குத் திரும்பும்" ஒரு மீட்புப் பயணமாக (journey of redemption) பட்டமோடி விரிகிறது.

இந்தக் கதையின் மூலைக்கல்லான சம்பவத்தை எந்த நாட்டின் பின்புலத்திலும் உருவாக்கி இதே போன்ற கதையை இன்னொருவர் எழுதி விடலாம்! ஆனால், இது ஆப்கானிஸ்தான் என்ற போர் தின்னும் ஒரு ஏழை நாட்டின் கதையையும் சேர்த்தே சொல்வதால் தான் விசேடமாகி விடுகிறது. எனவே, ஆப்கானிஸ்தான் பற்றிய வர்ணணையில் அவர்களின் கலாச்சாரம், பஷ்ரூன் மக்களின் விருந்தோம்பல், ஹசாரா என்ற ஒதுக்கப் படும் இனக்குழுவின் விளிம்பு நிலை வாழ்வு என்பன இந்த நாவலை ஒரு வரலாற்றுப் பதிவாகவும் திகழ வைக்கிறது.

காலித் ஹொசைனி ஒரு அமெரிக்க ஆப்கான் எழுத்தாளர். எழுதுவதோடு மட்டும் நிற்காமல் சிதைந்த ஆப்கான் நகரங்களில் மருத்துவமனைகளை மீளமைக்க உதவி வரும் ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.  

 -ஜஸ்ரின்

 நன்றி: முகப்புப் படம் அமேசன் தளத்திலிருந்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

பட்டமோடி என்பது நான் கொடுத்த தமிழ் பெயர், சரியாக இருக்குமா தெரியவில்லை: ஆப்கானின் சில பகுதிகளில் பட்டம் விடுவது எங்கள் ஊர்களில் போல பிரபலமான  விளையாட்டாக இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. இந்த விளையாட்டில், வெட்டி விழுத்தப் படும் பட்டத்தை அது எங்கே சென்று வீழக் கூடுமென்று கணித்து ஓடிச் சென்று கைப்பற்றுபவருக்கே வெற்றி - அப்படி ஓடிக் கைப்பற்றுபவரே பட்டமோடி எனப்படுகிறார். அவ்வாறு நடைபெறும் ஒரு பட்டமேற்றல் போட்டியில் நடக்கும் ஒரு சம்பவம்

வருடம்தோறும்  வடகிழக்கு பருவப் பெயர்சிக்காற்றுடன் பட்டம் ஏற்றுவதுதான் எனது சிறுவயது அனுபவங்கள். புத்தக வாசிப்பிலும் பட்டம் ஏற்றுவதிலும் விருப்பம் உள்ளதாலோ என்னவோ நண்பி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். பிடித்த புத்தகங்களில் ஒன்று.👍🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வருடம்தோறும்  வடகிழக்கு பருவப் பெயர்சிக்காற்றுடன் பட்டம் ஏற்றுவதுதான் எனது சிறுவயது அனுபவங்கள். புத்தக வாசிப்பிலும் பட்டம் ஏற்றுவதிலும் விருப்பம் உள்ளதாலோ என்னவோ நண்பி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். பிடித்த புத்தகங்களில் ஒன்று.👍🏾

நான் ஊரில் பட்டத் திருவிழாவுக்குப் போனதில்லை, ஆனால் பெருமெடுப்பில் நடக்கும் என அறிந்திருக்கிறேன். ஊரிலும் இந்த கண்ணாடி நூலால் வெட்டுவதெல்லாம் செய்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவின் முகத்தை அரிந்த  பிளேடுகளை பட்டத்தின் வாலாக கட்டி நாங்கள் இருந்த காலங்களில் மற்றைய பட்டங்களை  தெறிக்க விடுவது உண்டு .

எந்த பட்டம் ஏத்தினாலும்  உச்சி சரியாக கட்டினால்  அது விண்ணில் பறக்கும் .

 

உச்சி என்பது முக்கியம் கொக்குக்கு அது தெரிந்தவன் கொக்கு பட்டம் விடுவதில் வல்லுநர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட திருவிழா பருத்தி துறை முனையில் வாடைக்காற்று நேரம் நடப்பதுண்டு  இப்ப ஏனோ அங்குள்ளவர்கள் எல்லாம் வெளிநாடு வந்த காரணத்தினால் நடப்பதில்லை போல் உள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.