Jump to content

எண்ணித் துணிக கருமம் ! பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணித் துணிக கருமம் ! #P2P
========================

 

கடந்த மூன்றாம் திகதி போலீசார், இலங்கையின் நீதித்துறையின் தள்ளுமுள்ளுடன் ஆரம்பித்த “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P பேரணி இன்று இறுதிநாளாக யாழ்ப்பாணத்தில் நிறைவுபெறவுள்ளது. இது ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் இதற்கான ஆதரவு பெருகியதுடன், வடக்குக் கிழக்கின் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மலையகத் தலைவர்களும் கலந்து கொண்டதையும்  ஆதரவு வழங்கியதையும் காண முடிகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் மொழிபேசும் அனைத்து சிறுபான்மை மக்களும் இணைந்து பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல நாடுகளின் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த பேரணி, இலங்கை தனது சிங்கள பெளத்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை தலைநகரில் நடாத்திய அதே காலப்பகுதியில் நடாத்தப்படுவது, இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இல்லை என்ற செய்தியை முழு இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லியுள்ளது.  

அரசு நாட்டின் சட்டம்-ஒழுங்கு, கொரோனா அரசியல், அரசு ஆதரவுக் குழுக்களைக் கொண்டு பேரணிக்கு எதிர்ப்பு  ஊர்வலம் என்று  என்று வேறு வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி இந்தப் பேரணியை நிறுத்துவதற்கு முயற்சி செய்தபோதும் அவை வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசினாலும் அரசு ஆதரவுக் குழுக்களாலும் செய்ய முடியாததை இந்த போராட்டத்தில் ஈடுபடும் பல்வேறு தரப்பினரின் விசுவாசிகளும் வீட்டில் வசதியாக இருந்து கொண்டு வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்யும் இணையப் போராளிகளும் “நடுநிலை” ஊடகங்களும் செய்து முடித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

இவ்வாறு எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, யார் இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள் என்பது முதலில் கேட்கப்பட வேண்டிய கேள்வி. அதேபோல தனிப்பட்ட முறையில்  சில அரசியல்வாதிகளின் பங்களிப்புத் தொடர்பாக மிகைப்படுத்தலாக பதிவுகளை இடும் விசுவாசிகளும் கட்சி சார்ந்தவர்களும் தற்போது நடக்கும் போராட்டம் எதற்கானது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது தமது தலைவர்களின் பெருமைகளைப் பட்டியல் இடவும் நடைபெறும் பேரணியின் வெற்றியை ஓரிருவருக்கு மட்டும் உரியதாக காட்ட நீங்கள் முயற்சிப்பதும் நடைபெறும் பேரணியின் நோக்கத்தையே நாசம் பண்ணிவிடும்.

மேலும் இது யாருடைய முயற்சியில் தொடங்கப்பட்டது, யாரால் அதிக மக்கள் இணைந்து கொண்டார்கள் போன்ற விவாதங்கள் தேவையற்றவை மட்டுமல்ல அர்த்தமற்றவையும் கூட. வடக்குக் கிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் பலமாக இல்லையென்றும் அரசியல்வாதிகளின் உழைப்பே இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது அதனால் அவர்களை முன்னுக்கு விடவேணும் என்றும் எழுதிய ஊடகமும், சிவில் சமூகமே இதனை ஒழுங்கு செய்தது அதனால் அவர்களே முன்னணியில் செல்லவேண்டும் என்று குரல் கொடுப்போரும் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களில் யார் தனியாக இதனை ஒழுங்கு செய்திருந்தாலும் இந்தளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது. இது ஒரு கொள்கை வெற்றி, குழு வெற்றி என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் இது பல வருடங்களுக்குப் பிறகு சிவில் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து வேறுபட்ட சமூகங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கும் போராட்டம். இதன்போது சிறு சிறு தவறுகள் வரத்தான் செய்யும். ஆனால் அந்தத் தவறுகளை மட்டும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்ப்பது மட்டுமன்றி பெரிதுபடுத்தியும்  நாம் பேசிக்கொண்டிருந்தால் இப்போது செய்யும் முயற்சி பூரண வெற்றியளிக்காது. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இதேபோல பல்வேறு அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து செயற்படக்கூடிய சூழ்நிலையையும் கடினமானதாக்கலாம்.

இன்று சில ஊடகங்களும் தனிநபர்களும் பெரிதுபடுத்தும் விடயங்களைப் புறந்தள்ளுவதுடன் போராட்டத்தின் இறுதிவரை அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று இரண்டு மாகாணங்களில் வாழும் ஒரே மொழி பேசும் மூன்று மதங்களைச் சேர்ந்த மக்களையும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல்வாதிகளையும் ஒருபுள்ளியில் இணைத்த இந்த முயற்சி அதன் இலக்கை அடைய அனைவரும் உழைப்பதுடன் எதிர்காலத்தில் சிங்கள பொதுமக்களுக்கும் எமது நியாயங்களை கட்டமைக்கப்பட்ட வகையில் தெரியப்படுத்தும் முயற்சிகளில் அதிகம் ஈடுபடவேண்டும். இதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் உண்மையான இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து வேலை செய்யவும் எமது பிரதேசத்தில் இயங்கும் சிவில் சமூக அமைப்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடுதல் வேண்டும். 
 

இலங்கைக்குள் இந்தப் பேரணியை நீர்த்துப்போக வைக்க முயற்சிகள் நடப்பது ஒருபுறம் இருக்க, புலம்பெயர் தேசங்களில் இதற்கு ஆதரவாக கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் இந்த நிகழ்வினைத் திசை திருப்பாத வகையில் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். இலங்கையில் நடைபெறும் பேரணியில் எந்த ஒரு கட்சியின் கொடியோ கட்சி அடையாளங்களோ பயன்படுத்தப்படாமையே சிவில் சமூகமும் மதத் தலைவர்களும் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டமைக்கு காரணம் என்பதே உண்மை. 

புலம்பெயர் தமிழர்களும் இதனைப் புரிந்துகொண்டு பொது அடையாளங்களையோ கறுப்புக் கொடிகளையோ மட்டும் பயன்படுத்துவார்கள் என்றால் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொள்வதுடன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. 

சிந்திப்போம் !
சரியான தெரிவுகளையும் கருவிகளையும் காட்சிப்படுத்தல்களையும் பயன்படுத்துவோம் !!
#P2P

-அக்கம்-பக்கம்-
 

https://www.facebook.com/101881847986243/posts/268535571320869/?d=n

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.