Jump to content

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

 
 
மருத்துவர் லீ வெண்லியாங்

பட மூலாதாரம்,FACEBOOK

 
படக்குறிப்பு,

மருத்துவர் லீ வெண்லியாங்

 

கொரோனா வைரஸின் தொடக்க காலத்திலேயே அதைப் பற்றி எச்சரித்ததால், ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்ட, சீன மருத்துவர் லீ வெண்லியாங் அதே கொரோனா தொற்றால் இறந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில், லீ வெண்லியாங்கின் உடல்நிலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள், சீன அரசு ஊடகத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக அவர் வேலை பார்த்த மற்றும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வுஹான் மருத்துவமனை கூறியது.

34 வயதான லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சக மருத்துவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் குறித்த செய்திகளைப் பரப்ப முயற்சித்தார். மூன்று நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு காவலர்கள் வந்து வைரஸ் குறித்த வேலைகளை நிறுத்தக் கூறினார்கள்.

லீ வெண்லியாங் மீண்டும் பணிக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளி மூலம் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்கு மூன்று வார காலத்துக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மருத்துவர் லீ வெண்லியாங் தன் கதையை, மருத்துவமனையின் படுக்கையில் இருந்த படியே சீனாவின் சமூக வலைதளமான வைபோவில் பதிவிட்டார்.

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

பட மூலாதாரம்,WEIBO

"எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் லீ வெண்லியாங், நான் வுஹான் மத்திய மருத்துவமனையில் கண் மருத்துவராக இருக்கிறேன்..." என அப்பதிவு தொடங்கும். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப வாரங்களில் வுஹான் உள்ளூர் அதிகாரிகள் எத்தனை அலட்சியமாகச் செயல்பாட்டார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது அப்பதிவு.

மருத்துவர் லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க மையமாக கருதப்படும் வுஹானில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு வகையான வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழு பேரை அவர் கண்டபோது, அது 2003-ம் ஆண்டு உலகை ஆட்டிப்படைத்த சார்ஸ் என நினைத்தார். ஹுவானன் மீன் சந்தையிலிருந்து வுஹான் முழுவதும் இந்த வைரஸ் வந்ததாக நம்பப்பட்டது. அப்போது, நோயாளிகள் லீ வெண்லியாங் பணியாற்றி வந்த மருத்துவமனையில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி, தன்னோடு பணியாற்றிய சக மருத்துவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி செயலி குழு மூலம் வைரஸ் பரவுவது குறித்த ஒர் எச்சரிக்கைச் செய்தியை இவர் அனுப்பினார். அதோடு தங்களைத் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் அவர் கூறினார்.

அப்போது பரவிக் கொண்டிருந்தது கொரோனா வைரஸ் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

பட மூலாதாரம்,LI WENLIANG

நான்கு நாட்களுக்குப் பிறகு சீனாவின் பொது பாதுகாப்புத் துறையிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அங்கு லீ வெண்லியாங்கை ஒரு கடிதத்தில் கையெழுத்திடக் கூறினார்கள்.

தவறான கருத்துக்களைக் கூறுவதாகவும், சமூக ஒழுங்கை சீர்குலைப்பதாகவும், தொடர்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் லீ வெண்லியாங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனவும் அக்கடிதத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அதன் கீழ் "ஆம் நான் அதை ஆமோதிக்கிறேன்" என அவரது கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

மருத்துவர் லீ வெண்லியாங், அக்கடிதத்தை வைபோவில் பதிவிட்டு என்ன நடந்தது என விளக்கினார்.

விலங்குகளோடு தொடர்பு கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்படும் என கடந்த ஆண்டு ஜனவரியின் முதல் சில வாரங்களில் வுஹான் உள்ளூர் நிர்வாகம் கூறியது. அதோடு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது எனக் கூறப்பட்டது. இது முற்றிலும் தவறானது என நமக்கு இப்போது தெரியும்.

இந்த அலட்சியத்தால், மருத்துவர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க எந்த விதிமுறைகளும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. மருத்துவர் லீ வெண்லியாங்கை காவலர்கள் வந்து எச்சரித்துச் சென்ற பிறகு, குளுக்கோமா என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்தார் மருத்துவர் லீ வெண்லியாங். மேலும், அந்த பெண் கொரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

தன் வைபோ பதிவில், தான் எப்படி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் இருமல் ஏற்படத் தொடங்கியது எனவும், அடுத்த நாள் தனக்கு எப்படி காய்ச்சல் இருந்தது எனவும், இரு நாட்களுக்குப் பிறகே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் அவர் விளக்கி இருந்தார். மேலும், அவரது பெற்றோர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

பத்து நாட்களுக்குப் பிறகு, அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி, சீனா கொரோனாவை ஓர் அவசர பிரச்சனையாக அறிவித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை ஓர் உலக பெருந்தொற்றாக அறிவித்தது. இப்படி அறிவித்த போது, அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது கிட்டத்தட்ட எதார்த்தத்தில் சாத்தியமில்லாததாகிப் போனது.

மருத்துவர் லீ வெண்லியாங் பல முறை கொரோனா பரிசோதனை செய்த போதும், ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் என்றே வந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

லீ வெண்லியாங்

பட மூலாதாரம்,WEIBO

கடந்த 2020 ஜனவரி 30-ம் தேதி சமூக வலைதளத்தில் மீண்டும் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "இன்று நியூக்லிக் ஆசிட் சோதனை செய்தேன், அதில் பாசிட்டிவ் வந்திருக்கிறது. குழப்பங்கள் தீர்ந்து தற்போது தொற்று உறுதியாகி இருக்கிறது" என்றார். அப்பதிவுக்கு ஆயிரக்கணக்கான கருத்துகளும், ஆதரவு வார்த்தைகளும் வந்தன.

"மருத்துவர் லீ வெண்லியாங் ஒரு ஹீரோ" என ஒருவர் பதிவிட்டிருந்தார். "வருங்காலத்தில் ஏதாவது தொற்று நோய்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆரம்ப நிலையிலேயே எச்சரிக்கை விடுக்க பயப்படுவார்கள்" என மற்றொருவர் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

"ஒரு பாதுகாப்பான பொது சுகாதார சூழல் உருவாக, லட்சக்கணக்கான லீ வெண்லியாங்குகள் தேவை" என மற்றொருவர் எழுதியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, 34 வயதான மருத்துவர் லீ வெண்லியாங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மரண செய்தி வெளியான போது கோபத்திலும், துக்கத்திலும் சீன சமூக வலைதளமான வைபோ மூழ்கியது.

"வுஹான் அரசு மருத்துவர் லீ வெண்லியாங்கிடம் மன்னிப்பு கோர வேண்டும்", "எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும்" என இரண்டு ஹேஷ்டேக்குகள் பெரிய அளவில் டிரெண்டாகின.

"நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த கோபத்தை மறந்துவிடாதீர்கள். இப்படி மீண்டும் நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என ஒருவர் தன் கருத்தைப் பதிவுச் செய்திருந்தார்.

சீனா இந்த பிரச்சனையை சமாளிக்க பல கருத்துக்களை தணிக்கை வளையத்துக்குள் கொண்டு வந்தது. பல வாரங்கள், மாதங்கள் கழித்து, மருத்துவர் லீ வெண்லியாங்கின் மரணத்துக்கு தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் உணர்ந்ததாகத் தெரிகிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு, லீ வெண்லியாங்கின் பதிவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன.

மக்கள் அவரின் சமூக வலைதளப் பக்கத்துக்குச் சென்று காலை வணக்கம் கூறுகிறார்கள். அவர்களது சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மருத்துவர் லீ வெண்லியாங் இறந்து ஓராண்டாகிவிட்டது, சீனாவும் கொரோனாவை வெற்றி கொண்டுவிட்டது. ஆனால், லீ வெண்லியாங்கின் சமூக வலைதள பக்கத்தில் குவிந்து வரும் கருத்துகள் தொடர்ந்து நம்பிக்கை ஒளியை வீசி கொண்டிருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.